Epi -1:
காலை 9 மணியே ஆனாலும் சூரியன் சுட்டுஎரிக்க , கைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது.. இன்னும் படுக்கையை விட்டு எழாமல் , கண்களை
திறக்காமல் கைகளால் தேடியபடி கைபேசியை எடுத்தவன் , காதில் வைத்து , " ஹ.. லோ... " என்று கூற , எதிர் பக்கம் இருந்தவரோ , " இன்னும் 15 நிமிடத்தில்
மீட்டிங் ஆரம்பிக்க போகுது.. எங்க இருக்க தர்ஷன்.. இந்த டீல் எவ்ளோ முக்கியம் இன்னுமா தூங்கிட்டு இருக்க .. " என்று தனது பாஸ் கூறியவுடன் பதறியடித்து
கொண்டு எழுந்தான் நம் நாயகன் தர்ஷன்... முகத்தை துடைத்துக்கொண்டு , பாத்ரூமில் சென்று அவசரமாக மௌத் வாஷ் மற்றும் சோப் எடுத்துக்கொண்டு,"நோ ஸார்.. நான் வீட்டை பூட்டிக்கிட்டு இருக்கேன் .. அதுனால தான் மொபைலை கீழே வைத்துவிட்டு பேசறேன் ஸார்.. இப்போ உங்களுக்கு தெளிவா கேட்டு இருக்குமே.. " என்று அவரிடம் பேசியபடியே டிரஸ் எடுத்துவைத்து , குளியலறைக்கு சென்று தலையில் மூன்று சொட்டு தண்ணீர் விட்டு , வெளியே துண்டால் துடைத்துவிட்டு அவசரமாக கிளம்பினான்.. மௌத் வாஷ் ,சோப், வாட்டர் பாட்டில், கோட், டை , பெர்ஃப்யூம் , ஷூ , லேப்டாப் என எல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு காரை நோக்கி விரைந்தான்..
"ஓகே தர்ஷன்.. ஃபைல் எல்லாம் ரெடியா..? உங்களுக்கே தெரியும் இது நமக்கு எவ்ளோ பெரிய டீல்ன்னு..அதுமட்டுமில்லை , இத நீங்க கடைசிவரை இருந்து
முடிச்சு குடுத்த உங்களுக்கு 25% கமிஷன் கிடைக்கும்.. திங் தர்ஷன் .. "
"எனக்கு தெரியும் ஸார்.. நான் நேற்றே உங்களுக்கு இந்த மீட்டிங் ஓட மெயின் பாயிண்ட்ஸ் மெயில் பண்ணிருக்கேன்.. நீங்க அதை படித்து முடிக்கிறத்துக்குள்ள
நான் உங்க முன்னாடி நிற்பேன்.. அண்ட் டோன்ட் வொர்ரி ஸார் .. தர்ஷன் இருக்க பயமேன்.. " என்று பேசியபடியே தனது காரை நோக்கி சென்றான் ..
அவசரமாக காரை எடுத்து தனது அலுவலகத்திற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தான்.. செல்லும் வழியில் , வழக்கம் போல சென்னை ட்ராஃபிக் தனது
வேலையை காட்ட , இதுதான் சமயம் என்று மௌத் வாஷ் மூலம் வாய் கொப்பளித்து விட்டு, முகம் கழுவி, சாக்ஸ் , ஷூ அணிந்து , பெர்ஃப்யூம் தெளித்து
கோட்டை போட்டு தலையை வாரி , ஒரு பக்க பிசினஸ்மேன் போல ரெடி ஆக சிக்னல் திறந்து வண்டிகள் நகர ஆரம்பித்தது.. அவனும் தனது அலுவலகத்திற்குள்
நுழைந்து வழக்கம் போல அவனது லீலைகளை ஆரம்பித்தான்..
"ஹேய் லில்லி .. இன்னைக்கும் நீ ரொம்ப அழகா இருக்க .. என்ன சீக்ரெட் உன்னோட அழகுக்கு.." என்று தர்ஷன் கூற ," தர்ஷன் .. நீயும் இன்னைக்கு செம
அழகா இருக்க.. ஈவினிங் வெளியே போவோமா.." என்று லில்லி கேட்க , சரி என்று தலையசைத்துவிட்டு அவனது பாஸ் காபினிற்குள் நுழைந்தான்..
"ஹேய் பாஸ் ..மீட்டிங்க்கு போலாமா .. " என்று பாஸ்ஸை அழைத்துக்கொண்டு வெற்றியாகரமாக மீட்டிங்கை முடித்தான்.. எதிரே இருந்தவர்கள் , இவனிடம்
நிறைய கேள்விகள் , பட்ஜெட் சம்பந்தமாக கேட்க, அனைத்திற்கும் பதில் அளித்தவன் ,கடைசியாக ," தர்ஷன் இருக்க பயமேன் " என்று கூறி அவர்களை
சம்மதிக்க வைத்தான்.. அவர்களும் இந்த மீட்டிங் 95 சதவீதம் வெற்றி தான் உங்களுக்கு.. எங்களுக்கும் இந்த டீல் அதைவிட தர்ஷனை ரொம்ப பிடித்திருக்கு..
