• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Operation Red-1.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அரைமணி நேரம் காதல் வானில் பறந்த யுவதிகள் சியாமளாவும், வீரலட்சுமியும் தோளை விட்டு எழுந்து கண்களால் தங்கள் ஆட்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தங்களின் காதலிகளின் விழி பார்வையில் மீள முடியாமல் சிறைபட்டு இருந்தார்கள் அந்த இளைஞர்கள்.

அவர்களின் காதலில் சடன் பிரேக் அடிக்க வந்தது ஒர் அபய குரல்.

"ஹெல்ப்! ஹெல்ப்! என்னை யாராவது காப்பாற்றுங்கள்! ஹெல்ப்!" என்ற சத்தம்தான் அது.

அதுவும் ஒரு பெண்ணின் குரலாக போக நால்வரின் காதல் மயக்கத்தை கலைத்து நனவு உலக வர வைத்து விட்டது.

"குரு! யாரோ பெண்ணின் சத்தம் கேட்கிறது. என்ன என்று பார்க்கலாம் வாங்க" என்று அவசரமாக சொல்லியபடி சியாமளா எழ குருபிரசாத்தும் எழுந்தான்.

அவர்களுக்கு முன்னர் எழுந்து நின்று பார்த்து கொண்டு இருந்தார்கள் வீரலட்சுமி மற்றும் நரேன்.

ஒரு அழகிய இளம் பெண் தன் உயிரை கையில் பிடித்தபடி, உதவிக்காக கத்தி கொண்டு, அசுர வேகத்தில் ஒடி கொண்டு இருந்தாள்.

அவள் உதவிக்காக எழுப்பிய சத்தம்தான் அந்த குரல்.

அவளை வேகமாக துரத்தி கொண்டு மூன்று தடியர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

"ஹெல்ப்! ஹெல்ப்!" என்று கத்தியபடி அவள் ஒடி கொண்டு இருக்க அதை பார்த்த நரேன் மற்றும் குரு பிரசாத் இருவரும் ஆக்சனின் இறங்கி விட்டார்கள்.

அவர்கள் இருவரும் வேகமாக அந்த மூவரை துரத்தி கொண்டு சென்றனர்.

சியாமளாவும், வீரலட்சுமியும் தங்கள் பங்கிற்கு அவர்கள் பின்னால் ஒட ஆரம்பித்து விட்டார்கள்.

சிறிது நேரத்தில் பெண்கள் இருவரின் பின்னால் அவர்களை துரத்தியபடி டாடா சுமோ கார் ஓன்று வந்தது.

சில நிமிடங்களில் அந்த மூன்று தடியர்களை முந்தி கொண்டு சென்று ஒரிடத்தில் நின்று பார்த்தார்கள் குருபிரசாத் மற்றும் நரேன்.

பெண்ணை துரத்தி கொண்டு வந்த மூவர் அவர்களை தள்ளி கடக்க முயல் இருவரின் கரங்களும் இடியாய் முன்னால் வந்த இருவர் முகத்தில் இறங்கியது.

அந்த இருவர் அடி தாங்காமல் வலியால் அய்யோ என்று கத்தியபடி நிலை குலைந்து விழுந்தார்கள்.

மூன்றமாவன் சுதாரிக்கும் முன் அவன் முகத்தில் முகத்தில் பஞ்ச் செய்தார்கள் நரேன் மற்றும் குருபிரசாத்.

மூவரும் சுதாரித்து எழுந்து அவர்களை தாக்க முயலும் நேரத்தில் வந்து சேர்ந்திருந்த வீரலட்சுமி மற்றும் சியாமளா.
பவானி சினேகா மாதிரி தங்கள் பஞ்சை அவர்கள் முகத்தில் இறக்கி இருந்தார்கள்

தன்னை காக்க ஆட்கள் வந்து விட்டதை உணர்ந்து நால்வரின் சண்டையை தூரத்தில் இருந்து மூச்சு வாங்கியபடி பயத்துடன் பார்க்க ஆரம்பித்தாள் அந்த இளம்பெண்.

தூரத்தில் காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன் கண்ட காட்சி அவனை திகைப்படைய செய்ய காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டான்.

அங்கே இரண்டு இளம் பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் தங்களை கரங்ககளையும், கால்களையும் காற்றில் சுழற்றி அவனின் சகாக்களை துவம்சம் செய்து கொண்டிருக்க அவர்கள் மூவரும் திணறி கொண்டு இருக்கிறார்கள்.

காதலர்கள் கரம் கோர்த்த அந்த இளம் பெண்களின் கைகள் மட்டும் அல்ல கால்களும் பேசி கொண்டு இருந்தன.

கார் அவர்கள் பின்னால் பல அடிகள் இடைவெளியில் நின்று இருந்தது.

காரை விட்டு இறங்காமல் அவர்கள் சண்டையை அப்படியே அதிர்ந்து அமர்ந்து விட்டான்.

