காலைக் கதிரவன் அந்த அறையை அழகாக அலங்கரித்திருந்த திரைச்சீலையையும் மீறி அங்கிருந்த இலவம் பஞ்சு மெத்தையில் தன்னை புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் வீழ்ந்திருந்த அவனின் முகத்தில் பட்டுத் தெரித்தது.
அதில் துயில் கலைந்த அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே காலையில் எழுந்ததும் அனைவரும் பண்ண வேண்டிய அந்த அதி முக்கியமான வேலையை முதலில் செய்தான்.
இந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் பல் துலக்கி ,காலைக் கடன் முடித்து,முகம் கழுவி சூரிய நமஸ்காரம் செய்வதை விட மிகவும் முக்கியம் மற்றும் அவசியமான வேலை, எழுந்ததும் கைபேசியில் முகத்தை முழிப்பது என்றாகிப் போனது.
அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.கண்ணை மூடிக் கொண்டே தன் கைபேசியை துலவியவன் அது சிக்கியதும் என்றைக்கும் போல் வால்பேப்பரில் உள்ள தன் செல்ல மகளின் போட்டோவை கண்டு அந்த நாளை தொடங்க விரும்பி ஆசையாக திரையை பார்க்க,அங்கே மகளின் புகைப்படத்தைக் காணாமல் வெறும் கருப்பு திரையை கண்டு அதிர்ச்சி அடைந்தான். கண்ணை கசக்கி கொண்டு எழுந்தமர்ந்தவன் மீண்டும் நன்றாக உற்று பார்த்தான்.
அப்போதும் அதுவே தெரிய 'என்னாச்சு போனுக்கு இந்த பாப்பு குட்டி போனை போட்டு உடைச்சிருச்சோ..இருக்கும் இருக்கும் அவளுக்கு இதே வேலையா போச்சு எப்ப பாரு என்னை கடுப்பேத்துறதே வேலையா வச்சிருக்கா..பின்ன அம்மா மாதிரி தான மகளும் இருப்பா' என நினைத்தவன் போனுக்கு ஏதாவது ஆகியிருக்கிறதா என சரி பார்த்தான்.
போன் நன்றாக தான் வேலை செய்தது..ஆனால் அதில் இருந்த தன் அம்மா,மனைவி,மகள்,தோழி ,சகோதரிகளின் புகைப்படங்கள் மட்டும் காணாமல் போயிருந்ததைக் கண்டு குழம்பியவன்,
'என்னடா இது புது சாஃப்ட்வேர் கண்டுபிடிச்சுடானுங்களோ பொண்ணுங்க போட்டோ மட்டும் அதுவே டெலிட் ஆகுற மாதிரி..போனுக்கு கூட தெரிஞ்சிருக்கு பொண்ணுங்க இல்லைன்னா உலகம் நல்லா இருக்கும்னு ஆனா இந்த கடவுளுக்கு மட்டும் தெரியலை..' என புலம்பிக் கொண்டு கட்டிலை விட்டு எழப்போக,திடீரென்று அந்த அறையெங்கும் கண்ணைக் கூச வைக்கும் அளவு ஒளி பரவியது.
"கல்பாக்கத்துல இருந்து வர மொத்த கரெண்டையும் எவன் டா என் ரூம் ட்யூப் லைட்க்கு கனெக்ஷ்ன் கொடுத்தது..இப்படி கண்ணு கூசுது" என புலம்பியவன் தன் கண்ணாடியை தேடி எடுத்து அணிந்தான்.
அப்போது அந்த ஒளியில் இருந்து நான்கு முகம் கொண்ட பிரம்மன் தேஜஸ் நிறந்த முகமும்,இதழில் நிறைந்த சிரிப்போடும் தோன்றினார்.
அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் ,'யாருடா இது கோவில்ல வேசம் போட போய்ட்டு மேக்கப் கூட கலைக்காம என் பெட்ரூம்க்குள்ள வந்து நிக்கிறாரு..என் அருமை பொண்டாட்டி இவரை உள்ள விட்டுட்டு அவ என்ன பண்ணிகிட்டு இருக்கா' என சிந்தித்தவன்,
"யாரு நீங்க??? என் ரூம்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?" என்று வினவினான்.
