• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்...

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... சாரிப்பா... தாத்தா 16 ம் நாள் காரியம் முடிஞ்சதோட எனக்கு காச்சல்... எபி எழுதவே முடியல. இப்போ தான் சரி ஆகியிருக்கு... நானும் வந்துட்டேன்... இனி எப்பவும் போல எபி வரும்... சாரிப்பா... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாப்போம்...

காதல் – 16

தலை சாய்த்துக் கொள்ள உன் தோளும்...

நான் அழுதால் ஆறுதல் சொல்லவும்,

சண்டையிட்டுக் கோபம் கொள்ள,

காதலியாக, தோழியாக வேண்டாம்

மனைவியாக வருவாயா என்னவளே...?

காலையில் எழுந்தவள், நியாபகமாகப் பால்கனி கதவை திறந்து வெளியே சென்று பார்க்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கெளதம். அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள், அவனுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டு, குளித்துக் கீழே வந்தாள்.

அவள் கீழே வரவுமே அவளுக்காக ஷோபாவில் காத்திருந்தாள் ரதி. ‘ஆஹா... கிண்டல் பண்ண காத்திருக்காளே’ எண்ணியவள் மெதுவாகக் குனிந்து கொண்டே இறங்கி வந்தாள்.

“அண்ணி” ஓடி வந்து மதி கையைப் பிடித்துக் கொண்டாள் ரதி.

“என்ன ரதி”

“அண்ணன் எங்க?”

“உங்கண்ணனா?” சிறிது யோசித்தவள் மனதில் ஏதோ தோன்ற, “அவங்க தூங்கிட்டு இருக்காங்க?” கூறியபடியே கமலாவை நோக்கி சென்றாள்.

இவள் கூறுவதைக் கேட்ட அஷோக் ‘மச்சிக்கு பால்கோவா நல்லா வேலை செய்திருக்கு, வரட்டும் டிரீட் கேட்கணும்’ எண்ணியபடியே கமலா கொடுத்த காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

“அத்த...” அழைத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மதி.

“வாம்மா” அவளை உள்ளே அழைத்தவர் அவள் கையில் காபியை கொடுக்க,

“ஏதாவது வேலை செய்யணுமாத்த” மெதுவாக வினவினாள் அவள்.

“எதுவும் செய்ய வேண்டாம்மா. இங்க நான் பாத்துகிறேன், துணைக்குக் கனகா இருக்கா, இன்னைக்கு நீ காலேஜ் போகணும் தானே, சீக்கிரம் கிளம்பு, அத்தை இங்க எல்லாம் பாத்துகிறேன்”

“சரித்த” என்றபடி வெளியில் வரவும், கெளதம் இறங்கி வரவும் சரியாக இருந்தது.

வெளியில் தூங்கியதில், கண்கள் சிவக்க மாடியில் இருந்து இறங்கி வந்தவனைக் கண்ட, மதி நமட்டு சிரிப்புடன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“மச்சி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு, நைட் தூக்கமே இல்லை போல?” கேலியாகக் கேட்டபடியே அவன் வயிற்றில் குத்தினான் அஷோக்.

அவனைக் கொலைவெறியில் முறைத்த, கெளதம் “மச்சி கொஞ்சம் வெளிய வாயேன்?” அழைத்துக் கொண்டு வெளியில் சென்றானவன்.

“வாழ்த்துகள்டா மச்சி... மிங்கிள் ஆனா சந்தோசத்தை ப்ரைட்டான முகத்தில அந்தச் சிவந்த கண் அப்படியே காட்டுது போ?” கையைப் பிடித்துக் குலுக்கினான் அஷோக்.

அவனைப் பார்த்தவன் “எது? இந்த மூஞ்சில உனக்கு மிங்கிள் ஆனா சந்தோசம் அப்படியே தெரிது?” கடுப்புடன் வினவினான்.

“இல்லையா பின்ன... கண்ணெல்லாம் சிவந்து இருக்கு இதுலையே தெரிய வேண்டாமா?”

