ஹாய் பிரண்ட்ஸ்...
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... சாரிப்பா... தாத்தா 16 ம் நாள் காரியம் முடிஞ்சதோட எனக்கு காச்சல்... எபி எழுதவே முடியல. இப்போ தான் சரி ஆகியிருக்கு... நானும் வந்துட்டேன்... இனி எப்பவும் போல எபி வரும்... சாரிப்பா... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாப்போம்...
காதல் – 16
தலை சாய்த்துக் கொள்ள உன் தோளும்...
நான் அழுதால் ஆறுதல் சொல்லவும்,
சண்டையிட்டுக் கோபம் கொள்ள,
காதலியாக, தோழியாக வேண்டாம்
மனைவியாக வருவாயா என்னவளே...?
காலையில் எழுந்தவள், நியாபகமாகப் பால்கனி கதவை திறந்து வெளியே சென்று பார்க்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கெளதம். அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள், அவனுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டு, குளித்துக் கீழே வந்தாள்.
அவள் கீழே வரவுமே அவளுக்காக ஷோபாவில் காத்திருந்தாள் ரதி. ‘ஆஹா... கிண்டல் பண்ண காத்திருக்காளே’ எண்ணியவள் மெதுவாகக் குனிந்து கொண்டே இறங்கி வந்தாள்.
“அண்ணி” ஓடி வந்து மதி கையைப் பிடித்துக் கொண்டாள் ரதி.
“என்ன ரதி”
“அண்ணன் எங்க?”
“உங்கண்ணனா?” சிறிது யோசித்தவள் மனதில் ஏதோ தோன்ற, “அவங்க தூங்கிட்டு இருக்காங்க?” கூறியபடியே கமலாவை நோக்கி சென்றாள்.
இவள் கூறுவதைக் கேட்ட அஷோக் ‘மச்சிக்கு பால்கோவா நல்லா வேலை செய்திருக்கு, வரட்டும் டிரீட் கேட்கணும்’ எண்ணியபடியே கமலா கொடுத்த காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
“அத்த...” அழைத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மதி.
“வாம்மா” அவளை உள்ளே அழைத்தவர் அவள் கையில் காபியை கொடுக்க,
“ஏதாவது வேலை செய்யணுமாத்த” மெதுவாக வினவினாள் அவள்.
“எதுவும் செய்ய வேண்டாம்மா. இங்க நான் பாத்துகிறேன், துணைக்குக் கனகா இருக்கா, இன்னைக்கு நீ காலேஜ் போகணும் தானே, சீக்கிரம் கிளம்பு, அத்தை இங்க எல்லாம் பாத்துகிறேன்”
“சரித்த” என்றபடி வெளியில் வரவும், கெளதம் இறங்கி வரவும் சரியாக இருந்தது.
வெளியில் தூங்கியதில், கண்கள் சிவக்க மாடியில் இருந்து இறங்கி வந்தவனைக் கண்ட, மதி நமட்டு சிரிப்புடன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“மச்சி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு, நைட் தூக்கமே இல்லை போல?” கேலியாகக் கேட்டபடியே அவன் வயிற்றில் குத்தினான் அஷோக்.
அவனைக் கொலைவெறியில் முறைத்த, கெளதம் “மச்சி கொஞ்சம் வெளிய வாயேன்?” அழைத்துக் கொண்டு வெளியில் சென்றானவன்.
“வாழ்த்துகள்டா மச்சி... மிங்கிள் ஆனா சந்தோசத்தை ப்ரைட்டான முகத்தில அந்தச் சிவந்த கண் அப்படியே காட்டுது போ?” கையைப் பிடித்துக் குலுக்கினான் அஷோக்.
அவனைப் பார்த்தவன் “எது? இந்த மூஞ்சில உனக்கு மிங்கிள் ஆனா சந்தோசம் அப்படியே தெரிது?” கடுப்புடன் வினவினான்.
“இல்லையா பின்ன... கண்ணெல்லாம் சிவந்து இருக்கு இதுலையே தெரிய வேண்டாமா?”
“ஓஒ... இப்படிக் கூட நீ மிங்கிள் ஆனதக் கண்டுபிடிப்ப அப்படித் தானே?” கேட்டபடியே அஷோக் கையைப் பிடிக்க,
“என்ன, எதுக்குக் கையைப் பிடிக்க?”
“பின்ன இப்படி ஒரு கை உனக்கு இருக்கணுமாக்கும்?” பிடித்துத் திருக ஆரம்பிக்க,
“ஐயோ மச்சான் பால்கோவா வேலை செய்யலியா?”
“எவன்டா உனக்கு இந்த விளங்காத ஐடியா தந்தது?”
“அது தான் மச்சான், நம்ம இந்தர் இருக்கான்ல அவன் தான் சொன்னான். அவளுக்குப் பால்கோவா பிடிக்கும்னு”
“....”
“என்னாச்சு மச்சான்...?”
