MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 10
இன்ஸ்பெக்டர் முரளி போனை கட் செய்து விட்டு யோசித்து கொண்டே நின்றிருந்தார். அப்போது முத்து அருகில் வந்து என்ன என்று விசாரிக்கிறார்.
“என்ன சார், என்னாச்சு..? யாரு போன் ல அவரா..? என்ன சொன்னாரு...?”
“போய்யா நீ வேற... அந்த ஆளு விட்ட நம்மள ஜெயிலுக்கு அனுப்பிறும் போல... எரிச்சலா வருது, ஏன் தான் இந்த ஆளுக்கு உதவி பண்ண ஒத்துக்கிட்டோமோன்னு நினைக்க வைக்கிறான்.”
“என்ன சார் பண்ண, நாம தான் காசு வாங்கிட்டோமே...! செஞ்சு தான் ஆகணும். அவரு என்ன தான் சொன்னாரு..?”
“முருகன் சொன்ன அடையாலத்த வச்சு அவன பிடிச்சுட்டாங்களாம்... இவர் அவன கொன்னுடுவாருன்னு சொன்னதால தான் நான் கண்டு பிடிக்க எடுக்குற முயற்ச்சிக்கு எந்த தடையும் பண்ணாம இருந்தேன். இப்போ வந்து என்ன அவன விசாரி, அவன எந்த உண்மையும் சொல்ல விட்டுறாத அப்டின்னு சொல்லிட்டு இருக்காரு.”
“இவ்ளோ தான சார்.. அதுக்கு எதுக்கு இவ்ளோ கவலை படுறீங்க...?”
“அது மட்டும் இல்ல, அந்த கெளதம விசாரிக்கணும்ன்னு சொல்லி ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வந்து அடிச்சு அவன கொலையா நான் தான் பண்ணேன்னு ஒத்துக்க வைக்கவாம்... நினைச்சு பாரு இதுல எவ்ளோ சிக்கல் இருக்கு. அது அவருக்கு புரியவே மாட்டுது. அன்னைக்கே அந்த வக்கீல் நாம அவன் அடிச்சு இப்டி பேச வச்சுருக்கோம்ன்னு சொன்னாரு, இதுல இப்போ நிஜமாவே செஞ்சா அவரு என்ன பண்ணுவாரு...”
“சார் நீங்க கவலை படாதீங்க... அந்த கெளதம் தான் ரொம்ப அப்பாவி, நாம சம்மதிக்க வச்சுறலாம்.”
“எனக்கு என்னம்மோ நடக்கும்ன்னு தோணல... அவன் அங்க ஜெயில்ல சந்தோசமா இருக்கானாம், என் ப்ரெண்ட்ஸ் என்ன காப்பாத்தி கூட்டிட்டி போய்டுவாங்கன்னு நம்பிக்கையா சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானாம், நம்ம ஆளு சொன்னான். அப்பாவியா இல்ல தைரியமா இருக்கானாம்.”
“ஹ்ம்ம் அப்டியொரு பிரச்சன இருக்கு தான். அன்னைக்கு கூட அவன் என்ன எப்டி கோபமா எதிர்த்தான். அவன் ஒத்துக்க மாட்டான்.” சிறிது நேரம் யோசிக்கிறார். பின், “சார்... எனக்கு ஒரு யோசனை...”
“என்ன...?”
“நம்ம முருகன கடத்தினதே கெளதம் தான்னு பிடிச்ச அவன வச்சு சொல்ல வச்சுருவோம். இவர் சொன்ன மாதிரி கெளதம கூட்டிட்டு வந்தும் அடிச்சு ஒத்துக்க வைக்க பாப்போம். ஒத்துக்கிட்டாலும் சரி, இல்லைனாலும் அவன வச்சு இவன மாட்டிவிடலாம்...”
“அவன் ஒத்துகிட்டாலும் கொலையானது யாருன்னு வேற சொல்லணும்ல அவன்..? ”
“அதையும் சொல்லி அடிச்சு ஒத்துக்க வச்சு சொல்ல வச்சுருவோம்..”