“ஓஒ... இப்படிக் கூட நீ மிங்கிள் ஆனதக் கண்டுபிடிப்ப அப்படித் தானே?” கேட்டபடியே அஷோக் கையைப் பிடிக்க,

“என்ன, எதுக்குக் கையைப் பிடிக்க?”

“பின்ன இப்படி ஒரு கை உனக்கு இருக்கணுமாக்கும்?” பிடித்துத் திருக ஆரம்பிக்க,

“ஐயோ மச்சான் பால்கோவா வேலை செய்யலியா?”

“எவன்டா உனக்கு இந்த விளங்காத ஐடியா தந்தது?”

“அது தான் மச்சான், நம்ம இந்தர் இருக்கான்ல அவன் தான் சொன்னான். அவளுக்குப் பால்கோவா பிடிக்கும்னு”

“....”

“என்னாச்சு மச்சான்...?”

“என்ன ஆச்சா? ஒன்னுமே ஆகலடா... என்னை வெளிய படுக்க வச்சுட்டாடா? பனில படுத்துக் கண்ணெல்லாம் சிவந்திருக்கு நீ வேற காலம் காத்தால கடுப்படிகிற? சரி வா காலேஜ் கிளம்புவோம்... நமக்கு இதான் எழுதிருக்கு”

“என்னாச்சுடா அவளுக்கு உன் மேலே இன்னும் கோபமா, நீ தான் எல்லாதையும் அங்க வச்‌சு சொல்லிட்டியே... வேற என்னடா பிரச்சனை” உண்மையான கவலையில் வினவினான் அஷோக்.

“அவளுக்கு என் மேல கோபம் இருக்கும் தானே? அது தான் அப்படி நடந்துக்கிறா... என்னோட அன்பு புரிந்து அவளே தேடி வருவாடா... அதுவரை இப்படி அவளைப் பார்த்துட்டே இருக்கேன்”

“எப்படித் தினமும் பால்கோவா வாங்கிக் கொடுத்து வெளியில் காவலுக்குப் படுக்கப் போறியா?”

“ஆமாடா... இப்படி அவ கிட்ட விளையாடுறது கூட நல்லா தான் இருக்கு” அவனிடம் கூறியவன் வீட்டின் உள்ளே சென்றான். அவனையே வினோதமாகப் பார்த்தபடி அவனின் பின்னே நடந்தான் அஷோக்.

மதி கிளம்பி வெளியில் வர, அவள் பின்னே கௌதமும் கிளம்பி வந்தான். கமலா தான் இருவரையும் ஜோடியாகக் காலேஜ் செல்ல கூறியிருந்தார்.

ஆனால் மதிக்கு அதில் உடன்பாடில்லை. அவளுக்குத் திருமணம் முடிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் அவளின் கணவர் கௌதம் என்பது, சுபிக்கு மட்டுமே தெரியும்.

ஏனோ அவளுக்குப் படிக்கும் பொழுது ப்ரொபசர் தான் அவள் கணவன் என்று எல்லார் முன்னும் நிற்க ஒப்பவில்லை.

அன்று பிறகு இன்னும் சுபியிடம் கூட மதி சரியாகப் பேசவில்லை. நேற்று சுமங்கலி பூஜையில் கூட அவளிடம் சரியாகப் பேசவில்லை.

காலேஜ் சென்று தான் அவளைச் சமாதானபடுத்த வேண்டும். எண்ணியவள் வெளியில் வர, கெளதம் பைக்கை கிளப்பிக் கொண்டிருந்தான்.

‘மதியை கோவிலுக்குக் கூட்டிட்டு போயிட்டு, அப்படியே காலேஜ் போ’ என்று கமலா கூறியிருந்தார். அதே சந்தோஷ முகத்துடன் என்றும் இல்லாத திருநாளாகப் பைக்கை வெளியில் எடுத்தான்.

அந்த நேரம் வீட்டு வாசலில் தனது ஸ்கூட்டியில் வந்து நின்றாள் சுபி.

“மதி வாரியா?”

“இதோ வந்துட்டேன்டி” துள்ளி ஓடினாள் மதி.

“மதி என்னம்மா கெளதம் கூடப் போகலியா?” கமலா கேட்க,

“இல்ல அத்தை, நான் தான் சுபியை வர சொன்னேன். அவகிட்ட கொஞ்சம் பேசணும் அது தான்” தயக்கத்துடன் இழுத்தாள்.