"குழந்தாய் நானே உன்னை படைத்தவன் ஆவேன்" என்று பதிலளித்தவரை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவன்,
ஒரு வழியாக சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு "யோவ் தகப்பா இதென்ன வேஷம் !! என்ன விழா நடக்குதுனு இப்படி மாறுவேடப் போட்டிக்கு ரெடி ஆய்ருக்க?? உன்ன பார்க்க சிப்பு சிப்பா வருது..முதல்ல போய் இந்த மேக்கப் அஹ் கலைச்சிட்டு வா" என சிரித்தவனை முறைத்த பிரம்மர்,"நான் இவ்வுலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் பிரம்மன் ஆவேன். உன்னை பெற்ற தகப்பன் அல்ல .. முதலில் நகைப்பதை நிறுத்து முட்டாள் மானிடா!!" என்று கூறினார்.
அவரை நம்பாமல் அவரை சுற்றி சுற்றி வந்தவன் ஒவ்வொரு தலையாக தொட்டு பார்த்து இது அனைத்தும் மேக்கப் அல்ல நிஜம் என்றுணர்ந்தவன் அதிர்ச்சியில் தலைகால் புரியாமல் ,"பிரம்மாஆஆஆ!!! நீங்க என்ன தேடி வந்துருக்கீங்களா ..அய்யோ நம்பவே முடியலையே .." என்று துள்ளி குதித்தவனை அடக்கியவர் ,"இந்தாப்பா கம்முனு கெட..எனக்கு இன்னும் ஆயிரம் ஜோலி கிடக்கு..வந்த மேட்டர சொல்லிட்டு கிளம்பணும்" என்று மெட்ராஸ் பாஷையில் பேசிய பிரம்மனை கண்டு திகைத்தவன்,"என்ன கடவுளே இப்படி கலீஜ் அஹ் பேசுறீங்க? அப்போ நீங்களும் எங்களை மாதிரி தான் பேசுவீங்களா ??தமிழ் படத்தை பார்த்து நான் கூட நீங்க தூய தமிழ்ல பேசுவீங்க அதை Translate பண்ண U-dictionary app டவுன்லோட் பண்ணனுமோன்னு நினைச்சேன்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"அய்யோ சாரி பா உன் கிட்ட வரதுக்கு முன்னாடி சைதாப்பேட்டை கூவத்துக்கு போய்ருந்தேன்.அப்படியே ஒட்டிக்கிச்சு..சரி அத விடு நான் வந்த மேட்டர் என்னனா..இந்த உலகத்துல இருக்க ஆம்பளைங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லாத உலகத்துல என்னை படைச்சிருக்க வேண்டி தானன்னு எப்ப பாரு என்னை கூப்பிட்டு நை நைன்னு டிஸ்டர்ப் பண்ணி கிட்டே இருந்ததுனால..உங்களுக்கெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்களே இல்லாத உலகத்தை காட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன்..இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்கன்னு எழுத்து கூட உங்க கண்ணுல படாது..சோ இனிமேல் யாரும் என்ன தொல்லை பண்ண கூடாது..சரியா!!..இதை போய் நான் எல்லார்கிட்டயும் சொல்லனும்..i'm so busy you know ..so ..டாட்டா சி யூ லேட்டர்" என்று கூறியவர் அப்படியே அந்த அறையில் இருந்து மின்னல் போல் மறைந்தார்.
ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியாமல் முழித்தவன் பின் அவர் கூறி சென்றது புரிய ,மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் "ஐய்யா ஜாலி இன்னைக்கு ஃபுல்லா நிம்மதியா இருக்க போறேன்..எந்த தொல்லையும் இருக்காது ..அய்யோ நினைக்கும் போதே குஜாலா இருக்கே...இன்னைக்கு எனக்கு நிம்மதி !!! நிம்மதியோ நிம்மதி!!! நிம்மதிக்கெல்லாம் நிம்மதி!!" என்று சின்சான் போல் குத்தாட்டம் போட்டான்.
