"இன்னும் ஒரு நிமிஷத்துக்குள்ள என் கேபினுக்கு வா"
என்று அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட்டான் கிருஷ் .
ஒட்டுமொத்தக் குரோதமும் கும்மியடிக்க , ரஞ்சித் வேகமாக சென்றான் .
கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே வந்த ரஞ்சித்தைக் கண்ட கிருஷ் ,
"இப்ப ஒன் மினிட் அண்ட் டூ செகண்டஸ். வெளிய போ.நான் சொல்றப்போ கரெக்ட்டா திரும்ப வா . வரும்போது கதவைத் தட்டிட்டு வா.
இல்லன்னா திரும்ப வெளிய போக வேண்டி இருக்கும் "
என்று சொல்லிவிட்டுத் தன் வேலையை கவனிக்கத் துவங்கினான் .
" டேய் , சாவடிச்சிடுவேன் பாத்துக்கோ . என்னடா ஆட்டிட்யூட் காட்டறியா ?"
" நீ லேட் பண்ணற ஒவ்வொரு செகண்டும் உனக்குத்தான் தம்பி லாஸ் "
அவனைப் பாராமலேயே கூறிய கிருஷ்ஷை இயலாமையுடன் நோக்கியவன் இறுக்கத்துடன் வெளியேறினான் .
அடுத்த நொடியே ரஞ்சித்தை அழைத்த கிருஷ் ,
"த்ரீ செகண்டஸ்." என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை சோதித்தான் .
இம்முறை சரியாக உள்ளே வந்துவிட்டான்
ரஞ்சித் .
மெலிதாகப் புன்னகைத்த கிருஷ் , கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் .
ரஞ்சித் உட்கார ஒரு நாற்காலி கூட போடப்படவில்லை . சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த ரஞ்சித்திடம் ,
"எதுக்கு என்னைப் பார்க்க வந்த?"
டேபிளின் மேல் கையை ஊன்றியபடி நேராக கிருஷ்ஷை முறைத்த ரஞ்சித் ,
"ரொம்ப அவமானப்படுத்த நினைக்கற டா நீ . என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாதா?"
உறுமலாய் வினவ , அவனின் செய்கையை ரசித்தபடியே பின்னால் நன்கு சாய்ந்து அமர்ந்த கிருஷ் .
"ரொம்ப சூடா இருக்க போல . ஒரு சோடா சொல்லவா ! " என்று சிரித்தான் .
கண்களை இறுக மூடி , கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தான் ரஞ்சித் .
ஆனால் முடிந்தால் தானே. அவனை மேலும் படுத்தி எடுக்காமல் , ஒருவன் நாற்காலி போட வேண்டா வெறுப்பாக அதில் அமர்ந்தான் ரஞ்சித்.
"சரி , இப்ப நம்ம ஒரு கேம் ஆடலாம் . நீ வின் பண்ணிட்டா இனிமே உன் வழில நான் வர மாட்டேன் .
நான் வின் பண்ணிட்டா உனக்கு வேற வழியே இல்லாம பண்ணிடுவேன் . டீலா !!"
கூர்மையான பார்வையை வீசிய கிருஷ்ஷின் எண்ணப்போக்கை உணர முடியாமல் தானாகத் தலையை ஆட்டினான் ரஞ்சித் .
அருகே இருந்த பெல்லை கிருஷ் அழுத்தியதும் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து ஒருவன் வைத்துவிட்டு சென்றான் .
"ஓபன் பண்ணு" என்று சொல்லிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்.
ரஞ்சித் அதைத் திறந்து உள்ளே இருந்து அவர்கள் விளையாடப் போகும் ஆட்டத்தை எடுத்தான் .
"லூடோ வா ?"
ரஞ்சித் கேட்க ,
"லூடோ தான். ஆனா கொஞ்சம் வேற மாதிரி ஆடப் போறோம் "
என்று கிருஷ் புன்னகைத்தான் .
"இப்ப இது ரொம்ப முக்கியமா உனக்கு ? நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன் .
நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்க . வெட்டியா விளையாடவா நான் இங்க வந்தேன் ?"
என்று ரஞ்சித் பொங்கினான் .
" லிசன் ரஞ்சித் . உன் பிரச்சனைய சரி பண்ணத்தான் இந்த கேம் . சொல்றபடி பண்ணு . இல்லன்னா உனக்குத்தான் கஷ்டம் "
பின்னந்தலையைக் கோதியபடியே கிருஷ் கூறினான்.
" சரி , இப்ப என்னதான் பண்ணனும் . சொல்லித்தொலை"
எரிச்சலுடன் மொழிந்த ரஞ்சித்தை ஏளனப் புன்னகையுடன் நோக்கிய
கிருஷ் ,
" கேட்டுக்கோ ... எப்பவும் போல தான் இந்த லூடோவோட ரூல்ஸ் . ஆனா ,அதுல ஒரு செக் இருக்கு .
உன்னோட ஒரு காய நான் வெட்டுனா , அடுத்த பத்து நிமிஷத்துல உன்னோட பேங்க் அக்கௌன்ட்ல பல லட்சம் பிளாக் மணி டெபாசிட் ஆகும் .
அடுத்த காய வெட்டுனா , உன் வீட்ல மூட்டை மூட்டையா தங்கம் , வைரம் எல்லாம் கூரையை பிச்சிட்டு கொட்டும் .
அடுத்த காய்க்கு உன் ஆளுங்க எல்லாம் தானாவே வந்து நீ பக்கா கேடின்னு பேட்டி தருவாங்க .
நாலாவது காய்க்கு நீ மொத்தமா காலி . கேம் ஓவர் "
என்று கூற , அவனை நம்பாத பார்வை பார்த்தான் ரஞ்சித் .
