அத்தியாயம் 6 :
மூன்று மாதங்களுக்குப் பிறகு...
மெல்லிய மஞ்சள் நிற வெளிச்சம் அடர்ந்த மாலைதனில், பச்சை பசேலென்று எங்கு நோக்கினும் புல்வெளி...முடிவேயில்லாத முடிவிலியாய் ஒரு மாயத்தோற்றம் கொண்ட இடம்…
இது என்ன இடம் என்ற யோசனையைக் கண்களில் தேக்கி வைத்தவாறு சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டே வந்தான் யாதவ்...
திரும்பி நிற்கும் ஒரு பெண் அவன் பார்வை வட்டத்தில் விழுகிறாள்….அடர் சிவப்பு நிற சேலையுடுத்தியிருக்க முந்தானை முழுவதும் காற்றிலாடி கொண்டிருந்தது...கண்ணகி முதன்முதலாக மதுரை மாநகரத்தில் நுழைந்தபோது...மதுரையின் நுழைவுவாயிலிலிருந்த மீன் கொடி காற்றிலாடி அசைந்து அவளை வா என்று அழைத்ததுபோல...இவனையும் இந்த முந்தானை அழைப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது...
அவளது முதுகு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு அலையலையாகப் புரண்டு கொண்டிருக்கும் கேசம்…பின்னிருந்து பார்த்தவனுக்குத் தோன்றியது இது தான்...இவளைப் பிரம்மன் செதுக்கியபோது முத்தாய்ப்பாய் இருக்கட்டுமென்று இவளது கூந்தலைப் படைத்திருப்பான் போலும்…
இவனின் பார்வையின் கூர்மை தாங்காமல் திரும்பினாளோ...அல்லது எதார்த்தமாகத் திரும்பினாளோ...மொத்தத்தில் இவனை நோக்கி திரும்பியிருந்தாள் அந்தப்பெண் ...யாதவனிது பார்வை அவளது காலின் பெருவிரலை விட நீண்டு இருக்கும் பக்கத்துக்கு விரலின் இந்தச் சமூகம் கூறும் யாருக்கும் அடங்காதவள் எனும் உருவக லட்சணத்திலிருந்து தொடங்கியது....
சைனீஸ் விசிறி மடித்துவைத்தது போன்று இடுப்பிலிருந்து நீளும் நேர்த்தியான கொசுவ மடிப்புகள்... நன்னிடையின் இலக்கணத்திற்கு ஒத்துப் போகும் இடை... இறக்கி கட்டிய கொசுவத்தில் ஆளை இழுத்துப்போடும் குழிந்த ஆழிச்சுழி...செல்ல தொப்பை...தார்மீக கடமையைச் செய்ய மறந்த ஒற்றையாய் விடப்பட்ட மேலாக்கு….திண்ணிய மார்புகளுக்கு நடுவில் கொஞ்சிவிளையாடும் ஒற்றைச் சங்கிலி… நீண்ட கழுத்து...பார்த்தவுடன் என்னைத் தொடேன் என்று கொஞ்சி அழைக்கும் தாடை...ஆரஞ்சு சுளை உதடுகள்...சங்கைக் குறுக்காக வெட்டி வைத்தது போன்ற இரு செவிகள்...கேள்விக்குறி நாசி...தாமரை இதழ் போன்ற நீண்ட கண்கள்…நுதலில் புரளும் அளகம்... அவளின் நிறம் சுண்டக்காச்சிய பசும்பாலில் சிறிது குங்குமப் பூவை கலந்தால் வருமே ஒரு இளஞ்சிவப்பு வெண்மை நிறம்...இவள் ஒரு வசந்த ஒய்யாரி...யட்சி…
" ஆரு..."என்று கூறிக்கொண்டே அவளை நோக்கி சென்றான் யாதவ்…
இதுவரை யாருமே ஷாவின் முகத்தில் பார்த்திராத வெட்கச்சிரிப்புடன் ஷாவும் இவனை நோக்கி வந்தாள்...