“என்ன ஆச்சா? ஒன்னுமே ஆகலடா... என்னை வெளிய படுக்க வச்சுட்டாடா? பனில படுத்துக் கண்ணெல்லாம் சிவந்திருக்கு நீ வேற காலம் காத்தால கடுப்படிகிற? சரி வா காலேஜ் கிளம்புவோம்... நமக்கு இதான் எழுதிருக்கு”
“என்னாச்சுடா அவளுக்கு உன் மேலே இன்னும் கோபமா, நீ தான் எல்லாதையும் அங்க வச்சு சொல்லிட்டியே... வேற என்னடா பிரச்சனை” உண்மையான கவலையில் வினவினான் அஷோக்.
“அவளுக்கு என் மேல கோபம் இருக்கும் தானே? அது தான் அப்படி நடந்துக்கிறா... என்னோட அன்பு புரிந்து அவளே தேடி வருவாடா... அதுவரை இப்படி அவளைப் பார்த்துட்டே இருக்கேன்”
“எப்படித் தினமும் பால்கோவா வாங்கிக் கொடுத்து வெளியில் காவலுக்குப் படுக்கப் போறியா?”
“ஆமாடா... இப்படி அவ கிட்ட விளையாடுறது கூட நல்லா தான் இருக்கு” அவனிடம் கூறியவன் வீட்டின் உள்ளே சென்றான். அவனையே வினோதமாகப் பார்த்தபடி அவனின் பின்னே நடந்தான் அஷோக்.
மதி கிளம்பி வெளியில் வர, அவள் பின்னே கௌதமும் கிளம்பி வந்தான். கமலா தான் இருவரையும் ஜோடியாகக் காலேஜ் செல்ல கூறியிருந்தார்.
ஆனால் மதிக்கு அதில் உடன்பாடில்லை. அவளுக்குத் திருமணம் முடிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் அவளின் கணவர் கௌதம் என்பது, சுபிக்கு மட்டுமே தெரியும்.
ஏனோ அவளுக்குப் படிக்கும் பொழுது ப்ரொபசர் தான் அவள் கணவன் என்று எல்லார் முன்னும் நிற்க ஒப்பவில்லை.
அன்று பிறகு இன்னும் சுபியிடம் கூட மதி சரியாகப் பேசவில்லை. நேற்று சுமங்கலி பூஜையில் கூட அவளிடம் சரியாகப் பேசவில்லை.
காலேஜ் சென்று தான் அவளைச் சமாதானபடுத்த வேண்டும். எண்ணியவள் வெளியில் வர, கெளதம் பைக்கை கிளப்பிக் கொண்டிருந்தான்.
‘மதியை கோவிலுக்குக் கூட்டிட்டு போயிட்டு, அப்படியே காலேஜ் போ’ என்று கமலா கூறியிருந்தார். அதே சந்தோஷ முகத்துடன் என்றும் இல்லாத திருநாளாகப் பைக்கை வெளியில் எடுத்தான்.
அந்த நேரம் வீட்டு வாசலில் தனது ஸ்கூட்டியில் வந்து நின்றாள் சுபி.
“மதி வாரியா?”
“இதோ வந்துட்டேன்டி” துள்ளி ஓடினாள் மதி.
“மதி என்னம்மா கெளதம் கூடப் போகலியா?” கமலா கேட்க,
“இல்ல அத்தை, நான் தான் சுபியை வர சொன்னேன். அவகிட்ட கொஞ்சம் பேசணும் அது தான்” தயக்கத்துடன் இழுத்தாள்.
அவள் முகத்தைப் பார்த்த கெளதம், ஏதோ தோன்றியவனாக, “அம்மா... மதி அவ கூடவே போகட்டும், காலேஜ்ல எங்க விஷயம் யாருக்கும் தெரியாது. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் தெரியவேண்டாம்னு நேத்து பேசிட்டு இருந்தோம், அது தான் அவளை வர சொல்லிருப்பா? அப்படித் தானே மதி”
“ஆமாங்க...” என்றவள் கமலாவை நோக்கி “அத்தை...” என அழைக்க,
“நீ எது செய்தாலும் சரியா தான் இருக்கும்... பாத்து போயிட்டு வாங்க” என அவர்களை அனுப்பினார் அவர்.
செல்லும் அவளையே சிறு ஏக்கமாகப் பார்த்திருந்தான் கெளதம். சிறு வயதில், அவள் எங்குச் சென்றாலும் அவனை இழுத்து செல்வாள். ஆனால் இன்றோ தனியாக விட்டு செல்கிறாள்! அவளையே பார்த்து நின்றான்.
“கெளதம்” மெதுவாக அவன் தோளில் கையை வைக்க,
“சொல்லுடா அஷோக்”
“காலேஜ் கிளம்பலாம்?”
“வா” என்றவன் சோகத்துடன் பைக்கை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு அசோக்குடன் காரில் காலேஜ் நோக்கி சென்றான். மனம் மிகவும் சோர்ந்து கிடந்தது.
மதி, சுபியிடம் நடந்ததைக் கூற, அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். பதில் ஓன்றும் பேசவில்லை. எல்லாம் அஷோக் அவளிடம் கூறி விட்டிருந்தான்.
அவள் கணவன், யார் என்றே அவளுக்குத் தெரியாத நிலையில் அவளிடம் என்ன கூறுவது.