ஆனாலும் , உண்மையாகவும் இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் பயந்தான் .
காரணம் , ஏற்கனவே கிருஷ் அவனை பந்தாடிக் கொண்டு தான் இருந்தான் .
வைஷாலியால் முன்பே நடுத்தெருவுக்கு வந்திருந்த ரஞ்சித் , இப்பொழுது தான் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தான் .
ஆனால் , இப்பொழுதெல்லாம் அவன் யாரிடம் டீலிங் பேசினாலும் சில நாட்களுக்குள் அவனை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் சென்றுவிடுகின்றனர் .
எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் , அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை .
ஆதாரம் இல்லாத சேதாரம் அவனுக்கு ஏற்பட்டது .
கருப்பு ஆடு அவனுடனே இருக்கின்றது . ஆனால் , யார் அது என்று தான் அவனுக்குப் புரியவில்லை .
சமீபத்தில் தான் இதனைத்திற்கும் பின்னால் கிருஷ்ஷின் கைவண்ணம் இருப்பதைக் கண்டுபிடித்தான் .
ஆனால் சோதனையே அதன் பின்னர் தான். முன்பின் தெரியாத யாரோ அவனின் பிசினஸ் ரகசியங்களை வெளியிடத் துவங்கினர் .
தினமும் , குறிப்பிட்டத் தொகை அவனின் கணக்கிலிருந்து குறையத் துவங்கியது .
இதை ஆராயப் போனால் , போலி ஆவணங்கள் வைத்துப் பல கோடியில் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்வதாக இவனைப் பற்றி வதந்திகள் உலவின .
திணறிப் போனான் ரஞ்சித்.
கடைசியில் , எந்தப் பக்கம் செல்வது என்றே புரியாமல் ரஞ்சித் கிருஷ்ஷிடமே வந்து சேர்ந்தான் .
இங்கே பார்த்தால் , மேலும் மேலும் கிருஷ் அவனை சோதிக்க, ரஞ்சித் மூளை மரத்துப் போனான் .
" எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க ? நேருக்கு நேர் மோதி பாருடா . இப்படி யாரையோ விட்டு அடிக்கற ?? "
ரஞ்சித் ஆற்றாமையில் வெடித்தான் .
" ஆஹா பெரிய வீரன் இவரு , விழுப்புண் விழாம பார்த்துக்கறாரு .
அவ்ளோ தைரியம் இருந்தா எதுக்கு என் ஷாலுவை சாகடிக்கப் பார்த்துட்டு ஓடுன"
கிருஷ் எழுந்து நின்று டேபிளின் மேல் ஓங்கி குத்தினான் . அவன் கூறியதைக் கேட்டு ரஞ்சித் அதிர்ச்சியில் உறைந்தான் .
"உனக்கு .. எப்படி !! "
வார்த்தைகள் வராமல் சதி செய்ய, கோபத்தில் பளாரென ரஞ்சித்தை அறை விட்டான் கிருஷ் .
"உங்க சங்காத்தமே வேணாம்னு தான இருக்கோம் நாங்க . அப்பறமும் என்னத்துக்கு நீ விடாம தொல்லை பண்ணற .
சரி , உன் வெறி அடங்கணும்னா என்கூட மோது . பொண்ணுங்கக் கிட்ட கேவலமா நடந்துக்கறியே, அசிங்கமா இல்லையா உனக்கு ??"
" அது ஏதோ அவசரப்பட்டு பண்ணிட்டேன் . இனிமே இந்தப் பக்கமே வர மாட்டேன் ராகவ் . எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம் "
உத்தம வேடமிட்டான் ரஞ்சித் .
பக்கென சிரித்த கிருஷ் ,
"நீ ஷாலுவையும் என்னையும் பிரிக்கப் பார்த்தப்போவே உன்னை கிழிச்சு தொங்க விட்டிருக்கணும் . தப்பு பண்ணிட்டேன்டா "
என்க ,
"அதையெல்லாம் எதுக்கு இப்ப பேசற. நான் தான் இனிமே உன் பக்கமே வரலைன்னு சொல்றேனே."
எப்படி இருந்த ரஞ்சித் , இப்படிக் கெஞ்சுவதைப் பார்க்க கிருஷ்ஷிர்கே பாவமாகத் தான் இருந்தது.
ஆனால், இது உயிர் பிச்சை கேட்கும் மானாக இல்லாமல் , குட்டையை குழப்பும் குள்ளநரியாக இருந்தால் !!
" அடி வாங்குனா திருப்பி அடிக்கணும்டா. அதுதான் நம்ம பாலிசி.லெட்ஸ் பிளே ரஞ்சித் . நீ வின் பண்ணிடு , நான் விடறேன் உன்னை. "
இரு கைகளையும் பரபரவெனத் தேய்த்த கிருஷ் , ஒரு துள்ளலுடன் அமர்ந்தான் .
இது ஒன்றும் சகுனியின் சொக்கட்டான் அல்ல , தாயம் சொன்னபடி கேட்க .
விளையாட்டுத் தனமாக விளையாடுவதற்கும் , விளையாடிப் பார்க்க விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு .
காலத்தின் கயிற்றால் கட்டப்பட்ட எவரும் , அதைத் தானே அவிழ்க்க முயன்றால் , மேலும் சிக்கிக் கொள்வர் .
அதைப் போலவே தான் இதுவும் .
காலத்தின் போக்கில் செல்லாமல், சும்மா இருந்த கயிறைக் குறுக்கே இழுத்தால் ??
காலம் தான் பதிலையும் சொல்லும்.
சொக்கட்டான் பார்வை தொடரும் ...