அவனுக்காக அவனை நம்பி இந்த பிராஜேக்ட்டை உங்களிடம் தருகிறோம்.. அப்பறம் இன்னொரு விஷயம் , எங்களோட ஒரு பார்ட்னர் இதைபார்த்துட்டு அவரும் சம்மதம் குடுத்த அடுத்த நிமிடமே நாம அக்ரீமன்ட் போட்டுக்கலாம்.. ஷோ நெக்ஸ்ட் மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா வச்சுடுங்க தர்ஷன்.. அப்போ நான் கிளம்பறேன் .. விஷ் யு அல் சக்ஸஸ்... " என்று அவனை வாழ்த்த, பாஸ் அவனை கட்டிதழுவி தனது சந்தோஷத்தை வெளிபடுத்தினார்..
மீட்டிங்க்கு வந்து இருந்த ஒரு அழகான பெண் , தர்ஷனை அழைத்து இரவு தன்னுடன் பப்பில் செலவிடுமாறு கேட்க , அவனோ சரி என்று லில்லியை
விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் சென்றான்.. இது தான் தர்ஷன் .. அவனுக்கு பிடித்ததை செய்வான் ..யாரலையும் அவனை தடுக்க முடியாது.. அவனுக்கு தேவை
பணம்.. பணம். பணமிருந்த போதும்.. அவன் எப்போதும் சொல்லும் வார்த்தை , " தர்ஷன் இருக்க பயமேன்.. " .. அவனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை ..
நன்றாக சம்பாதிப்பான்.. அவனை பொறுத்தவரை சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும்.. தவறான வழியில் அல்ல.. சாமர்த்தியத்தால் சம்பாதிக்க வேண்டும்..
இதோ இந்த வேலை முடிந்தால் அவனுக்கு கிடைக்கும் தொகை , அதை வைத்து உட்கார்ந்தபடியே அவன் சம்பாதிக்க போகும் பணம் எல்லாவற்றையும்
வாங்கிவிடும் என்ற எண்ணம் அவனிற்கு உண்டு..
அலுவலக வேலை முடிந்ததும் , பப் சென்று காத்து இருக்க , அந்த அழகிய பெண்ணுடன் சேர்ந்து நடமாடிவிட்டு , அங்கே இருந்த மதுவை உள்ளே
தள்ளிக்கொண்டு இருந்தான்.. அவனது நண்பன் ரித்விக் , "மச்சான் .. செம மச்சக்காரன் டா நீ .. தினமும் அழகான பொண்ணுகளோட வர்ற.. சந்தோஷமா டான்ஸ் ஆடுற.. எப்படி டா.. எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடு.. " என்று கேட்க, " அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்டா.. "..
"டேய் அப்பறம் ஸ்வப்னா என்ன ஆனா..?"
தர்ஷன், "எந்த ஸ்வப்னா?"
அவனோ அதிர்ச்சிநீங்காம ," ரெண்டு நாள் முன்னாடி வரை உன்னோட காதலியாய் இருந்த ஸ்வப்னாவை கேக்குறேன்.. "
"ஓஹ் அவளா.. அவ கர்ப்பமாஇருக்கேன் கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு வந்து சொன்ன.. உனக்கு தான் தெரியுமே என்னை பற்றி , அதை அவகிட்ட
சொன்னேன்.. என்னை திட்டி சாபம் விட்டுட்டு அழுதுட்டே போயிட்டா .. அவ அவ்ளோதான்.. நான் தர்ஷன் டா.. என்னதான் இருந்தாலும் நான் ஆம்பிள்ளை டா.. "
என்று கர்வமாக உரைத்தவன் மீண்டும் மதுவை உள்ளே தள்ள, அவனை வீட்டில் விடுவதற்காக ரியா அவனை தேடிக்கொண்டு பப் வர, அவளுக்கு அந்த இடமே
பிடிக்காமல் போனது.. தர்ஷனை தேடியவள் , அவனை அழைத்துக்கொண்டு நான்கு திட்டு திட்டிவிட்டு, அவனை அவனது ரூமில் கொண்டுவிட்டாள்..
மறுநாள் காலை விழித்தவன், நேற்றைய மதுவின் போதையில் தள்ளாடிபடியே , இடுப்பில் இருந்து நவிழும் இரவு உடையை ஒரு கையில் பிடித்தபடி ,
மற்றொரு கையில் தலைமுடியை பிடித்தபடி , குளியலறையில் பிரஷ் பேஸ்ட் வைத்து பல் துலக்கிவிட்டு , முகத்தை துடைத்தவன் கண்ணாடியில் பார்க்க ,
அதிர்ந்து, கத்தி மயங்கி விழுந்தான் தர்ஷன்..