• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Sokkattan paarvai - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Hahahaha....thank you so much banu ma????....summa dhan potten ???
சும்மாதான் போட்டீங்களா?
ஏன் யாரவது காசு, பணம், துட்டு
மணி கொடுக்கறேன்னாங்களா,
ஹரிணி டியர்?
இல்லை, நான் தரட்டுமா?
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
சும்மாதான் போட்டீங்களா?
ஏன் யாரவது காசு, பணம், துட்டு
மணி கொடுக்கறேன்னாங்களா,
ஹரிணி டியர்?
இல்லை, நான் தரட்டுமா?
Ada paavame ..naan adha sollalaye banu ma???...adhu seri..neenga first enaku krishna sweets la mysore pa vaangi thaanga..evlo maasama kekren???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ada paavame ..naan adha sollalaye banu ma???...adhu seri..neenga first enaku krishna sweets la mysore pa vaangi thaanga..evlo maasama kekren???
அதுக்கென்ன வாங்கித் தந்தால்
போச்சு
நீங்க இங்கே பேரூர்-ல-தான்
இருக்கிறதா சொன்னாங்க
அட்ரஸ் சொல்லுங்க
அனுப்பி வைக்கிறேன்,
ஹரிணி டியர்
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அடுத்த சில நொடிகளில் அந்த மீட்டிங் ஹாலில் லூடோ விளையாட்டு தொடர்ந்தது .

ஏற்கனவே இரண்டு காய்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்த கிருஷ் , மிச்சமிருந்த இரண்டு காய்கள் கொண்டு களத்தில் இருந்தான்.

ரஞ்சித்தின் நான்கு காய்களை இவன் விரட்டிக்கொண்டிருக்கிறானா இல்லை விரட்டப் படுகிறானா என்று எவருக்கும் புரியவில்லை.

" அதாவது நீ திடீர்னு என்னை டார்கெட் பண்ண என்ன செஞ்ச ? அதை சொல்லு "

கிருஷ், ரஞ்சித்திடம் கேட்டான்.

" ஹ்ம்ம் , ஸ்டார்டிங்ல நீ என்னை பயமுறுத்த பேசுனதை எல்லாம் அப்பவே ரெக்கார்டு பண்ணிட்டேன். அதை வாட்ஸப்ல ஃப்ரெண்டுக்கு அனுப்பி அவனை நெட்ல ட்ரெண்ட் ஆக்க சொன்னேன் "

" சரி , அப்படி பண்ணா என் மேல கேஸ் திரும்பும்னு நினைச்சியோ ? "

" கண்டிப்பா டா . இப்ப இந்த டெக்னாலஜி வெச்சு என்ன வேணும்னாலும் பண்ணலாம் தான ? அதான் நீ என்னோட அக்கௌன்ட்ல பிளாக் மணி போட நினைச்சது , என் வீட்ல நகைகளை பதுக்கி மாட்டி விட நினைச்சது , இதெல்லாம் வெச்சு என் இமேஜ கெடுக்கப் பாத்தது எல்லாமே உலகத்துக்கு தெரியவரும்னு நம்புனேன் "

" நம்பிக்கை ... அதானே எல்லாம் . சரி , மேல சொல்லு."

" இத்தனை நாளா நான் பட்ட அவமானம் எல்லாம் இத்தோட போகும்னு பாத்தா , என் ஃப்ரெண்ட் என்கிட்ட வெரி சாரின்னு சொல்லிட்டான் . இப்ப அந்த ரெகார்டிங் என் ஃபோன்லேயே காணோம். ஒன்னுமே புரியல எனக்கு "

" புரியலையா ?? அதே டெக்னாலஜி தான் . உன் ஃபோன xnspy ஆப் வெச்சு டிராக் பண்ணிட்டேன். நீ என்ன மெஸேஜ் , யாருக்கு அனுப்பறன்னு எல்லாமே என் கண்ணுக்குத் தப்பாம தெரியும் . பாக்கறியா !! "

என்றவன் அவனது ஃபோனை எடுத்துக் காட்ட ,

சொன்னதுபோல் ரஞ்சித் இதுவரை செய்த மெசேஜ் , கால் அனைத்தும் கிருஷ்ஷின் ஃபோனில் தெரிய , அதிர்ச்சியில் அரண்டு போனான் ரஞ்சித் .