பின் பல் துலக்கி ,காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவன் ,மனைவியின் தயவால் தினமும் காலையில் ஃபில்டர் காப்பிக்கு பழகிய நாவை அடக்க வழி தெரியாமல் தானே களத்தில் குதித்து விடுவது என முடிவெடுத்து அடுப்பறைக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழைந்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை..ஃப்ரிட்ஜை திறந்தவன் பாக்கெட் பால் என்பதால் எந்த சிரமமும் இன்றி அதை எடுத்து விட்டு,காபி தூளை தேட அலமாரியை திறந்தான்.திறந்தவன் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓரே மாதிரியான டப்பாக்களை கண்டு திகைத்து,'அய்யய்யோ என்னது இது எல்லாமே எந்திரன் ரோபோ ரஜினி போல ஒரே மாதிரி இருக்கு இதுல அந்த கருப்பு ஆடை(காபித்தூள்) எப்படி கண்டுபிடிக்க..இது கண்டுபிடிச்சு காபி போடுறதுக்குள்ள என் டங்குவாரு அந்துரும்..என்ன பண்ணலாம் இப்போ!!!!.." என்று சிந்தித்தவன் அங்கிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை கண்டு," ஐய் பாப்புகுட்டியோட ஹார்லிக்ஸ் டப்பா இருக்கே..சோ இன்னைக்கு அதேயே மூக்கை மூடிகிட்டு குடிச்சிருவோம்..மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சு " என பாடிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்து ஹார்லிக்ஸ் டப்பாவை தலை குப்பற கவுத்தினான்.
'சுகர்லாம் போடுவாங்களா ஹார்லிக்ஸ்ல??? அதுலயே இருக்கும்ல இந்த கூட்டத்துல அத எங்க போய் தேட இப்படியே உள்ள தள்ளுவோம்' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே பால் பொங்கி வெள்ளம் ஓடியது..
"சோனமுத்தா போச்சா" என வடிவேல் ஸ்டைலில் புலம்பியவன் ,"இத க்ளீன் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளிரும் சோ நாம மிச்சம் இருக்க பாலை குடிச்சிட்டு கிளம்பிர வேண்டியதான்" என்று கூறிக்கொண்டே பால் கிண்ணத்தை துணியில்லாமல் தொட்டுவிட ,சூட்டில் கை சிவந்து போய் விட்டது.."அய்யோ அம்மா...எரியுது மா இங்க வாங்க ஷ் ஷ்" என கையை ஊதிக் கொண்டே கத்தினான்.
அப்போது தான் பிரம்மன் சொன்னது நினைவில் வர ,"அவங்க இல்லைனா என்ன ப்பூனு ஊதுனா சரியா போய்ரும் .." என்று கெத்தாக கூறிக் கொண்டே டேப்பை திருகி விட்டு குளிர்ந்த நீரில் கையை சில நிமிடம் வைத்தான்.இப்போது சற்று தேவலாம் என்று தோன்ற இந்த முறை ஜாக்கிரதையாக துணியை வைத்து பால் கிண்ணத்தை இறக்கி பாலை டம்ளரில் ஊற்றினான்.
தானே போட்ட ஹார்லிக்சை ஆசையாக பார்த்துக் கொண்டே முதல் வாயை குடித்தவன் ,குமட்டிக் கொண்டு வர அப்படியே வாஷ் பேஷினில் போய் அனைத்தையும் துப்பி விட்டு முகத்தை கழுவியவன்,
"சை ஹார்லிக்ஸ் என்ன கவர்மென்ட் கக்கூஸ் மாதிரி இவ்ளோ கன்றாவியா இருக்கு" என நினைத்தவனின் மனக்கண்ணில் திருமணம் முடிந்து வந்த புதிதில் தன் மனைவி போட்டு வந்த காபியில் சர்க்கரை சிறிது கம்மியாக இருந்ததால் அவளை "ஒரு காபி கூட போட தெரியாதா " என்று கிண்டல் செய்து சிரித்தது தோன்றி மறைந்தது.