"இத்தனை நாள் என்னை விட்டுட்டு எங்கே போயிருந்த...உனக்கு நான் ஞாபகமே வரலையா...என்னை விட்டு போகாதே..."என்று யாதவ் அவள் கரத்தை பிடிக்கவர…
"நீ பண்ணது தப்பு தானே...என் கனவை அடைய நினைச்ச நேரத்துல நீ தட்டிவிட்ருக்க கூடாது தானே..."என்றவள் அவனை விட்டு ஓட ஆரம்பித்தாள்…
யாதவும் அவளை பிடிக்க அவளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான்... இதோ...இன்னும் ஒரு நொடியில் அவளை பிடிக்க போகிறான்….
"அண்ணா சார்...அண்ணா சார்...அண்ணா சார்…"என்று காதிற்குள் கேட்கவும் அடித்துபிடித்து எழுந்தான் யாதவ்…
சுற்றும்முற்றும் பார்த்தவன் கனவா என்று மனதில் நினைத்துக்கொண்டு கண்களை தேய்த்தவாறு என்ன என்பதுபோல் கவிதாவை பார்த்தான்…
"அண்ணா சார் மணி ஐஞ்சு சார்…."
"அதை சொல்ல தான் நல்லா தூங்கிட்டு இருந்த என்னை...ஏய்ய் என்ன சொன்னே மணி ஐஞ்சு ஆச்சா….ஐஞ்சு இருபத்தஞ்சுக்கு பிலைட்..." என்று தூக்க கலக்கத்தில் வார்த்தைகளை ஆரம்பித்தவன் புரிந்ததும் இந்த முறையும் இப்படிச் சொதப்பிவிட்டாளே என்று ஆதங்கமாக அவளைப் பார்த்தவாறு கேட்டான்...
"இல்லை அண்ணா சார்...நான் நாலு மணிக்கெல்லாம் வந்துட்டேன்...வந்துபார்த்தேனா நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்களா சரி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உசுப்புவோம்னு போய் ஹால்ல உக்காந்து இருந்தேனா...அப்படியே என்னை அறியாம தூங்கிட்டேனா...இப்ப அம்மா மேடம் போன் பண்ணவும் தான் எந்திரிச்சேன்...பார்த்தா மணி இவ்வளவு ஆயிருச்சு..." என்று பள்ளிக்கு நேரம் சென்று போன குழந்தை ஆசிரியரிடம் கூறும் பாருங்களேன் அதைப்போல் காரணத்தைக் கூறிக்கொண்டிருந்தாள் கவி…
கவியை முறைத்தவாறே அவள் கரத்திலிருந்து அலைப்பேசியைப் பறித்தவன் தனது தாய்க்கு அழைப்பெடுத்தான்…அவனின் அன்னை ரோஹிணி கிருஷ்ணா... வாழ்வின் இடுக்குகளிலெல்லாம் பாசம் நேசம் அன்பு என்று ஊற்றி நிரப்பிவைத்துக் கொண்டு கணவர் மற்றும் பிள்ளைக்கிடையில் அல்லாடும் சராசரி தாய்...
"கிளம்பிட்டியா யாதவ்..."
"கிளம்பிக்கிட்டே இருக்கேன் மா...நீங்க தூங்கவேண்டியது தானே...எதுக்கு இதெல்லாம்.."எப்பொழுதும் போல் இப்படி கணவன் பிள்ளைகளென உடம்பை கெடுக்கத்துக்கொள்கிறாரே என்று ஆற்றாமையுடன் யாதவ் கேட்கவும்…
"ஏன் டா...இன்னைக்கு உன்னோட புது படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கப்போற முதல் நாள்...அன்னைக்கு கூட பேசாட்டி என்ன அம்மா டா...இல்லை வீட்டை விட்டு வெளியே போய் தனியா இருக்குற மாதிரி அம்மா மகன்ற பாசத்தை விட்டும் தனியா இருக்க போறியா..."என்று சிறிது குரல் இடற கேட்கவும்…
"ப்ச்...அப்படிலாம் இல்லை மா...உங்க உடம்பு கெடுதேன்னு தான்...இல்லாட்டி அந்த வளர்ந்து கெட்ட ரகுவரன் வந்து என் பொண்டாட்டியை துங்கவிடாம முழிக்கவிட்டு கஷ்டப்படுத்துறேன்னு சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டுட்டா என்ன பண்றது...அதுக்கு தான்..."என்று அவரின் எண்ணத்தை மடைமாற்ற பேசினான்…
"ஹா ஹா ஹா...என் ஒட்டகச்சிவிங்கி புருஷனை வம்பிழுக்காட்டி உனக்கு சாப்பிடுற சாப்பாடு உள்ளே இறங்காதே..."
