சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் வர, அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் அமர்ந்து பேசினர்.
'ஆதிரெத்தினேஸ்வரம்'
* இயற்கை (இறை)....
கொண்ட முயற்சியால்
பகலவனை உருவாக்கி.......
பற்பல சூட்சமங்களை .....
தந்ததால் வந்தது ஒளி!!!
* வளங்களை,
தாவரங்களை,
உயிரினங்களை,
ஒப்பற்ற அறிவுடன்
சீரான வேகத்தில் இயங்(க்)குவதில்
உருவாக்கும் வித்தையிலே...
வித்தகன் இந்த பகலவன்!
* கா்மத்தினை கடனாக்கி....
கடமை மறந்து
கர்வம் வந்த வேளை...
இழந்த ஒளி...
இயலாமையைச் சொல்ல..
* சரிந்த தன் நிலை உணர்ந்த ஞாயிறு...!
* சர்வமும் இயற்கையெனும் இறை - என
இடர்களைய..... இயற்கையை
இரந்த ரவி!
* உருவான இடம் நாடி....
அகம்பாவம் அடியோடு அகல
தன் நிலை மீள
அண்டிய ஆதித்யன்!!
* பார் முழுதும்
பம்பரமாய் சுற்றி
பலா் போற்ற!!!
வாழ்ந்த ஒளியான வாழ்வை
மீட்டெடுக்க.. உவகை கொண்ட
கதிரவன்!!!
* வற்றாத வாழ்வு வாழ வழி கேட்க...
* இயற்கையெனும் பேராற்றல் (இறைவன்) ......
இரந்த உள்ளம், உவகை கொள்ள ...
* வடகிழக்கு மூலையிலே
வற்றாத நீரில் மூழ்கியெழுந்து
மகிழ்வுடனே...
தினந்தோறும்
நீலரெத்தினக்கல்
கொண்டு இயற்கையெனும்
ஈசனை பூசை செய்ய உத்தமமாம்..
என உரைக்க...
* கா்ம சிரத்தையுடன்.....
கர்வமில்லாமல் !
கர்மம் செய்ய ....
கற்றுத் தந்த ஈசனின்
ஆற்றலால்
மீண்ட சூரியன்!
* ஆதித்யன்
பூமியில் ரெத்தினக்கல் கொண்டு
இறைவனுக்கு
பகலவன் பூசை செய்த தலமே!!!
ஈசன் வாழ்ந்த தலமே...
ஆதிரெத்தினேஸ்வரர்
ஆலயம்!!!
* திருவாடானை !!!
(இது ஆலயத்தின் தல வரலாறு)
இரு குடும்ப உறுப்பினர்களும் அமர்ந்து நிதானமாக பேசி அடுத்த மாதத்தில் வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
“சுந்தரமுடையான்ல கல்யாணத்தை வச்சிட்டு, அப்றம் உங்க தோதுப்படி சென்னைல ரிசப்ஷன் வச்சுக்கலாம்”
“ஒரு மாசத்துல மகால் எதுவும் கிடைக்காது, ஹால் எதாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்”
“சென்னைல எங்க சைட்ல நூத்தம்பது பேரு வருவாங்க, உங்க சொந்த பந்தம், ஆபீஸ்ல இருந்து எவ்வளவுனு பாத்துட்டு ஹால் பாருங்க”
“மாப்ள வந்தவுடனே சொல்லுங்க, நேரில வந்து பாக்குறேன்”, என்றார் சிதம்பரம்.
“இன்னிக்கு பேசிட்டு சொல்றேன்”
“வேற எதுவும் எதிர்பார்ப்பு இருக்குனா சொல்லுங்க...”
“மத்த ரெண்டு பசங்களுக்கும் அவங்கவங்க வசதிக்கு ஏத்தமாதிறி செஞ்சாங்க.... அதுபோல உங்க பொண்ணுக்கு நீங்க நினச்சத செய்யுங்க....
