அடுத்த சில நொடிகளில் அந்த மீட்டிங் ஹாலில் லூடோ விளையாட்டு தொடர்ந்தது .
ஏற்கனவே இரண்டு காய்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்த கிருஷ் , மிச்சமிருந்த இரண்டு காய்கள் கொண்டு களத்தில் இருந்தான்.
ரஞ்சித்தின் நான்கு காய்களை இவன் விரட்டிக்கொண்டிருக்கிறானா இல்லை விரட்டப் படுகிறானா என்று எவருக்கும் புரியவில்லை.
"ஸ்டார்டிங்ல நீ என்னை பயமுறுத்தப் பேசுனதை எல்லாம் அப்பவே ரெக்கார்டு பண்ணிட்டேன். அதை வாட்ஸப்ல ஃப்ரெண்டுக்கு அனுப்பி அவனை நெட்ல ட்ரெண்ட் ஆக்க சொன்னேன் "
" சரி , அப்படிப் பண்ணா என் மேல கேஸ் திரும்பும்னு
நினைச்சியோ ? "
" கண்டிப்பா. இப்ப டெக்னாலஜி வெச்சு என்ன வேணும்னாலும் பண்ணலாம் தான ?
அதான் நீ என்னோட அக்கௌன்ட்ல பிளாக் மணி போட நினைச்சது , என் வீட்ல நகைகளை பதுக்கி மாட்டி விட நினைச்சது , இதெல்லாம் வெச்சு என் இமேஜ கெடுக்கப் பார்த்தது எல்லாமே உலகத்துக்குத் தெரியவரும்னு நம்புனேன்"
" நம்பிக்கை ... அதானே எல்லாம் . சரி , மேல சொல்லு."
"இத்தனை நாளா நான் பட்ட அவமானம் எல்லாம் இத்தோட போகும்னு பாத்தா , என் ஃப்ரெண்ட் என்கிட்ட வெரி சாரின்னு சொல்லிட்டான் .
இப்ப அந்த ரெகார்டிங் என் ஃபோன்லேயே காணோம். ஒன்னுமே புரியல எனக்கு "
"புரியலையா ? அதே டெக்னாலஜி தான் . உன் ஃபோன xnspy ஆப் வெச்சு டிராக் பண்ணிட்டேன். நீ என்ன மெஸேஜ் , யாருக்கு அனுப்பறன்னு எல்லாமே என் கண்ணுக்குத் தப்பாம தெரியும். பார்க்கறியா !! "
என்ற கிருஷ் அவனது ஃபோனை எடுத்துக் காட்ட , சொன்னதுபோல் ரஞ்சித் இதுவரை செய்த மெசேஜ் , கால் அனைத்தும் கிருஷ்ஷின் ஃபோனில் தெரிய , அதிர்ச்சியில் அரண்டு போனான் ரஞ்சித் .
"இதெல்லாம் ...எப்ப பண்ண?? "
"நீ எப்படி யோசிப்பன்னு தெரிஞ்சு, முன்னாடியே செட் பண்ணிட்டேன்.
நீ இதை கண்டுபிடிக்கற அளவுக்கு புத்திசாலி இல்லன்னு எனக்குத் தெரியும்டா "
பின்னந்தலையைக் கோதிக் கொண்ட கிருஷ் வெற்றிப் புன்னகை வீச ,
"அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்த மாதிரி இருந்தியே !! "
"நடிப்புதான் உன்கிட்ட நான் தெரிஞ்சுகிட்ட பெரிய படிப்பு. இத்தனை நேரம் நீ சொல்லற தோஸ்த், பிளாக் மணியை உன் அக்கௌன்டல லாக் பண்ணிருப்பான் "
என்று கூறியபடியே ரஞ்சித்தின் ஒரு காயை வெட்டினான் .
" டேய் , வேணாம் ராகவ்.
இது ரொம்ப மோசம்" என்ற ரஞ்சித்தை நோக்கி உதடைப் பிதுக்கினான் கிருஷ்.
'போடா நீ பண்ணது மட்டும் ஆசம் பாரு.'
அப்பொழுது ரஞ்சித்திற்கு வந்த ஃபோன் கால் செய்தியை உறுதிப்படுத்த மேஜையின் மேல் ஓங்கி அடித்தான் ரஞ்சித்.
வைஷாலியும் தர்ஷினியும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் .
தர்ஷினி , ஷாலுவிடம் மேலோட்டமாக ரஞ்சித்தைப் பற்றிக் கூறிவிட்டிருந்தாள் .
ஆக , ஓரளவு நடப்பைத் தெரிந்து கொண்டாள் வைஷாலி.
அடுத்தடுத்து கிருஷ் தாயம் போட்டு அவனுடைய காய்களை மீட்க , இப்பொழுது ரஞ்சித்தின் காய்கள் அஞ்சி ஓடத் துவங்கின .