"நீங்களும் உங்க புருஷரை விட்டு கொடுக்கமாட்டீங்களே..."
"டேய்...கல் மாதிரி கம்முனு இருந்தாலும் கணவன்...புல்டவுஸர் மாதிரி சவுண்ட் விட்டாலும் புருசன்ற கொள்கைளைக்கொண்டு வாழுற கண்ணகியோட கடைசி தங்கச்சியோட முதல் கொள்ளுபேத்தியோட கடைசி வாரிசு டா நான்…."என்று யாதவின் அம்மாவென்று நிரூபிக்குமாறு பேசினார் ரோஹிணி…
"ஹா ஹா ஹா…அம்மா போதும்...உங்களோட பதி பத்தியத்தை கேட்டு புல்லரிச்சு போச்சு...எனக்கு லேட் ஆச்சு...வைக்குறேன் அம்மா..."
"ஆல் தி பெஸ்ட் டா..."என்றவர் கைப்பேசியை அணைத்துவிட்டு தனக்கு அருகில் உறங்குவதை போல் வெறுமனே கண்ணைமூடி படுத்துக்கிடக்கும் ரகுவரனை ஒரு கேலிச்சிரிப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்...
யாதவ் அவனது வீட்டைவிட்டு வெளியே வந்து ஆறுவருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது...இவன் படிப்பை முடித்திருந்த சமயம் அடுத்து தொழிலைப் பார்த்துக்கொள்ளுமாறு ரகுவரன் கூற...அவனுக்கோ திரைத்துறைக்குச் சென்று நீங்கா இடத்தை பிடிக்கவேண்டுமென்று ஆசை...எப்படியோ தயங்கித் தயங்கி ரகுவரனிடம் கூற ஒரே வார்த்தையில் முடியாது என்றுவிட்டார்...அதன் பிறகு பல போராட்ட சத்யாகிரங்களுக்கு பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் போன்று ஒரு வாய்ப்பு கொடுத்தார்...இரண்டு வருடங்கள் அதற்குள் உன்னால் அதில் இடம்பிடிக்க முடிந்தால் அது தான் உனது எதிர்காலம்...சோபிக்க முடியாவிடில் தொழில்..என்று நிபந்தனைகளோடு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்...
எப்படியோ அவனது பின்பெயராலே வாய்ப்பு கிடைத்தது...மூன்று புதுமுகங்கள்...காலத்திற்கும் அழியாத பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் வேதன்...முதன்முறையாக புது முகங்களை அவர் அறிமுகம் படுத்திக்கிறார்...அவரது ப்ரொடக்ஷன் தான்...எல்லாம் பெரிதாக அமைய எப்படியோ முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்...அதன் பின்பு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க மிகவும் கஷ்டப்படவேண்டியதாக இருந்தது...அலைந்து திரிந்து இரண்டாம் வாய்ப்பு பெற்றான்...அதுவும் வெற்றிப்படமாக அமைய அடுத்ததெல்லாம் ஏறுமுகம் தான்...ஆனால் களங்கத்திற்கு முந்தைய படம் வசூல் ரீதியாக ஆவெரேஜ் ரகத்தைப் பிடிக்க…இவனது பல பர்சனல் ஆராதனா...ஷாக்கு பிறகு வந்த களங்கம் கலவையான மதிப்பீடுகளையும் பெற்று சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் ஹிட் வரிசையில் வந்தது…
இருவருடத்திற்கு பிறகும் யாதவ் அவனது அப்பா வீட்டிற்குச் செல்லவில்லை...ஏதாவது முக்கிய நிகழ்வு...விழாக்கள்...பண்டிகைகள் என்று அதற்கு மட்டும் அவனது அப்பா வீட்டிற்குச் சென்றுவந்தான்...அவன் அம்மா...அண்ணன் ஹரி...அண்ணன் மனைவி ஸ்ரீ...அண்ணன் மகன் நான்கே வயதான ஜீவா... ஆராதனா...நெடுவருடங்களாக அங்கு வேலைசெய்யும் சமையல்காரர்...என்று அவன் அப்பாவைத் தவிர அனைவரும் கூப்பிட்டும் அங்கே செல்லவில்லை...
