Soundarya Krish
முதலமைச்சர்
உடன்போக்கு..
எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா.... எந்தநேரம் என்ன நடக்கும்னு... பக்குனு இருக்கு... நம்மள சேந்து வாழவே விடமாட்டாங்களா?? எவ்வளவு பாசமா எங்க வீட்டுல என்ன வளத்தாங்க.. இப்ப பாருங்க நான் வேண்டாதவளாயிட்டேன்..
என்ன பன்றது புள்ள அவுங்க மனநிலை அப்புடி இருக்கு.. அவங்கள மாத்த நம்மாள முடியாது. அவுங்களா மாறுனாத்தா உண்டு...
வேற வழியே இல்லயா மாமா நாம சேர்ந்து வாழ??
ஏம்புள்ள பேசாம ஊரவிட்டு போய்ட்டா என்ன???
ஓடிப்போவோமானு கேக்குறீங்களே... இது அசிங்கமில்லையா???
என்னைய வேற என்ன பண்ண சொல்லுற புள்ள... எனக்கு இதவிட்டா வேற வழி தெரியல... யோசிக்கிறதுக்கு இப்போ நேரமும் இல்ல.. என்ன நம்புனா என்கூட வா... இல்லாட்டி உன் மனசுபடி செய்... நான் நீயில்லாம செத்துருவேன் அத மறந்துடாத..
ஏன்யா இப்புடி பேசுற நீயில்லாம நா மட்டும் இருப்பேனா??? இப்ப என்ன ஊரவிட்டு போகனும் அதான.. சரி வா... போவோம்...
.................................
மறுநாள் காலை,
வேலைக்காரி வாசல மொழுகிட்டு இவள தேடி போறா...
அங்க வெறும் பஞ்சாரம்(கோழிகூடு) மட்டும் காத்துல உருண்டுட்டு இருக்கு...
கோழியக்கா தான் சேவலண்ணா(அவுங்க மாமா) ஓட எஸ் ஆயிட்டாங்களே...
பிகு:
குழம்பு வைக்க வேண்டிய கோழி புலம்பிட்டு ஓடிட்டதுனால... வெறும் சாம்பார் வச்சு சாப்டாங்கப்பா..