"நான் இன்னைக்கு தான முதல் தடவை பண்றேன் அதான் சொதப்பிருச்சு இல்லைனா செமயா பண்ணிருப்பேன்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
அப்போது உள்ளே இருந்து எட்டிப் பார்த்த மனசாட்சி ,"அவ கூட தான் பிறந்ததுல இருந்து அவங்க வீட்டுல மகாராணியா வாழ்ந்துட்டு இங்க வந்து உனக்காக முதன் முதலா சமைக்க கத்துகிட்டா " என்று நியாயம் கேட்க ,"ச்சு போ எனக்கு டைம் ஆச்சு ஆபிஸுக்கு நான் கிளம்பனும்" என தன் பெட்ரூமை நோக்கி ஓடினான்.
குளித்து முடித்து வந்தவன் எப்போதும் தன் மனைவி பெட்டில் தனக்காக எடுத்து வைக்கும் உடையை இன்று காணாது முகம் வாடியவன் பின் ,"அவ எடுத்துக் குடுக்கலைனா எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண தெரியாதா அவ செலக்ஷன்ன விட என்னது தான் சூப்பரா இருக்கும் இன்னைக்கு நான் போட்டுட்டு போறதுல பொண்ணுங்க எல்லாம் வாயை பொலந்துட்டு என்னை சைட் அடிக்க போறாங்க ..அய்யய்யோ அதான் பொண்ணுங்களே இருக்க மாட்டாங்கள ...அடச்சீ இது வேற கஜினி சூர்யா மாதிரி அடிக்கடி மறந்து போய்ருது " என தனக்குத்தானே பேசிக் கொண்டு வார்ட்ரோபை திறந்து என்ன அணிவது என அரைமணி நேரமாக யோசித்தான்.
"ச்சை அனுஷ்கா ஷர்மா கூட அவங்க கல்யாண லெஹங்கா எடுக்க இவ்ளோ நேரம் யோசிச்சிருக்க மாட்டாங்க என்ன பொழப்பு டா இது" என நொந்து கொண்டு ஏதோ ஒரு சட்டை பேண்ட்டை எடுத்து அணிய ஆரம்பித்தான்.
"என் பாசமலர் இருந்துச்சுனா இந்நேரம் நல்லா இஸ்திரி போட்டு கொடுத்துருக்கும் திட்டிகிட்டேவாச்சும்..அதுவும் போச்சா" என நொந்து கொண்டே ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.
பசிக்கும் முன்பே பாசத்தோடு உணவுத்தட்டை கைகளில் ஏந்திக் கொண்டு "சாப்பிட்டு வேலை பாரு கண்ணா உடம்பை கெடுத்துக்காத" என்று அன்பொழுக கூறும் அன்னையின் பிம்பம் கண்முன் தோன்றி மறைந்து மனதை பாரமாக்கியது.
முயன்று தன்னை சமாளித்துக் கொண்டவன் கார் சாவியை எங்கு வைத்தோம் என தேடுகிறேன் என்று வீட்டை நாசமாக்கினான்.
"ஷிட்!!" என்று சுவற்றில் ஓங்கி குத்தியவன் ,"எப்படிடி பொண்டாட்டி நீ மட்டும் என் ஷாக்ஸ் ,ஷூ ,சாவி எல்லாம் நான் எங்க தூக்கி போட்டாலும் ரெண்டு நிமிஷத்துல கண்டுபிடிச்சு கொண்டு வந்த..அந்த ரெண்டு நிமிஷம் கூட காத்திருக்க பொறுமை இல்லாம உன்னை எவ்ளோ நாள் திட்டிருக்கேன்..சாரி டி" என மானசீகமாய் தன் மனைவியிடம் மன்னிப்பு கோரியவன் பின் பொறுமையாக சாவியை தேடினான்..பின்பு ஒரு வழியாக கண்டுபிடித்து கதவை பூட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தான்.
வாசலை பூட்டி விட்டு நிமிர்ந்தவன் தினமும் தன் கன்னத்தில் முத்தம் கொடுத்து வழியனுப்பும் தன் மகளையும் ,மகளுக்கு திருப்பி கொடுக்கும் சாக்கில் மகளை வைத்திருக்கும் அவள் அன்னைக்கும் முத்தம் கொடுக்கும் தன்னை செல்ல கோபத்தோடு வழியனுப்பும் தன் மனையாளும் இல்லாமல் முகம் வாட, கடுப்போடு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
அதில் துயில் கலைந்த அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே காலையில் எழுந்ததும் அனைவரும் பண்ண வேண்டிய அந்த அதி முக்கியமான வேலையை முதலில் செய்தான்.