இதெல்லாம் நினைத்துக்கொண்டே குளியலறைக்குள் சென்று குளிக்காமல் முகம் மட்டும் கழுவிவிட்டு உடைமாற்றி வந்திருந்தான் யாதவ்…
"ஐயையை...குளிக்கலையா அண்ணா சார்..."என்று முகத்தைச் சுளித்தவாறு யாதவை பார்த்துக் கவி கேட்கவும் அவளை ஒரு தீப்பார்வை பார்த்தவன் "வாயில நல்லா வந்துரும் சொல்லிவிட்டேன்...மணி இப்பவே ஐந்து பத்து ஆச்சு...போய் வேகமா ட்ரைவரை வண்டி எடுக்க சொல்லு...போ..."என்று கவியை விரட்டியவன் நேற்றே எல்லாம் எடுத்துத் தயார்செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்…
வாகனத்துக்கு அருகில் அசட்டுச் சிரிப்பைக் கொடுத்தவாறு தலையைச் சொரிந்துகொண்டு நின்றிருந்தாள் கவி…
"என்ன...ஒரு மார்க்கமா முழிக்கிற...எங்கே ட்ரைவர்..."என்று படிகளில் இறங்கிக்கொண்டே அவளிடம் கேட்டவாறு வந்தான் யாதவ்…
"அது வந்து அண்ணா சார்...அது வந்து…."
"என் பொறுமையைச் சோதிக்காதே...கவி...வேகமா சொல்லு..."
"இல்லை அண்ணா சார்...ட்ரைவரோட முதல் பொண்டாட்டியோட இரண்டாவது சித்திக்கு மூணாவது தடவை ஹார்ட் கட்டாக் வந்துருக்குன்னு உடனடியா போய் பார்க்கணும்னு என்கிட்டே வந்து நேற்று பெர்மிசன் கேட்டார் சார்...நானும் பாவமே அப்படினு சொல்லி அனுப்பிவைச்சுட்டேன் ...எட்டு மணிபோல வந்து ஏர்போர்ட்ல இருந்து கார் எடுத்துட்டு போகச் சொல்லிருந்தேன் அண்ணா சார்...ஆனால் அதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்…."என்று தலையைச் சொரிந்துகொண்டே கவி அப்பாவியாகக் கூறினாள்…
"ஒஒஒஒஒ…..ஒன்னும் சொல்லறத்துக்கு இல்லை...உன்னை அப்பறம் வைச்சுக்குறேன் வண்டியை எடு….மணி எப்படியும் ஐந்தே கால் ஆயிருக்கும்..."என்று யாதவ் பல்லைக் கடித்துக்கொண்டு கூறவும்...
வேகமாகத் தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் “இல்லை சார் மணி ஐந்து பன்னெண்டு “
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...முதல் வண்டியை எடு..."என்று யாதவ் கூறியவாறு வாகனத்தின் பின்னாடி பயணப்பொதிகளை வைத்துவிட்டு பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான்…
யாதவ் அமர்ந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தவள் எடுக்காமல்...யாதவை திரும்பி பார்த்தாள் கவி…
"என்ன...வண்டியை எடு..."
"இல்லை...அண்ணா சார்..இன்னைக்கு நம்ம புதுப்படத்தோட ஷூட்டிங் போகப்போறோம்...எல்லாம் நல்லபடியா நடக்கும்னு காருக்கு முன்னாடி எலுமிச்சை பழத்தை வைச்சு நசுக்கிட்டு தானே கார் எடுக்கணும்..."என்று சிறு குழந்தை போல் இமை தட்டிக்கேட்டாள் கவி...