" இதெல்லாம் ...எப்ப பண்ண?? "

" அட , எவ்ளோ நாள் தான் உன்னையும் அந்த ராஜஷேகரையும் விட்டு வைக்கறது ? எனக்குன்னு ஒரு நிம்மதியான லைஃப் வேணும் தான . அதான் , உனக்கே தெரியாம நீ எப்படி யோசிப்பன்னு தெரிஞ்சு , முன்னாடியே செட் பண்ணிட்டேன் . நீ இதை கண்டுபிடிக்கற அளவுக்கு புத்திசாலி இல்லன்னு எனக்குத் தெரியும்டா "

பின்னந்தலையைக் கோதிக் கொண்ட கிருஷ் வெற்றிப் புன்னகை வீச ,

" அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்த மாதிரி இருந்தியே !! "

" அதெல்லாம் நடிப்புடா . நான் தான் கேம்ல தோத்துப் போவேன்னு நீ நினைச்ச தான. நாங்க எல்லாம் போக்கு காட்டி லாக் பண்ணுவோம் தம்பி . உன் ஃப்ரெண்ட் இப்ப என் ஃப்ரெண்ட் . இத்தனை நேரம் அவன் பிளாக் மணியை உன் அக்கௌன்டல லாக் பண்ணிருப்பான் "

என்று கூறியபடியே ரஞ்சித்தின் ஒரு காயை வெட்டினான் .

" டேய் , வேணாம் ராகவ் . அப்படி எதுவும் பண்ணாத . நீ என்ன கேட்டாலும் அதைப் பண்ணறேன். "

கெஞ்சிய ரஞ்சித்தை நோக்கி உதடைப் பிதுக்கினான் கிருஷ். அப்பொழுது ரஞ்சித்திற்கு வந்த ஃபோன் கால் செய்தியை உறுதிப்படுத்த மேஜையின் மேல் ஓங்கி அடித்தான் ரஞ்சித்.

வைஷாலியும் தர்ஷினியும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் . தர்ஷினி , ஷாலுவிடம் மேலோட்டமாக ரஞ்சித்தைப் பற்றிக் கூறிவிட்டிருந்தாள் .

ஆக , ஓரளவு நடப்பைத் தெரிந்து கொண்டாள் வைஷாலி.

அடுத்தடுத்து கிருஷ் தாயம் போட்டு அவனுடைய காய்களை மீட்க , இப்பொழுது ரஞ்சித்தின் காய்கள் அஞ்சி ஓடத் துவங்கின .

" ஒரு த்ரீ போட்டா , உன்னோட செகண்ட் காயின வெட்டிடலாம் . ஹம் , லெட்ஸ் ஸீ "

தாயக்கட்டையை கிருஷ் வேகமாக உருட்டிப் போட , அதிர்ஷ்டம் போல் மூன்று வந்து ரஞ்சித்தைக் கொன்றது .

" இப்ப சொல்லு , நான் வேற காயின் மூவ் பண்ணவா , இல்லை இதை வெட்டவா ?? "

" வேற மூவ் பண்ணு "

வேகமாகக் கூறினான் ரஞ்சித்.

" ஆஹான் , ஆனா எனக்கு இந்த மூவ் தான் பிடிச்சது "

என்று சொல்லி இரண்டாவதையும் வெட்டினான். அநாமத்தாக பல மூட்டை நகைகள் ரஞ்சித்தின் வீட்டில் போடப்பட்டன .

இவ்வாறே செல்ல , கிருஷ்ஷிடம் இருந்து தப்பித்தால் போதுமென்று பதட்டத்துடன் விளையாடிய ரஞ்சித் , கிருஷ்ஷின் காய்களை வெட்டக் கிடைத்த வாய்ப்பை சிலவற்றைக் கவனிக்காமல் விட்டான்.

" அப்பவே இந்த மூவ் பண்ணிருந்தா என்னோட காயின் காலி ஆகியிருக்கும். இப்ப பாரு அது உன்ன வெட்டியே தீருவேன்னு
வருது . "


மூன்றாவதும் வெட்டப்பட , ஒரே ஒரு காயை வைத்துக் கொண்டு ரஞ்சித் இருந்தான்.