இந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் பல் துலக்கி ,காலைக் கடன் முடித்து,முகம் கழுவி சூரிய நமஸ்காரம் செய்வதை விட மிகவும் முக்கியம் மற்றும் அவசியமான வேலை, எழுந்ததும் கைபேசியில் முகத்தை முழிப்பது என்றாகிப் போனது.
அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.கண்ணை மூடிக் கொண்டே தன் கைபேசியை துலவியவன் அது சிக்கியதும் என்றைக்கும் போல் வால்பேப்பரில் உள்ள தன் செல்ல மகளின் போட்டோவை கண்டு அந்த நாளை தொடங்க விரும்பி ஆசையாக திரையை பார்க்க,அங்கே மகளின் புகைப்படத்தைக் காணாமல் வெறும் கருப்பு திரையை கண்டு அதிர்ச்சி அடைந்தான். கண்ணை கசக்கி கொண்டு எழுந்தமர்ந்தவன் மீண்டும் நன்றாக உற்று பார்த்தான்.
அப்போதும் அதுவே தெரிய 'என்னாச்சு போனுக்கு இந்த பாப்பு குட்டி போனை போட்டு உடைச்சிருச்சோ..இருக்கும் இருக்கும் அவளுக்கு இதே வேலையா போச்சு எப்ப பாரு என்னை கடுப்பேத்துறதே வேலையா வச்சிருக்கா..பின்ன அம்மா மாதிரி தான மகளும் இருப்பா' என நினைத்தவன் போனுக்கு ஏதாவது ஆகியிருக்கிறதா என சரி பார்த்தான்.
போன் நன்றாக தான் வேலை செய்தது..ஆனால் அதில் இருந்த தன் அம்மா,மனைவி,மகள்,தோழி ,சகோதரிகளின் புகைப்படங்கள் மட்டும் காணாமல் போயிருந்ததைக் கண்டு குழம்பியவன்,
'என்னடா இது புது சாஃப்ட்வேர் கண்டுபிடிச்சுடானுங்களோ பொண்ணுங்க போட்டோ மட்டும் அதுவே டெலிட் ஆகுற மாதிரி..போனுக்கு கூட தெரிஞ்சிருக்கு பொண்ணுங்க இல்லைன்னா உலகம் நல்லா இருக்கும்னு ஆனா இந்த கடவுளுக்கு மட்டும் தெரியலை..' என புலம்பிக் கொண்டு கட்டிலை விட்டு எழப்போக,திடீரென்று அந்த அறையெங்கும் கண்ணைக் கூச வைக்கும் அளவு ஒளி பரவியது.
"கல்பாக்கத்துல இருந்து வர மொத்த கரெண்டையும் எவன் டா என் ரூம் ட்யூப் லைட்க்கு கனெக்ஷ்ன் கொடுத்தது..இப்படி கண்ணு கூசுது" என புலம்பியவன் தன் கண்ணாடியை தேடி எடுத்து அணிந்தான்.
அப்போது அந்த ஒளியில் இருந்து நான்கு முகம் கொண்ட பிரம்மன் தேஜஸ் நிறந்த முகமும்,இதழில் நிறைந்த சிரிப்போடும் தோன்றினார்.
அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் ,'யாருடா இது கோவில்ல வேசம் போட போய்ட்டு மேக்கப் கூட கலைக்காம என் பெட்ரூம்க்குள்ள வந்து நிக்கிறாரு..என் அருமை பொண்டாட்டி இவரை உள்ள விட்டுட்டு அவ என்ன பண்ணிகிட்டு இருக்கா' என சிந்தித்தவன்,
"யாரு நீங்க??? என் ரூம்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?" என்று வினவினான்.