நால்வரின் அடிகளை தாங்க முடியாமல் அவர்கள் திணறி விழுந்த மூவரும் சட்டென்று கைகளில் கிடைத்த மண்ணை எடுத்து அவர்கள் மேல் தூவ வீரலட்சுமி தவிர மற்றவர்கள் கண்கள் தெரியாமல் திணற ஆரம்பித்தார்கள்.

தடியர்கள் மூவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒட ஆரம்பித்து விட்டார்கள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வீரலட்சுமியும் மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பதறி அவர்களை கவனித்ததால் அவள் தடியர்களை விரட்டவில்லை.

சண்டை காட்சிகளை தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த அந்த இளம் பெண் அவர்களை நோக்கி ஒடி வர ஆரம்பித்தாள்.

தடியர்கள் மூவரும் தப்பி காரை நோக்கி சென்று கதவை திறந்து உள்ளே ஏறி கொண்டார்கள்.

காரில் அமர்ந்து இருந்தவன் காரை அதி வேகமாக இயக்கி அவர்களை நோக்கி வர ஆரம்பித்து விட்டான்.

பெண்களிடம் அடி வாங்கிய ஆத்திரத்தில் "அவங்களை அடித்து தூக்குடா" என்று பின்னால் ஏறியவர்கள் குரல் கொடுத்து உசுப்பேற்றி விட்டார்கள்.

கார் அசுரவேகத்தில் அவர்களை தாக்க வருவதை தூரத்தில் பார்த்தபடி வந்த இளம்பெண் "தள்ளிக்கோங்க... கார் வருது" என்று சத்தமிட்டபடி ஒடி வந்த வேளை கார் நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.

குருபிரசாத் மற்றும் நரேன் கண்களை திறந்த நிமிடத்தில் கார் மிக அருகில் நெருங்கி விட்டது.

சியாமளாவை கார் வரும் நேர் பாதையிலிருந்து தள்ளிவிட மணலில் அவள் விழுந்து விட குருபிரசாத் அவளின் அருகில் விழுந்தான்.

வீரலட்சுமி காரில் பாதையில் இருந்து விலகி மணலில் விழ நரேன் தங்களை நோக்கி வந்த இளம் பெண்ணை இழுத்து போட அவள் சென்று மணலில் விழுந்தாள்.

கடைசியாக நரேனும் விலகி கொள்ள தாவி மணலில் விழ கார் எவரையும் மோத வழி இல்லாமல் நேராக செல்ல ஆரம்பித்தது.

"அடச்சே! மிஸ் ஆகிட்டாங்க..." என்று டிரைவர் சீட்டில் இருந்த நபர் சலித்து கொண்டான்.

குருபிரசாத்தும், நரேனும் எழுந்து அமர்ந்த நிலையில் சட்டென்று தங்கள் பேன்ட்டின் பின்பக்கம் இருந்து பிஸ்டலை எடுத்து காரை நோக்கி சுட ஆரம்பித்ததை பார்த்து அதிர்ந்து விட்டார்கள் ரவுடிகள்.

"அவனுக கன் எல்லாம் வைத்து இருக்கானுக. நாம் மாட்டினால் என்கவுண்டர்தான் நமக்கு. நம்மை போட்டு தள்ளிருவாங்க. வண்டியை நேராக விடு" என்று காரில் இருந்தவர்கள் கத்த கார் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

கார் மிக தூரத்தில் சென்றாலும் அவர்களின் புல்லட்கள் குறி தவறாமல் கார் கண்ணாடியை உடைத்து கொண்டு வர ரவுடிகள் விலக முன் சீட்டை துளைத்து நின்றது.

கண்ணாடி உடைந்த சப்தம் மற்றும் ரவுடிகள் விலகும் போது விழுந்த சப்தம் இரண்டும் பலமாக கேட்க டிரைவர் சீட்டில் இருந்தவன் காரை சடன் பிரேக் அடித்தான்.

"வந்துட போறானுங்க... வண்டியை கிளப்புப்பா..." என்று மூவரும் சொல்ல அவன் காரை கிளப்ப புகை விட்டு கார் சென்று மறைந்தது.

"தப்பிச்சிட்டாங்க... சே!" என்று சலித்து கொண்ட குருபிரசாத் மற்றும் நரேன் பிஸ்டலை கீழே இறக்கினார்கள்.

அவர்கள் தப்பி சென்றதில் இருவருக்கும் பயங்கர விரக்தி ஏற்பட்டது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதானேப் பார்த்தேன்
என்னாப்பா கிரைம் நாவல்=ன்னு
சொல்லிட்டு ஒரே ரொமான்ஸா
இருக்கே-ன்னு பார்த்தேன்
ஒரு பொண்ணு தப்பிச்சு ஓடுறாள்
வில்லனுங்க துரத்துறானுங்க
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top