“ஏய்.! அத இப்போ சொல்ல கூடாது.. ஒத்துக்கிட்டா சொல்லுவோம்..”
“இல்லாட்டி விட்டுருவோம் சார்.. நம்ம வக்கீல் வச்சு பேச வச்சுருவோம்..”
“நீ சொல்லுறது ஒரு வகைல நல்ல யோசனை தான். ஆனாலும் அந்தஆள பட்டுகோட்டை ல வச்சுருக்காங்க... அவன அங்கேயே விசாரிச்சா பிரச்சன தான... கமிஷனர் வேற இந்த கேசுல நான் சரியா பாக்குறது இல்லன்னு வேற யாராது போடலாமான்னு பேசிட்டு இருக்காறாம், அப்டி மாத்திட்டா என்ன பண்ண...?!” என்று மேலும் மேலும் நம்பிக்கை இல்லாமலே பேசி கொண்டிருக்கிறார்.
“சார் நீங்க ஏன் இவ்ளோ கவலை படுறீங்க..? நீங்க போய் பேசி அவன இங்க விசாரிக்க கூட்டிட்டு வந்துருங்க. அத பாத்தே கமிஷ்னர் நீங்க இந்த கேஸ்ல நல்ல தான் விசாரிக்கிறீங்கன்னு வேறவங்கள போடா மாட்டாரு.. உங்களுக்கும் நல்ல பேரு கிடைக்கும்.”
“பாப்போம்... நீ சொன்ன மாதிரி நடந்தா நல்லது தான். நான் மொதல்ல அவன பட்டுகோட்டைல இருந்து இங்க கூட்டிட்டு வர்றேன்.”
இன்ஸ்பெக்டர் பட்டுகோட்டை போலீஸ் அதிகாரியிடம் பேசி அவனை இங்கு வரவழைக்கிறார். மேலும் அவனை அவர்கள் விசாரித்து எந்த உண்மையும் அவன் கூறவில்லை என்ற தெரிந்து சந்தோஷ படுகிறார். அவனை இங்கு கொண்டு வந்ததும் விசாரிப்பது போன்று அவனை “இத கெளதம் தான் பண்ணான்னு சொல்லணும்” என்று பேசி மாற்றினார்.
பின் கமிஷ்னரிடம் பேசி கெளதமை விசாரிக்க அனுமதி பெறுகிறார். ஜெயிலுக்கு இன்பார்ம் செய்து கெளதமை வரவழைக்கின்றனர். கெளதம் தனக்கு நடக்க போவது அறியாமல் நண்பர்களையும், சௌந்தர்யாவையும் சென்றால் பார்க்கலாம் என்ற ஆவலோடு சந்தோசமாக செல்கிறான்.
ஸ்டேஷனில் முரளி அவனை ஒத்துக்க வைக்க பண்ண வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறார். சௌந்தர்யா மற்றும் நண்பர்கள் மூவருக்குமே கெளதம் இங்கு வருவது தெரியாது. முத்து இன்ஸ்பெக்டரிடம் வந்து முருகனோ அல்லது வேற யாராது வந்து பார்த்து விட்டாலும் பிரச்சனை என்று கூறுகின்றார்.
இன்ஸ்பெக்டர், “அதுக்கு நான் இன்னொரு இடம் வச்சுருக்கேன், அங்க வச்சு தான் கௌதம நாம விசாரிக்க போறோம். கௌதம இங்க கூட்டிட்டு வந்த பின்னாடி நாம அவன அங்க மாத்திடுவோம்.
அதுவும் இப்போவே நைட் லேட் ஆச்சு. இதுக்கு அப்பறம் அவுங்க யாரும் வர மாட்டாங்க. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே நாம அவன ஒத்துக்க வைக்கணும்.
எனக்கு ஒரு சந்தேகம் தான், அவன் இங்க ஒத்துக்கிட்டு அப்பறம் கோர்ட் ல போய் இவுங்க என்னை அடிச்சு தான் இப்டி சொல்ல வச்சாங்கன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது..?”