மூன்று மாதங்களுக்குப் பிறகு...
மெல்லிய மஞ்சள் நிற வெளிச்சம் அடர்ந்த மாலைதனில், பச்சை பசேலென்று எங்கு நோக்கினும் புல்வெளி...முடிவேயில்லாத முடிவிலியாய் ஒரு மாயத்தோற்றம் கொண்ட இடம்…
இது என்ன இடம் என்ற யோசனையைக் கண்களில் தேக்கி வைத்தவாறு சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டே வந்தான் யாதவ்...
திரும்பி நிற்கும் ஒரு பெண் அவன் பார்வை வட்டத்தில் விழுகிறாள்….அடர் சிவப்பு நிற சேலையுடுத்தியிருக்க முந்தானை முழுவதும் காற்றிலாடி கொண்டிருந்தது...கண்ணகி முதன்முதலாக மதுரை மாநகரத்தில் நுழைந்தபோது...மதுரையின் நுழைவுவாயிலிலிருந்த மீன் கொடி காற்றிலாடி அசைந்து அவளை வா என்று அழைத்ததுபோல...இவனையும் இந்த முந்தானை அழைப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது...
அவளது முதுகு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு அலையலையாகப் புரண்டு கொண்டிருக்கும் கேசம்…பின்னிருந்து பார்த்தவனுக்குத் தோன்றியது இது தான்...இவளைப் பிரம்மன் செதுக்கியபோது முத்தாய்ப்பாய் இருக்கட்டுமென்று இவளது கூந்தலைப் படைத்திருப்பான் போலும்…
இவனின் பார்வையின் கூர்மை தாங்காமல் திரும்பினாளோ...அல்லது எதார்த்தமாகத் திரும்பினாளோ...மொத்தத்தில் இவனை நோக்கி திரும்பியிருந்தாள் அந்தப்பெண் ...யாதவனிது பார்வை அவளது காலின் பெருவிரலை விட நீண்டு இருக்கும் பக்கத்துக்கு விரலின் இந்தச் சமூகம் கூறும் யாருக்கும் அடங்காதவள் எனும் உருவக லட்சணத்திலிருந்து தொடங்கியது....
சைனீஸ் விசிறி மடித்துவைத்தது போன்று இடுப்பிலிருந்து நீளும் நேர்த்தியான கொசுவ மடிப்புகள்... நன்னிடையின் இலக்கணத்திற்கு ஒத்துப் போகும் இடை... இறக்கி கட்டிய கொசுவத்தில் ஆளை இழுத்துப்போடும் குழிந்த ஆழிச்சுழி...செல்ல தொப்பை...தார்மீக கடமையைச் செய்ய மறந்த ஒற்றையாய் விடப்பட்ட மேலாக்கு….திண்ணிய மார்புகளுக்கு நடுவில் கொஞ்சிவிளையாடும் ஒற்றைச் சங்கிலி… நீண்ட கழுத்து...பார்த்தவுடன் என்னைத் தொடேன் என்று கொஞ்சி அழைக்கும் தாடை...ஆரஞ்சு சுளை உதடுகள்...சங்கைக் குறுக்காக வெட்டி வைத்தது போன்ற இரு செவிகள்...கேள்விக்குறி நாசி...தாமரை இதழ் போன்ற நீண்ட கண்கள்…நுதலில் புரளும் அளகம்... அவளின் நிறம் சுண்டக்காச்சிய பசும்பாலில் சிறிது குங்குமப் பூவை கலந்தால் வருமே ஒரு இளஞ்சிவப்பு வெண்மை நிறம்...இவள் ஒரு வசந்த ஒய்யாரி...யட்சி…
" ஆரு..."என்று கூறிக்கொண்டே அவளை நோக்கி சென்றான் யாதவ்…
இதுவரை யாருமே ஷாவின் முகத்தில் பார்த்திராத வெட்கச்சிரிப்புடன் ஷாவும் இவனை நோக்கி வந்தாள்...