அவள் முகத்தைப் பார்த்த கெளதம், ஏதோ தோன்றியவனாக, “அம்மா... மதி அவ கூடவே போகட்டும், காலேஜ்ல எங்க விஷயம் யாருக்கும் தெரியாது. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் தெரியவேண்டாம்னு நேத்து பேசிட்டு இருந்தோம், அது தான் அவளை வர சொல்லிருப்பா? அப்படித் தானே மதி”

“ஆமாங்க...” என்றவள் கமலாவை நோக்கி “அத்தை...” என அழைக்க,

“நீ எது செய்தாலும் சரியா தான் இருக்கும்... பாத்து போயிட்டு வாங்க” என அவர்களை அனுப்பினார் அவர்.

செல்லும் அவளையே சிறு ஏக்கமாகப் பார்த்திருந்தான் கெளதம். சிறு வயதில், அவள் எங்குச் சென்றாலும் அவனை இழுத்து செல்வாள். ஆனால் இன்றோ தனியாக விட்டு செல்கிறாள்! அவளையே பார்த்து நின்றான்.

“கெளதம்” மெதுவாக அவன் தோளில் கையை வைக்க,

“சொல்லுடா அஷோக்”

“காலேஜ் கிளம்பலாம்?”

“வா” என்றவன் சோகத்துடன் பைக்கை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு அசோக்குடன் காரில் காலேஜ் நோக்கி சென்றான். மனம் மிகவும் சோர்ந்து கிடந்தது.

மதி, சுபியிடம் நடந்ததைக் கூற, அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். பதில் ஓன்றும் பேசவில்லை. எல்லாம் அஷோக் அவளிடம் கூறி விட்டிருந்தான்.

அவள் கணவன், யார் என்றே அவளுக்குத் தெரியாத நிலையில் அவளிடம் என்ன கூறுவது.

“சரி விடுடி... எப்படிப் பாத்துக்கார் வசந்தியோட ஜி. கே சார்” கிண்டலாகக் கேட்டாள் சுபி.

“ஏய்... என்ன விளையாடுறியா? அவ இனி ஜி. கே சார் அப்படி இப்படின்னு சொல்லட்டும் அதுக்குப் பிறகு இருக்கு அவளுக்கு”

“அட...! கோபத்தைப் பாரேன்... அன்னைக்கு என்னமோ சொன்ன... அவன் பெரிய இவன்ன இன்னைக்கு என்னாச்சு?”

“அது அன்னைக்கு... இது இன்னைக்கு” இருவரும் பேசியபடியே காலேஜில் நுழைந்தனர்.

எப்பொழுதும் போல எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிளாஸ் சென்றது. இந்தச் செமஸ்டரில் கெளதம் அவர்கள் கிளாஸ் பக்கமே வரவில்லை.

மதிக்கு கூட ஆச்சரியம் “என்னாச்சு” சுபியிடம் மெதுவாக வினவ,

“அவர் கண் முன்னால் நீ இருந்தால், கிளாஸ்ல எல்லாரும் பெயில் ஆகிருவாங்களாம்” நமட்டு சிரிப்புடன் கூறினாள் அவள்.

“அட...போடி!” கூறியவளுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வசந்திக்கு தான் இருக்க முடியலை ‘சார் வரவே இல்லை. நானும் அவர் கிளாஸ் போகப் போகிறேன்னு’ புலம்பி தள்ளினாள்.

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த மதி, வேகமாக அவள் காலை மிதித்து விட்டிருந்தாள்.

ஏனோ, அவள், அவனைப் பற்றிப் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
மாலை ஆகவே, சுபி, அசோக்கை தன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்ல, இருவருக்கும் முதல் சந்திப்பு மனதில் வந்து முகத்தில் புன்னகை அரும்பியது.

கெளதம் அருகில் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் மதி.

வெளியில் வானம் மழை வருவது போல், இருண்டு கிடந்தது. மழை என்றால் தான் மதிக்கு கொள்ளை இஷ்டமே. ஆவலாக வெளியே பார்த்து வந்தாள்.