“அதுக்கு தான் வக்கீல் ஐயா இருக்காருல... அவரு பாத்துப்பாரு, நீங்க கவலை பட்டுட்டே இருக்காதீங்க சார்...”
கெளதம் இங்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் என்று செய்தி வருகிறது. அப்போது திடீரென்று முருகன் ஸ்டேஷன் வருகிறான். அவனை பார்த்ததும் கெளதம் வரும் நேரத்துக்கு இவனும் இங்க வந்துட்டானே, ஒரு வேல அவனுக்கு தெரிஞ்சுருச்சா என்று சந்தேக படுகிறார் இன்ஸ்பெக்டர். இருந்தாலும் முகத்தில் எதையும் வெளி காட்டாமல் பேசுகிறார்.
“என்ன வேணும்..? எதுக்கு வந்துருக்கீங்க..?”
“தெரியாத மாதிரி கேக்காதீங்க சார்..? நீங்க எப்டி இந்த விஷயத்த எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க..?”
இன்ஸ்பெக்டர்க்கு சந்தேகம் அதிகரித்தது.
“எந்த விஷயம்..?”
“அதான் சார், நான் அடையாளம் சொன்ன அவன நீங்க பிடிச்சுடீங்கலாமே... சொல்லவே இல்ல சார்...”
“ஓ.. அதுவா, இன்னைக்கு தான் பிடிச்சோம். இங்க கொண்டு வந்து விசாரிச்சுட்டு இருக்கோம். நீங்க எதுனாலும் நாளைக்கு இல்ல நாளனைக்கு வந்து கேளுங்க, இன்பார்ம் பண்ணுறோம். இப்போ நீங்க கிளம்பலாம்.”
“நான் அவன பாக்கணும்..”
“இப்போ முடியாது, நீங்க கிளம்பி போங்க. போயிட்டு நாளைக்கு வாங்க..”
“இல்ல சார், நான் அவன பாத்து விசாரிக்கணும்..”
“அப்பறம் நாங்க எதுக்கு இருக்கோம்..?! எங்களுக்கு தெரியுங்க நீங்க கிளம்புங்க...” என்று எரிச்சல் பட்டு கொண்டே பேசினார். கெளதம் வந்து விடும் முன் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று அவனை அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் முருகனோ கிளம்புவேனா என்று இருந்தான்.
“இல்ல நான் எதுவும் பண்ண மாட்டேன். அவன பார்த்து கேட்டுட்டு போய்டுவேன். ப்ளீஸ் சார்..”
“அதுக்கு எல்லாம் அனுமதி கொடுக்க முடியாது. கிளம்ப போறியா இல்லையா நீ..?!” என்று மிரட்டும் தோணியில் பேச ஆரம்பித்தார்.
நாளைக்கு நாம வக்கீல் சார பேச வச்சு அவன நாம விசாரிப்போம், இப்போதைக்கு கிளம்புவோம் என்று எண்ணி அங்கிருந்து கிளம்புகிறான். அவன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பும் போது எதிரே கெளதமை கூடி கொண்டு வந்த வண்டி வந்து நிற்கிறது. வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் அவனது கண்களை கூச செய்தது. அவனால் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை.
கெளதம் வெளியே இறங்கினான். அதற்குள் சத்தம் கேட்டு இன்ஸ்பெக்டர் வேகமாக வெளியே வருகிறார். முருகன் கண் கூசுவதால் முகத்தை மூடினான், அதனால் கெளதமை பார்க்க வில்லை. முரளி கெளதமின் கையை பிடித்து இழுத்து வேகமாக ஸ்டேஷனுள் கொண்டு சென்றார். வண்டியை ஆப் செய்த பின் லைட் வெளிச்சம் குறையவும் முருகன் நிமிர்ந்து யார் என்று பார்க்கிறான். அங்கு ரெண்டு கான்ஸ்டபில் இருக்கின்றனர். பின் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான். அவன் செல்லும் வரை முரளி நின்று பார்த்து விட்டு பின் உள்ளே வருகிறார்.