பசங்களுக்கு தொழில் ஊருல இருந்தாலும், கொஞ்ச காலத்துக்கு அவங்க ஆசைப்படி வேல பாக்கட்டும்.... அப்றம் தொழில வந்து கவனிச்சிக்கட்டும்னு சொல்லிட்டேன்”
“சீறு சாமானெல்லாம் எங்க கொண்டு வரது”
“சென்னைல உள்ள சின்னவனோட பிளாட்ல வச்சா போதும், ஊருக்கு எடுத்துட்டு வர வேணாம்”
“பொண்ணு வேல பாத்துட்டு இருக்கு, அத கண்டினியூ பண்ணணும்னு ஆச படுது”
“அது அவங்கவங்க ப்ரியம்....... சரி, அப்போ வேற எதுவும் விசயம் இருந்தா போன்ல தகவல் சொல்லுங்க.... நீங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னடியே ஊருக்கு வந்திருங்க”
என்று இரு குடும்பத்தாறும் திருமண நாளை முடிவு செய்து விட்டு கிளம்பினார்கள்.
ராஜமனோகரியின் குடும்பத்தில் காதம்பரி கோவிலில் நடந்து கொண்ட விதத்திலும், அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடனும், கேட்டவற்றிற்கு அமைதியாக பதிலளித்த விதத்திலும் அவளை அனைவருக்கும் பிடித்து இருந்தது.
ஆனாலும், உரியவனுக்கு முந்தைய தினம் அனுப்பிய போட்டோ மற்றும் ஹோராஸ்கோப்பின் காதம்பரி பற்றிய இதர தகவல்கள், இது வரை ‘வீ ட்ரான்ஸ்ஃபரில்’ அவனால் டவுன்லோடு செய்யப்படாமல் இருந்தது.
ராஜம் தனது வயதை காரணமாக்கி பேரனை திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்து இருந்தார். ஆனாலும் தினசரி இரவில் அனைவரிடமும் பேசுபவன், கடந்த இரு தினங்களாக தொடர்பு கொள்ளவில்லை.
கோவிலிலிருந்து திரும்பிய அனைவரும் பத்திரிக்கை, திருமண வைபவ விழா ஏற்பாடு, விருந்து போன்றவற்றிகான வேலைகளை பார்க்க, மேற்பார்வையிட என பிரித்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
அன்று இரவு போனில் தொடர்பு கொண்ட மகனிடம் விசயத்தினை பகிர்ந்து கொண்டனர். இன்னும் இருபது நாட்களுக்குள் வேலையை முடித்து திரும்ப வேண்டிய நிலையில் வேலைப்பளு அதிகமானதால் பார்க்கவில்லை என்றான்.
பிறகு போட்டோ மற்றும் மணப்பெண் பற்றிய மற்ற தகவல்களையும் பார்த்துவிட்டு பெரியவர்களது விருப்பம் என கூறிவிட்டான்.
அதன்பின் மகனின் வருகையை சம்மந்திக்கு தெரியப்படுத்தினார் ஹரி.
சிவகங்கையில் இருந்து திரும்பிய சிதம்பரத்தின் குடும்பத்தில் மனநிறைவு. தன் ஒரே மகளுக்கு நல்ல ஒரு குடும்பத்தில் வாழ்க்கை அமைய போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
அதற்கு முன்பு, சிதம்பரம் தனது திருப்திக்காக, குணத்தில், பழக்க வழக்கம் மற்றும் தனிப்பட்ட விசயங்களில் மருமகனாக வர இருப்பவரைப் பற்றி டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்டார்.
காதம்பரிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, ஆயினும் மறுக்கும் வகையில் குறை இல்லை. ஆகையினால், அவள் அவளது அலுவலக வேலைகளிலும், கமலாவிற்கு உதவி செய்வதிலுமாக அவளுடைய நாட்களும் சென்று கொண்டிருந்தது.
அலுவலகத்தில் இருந்து திரும்பிய காதம்பரி,
“அம்மா...... எங்க ஆபீஸ் சார்பா மும்பைல நடக்குற ஃபங்சனுக்கு என்ன போக சொல்றாங்கம்மா...”, என மிகுந்த தயக்கத்தோடு கூற
“அதெல்லாம் இனி உன்ன எங்கயும் வெளிய அனுப்ப முடியாது......”, என்று கமலா முடித்துவிட்டார்.