"குழந்தாய் நானே உன்னை படைத்தவன் ஆவேன்" என்று பதிலளித்தவரை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவன்,
ஒரு வழியாக சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு "யோவ் தகப்பா இதென்ன வேஷம் !! என்ன விழா நடக்குதுனு இப்படி மாறுவேடப் போட்டிக்கு ரெடி ஆய்ருக்க?? உன்ன பார்க்க சிப்பு சிப்பா வருது..முதல்ல போய் இந்த மேக்கப் அஹ் கலைச்சிட்டு வா" என சிரித்தவனை முறைத்த பிரம்மர்,"நான் இவ்வுலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் பிரம்மன் ஆவேன். உன்னை பெற்ற தகப்பன் அல்ல .. முதலில் நகைப்பதை நிறுத்து முட்டாள் மானிடா!!" என்று கூறினார்.
அவரை நம்பாமல் அவரை சுற்றி சுற்றி வந்தவன் ஒவ்வொரு தலையாக தொட்டு பார்த்து இது அனைத்தும் மேக்கப் அல்ல நிஜம் என்றுணர்ந்தவன் அதிர்ச்சியில் தலைகால் புரியாமல் ,"பிரம்மாஆஆஆ!!! நீங்க என்ன தேடி வந்துருக்கீங்களா ..அய்யோ நம்பவே முடியலையே .." என்று துள்ளி குதித்தவனை அடக்கியவர் ,"இந்தாப்பா கம்முனு கெட..எனக்கு இன்னும் ஆயிரம் ஜோலி கிடக்கு..வந்த மேட்டர சொல்லிட்டு கிளம்பணும்" என்று மெட்ராஸ் பாஷையில் பேசிய பிரம்மனை கண்டு திகைத்தவன்,"என்ன கடவுளே இப்படி கலீஜ் அஹ் பேசுறீங்க? அப்போ நீங்களும் எங்களை மாதிரி தான் பேசுவீங்களா ??தமிழ் படத்தை பார்த்து நான் கூட நீங்க தூய தமிழ்ல பேசுவீங்க அதை Translate பண்ண U-dictionary app டவுன்லோட் பண்ணனுமோன்னு நினைச்சேன்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"அய்யோ சாரி பா உன் கிட்ட வரதுக்கு முன்னாடி சைதாப்பேட்டை கூவத்துக்கு போய்ருந்தேன்.அப்படியே ஒட்டிக்கிச்சு..சரி அத விடு நான் வந்த மேட்டர் என்னனா..இந்த உலகத்துல இருக்க ஆம்பளைங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லாத உலகத்துல என்னை படைச்சிருக்க வேண்டி தானன்னு எப்ப பாரு என்னை கூப்பிட்டு நை நைன்னு டிஸ்டர்ப் பண்ணி கிட்டே இருந்ததுனால..உங்களுக்கெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்களே இல்லாத உலகத்தை காட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன்..இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்கன்னு எழுத்து கூட உங்க கண்ணுல படாது..சோ இனிமேல் யாரும் என்ன தொல்லை பண்ண கூடாது..சரியா!!..இதை போய் நான் எல்லார்கிட்டயும் சொல்லனும்..i'm so busy you know ..so ..டாட்டா சி யூ லேட்டர்" என்று கூறியவர் அப்படியே அந்த அறையில் இருந்து மின்னல் போல் மறைந்தார்.
ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியாமல் முழித்தவன் பின் அவர் கூறி சென்றது புரிய ,மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் "ஐய்யா ஜாலி இன்னைக்கு ஃபுல்லா நிம்மதியா இருக்க போறேன்..எந்த தொல்லையும் இருக்காது ..அய்யோ நினைக்கும் போதே குஜாலா இருக்கே...இன்னைக்கு எனக்கு நிம்மதி !!! நிம்மதியோ நிம்மதி!!! நிம்மதிக்கெல்லாம் நிம்மதி!!" என்று சின்சான் போல் குத்தாட்டம் போட்டான்.