"இத்தனை நாள் என்னை விட்டுட்டு எங்கே போயிருந்த...உனக்கு நான் ஞாபகமே வரலையா...என்னை விட்டு போகாதே..."என்று யாதவ் அவள் கரத்தை பிடிக்கவர…
"நீ பண்ணது தப்பு தானே...என் கனவை அடைய நினைச்ச நேரத்துல நீ தட்டிவிட்ருக்க கூடாது தானே..."என்றவள் அவனை விட்டு ஓட ஆரம்பித்தாள்…
யாதவும் அவளை பிடிக்க அவளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான்... இதோ...இன்னும் ஒரு நொடியில் அவளை பிடிக்க போகிறான்….
"அண்ணா சார்...அண்ணா சார்...அண்ணா சார்…"என்று காதிற்குள் கேட்கவும் அடித்துபிடித்து எழுந்தான் யாதவ்…
சுற்றும்முற்றும் பார்த்தவன் கனவா என்று மனதில் நினைத்துக்கொண்டு கண்களை தேய்த்தவாறு என்ன என்பதுபோல் கவிதாவை பார்த்தான்…
"அண்ணா சார் மணி ஐஞ்சு சார்…."
"அதை சொல்ல தான் நல்லா தூங்கிட்டு இருந்த என்னை...ஏய்ய் என்ன சொன்னே மணி ஐஞ்சு ஆச்சா….ஐஞ்சு இருபத்தஞ்சுக்கு பிலைட்..." என்று தூக்க கலக்கத்தில் வார்த்தைகளை ஆரம்பித்தவன் புரிந்ததும் இந்த முறையும் இப்படிச் சொதப்பிவிட்டாளே என்று ஆதங்கமாக அவளைப் பார்த்தவாறு கேட்டான்...
"இல்லை அண்ணா சார்...நான் நாலு மணிக்கெல்லாம் வந்துட்டேன்...வந்துபார்த்தேனா நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்களா சரி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உசுப்புவோம்னு போய் ஹால்ல உக்காந்து இருந்தேனா...அப்படியே என்னை அறியாம தூங்கிட்டேனா...இப்ப அம்மா மேடம் போன் பண்ணவும் தான் எந்திரிச்சேன்...பார்த்தா மணி இவ்வளவு ஆயிருச்சு..." என்று பள்ளிக்கு நேரம் சென்று போன குழந்தை ஆசிரியரிடம் கூறும் பாருங்களேன் அதைப்போல் காரணத்தைக் கூறிக்கொண்டிருந்தாள் கவி…
கவியை முறைத்தவாறே அவள் கரத்திலிருந்து அலைப்பேசியைப் பறித்தவன் தனது தாய்க்கு அழைப்பெடுத்தான்…அவனின் அன்னை ரோஹிணி கிருஷ்ணா... வாழ்வின் இடுக்குகளிலெல்லாம் பாசம் நேசம் அன்பு என்று ஊற்றி நிரப்பிவைத்துக் கொண்டு கணவர் மற்றும் பிள்ளைக்கிடையில் அல்லாடும் சராசரி தாய்...
"கிளம்பிட்டியா யாதவ்..."
"கிளம்பிக்கிட்டே இருக்கேன் மா...நீங்க தூங்கவேண்டியது தானே...எதுக்கு இதெல்லாம்.."எப்பொழுதும் போல் இப்படி கணவன் பிள்ளைகளென உடம்பை கெடுக்கத்துக்கொள்கிறாரே என்று ஆற்றாமையுடன் யாதவ் கேட்கவும்…
"ஏன் டா...இன்னைக்கு உன்னோட புது படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கப்போற முதல் நாள்...அன்னைக்கு கூட பேசாட்டி என்ன அம்மா டா...இல்லை வீட்டை விட்டு வெளியே போய் தனியா இருக்குற மாதிரி அம்மா மகன்ற பாசத்தை விட்டும் தனியா இருக்க போறியா..."என்று சிறிது குரல் இடற கேட்கவும்…
"ப்ச்...அப்படிலாம் இல்லை மா...உங்க உடம்பு கெடுதேன்னு தான்...இல்லாட்டி அந்த வளர்ந்து கெட்ட ரகுவரன் வந்து என் பொண்டாட்டியை துங்கவிடாம முழிக்கவிட்டு கஷ்டப்படுத்துறேன்னு சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டுட்டா என்ன பண்றது...அதுக்கு தான்..."என்று அவரின் எண்ணத்தை மடைமாற்ற பேசினான்…
"ஹா ஹா ஹா...என் ஒட்டகச்சிவிங்கி புருஷனை வம்பிழுக்காட்டி உனக்கு சாப்பிடுற சாப்பாடு உள்ளே இறங்காதே..."