இன்ஸ்பெக்டர் முரளி போனை கட் செய்து விட்டு யோசித்து கொண்டே நின்றிருந்தார். அப்போது முத்து அருகில் வந்து என்ன என்று விசாரிக்கிறார்.
“என்ன சார், என்னாச்சு..? யாரு போன் ல அவரா..? என்ன சொன்னாரு...?”
“போய்யா நீ வேற... அந்த ஆளு விட்ட நம்மள ஜெயிலுக்கு அனுப்பிறும் போல... எரிச்சலா வருது, ஏன் தான் இந்த ஆளுக்கு உதவி பண்ண ஒத்துக்கிட்டோமோன்னு நினைக்க வைக்கிறான்.”
“என்ன சார் பண்ண, நாம தான் காசு வாங்கிட்டோமே...! செஞ்சு தான் ஆகணும். அவரு என்ன தான் சொன்னாரு..?”
“முருகன் சொன்ன அடையாலத்த வச்சு அவன பிடிச்சுட்டாங்களாம்... இவர் அவன கொன்னுடுவாருன்னு சொன்னதால தான் நான் கண்டு பிடிக்க எடுக்குற முயற்ச்சிக்கு எந்த தடையும் பண்ணாம இருந்தேன். இப்போ வந்து என்ன அவன விசாரி, அவன எந்த உண்மையும் சொல்ல விட்டுறாத அப்டின்னு சொல்லிட்டு இருக்காரு.”
“இவ்ளோ தான சார்.. அதுக்கு எதுக்கு இவ்ளோ கவலை படுறீங்க...?”
“அது மட்டும் இல்ல, அந்த கெளதம விசாரிக்கணும்ன்னு சொல்லி ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வந்து அடிச்சு அவன கொலையா நான் தான் பண்ணேன்னு ஒத்துக்க வைக்கவாம்... நினைச்சு பாரு இதுல எவ்ளோ சிக்கல் இருக்கு. அது அவருக்கு புரியவே மாட்டுது. அன்னைக்கே அந்த வக்கீல் நாம அவன் அடிச்சு இப்டி பேச வச்சுருக்கோம்ன்னு சொன்னாரு, இதுல இப்போ நிஜமாவே செஞ்சா அவரு என்ன பண்ணுவாரு...”
“சார் நீங்க கவலை படாதீங்க... அந்த கெளதம் தான் ரொம்ப அப்பாவி, நாம சம்மதிக்க வச்சுறலாம்.”
“எனக்கு என்னம்மோ நடக்கும்ன்னு தோணல... அவன் அங்க ஜெயில்ல சந்தோசமா இருக்கானாம், என் ப்ரெண்ட்ஸ் என்ன காப்பாத்தி கூட்டிட்டி போய்டுவாங்கன்னு நம்பிக்கையா சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானாம், நம்ம ஆளு சொன்னான். அப்பாவியா இல்ல தைரியமா இருக்கானாம்.”
“ஹ்ம்ம் அப்டியொரு பிரச்சன இருக்கு தான். அன்னைக்கு கூட அவன் என்ன எப்டி கோபமா எதிர்த்தான். அவன் ஒத்துக்க மாட்டான்.” சிறிது நேரம் யோசிக்கிறார். பின், “சார்... எனக்கு ஒரு யோசனை...”
“என்ன...?”
“நம்ம முருகன கடத்தினதே கெளதம் தான்னு பிடிச்ச அவன வச்சு சொல்ல வச்சுருவோம். இவர் சொன்ன மாதிரி கெளதம கூட்டிட்டு வந்தும் அடிச்சு ஒத்துக்க வைக்க பாப்போம். ஒத்துக்கிட்டாலும் சரி, இல்லைனாலும் அவன வச்சு இவன மாட்டிவிடலாம்...”
“அவன் ஒத்துகிட்டாலும் கொலையானது யாருன்னு வேற சொல்லணும்ல அவன்..? ”
“அதையும் சொல்லி அடிச்சு ஒத்துக்க வச்சு சொல்ல வச்சுருவோம்..”