அவள் முகத்தையே பார்த்தபடி மெதுவாகக் காரை செலுத்திக் கொண்டிருந்தான் கெளதம்.

அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது, என அவனுக்குத் தெரியவே இல்லை.

மெலிதாகத் தூரல் அடிக்கவே, கார் கண்ணாடியை திறந்தவள், கையை வெளியே நீட்டி அந்த வான் மழையை ஒரு மோன நிலையில் ரசித்திருந்தாள்.

“கிச்சா”

அதிர்ந்து விழித்தான் கெளதம். தன்னையா என் நிலா அழைத்தாள். அவனால் அவள் அழைத்ததையே நம்பமுடியவில்லை.

“டேய்... கிச்சா” இப்பொழுது வேகமாக அழைத்திருந்தாள்.

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினவன் அவளை நோக்கி திரும்பினான்.

“சொல்லுடாம்மா?”

“உனக்கு நியாபகம் இருக்கா கிச்சா?”

‘என்ன நியாபகம் இருக்கான்னு கேட்குறா? இவளுக்கு இப்போ எது நியாபகம் வந்திருக்கும்’ யோசித்தவன் “சொல்லுடாம்மா, என்ன நியாபகம் இருக்கான்னு கேட்குற?”

“ஒரு நாள் நாம மூணு பேரும் மழையில் நனைஞ்சோம்ல”

“நாம தான் எப்பவும் மழையில் நனைவோமே? நிலா”

“ம்ம்... எப்பவும் நனைவோம் தான், ஆனா அன்னைக்கு ரதியும் நம்ம கூட நனைஞ்சு அவளுக்குப் பயங்கரக் காச்சல். அப்போ டாக்டர் வந்து பார்த்து அவளுக்கு மாத்திரை எழுதும்போது, நமக்கும் சேர்த்து எழுதி வாங்கித் தந்தால்லா? அடுத்த நாள் எனக்குக் காச்சல் வந்திச்சு, நீ கூட என் கிட்டவே இருந்தியே... அந்தப் பாசம் எல்லாம் இப்போ எங்க போச்சு கிச்சா...

உனக்கு எதுனாலும் எனக்குத் தெரியும், எனக்கு எதுனாலும் உனக்குத் தெரியும், அப்படி இருக்கும் போது இத்தனை நாள் உன் பக்கத்திலயே இருந்து உன்னை அடையாளம் தெரியாமல் எப்படி இருந்திருக்கேன் பாரு...

அதிலும் நீ என்கிட்ட நெருங்கி வரும் போது கூட, நான் உன்னை விட்டு லூசு தனமா விலகிருக்கேன்... எனக்கு உன்னைத் தெரியவே இல்லைடா... நான் உன்னை மறந்துட்டேன், ஆனா நீ அப்படி இல்லை கிச்சா...

என்னை மறக்கவே இல்லை. அப்படியும் என்னைத் தேடி வந்து காதலை சொன்ன பிறகும் உன்னை அறியாமல் போயிருக்கேன் பாரு.

உன்னை ரொம்பக் கஷ்ட்டபடுத்துறேன்ல. நீ ஒவ்வொரு முறையும் என்னை நெருங்கி வரும் போது நான் உன்னைக் கீழே தள்ளி விடுறேன்ல,

நீ என்னைத் தேடி வராமல் இருந்திருந்தால் உன்னோட இத்தனை காதலையும் நான் இழந்திருப்பேன். நீ என்னையும், என் நினைவையும் ஒரு நொடி கூட மறக்கல... ஆனா நான்?” அவளுக்கு மிகவும் கில்டியாக இருந்தது.

இப்போ கூட நீ என்கிட்ட கிச்சாவா பேசலன்னா எனக்கு உன் நினைவு சுத்தமா இருந்திருக்காது. என் படிப்பு முடிஞ்சதும் ஒன்னு எனக்குத் தாலி கட்டியதற்காக உன் கூட வாழ்ந்திருப்பேன். இல்லன்னா என்ன எல்லாம் என் வாழ்கையில் நடந்திருக்குமோ? நினைச்சு கூடப் பார்க்க முடியல கிச்சா...”

