உண்டிகோல் சரியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து அதன் பின் அதை பயன்படுத்திய போது முதலில் இலக்கை எட்டாத கல் பிறகு சற்றே கை கொடுக்க ஆரம்பித்தது.
அவரவர் கையில் இருந்த உண்டிகோலால் அவரவர்க்கு வேண்டியதை அடித்து கீழே விழுந்தவற்றை எடுத்தனர். அப்போது, விழுந்ததை எடுக்கக் குனிந்த ரம்யா...ஆ...... என்று கத்த....
“ஏய், நிப்பாட்டுங்க..”, என்றபடி அவள் நின்ற இடத்தை நோக்கிச் சென்றவர்கள்.....
“எங்க அடிபட்ட இடத்தை காமி...”
“பாத்து போயி எடுக்கமாட்டியா.... ரம்யா?” ‘இவளுக்கு கொஞ்சம் மூளை கம்மி யா...’
“இல்ல, நான் அங்க போனதுக்கப்புறம்..... யாரோ உண்டில அடிச்சிருக்காங்க”
“நல்லா அழுத்தி தேயி”
“சரி, நானே தேய்க்கிறேன்”
“சரி, போதும் இன்னிக்கு, வாங்க தோப்ப விட்டு வெளியில போவோம்”
கையில் இருந்ததை எடுத்துக் கொண்டு, சிலர் மா, கொய்யாவைக் கடித்தபடி பேசிக்கொண்டே வந்தபோது... வதனாவைத் தேடியபடி எதிர்புறமாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் ரகு.
அதைக் கவனித்த வதனா, “எங்க வீட்ல அதுக்குள்ள தேடறதுக்கு ஆள் அனுப்பிட்டாங்க”
“யாரு வந்தா”
“எங்க ரகு மச்சா...”
“யாரையும் காணோம்”
“அந்த பக்கமா தேடி போறாங்க......யாராவது என்னைய பாத்துட்டு போயி சொல்றதுக்குள்ள நானே வீட்டுக்கு போறேன்”
“அப்ப எப்ப வருவ”
“வருவேன்.... எல்லாரும் அசந்த நேரம் பாத்து.....” என்றவள் சிரித்தபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
‘ரகு .... கொகு.... அதுக்குள்ள ... தேடி வந்துட்டாக...’
இரண்டு தெரு தாண்டியவுடன், அருகே ஒரு சைக்கிள் வந்து நிற்க,
‘பாட ஆரம்பிச்சிருமே’
“டெய்லி வேற வேற இடத்துக்கு ஏன் போற”
‘ஒரே இடத்துக்கு போனா..... அப்பவே என்ன கண்டுபிடிச்சுருப்பியே... (மரியாத தெரியாத புள்ள இல்ல நானு....... வெளியில ரொம்ப மரியாதையா நடத்துவேன்.... மனசுக்குல்ல கொஞ்சம் அப்டி.... இப்டி தான்....)’
“அவங்க எங்கங்கல்லாம் போனாங்களோ..... அங்க... கூட போனேன்”
“வண்டில ஏறு”
‘உத்தரவு ....’ “ஏறிட்டேன்”
“வதனி .... இவ்வளவு தூரமால்லாம் வராதே”
‘கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கோ?’ “சரி, மச்சான்”
“உனக்கு தான் விளையாட ப்ரவீண் இருக்கான்ல, அவங்கூட விளையாடு, இதுங்க கூடல்லாம் சேராதே...”
‘அவன் வயசென்ன, ஏன் வயசென்ன?... நானென்ன சின்ன புள்ளயா...... இப்போ உன்ன ஏங்கூட விளையாட கூப்டா வருவியா.... உனக்கு ஒரு நியாயம்.... எனக்குனா அநியாயம்.........’
“அவன் ட்டாய்ஸ் வச்சு விளையாடுவான், அதெல்லாம் சின்ன புள்ளைங்களுக்குனு அம்மா சொல்லிருக்காங்க...”
‘இந்த அத்த ... வேற...’ , “இப்பொ போயி என்ன விளையாண்ட...?”
“நொங்கு பொறக்குனோம்.”
“நுங்கு வேணும்னு கேட்டா...... ஒரு காட்டு நுங்க வீட்ல கொண்டு வர ஆளு இருக்கு..... அதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா?”
‘விடாது கருப்பு’ ...... “அதுல டேஸ்ட் நல்லா இல்ல ...”
“சாக்கு சொல்லாத....”
“மச்சான், சைக்கிள் நான் ஓட்டவா?.... நீங்க பிடிங்க...”
‘கேடி பேச்ச மாத்துற......’ “வெயில் ஏறிருச்சு, சாயந்திரமா முடிஞ்சா பாக்கலாம்....”
‘அதானே.... நான் சின்ன புள்ளயா இருந்தப்போ இவனுக்கு ட்டாய் மாதிரி வச்சிருந்துட்டு...... வளந்ததும் சைக்கிள் ஓட்ட கூட ஹெல்ப் பண்ண மாட்டிங்குது இந்த நெட்ட கொக்கு....’
“இப்பொ கொஞ்ச நேரம் ஓட்டுரேனே....”
“ஒண்ணு வேணா.... காலைல எழுந்ததுல இருந்து, அப்பத்தா உன்ன தேடிட்டு இருந்தாங்க..... அதான் உன்ன தேடி வந்தேன்”
‘போல்டு லேடி தான் நம்மள விளையாட விடாம பண்ணதா?’, என எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தாள், பத்து வயது நிரம்பிய வதனி.
அவனது அப்பத்தா வதனியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சிறு வயதில் அவனுக்குக் கொடுத்த போது, ஆர்வமாக, அதட்ட, கண்டிக்க என பெரிய மனித தோரணையை அவளிடம் காட்டிவன்தான் நந்தன்.
தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை முடித்து விடுமுறைக்கு வந்திருப்பவனுக்கு, தோழர்களுடன் விளையாட, வெளியே செல்ல வதனியை தடையாக உணர்ந்ததால், அவளைத் திட்டுவான்.
எதற்கும் அசறுபவளல்ல. அவள் வயதையொட்டியவர்களுடன் இணைந்து விளையாட காம்பவுண்டிற்குள் அழைத்து வந்ததை வீட்டின் பெரியவர்கள் விரும்பவில்லை. அதனால், அவள் அவர்களுடன் சென்று விளையாடி வருவாள்.
நர்சரி சென்றுவிட்டு, இறால் பண்ணையில் உள்ள வேலைகளை முடித்த போது மணி இரண்டு. மீதமுள்ளவற்றை நாளை வந்து கவனிக்கலாம் என எண்ணிய ரகுநந்தன் வீட்டிற்கு கிளம்பினான்.
அதற்குள் அவன் தாயிடமிருந்து போன் வந்தது.
“என்னம்மா..”
“காலையில கூட ஒண்ணும் சாப்பிடல.... ஏன்பா ரொம்ப வேலையா.... இன்னும் வராம இருக்கியே?”
“கிளம்பிட்டேன்மா....” என்றவாறு அவனது BMW வை ஸ்டார்ட் செய்தான்.