பின் பல் துலக்கி ,காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவன் ,மனைவியின் தயவால் தினமும் காலையில் ஃபில்டர் காப்பிக்கு பழகிய நாவை அடக்க வழி தெரியாமல் தானே களத்தில் குதித்து விடுவது என முடிவெடுத்து அடுப்பறைக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழைந்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை..ஃப்ரிட்ஜை திறந்தவன் பாக்கெட் பால் என்பதால் எந்த சிரமமும் இன்றி அதை எடுத்து விட்டு,காபி தூளை தேட அலமாரியை திறந்தான்.திறந்தவன் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓரே மாதிரியான டப்பாக்களை கண்டு திகைத்து,'அய்யய்யோ என்னது இது எல்லாமே எந்திரன் ரோபோ ரஜினி போல ஒரே மாதிரி இருக்கு இதுல அந்த கருப்பு ஆடை(காபித்தூள்) எப்படி கண்டுபிடிக்க..இது கண்டுபிடிச்சு காபி போடுறதுக்குள்ள என் டங்குவாரு அந்துரும்..என்ன பண்ணலாம் இப்போ!!!!.." என்று சிந்தித்தவன் அங்கிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை கண்டு," ஐய் பாப்புகுட்டியோட ஹார்லிக்ஸ் டப்பா இருக்கே..சோ இன்னைக்கு அதேயே மூக்கை மூடிகிட்டு குடிச்சிருவோம்..மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சு " என பாடிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்து ஹார்லிக்ஸ் டப்பாவை தலை குப்பற கவுத்தினான்.
'சுகர்லாம் போடுவாங்களா ஹார்லிக்ஸ்ல??? அதுலயே இருக்கும்ல இந்த கூட்டத்துல அத எங்க போய் தேட இப்படியே உள்ள தள்ளுவோம்' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே பால் பொங்கி வெள்ளம் ஓடியது..
"சோனமுத்தா போச்சா" என வடிவேல் ஸ்டைலில் புலம்பியவன் ,"இத க்ளீன் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளிரும் சோ நாம மிச்சம் இருக்க பாலை குடிச்சிட்டு கிளம்பிர வேண்டியதான்" என்று கூறிக்கொண்டே பால் கிண்ணத்தை துணியில்லாமல் தொட்டுவிட ,சூட்டில் கை சிவந்து போய் விட்டது.."அய்யோ அம்மா...எரியுது மா இங்க வாங்க ஷ் ஷ்" என கையை ஊதிக் கொண்டே கத்தினான்.
அப்போது தான் பிரம்மன் சொன்னது நினைவில் வர ,"அவங்க இல்லைனா என்ன ப்பூனு ஊதுனா சரியா போய்ரும் .." என்று கெத்தாக கூறிக் கொண்டே டேப்பை திருகி விட்டு குளிர்ந்த நீரில் கையை சில நிமிடம் வைத்தான்.இப்போது சற்று தேவலாம் என்று தோன்ற இந்த முறை ஜாக்கிரதையாக துணியை வைத்து பால் கிண்ணத்தை இறக்கி பாலை டம்ளரில் ஊற்றினான்.
தானே போட்ட ஹார்லிக்சை ஆசையாக பார்த்துக் கொண்டே முதல் வாயை குடித்தவன் ,குமட்டிக் கொண்டு வர அப்படியே வாஷ் பேஷினில் போய் அனைத்தையும் துப்பி விட்டு முகத்தை கழுவியவன்,
"சை ஹார்லிக்ஸ் என்ன கவர்மென்ட் கக்கூஸ் மாதிரி இவ்ளோ கன்றாவியா இருக்கு" என நினைத்தவனின் மனக்கண்ணில் திருமணம் முடிந்து வந்த புதிதில் தன் மனைவி போட்டு வந்த காபியில் சர்க்கரை சிறிது கம்மியாக இருந்ததால் அவளை "ஒரு காபி கூட போட தெரியாதா " என்று கிண்டல் செய்து சிரித்தது தோன்றி மறைந்தது.