"நீங்களும் உங்க புருஷரை விட்டு கொடுக்கமாட்டீங்களே..."
"டேய்...கல் மாதிரி கம்முனு இருந்தாலும் கணவன்...புல்டவுஸர் மாதிரி சவுண்ட் விட்டாலும் புருசன்ற கொள்கைளைக்கொண்டு வாழுற கண்ணகியோட கடைசி தங்கச்சியோட முதல் கொள்ளுபேத்தியோட கடைசி வாரிசு டா நான்…."என்று யாதவின் அம்மாவென்று நிரூபிக்குமாறு பேசினார் ரோஹிணி…
"ஹா ஹா ஹா…அம்மா போதும்...உங்களோட பதி பத்தியத்தை கேட்டு புல்லரிச்சு போச்சு...எனக்கு லேட் ஆச்சு...வைக்குறேன் அம்மா..."
"ஆல் தி பெஸ்ட் டா..."என்றவர் கைப்பேசியை அணைத்துவிட்டு தனக்கு அருகில் உறங்குவதை போல் வெறுமனே கண்ணைமூடி படுத்துக்கிடக்கும் ரகுவரனை ஒரு கேலிச்சிரிப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்...
யாதவ் அவனது வீட்டைவிட்டு வெளியே வந்து ஆறுவருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது...இவன் படிப்பை முடித்திருந்த சமயம் அடுத்து தொழிலைப் பார்த்துக்கொள்ளுமாறு ரகுவரன் கூற...அவனுக்கோ திரைத்துறைக்குச் சென்று நீங்கா இடத்தை பிடிக்கவேண்டுமென்று ஆசை...எப்படியோ தயங்கித் தயங்கி ரகுவரனிடம் கூற ஒரே வார்த்தையில் முடியாது என்றுவிட்டார்...அதன் பிறகு பல போராட்ட சத்யாகிரங்களுக்கு பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் போன்று ஒரு வாய்ப்பு கொடுத்தார்...இரண்டு வருடங்கள் அதற்குள் உன்னால் அதில் இடம்பிடிக்க முடிந்தால் அது தான் உனது எதிர்காலம்...சோபிக்க முடியாவிடில் தொழில்..என்று நிபந்தனைகளோடு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார்...
எப்படியோ அவனது பின்பெயராலே வாய்ப்பு கிடைத்தது...மூன்று புதுமுகங்கள்...காலத்திற்கும் அழியாத பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் வேதன்...முதன்முறையாக புது முகங்களை அவர் அறிமுகம் படுத்திக்கிறார்...அவரது ப்ரொடக்ஷன் தான்...எல்லாம் பெரிதாக அமைய எப்படியோ முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்...அதன் பின்பு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க மிகவும் கஷ்டப்படவேண்டியதாக இருந்தது...அலைந்து திரிந்து இரண்டாம் வாய்ப்பு பெற்றான்...அதுவும் வெற்றிப்படமாக அமைய அடுத்ததெல்லாம் ஏறுமுகம் தான்...ஆனால் களங்கத்திற்கு முந்தைய படம் வசூல் ரீதியாக ஆவெரேஜ் ரகத்தைப் பிடிக்க…இவனது பல பர்சனல் ஆராதனா...ஷாக்கு பிறகு வந்த களங்கம் கலவையான மதிப்பீடுகளையும் பெற்று சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் ஹிட் வரிசையில் வந்தது…
இருவருடத்திற்கு பிறகும் யாதவ் அவனது அப்பா வீட்டிற்குச் செல்லவில்லை...ஏதாவது முக்கிய நிகழ்வு...விழாக்கள்...பண்டிகைகள் என்று அதற்கு மட்டும் அவனது அப்பா வீட்டிற்குச் சென்றுவந்தான்...அவன் அம்மா...அண்ணன் ஹரி...அண்ணன் மனைவி ஸ்ரீ...அண்ணன் மகன் நான்கே வயதான ஜீவா... ஆராதனா...நெடுவருடங்களாக அங்கு வேலைசெய்யும் சமையல்காரர்...என்று அவன் அப்பாவைத் தவிர அனைவரும் கூப்பிட்டும் அங்கே செல்லவில்லை...