" ஹ்ம்ம் , இப்ப பிரெஸ் மீட்ல உன்னைப் பத்தி நியூஸ் வரப் போகுது ரஞ்சித். லைவ் டெலிகாஸ்ட் பாரு "

என்று அங்கிருந்த led யை ஆன் செய்தான் கிருஷ்.

" பல்வேறு மோசடி செய்துள்ள தொழிலதிபர் ரஞ்சித் குறித்த விவரங்கள் அம்பலம் . அவனின் நண்பர்கள் வாக்குமூலம் தந்ததில் இருந்து வெட்டவெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தரும் மோசடிகள். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தைப் போலீசார் தேடுகின்றனர் "

எல்லா சேனல்களும் இதையே ஒளிபரப்ப , வியர்த்துக் கொட்டியது ரஞ்சித்திற்கு.

" இந்த லாஸ்ட் காயின நீ காப்பாத்திக்கோ ரஞ்சித் . அது எஸ்கேப் ஆனா , நீ சேஃப். இல்லன்னா , நீ இங்க தான் இருக்கன்னு சொல்ல வேண்டி இருக்கும் "

என்று சொன்ன கிருஷ் , தர்ஷினியை நோக்கி ,

" உனக்கு எதுவும் ஆகலை தர்ஷு . ஆனா , பல பெண்கள் இவன்கிட்ட சீரழிஞ்சு போயிருக்காங்க . அதுக்கெல்லாம் சேர்த்து உண்டு இல்லைனு பண்ண தான் போறேன் இவனை. "

என்று சொன்னான்.

" நிச்சயமா விடாதண்ணா இவனை. விட்டா நானே கொலை பண்ணிடுவேன் இப்ப "

என்று ஆத்திரத்துடன் அவள் மொழிந்தாள்.

" அதுக்கு வேற ட்ரீட்மெண்ட் வெயிட்டிங் தர்ஷு. நீங்க ரெண்டு பேரும் தான் சொல்லப் போறீங்க இவனுங்களை என்ன செய்யலாம்னு .ராஜஷேகரும் அதுல இன்வால்வ் ஆகியிருக்கார் தெரியுமா "

என்று கிருஷ் கைகளை இறுக மூட , இன்னமுமே அதிர்ந்தாள் தர்ஷினி .

தன்னுடைய தந்தை தான் அது என்றே தெரியாமல் வைஷாலி கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இதெல்லாம் நிகழும் என்று கணித்திருக்காத ரஞ்சித் , பித்துப் பிடித்தது போலானான் .

மூச்சே விட முடியாமல் ரஞ்சித் பேச்சற்று இருக்க , ஊரிலே அவனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது .

வேறொரு கேஸில் தீவிரமாகக் களம் இறங்கியிருந்த ராஜஷேகர் , இது எதையும் அறியாமல் , தான் சிக்கியது உணராமல் இருந்தார்.

எதிர்பாரா நிகழ்வுகள் , எதிர்பார்ப்புடன் கூடிய விதத்தில் , எதிர்பாரா நேரத்தில் நடப்பதே
காலத்தின் கட்டாயம் .


விதியை மதியால் வெல்லலாம் .. ஆனால் , சதியே விதியானால் !! அதை வெல்வதற்குள் நம் விதி , தானாகவே முடிந்துவிடும்.

ஆகையால் விதியை வெல்ல நினைக்காமல் விதியை நாமே விதிக்கும்படி செய்ய வேண்டும் .

இங்கே , அவரவர் விதியை அவர்களே நிர்ணயம் செய்கிறார்களா இல்லை நிமிர்ந்து நிற்க முயல்கிறார்களா என்று பார்க்கலாம்.

சொக்கட்டான் பார்வை தொடரும்...


Wow semma my krish chlm ennama play panran adey ranjith paiya un aatam clse da kanna .....nan appavey snnenla en krish etho game panranu??
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அதுக்கென்ன வாங்கித் தந்தால்
போச்சு
நீங்க இங்கே பேரூர்-ல-தான்
இருக்கிறதா சொன்னாங்க
அட்ரஸ் சொல்லுங்க
அனுப்பி வைக்கிறேன்,
ஹரிணி டியர்
Aama banu ma.. perur la dhan irukken...oru naal veetuke vaanga... enjoy pannalam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top