"நான் இன்னைக்கு தான முதல் தடவை பண்றேன் அதான் சொதப்பிருச்சு இல்லைனா செமயா பண்ணிருப்பேன்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
அப்போது உள்ளே இருந்து எட்டிப் பார்த்த மனசாட்சி ,"அவ கூட தான் பிறந்ததுல இருந்து அவங்க வீட்டுல மகாராணியா வாழ்ந்துட்டு இங்க வந்து உனக்காக முதன் முதலா சமைக்க கத்துகிட்டா " என்று நியாயம் கேட்க ,"ச்சு போ எனக்கு டைம் ஆச்சு ஆபிஸுக்கு நான் கிளம்பனும்" என தன் பெட்ரூமை நோக்கி ஓடினான்.
குளித்து முடித்து வந்தவன் எப்போதும் தன் மனைவி பெட்டில் தனக்காக எடுத்து வைக்கும் உடையை இன்று காணாது முகம் வாடியவன் பின் ,"அவ எடுத்துக் குடுக்கலைனா எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண தெரியாதா அவ செலக்ஷன்ன விட என்னது தான் சூப்பரா இருக்கும் இன்னைக்கு நான் போட்டுட்டு போறதுல பொண்ணுங்க எல்லாம் வாயை பொலந்துட்டு என்னை சைட் அடிக்க போறாங்க ..அய்யய்யோ அதான் பொண்ணுங்களே இருக்க மாட்டாங்கள ...அடச்சீ இது வேற கஜினி சூர்யா மாதிரி அடிக்கடி மறந்து போய்ருது " என தனக்குத்தானே பேசிக் கொண்டு வார்ட்ரோபை திறந்து என்ன அணிவது என அரைமணி நேரமாக யோசித்தான்.
"ச்சை அனுஷ்கா ஷர்மா கூட அவங்க கல்யாண லெஹங்கா எடுக்க இவ்ளோ நேரம் யோசிச்சிருக்க மாட்டாங்க என்ன பொழப்பு டா இது" என நொந்து கொண்டு ஏதோ ஒரு சட்டை பேண்ட்டை எடுத்து அணிய ஆரம்பித்தான்.
"என் பாசமலர் இருந்துச்சுனா இந்நேரம் நல்லா இஸ்திரி போட்டு கொடுத்துருக்கும் திட்டிகிட்டேவாச்சும்..அதுவும் போச்சா" என நொந்து கொண்டே ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.
பசிக்கும் முன்பே பாசத்தோடு உணவுத்தட்டை கைகளில் ஏந்திக் கொண்டு "சாப்பிட்டு வேலை பாரு கண்ணா உடம்பை கெடுத்துக்காத" என்று அன்பொழுக கூறும் அன்னையின் பிம்பம் கண்முன் தோன்றி மறைந்து மனதை பாரமாக்கியது.
முயன்று தன்னை சமாளித்துக் கொண்டவன் கார் சாவியை எங்கு வைத்தோம் என தேடுகிறேன் என்று வீட்டை நாசமாக்கினான்.
"ஷிட்!!" என்று சுவற்றில் ஓங்கி குத்தியவன் ,"எப்படிடி பொண்டாட்டி நீ மட்டும் என் ஷாக்ஸ் ,ஷூ ,சாவி எல்லாம் நான் எங்க தூக்கி போட்டாலும் ரெண்டு நிமிஷத்துல கண்டுபிடிச்சு கொண்டு வந்த..அந்த ரெண்டு நிமிஷம் கூட காத்திருக்க பொறுமை இல்லாம உன்னை எவ்ளோ நாள் திட்டிருக்கேன்..சாரி டி" என மானசீகமாய் தன் மனைவியிடம் மன்னிப்பு கோரியவன் பின் பொறுமையாக சாவியை தேடினான்..பின்பு ஒரு வழியாக கண்டுபிடித்து கதவை பூட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தான்.
வாசலை பூட்டி விட்டு நிமிர்ந்தவன் தினமும் தன் கன்னத்தில் முத்தம் கொடுத்து வழியனுப்பும் தன் மகளையும் ,மகளுக்கு திருப்பி கொடுக்கும் சாக்கில் மகளை வைத்திருக்கும் அவள் அன்னைக்கும் முத்தம் கொடுக்கும் தன்னை செல்ல கோபத்தோடு வழியனுப்பும் தன் மனையாளும் இல்லாமல் முகம் வாட, கடுப்போடு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.