“ஏய்.! அத இப்போ சொல்ல கூடாது.. ஒத்துக்கிட்டா சொல்லுவோம்..”
“இல்லாட்டி விட்டுருவோம் சார்.. நம்ம வக்கீல் வச்சு பேச வச்சுருவோம்..”
“நீ சொல்லுறது ஒரு வகைல நல்ல யோசனை தான். ஆனாலும் அந்தஆள பட்டுகோட்டை ல வச்சுருக்காங்க... அவன அங்கேயே விசாரிச்சா பிரச்சன தான... கமிஷனர் வேற இந்த கேசுல நான் சரியா பாக்குறது இல்லன்னு வேற யாராது போடலாமான்னு பேசிட்டு இருக்காறாம், அப்டி மாத்திட்டா என்ன பண்ண...?!” என்று மேலும் மேலும் நம்பிக்கை இல்லாமலே பேசி கொண்டிருக்கிறார்.
“சார் நீங்க ஏன் இவ்ளோ கவலை படுறீங்க..? நீங்க போய் பேசி அவன இங்க விசாரிக்க கூட்டிட்டு வந்துருங்க. அத பாத்தே கமிஷ்னர் நீங்க இந்த கேஸ்ல நல்ல தான் விசாரிக்கிறீங்கன்னு வேறவங்கள போடா மாட்டாரு.. உங்களுக்கும் நல்ல பேரு கிடைக்கும்.”
“பாப்போம்... நீ சொன்ன மாதிரி நடந்தா நல்லது தான். நான் மொதல்ல அவன பட்டுகோட்டைல இருந்து இங்க கூட்டிட்டு வர்றேன்.”
இன்ஸ்பெக்டர் பட்டுகோட்டை போலீஸ் அதிகாரியிடம் பேசி அவனை இங்கு வரவழைக்கிறார். மேலும் அவனை அவர்கள் விசாரித்து எந்த உண்மையும் அவன் கூறவில்லை என்ற தெரிந்து சந்தோஷ படுகிறார். அவனை இங்கு கொண்டு வந்ததும் விசாரிப்பது போன்று அவனை “இத கெளதம் தான் பண்ணான்னு சொல்லணும்” என்று பேசி மாற்றினார்.
பின் கமிஷ்னரிடம் பேசி கெளதமை விசாரிக்க அனுமதி பெறுகிறார். ஜெயிலுக்கு இன்பார்ம் செய்து கெளதமை வரவழைக்கின்றனர். கெளதம் தனக்கு நடக்க போவது அறியாமல் நண்பர்களையும், சௌந்தர்யாவையும் சென்றால் பார்க்கலாம் என்ற ஆவலோடு சந்தோசமாக செல்கிறான்.
ஸ்டேஷனில் முரளி அவனை ஒத்துக்க வைக்க பண்ண வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறார். சௌந்தர்யா மற்றும் நண்பர்கள் மூவருக்குமே கெளதம் இங்கு வருவது தெரியாது. முத்து இன்ஸ்பெக்டரிடம் வந்து முருகனோ அல்லது வேற யாராது வந்து பார்த்து விட்டாலும் பிரச்சனை என்று கூறுகின்றார்.
இன்ஸ்பெக்டர், “அதுக்கு நான் இன்னொரு இடம் வச்சுருக்கேன், அங்க வச்சு தான் கௌதம நாம விசாரிக்க போறோம். கௌதம இங்க கூட்டிட்டு வந்த பின்னாடி நாம அவன அங்க மாத்திடுவோம்.
அதுவும் இப்போவே நைட் லேட் ஆச்சு. இதுக்கு அப்பறம் அவுங்க யாரும் வர மாட்டாங்க. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே நாம அவன ஒத்துக்க வைக்கணும்.
எனக்கு ஒரு சந்தேகம் தான், அவன் இங்க ஒத்துக்கிட்டு அப்பறம் கோர்ட் ல போய் இவுங்க என்னை அடிச்சு தான் இப்டி சொல்ல வச்சாங்கன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது..?”