அவளையே அசையாமல் பார்த்திருந்தான் கெளதம். மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டான் கெளதம். ‘என்னோட நிலா எப்படி எல்லாம் யோசிக்கிறா?’

அவள் கையை விலக்க பார்க்க “ஹே... ஒரு ரெண்டு செகண்ட் உன் கையைப் பிடிச்சுக்கட்டுமா?”

“ஹுகும்”

“அதெல்லாம் கிடையாது நான் இந்த நிமிசம் ரொம்பச் சந்தோசமா இருக்கேன்... உன் கையைக் கொடு நிலா” என்றபடி அவளைக் கையைப் பற்றிக் கொண்டான்.

“என் மேல நீ பயங்கரக் கோபத்தில் இருப்பேன்னு நினைச்சேன், ஆனா நீ உன்னையே நொந்துட்டு இருந்திருக்க. இதெல்லாம் தேவையே இல்லை நிலாம்மா...

உனக்கும் சேர்த்து நான் காதலிக்கிறேன். உன்னையும், நமக்கு வரும் சொந்தத்தையும் மூச்சடக்குற அளவுக்குக் காதலிக்கிறேன்... இதைத் தவிர உனக்கு வேறு என்ன வேண்டும் நிலாம்மா?

எனக்கு வேறு எதுவும் வேண்டாம் பெண்ணே... நீ மட்டும் எப்பவும் என்கூடவே இருந்தால் போதும், நான் இன்னும் இன்னும் உன்னைக் காதலிப்பேன்.. இந்த நொடி நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன்னு உனக்குத் தெரியுமா? நிலா?”

அவன் முகத்தையே பார்த்திருந்தாள். இவனுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். இந்தளவுக்கு என் மேல் காதலை வைக்க நான் அவனுக்கு என்ன செய்து விட்டேன். அவனையே பார்க்க,

“நாம அப்படியே எங்கயாவது ஒரு ரவுண்ட் போலாமா மதி?”

“ம்ம்?” மெதுவாக உரைத்தவளின் கண்கள் பெரிதாகத் தூறத் துவங்கிய மழையை ரசிக்க ஆரம்பித்திருந்தது.

“எனக்கு மழையில் இப்படியே ரவுண்ட் போக ரொம்பப் பிடிக்கும்?”

மெதுவாக நகர்ந்தது கார்... மழையும் வேகமெடுத்தது. ஆள், அரவமற்ற அந்தச் சாலையில் வளைந்து, நெளிந்து செல்ல ஆரம்பித்தது அந்தக் கார்.

ஜன்னலின் வெளியே ஜில்லென்ற காற்றும், வீசிய சாரலும் அவள் முகத்தில் மோத, கெளதம் காதலுடன் உடல் மொத்தமும் சிலிர்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவளுக்கு அவன் கையைப் பிடிக்க வேண்டும் போல் இருந்தது. சிறிது நேரத்துக்கு முன் அவள், கையை அவன் பிடிக்க வரும்பொழுது அவனிடம் சிணுங்கியது நினைவில் வந்து முகத்தைப் பூக்க செய்தது.

‘ம்ஹும் வேண்டாம்’ தனக்குத் தானே கூறிக் கொண்டு முகத்தை வெளியில் திருப்பினாள் மதி.

ஆள், அரவமற்ற அந்தச் சாலையில் காரை மெதுவாக நிறுத்தினான் கெளதம். கேள்வியாக அவனைப் பார்க்க “மழை உனக்கு ரொம்பப் பிடிக்கும்ல கொஞ்ச நேரம் நனைவோமா?” மெதுவாக வினவினான்.

மகிழ்ச்சியில் கண்கள் விரிய வேகமாகத் தலையாட்டினாள் அவள்.

அவளின் கை பிடித்து அவள் இறங்க உதவினான் கெளதம். வாழ்க்கை ஒரே நொடியில் வண்ண மயமாக மாறியதை போல் உணர்ந்தான்.

நேற்று வரை இருந்ததென்ன இப்பொழுது அவள் கைபிடித்து இந்த மெல்லிய இருட்டில் நடப்பதென்ன அவளை எண்ணி சிலிர்த்தது தேகம்.