இதெல்லாம் நினைத்துக்கொண்டே குளியலறைக்குள் சென்று குளிக்காமல் முகம் மட்டும் கழுவிவிட்டு உடைமாற்றி வந்திருந்தான் யாதவ்…
"ஐயையை...குளிக்கலையா அண்ணா சார்..."என்று முகத்தைச் சுளித்தவாறு யாதவை பார்த்துக் கவி கேட்கவும் அவளை ஒரு தீப்பார்வை பார்த்தவன் "வாயில நல்லா வந்துரும் சொல்லிவிட்டேன்...மணி இப்பவே ஐந்து பத்து ஆச்சு...போய் வேகமா ட்ரைவரை வண்டி எடுக்க சொல்லு...போ..."என்று கவியை விரட்டியவன் நேற்றே எல்லாம் எடுத்துத் தயார்செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்…
வாகனத்துக்கு அருகில் அசட்டுச் சிரிப்பைக் கொடுத்தவாறு தலையைச் சொரிந்துகொண்டு நின்றிருந்தாள் கவி…
"என்ன...ஒரு மார்க்கமா முழிக்கிற...எங்கே ட்ரைவர்..."என்று படிகளில் இறங்கிக்கொண்டே அவளிடம் கேட்டவாறு வந்தான் யாதவ்…
"அது வந்து அண்ணா சார்...அது வந்து…."
"என் பொறுமையைச் சோதிக்காதே...கவி...வேகமா சொல்லு..."
"இல்லை அண்ணா சார்...ட்ரைவரோட முதல் பொண்டாட்டியோட இரண்டாவது சித்திக்கு மூணாவது தடவை ஹார்ட் கட்டாக் வந்துருக்குன்னு உடனடியா போய் பார்க்கணும்னு என்கிட்டே வந்து நேற்று பெர்மிசன் கேட்டார் சார்...நானும் பாவமே அப்படினு சொல்லி அனுப்பிவைச்சுட்டேன் ...எட்டு மணிபோல வந்து ஏர்போர்ட்ல இருந்து கார் எடுத்துட்டு போகச் சொல்லிருந்தேன் அண்ணா சார்...ஆனால் அதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்…."என்று தலையைச் சொரிந்துகொண்டே கவி அப்பாவியாகக் கூறினாள்…
"ஒஒஒஒஒ…..ஒன்னும் சொல்லறத்துக்கு இல்லை...உன்னை அப்பறம் வைச்சுக்குறேன் வண்டியை எடு….மணி எப்படியும் ஐந்தே கால் ஆயிருக்கும்..."என்று யாதவ் பல்லைக் கடித்துக்கொண்டு கூறவும்...
வேகமாகத் தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் “இல்லை சார் மணி ஐந்து பன்னெண்டு “
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...முதல் வண்டியை எடு..."என்று யாதவ் கூறியவாறு வாகனத்தின் பின்னாடி பயணப்பொதிகளை வைத்துவிட்டு பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான்…
யாதவ் அமர்ந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தவள் எடுக்காமல்...யாதவை திரும்பி பார்த்தாள் கவி…
"என்ன...வண்டியை எடு..."
"இல்லை...அண்ணா சார்..இன்னைக்கு நம்ம புதுப்படத்தோட ஷூட்டிங் போகப்போறோம்...எல்லாம் நல்லபடியா நடக்கும்னு காருக்கு முன்னாடி எலுமிச்சை பழத்தை வைச்சு நசுக்கிட்டு தானே கார் எடுக்கணும்..."என்று சிறு குழந்தை போல் இமை தட்டிக்கேட்டாள் கவி...