“அதுக்கு தான் வக்கீல் ஐயா இருக்காருல... அவரு பாத்துப்பாரு, நீங்க கவலை பட்டுட்டே இருக்காதீங்க சார்...”
கெளதம் இங்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் என்று செய்தி வருகிறது. அப்போது திடீரென்று முருகன் ஸ்டேஷன் வருகிறான். அவனை பார்த்ததும் கெளதம் வரும் நேரத்துக்கு இவனும் இங்க வந்துட்டானே, ஒரு வேல அவனுக்கு தெரிஞ்சுருச்சா என்று சந்தேக படுகிறார் இன்ஸ்பெக்டர். இருந்தாலும் முகத்தில் எதையும் வெளி காட்டாமல் பேசுகிறார்.
“என்ன வேணும்..? எதுக்கு வந்துருக்கீங்க..?”
“தெரியாத மாதிரி கேக்காதீங்க சார்..? நீங்க எப்டி இந்த விஷயத்த எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க..?”
இன்ஸ்பெக்டர்க்கு சந்தேகம் அதிகரித்தது.
“எந்த விஷயம்..?”
“அதான் சார், நான் அடையாளம் சொன்ன அவன நீங்க பிடிச்சுடீங்கலாமே... சொல்லவே இல்ல சார்...”
“ஓ.. அதுவா, இன்னைக்கு தான் பிடிச்சோம். இங்க கொண்டு வந்து விசாரிச்சுட்டு இருக்கோம். நீங்க எதுனாலும் நாளைக்கு இல்ல நாளனைக்கு வந்து கேளுங்க, இன்பார்ம் பண்ணுறோம். இப்போ நீங்க கிளம்பலாம்.”
“நான் அவன பாக்கணும்..”
“இப்போ முடியாது, நீங்க கிளம்பி போங்க. போயிட்டு நாளைக்கு வாங்க..”
“இல்ல சார், நான் அவன பாத்து விசாரிக்கணும்..”
“அப்பறம் நாங்க எதுக்கு இருக்கோம்..?! எங்களுக்கு தெரியுங்க நீங்க கிளம்புங்க...” என்று எரிச்சல் பட்டு கொண்டே பேசினார். கெளதம் வந்து விடும் முன் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று அவனை அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் முருகனோ கிளம்புவேனா என்று இருந்தான்.
“இல்ல நான் எதுவும் பண்ண மாட்டேன். அவன பார்த்து கேட்டுட்டு போய்டுவேன். ப்ளீஸ் சார்..”
“அதுக்கு எல்லாம் அனுமதி கொடுக்க முடியாது. கிளம்ப போறியா இல்லையா நீ..?!” என்று மிரட்டும் தோணியில் பேச ஆரம்பித்தார்.
நாளைக்கு நாம வக்கீல் சார பேச வச்சு அவன நாம விசாரிப்போம், இப்போதைக்கு கிளம்புவோம் என்று எண்ணி அங்கிருந்து கிளம்புகிறான். அவன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பும் போது எதிரே கெளதமை கூடி கொண்டு வந்த வண்டி வந்து நிற்கிறது. வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் அவனது கண்களை கூச செய்தது. அவனால் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை.
கெளதம் வெளியே இறங்கினான். அதற்குள் சத்தம் கேட்டு இன்ஸ்பெக்டர் வேகமாக வெளியே வருகிறார். முருகன் கண் கூசுவதால் முகத்தை மூடினான், அதனால் கெளதமை பார்க்க வில்லை. முரளி கெளதமின் கையை பிடித்து இழுத்து வேகமாக ஸ்டேஷனுள் கொண்டு சென்றார். வண்டியை ஆப் செய்த பின் லைட் வெளிச்சம் குறையவும் முருகன் நிமிர்ந்து யார் என்று பார்க்கிறான். அங்கு ரெண்டு கான்ஸ்டபில் இருக்கின்றனர். பின் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான். அவன் செல்லும் வரை முரளி நின்று பார்த்து விட்டு பின் உள்ளே வருகிறார்.