தாலாட்டியது மழை தூரல் இருவர் உடலையும் நனைத்தது என்றில்லாமல் இருவரும் மனமும் காதல் சாரலில் மெதுவாக நனைந்து குளிர்ந்தது.

இதுவரை எத்தனையோ மழையில் நனைந்திருகிறாள். ஆனால் இந்த மழை மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கைகளில் நீரை நிரப்பி அவனைப் பார்க்க, இதழில் தவழ்ந்த சிரிப்புடன் புருவம் உயர்த்திக் கண் சிமிட்டி சிரித்தான் கெளதம்.

கையில் அள்ளி வைத்திருந்த நீரை அவன் மேல் தெளித்து, இதழ் சுழித்துச் சிரித்தாள் மதி.

அவனும் இப்படி எல்லாம் இருந்ததே இல்லை. தாலி கட்டி வேண்டாம் என்று விட்டு வந்தவளுடன் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் மழையில் அவளுடன் இணைத்து சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறான். எல்லாம் அவனின் நிலாக்குட்டியின் மாயம்.

காதலியே மனைவியாக வர வரம் பெற்றவன்... இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், ரசித்து ருசித்து வாழப்போகிறான். அந்தச் சந்தோசம் முகத்தில் குறுஞ்சிரிப்பாய்த் தவழ்ந்தது.

சிறிது நேரம் கழித்து இருவரும் காருக்கு வந்திருந்தனர். சட்டென்று அவளை நோக்கி “நிலாக்குட்டி” என்று அழைத்திருந்தான் அவன்.

மெதுவாகக் கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தாள் அவள்.

அப்படியே அவள் கையை ஏந்திக் கொண்டான் அவன். இரண்டு கைகளுக்கும் நடுவில் அவள் கையைப் பொதிந்து கொண்டு அவள் முகத்தை நோக்கினான்.

அவள் முகத்தைப் பார்த்தபடியே அவள் கையில் மெதுவாக இதழ் பதித்தான்.

மொத்தமாய்ச் சிலிர்த்துப் போனாள் மதி.

அவள் கையைப் பிடித்துக் கொண்டு, தன் இதயத்துக்கு நேராக நெஞ்சில் வைத்துக் கொண்டு கூறினான். “நீ என் வாழ்க்கையில் திரும்ப வருவன்னு தெரியாமலே உன்னைத் தேடி அலைந்தேன் நிலா.

சிறு வயதிலேயே இந்த அழகு முகத்தை விட்டு என் பார்வையை எங்கும் திருப்ப விட்டதே இல்ல நீ... இப்பொழுதும் அப்படியே அந்தச் சிரிப்பில் உன் தெற்றுப் பற்களில் என்னை எங்கும் அசையாதபடி கட்டிப் போட்டிருகிறாய்.

“ஐ லவ் யூ நிலா... இந்தப் பக்கம்” அப்படியே அவள் கை கொண்டு இதயத்தைச் சுட்டிக் காட்டியவன் “இந்தப் பக்கம் மூச்சு முட்டுற அளவு நீ தான் நிறைஞ்சு இருக்க. அதை உன்கிட்ட சொல்ல முடியாம தான் அந்தப் ஃபோன் கால்...

அப்போவும் என் காதலை உனக்குக் கூறினேன் ஆனா, நீ எப்படிப் புரிஞ்சுகிட்டனு எனக்குத் தெரியவே இல்லை... ஆனா அன்னைக்கு நீ என்னைப் பிரிஞ்சு போனப்ப என் மூச்சே நின்னிடும் போல இருந்திச்சு”

அவள் கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. அன்று புரியாத காதலையும் இன்று அழகாகப் புரிந்துக் கொண்டாள். தன் காதலை அழகாக அவளுக்கு உணர்த்தினான் கெளதம்.

அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவன், “ஏய் நிலாம்மா” என்றபடி இழுத்தனைத்துக்கொள்ள “ஐ லவ் யூ கிச்சா... லவ் யூ சோ மச்” கேவலுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் அவனின் நிலா...

அடுத்த எபி வியாழக்கிழமை :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top