"ஒரு த்ரீ போட்டா , உன்னோட செகண்ட் காயினை வெட்டிடலாம் . லெட்ஸ் ஸீ "
தாயக்கட்டையை கிருஷ் வேகமாக உருட்டிப் போட , அதிர்ஷ்டம் போல் மூன்று வந்து ரஞ்சித்தைக் கொன்றது .
" இப்ப சொல்லு , நான் வேற காயின் மூவ் பண்ணவா , இல்லை இதை வெட்டவா ?? "
"வேற மூவ் பண்ணு " என வேகமாகக் கூறினான் ரஞ்சித்.
" ஆஹான் , ஆனா எனக்கு இந்த மூவ் தான் பிடிச்சது "
என்று சொல்லி இரண்டாவதையும் வெட்டினான்.
அநாமத்தாகப் பல மூட்டை நகைகள் ரஞ்சித்தின் வீட்டில் போடப்பட்டன .
இவ்வாறே செல்ல , கிருஷ்ஷிடம் இருந்து தப்பித்தால் போதுமென்று பதட்டத்துடன் விளையாடிய ரஞ்சித் , கிருஷ்ஷின் காய்களை வெட்டக் கிடைத்த வாய்ப்பு சிலவற்றைக் கவனிக்காமல் விட்டான்.
" அப்பவே இந்த மூவ் பண்ணிருந்தா என்னோட காயின் காலி ஆகியிருக்கும். இப்ப பாரு, அது உன்ன வெட்டியே தீருவேன்னு வருது. "
மூன்றாவதும் வெட்டப்பட , ஒரே ஒரு காயை வைத்துக் கொண்டு ரஞ்சித் இருந்தான்.
"ஹ்ம்ம் , இப்ப பிரெஸ் மீட்ல உன்னைப் பத்தி நியூஸ் வரப் போகுது ரஞ்சித். லைவ் டெலிகாஸ்ட் பாரு "
என்று அங்கிருந்த எல்.இ.டி யை ஆன் செய்தான் கிருஷ்.
"பல்வேறு மோசடி செய்துள்ள தொழிலதிபர் ரஞ்சித் குறித்த விவரங்கள் அம்பலம் .
அவனின் நண்பர்கள் வாக்குமூலம் தந்ததில் இருந்து வெட்டவெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள்.
தலைமறைவாக உள்ள ரஞ்சித்தைப் போலீசார் தேடுகின்றனர் "
எல்லா சேனல்களும் இதையே ஒளிபரப்ப , வியர்த்துக் கொட்டியது ரஞ்சித்திற்கு.
"இந்த லாஸ்ட் காயின நீ காப்பாத்திக்கோ ரஞ்சித் . அது எஸ்கேப் ஆனா , நீ சேஃப். இல்லன்னா, நீ இங்க தான் இருக்கன்னு சொல்ல வேண்டி இருக்கும் "
என்று சொன்ன கிருஷ் , தர்ஷினியை நோக்கி ,
" ராஜஷேகரும் அதுல இன்வால்வ் ஆகியிருக்கார் தெரியுமா? "
என்று கிருஷ் கைகளை இறுக மூட , இன்னமுமே அதிர்ந்தாள் தர்ஷினி .
தன்னுடைய தந்தை தான் அது என்றே தெரியாமல் வைஷாலி கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.
இதெல்லாம் நிகழும் என்று கணித்திருக்காத ரஞ்சித் , பித்துப் பிடித்தது போலானான் .
மூச்சே விட முடியாமல் ரஞ்சித் பேச்சற்று இருக்க , ஊரிலே அவனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது .
வேறொரு கேஸில் தீவிரமாகக் களம் இறங்கியிருந்த ராஜஷேகர், இது எதையும் அறியாமல் , தான் சிக்கியது உணராமல் இருந்தார்.
எதிர்பாரா நிகழ்வுகள் , எதிர்பார்ப்புடன் கூடிய விதத்தில் , எதிர்பாரா நேரத்தில் நடப்பதே காலத்தின் கட்டாயம் .
விதியை மதியால் வெல்லலாம். ஆனால் , சதியே விதியானால் !! அதை வெல்வதற்குள் நம் விதி , தானாகவே முடிந்துவிடும்.
ஆகையால் விதியை வெல்ல நினைக்காமல் விதியை நாமே விதிக்கும்படி செய்ய வேண்டும் .
இங்கே , அவரவர் விதியை அவர்களே நிர்ணயம் செய்கிறார்களா இல்லை நிமிர்ந்து நிற்க முயல்கிறார்களா என்று பார்க்கலாம்.
சொக்கட்டான் பார்வை தொடரும்...