“சரி விடுடி... எப்படிப் பாத்துக்கார் வசந்தியோட ஜி. கே சார்” கிண்டலாகக் கேட்டாள் சுபி.
“ஏய்... என்ன விளையாடுறியா? அவ இனி ஜி. கே சார் அப்படி இப்படின்னு சொல்லட்டும் அதுக்குப் பிறகு இருக்கு அவளுக்கு”
“அட...! கோபத்தைப் பாரேன்... அன்னைக்கு என்னமோ சொன்ன... அவன் பெரிய இவன்ன இன்னைக்கு என்னாச்சு?”
“அது அன்னைக்கு... இது இன்னைக்கு” இருவரும் பேசியபடியே காலேஜில் நுழைந்தனர்.
எப்பொழுதும் போல எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிளாஸ் சென்றது. இந்தச் செமஸ்டரில் கெளதம் அவர்கள் கிளாஸ் பக்கமே வரவில்லை.
மதிக்கு கூட ஆச்சரியம் “என்னாச்சு” சுபியிடம் மெதுவாக வினவ,
“அவர் கண் முன்னால் நீ இருந்தால், கிளாஸ்ல எல்லாரும் பெயில் ஆகிருவாங்களாம்” நமட்டு சிரிப்புடன் கூறினாள் அவள்.
“அட...போடி!” கூறியவளுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
வசந்திக்கு தான் இருக்க முடியலை ‘சார் வரவே இல்லை. நானும் அவர் கிளாஸ் போகப் போகிறேன்னு’ புலம்பி தள்ளினாள்.
கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த மதி, வேகமாக அவள் காலை மிதித்து விட்டிருந்தாள்.
ஏனோ, அவள், அவனைப் பற்றிப் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... சாரிப்பா... தாத்தா 16 ம் நாள் காரியம் முடிஞ்சதோட எனக்கு காச்சல்... எபி எழுதவே முடியல. இப்போ தான் சரி ஆகியிருக்கு... நானும் வந்துட்டேன்... இனி எப்பவும் போல எபி வரும்... சாரிப்பா... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாப்போம்...
காதல் – 16
தலை சாய்த்துக் கொள்ள உன் தோளும்...
நான் அழுதால் ஆறுதல் சொல்லவும்,
சண்டையிட்டுக் கோபம் கொள்ள,
காதலியாக, தோழியாக வேண்டாம்
மனைவியாக வருவாயா என்னவளே...?
காலையில் எழுந்தவள், நியாபகமாகப் பால்கனி கதவை திறந்து வெளியே சென்று பார்க்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கெளதம். அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள், அவனுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டு, குளித்துக் கீழே வந்தாள்.
அவள் கீழே வரவுமே அவளுக்காக ஷோபாவில் காத்திருந்தாள் ரதி. ‘ஆஹா... கிண்டல் பண்ண காத்திருக்காளே’ எண்ணியவள் மெதுவாகக் குனிந்து கொண்டே இறங்கி வந்தாள்.
“அண்ணி” ஓடி வந்து மதி கையைப் பிடித்துக் கொண்டாள் ரதி.
“என்ன ரதி”
“அண்ணன் எங்க?”
“உங்கண்ணனா?” சிறிது யோசித்தவள் மனதில் ஏதோ தோன்ற, “அவங்க தூங்கிட்டு இருக்காங்க?” கூறியபடியே கமலாவை நோக்கி சென்றாள்.
இவள் கூறுவதைக் கேட்ட அஷோக் ‘மச்சிக்கு பால்கோவா நல்லா வேலை செய்திருக்கு, வரட்டும் டிரீட் கேட்கணும்’ எண்ணியபடியே கமலா கொடுத்த காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
“அத்த...” அழைத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மதி.
“வாம்மா” அவளை உள்ளே அழைத்தவர் அவள் கையில் காபியை கொடுக்க,
“ஏதாவது வேலை செய்யணுமாத்த” மெதுவாக வினவினாள் அவள்.
“எதுவும் செய்ய வேண்டாம்மா. இங்க நான் பாத்துகிறேன், துணைக்குக் கனகா இருக்கா, இன்னைக்கு நீ காலேஜ் போகணும் தானே, சீக்கிரம் கிளம்பு, அத்தை இங்க எல்லாம் பாத்துகிறேன்”
“சரித்த” என்றபடி வெளியில் வரவும், கெளதம் இறங்கி வரவும் சரியாக இருந்தது.
வெளியில் தூங்கியதில், கண்கள் சிவக்க மாடியில் இருந்து இறங்கி வந்தவனைக் கண்ட, மதி நமட்டு சிரிப்புடன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“மச்சி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு, நைட் தூக்கமே இல்லை போல?” கேலியாகக் கேட்டபடியே அவன் வயிற்றில் குத்தினான் அஷோக்.
அவனைக் கொலைவெறியில் முறைத்த, கெளதம் “மச்சி கொஞ்சம் வெளிய வாயேன்?” அழைத்துக் கொண்டு வெளியில் சென்றானவன்.
“வாழ்த்துகள்டா மச்சி... மிங்கிள் ஆனா சந்தோசத்தை ப்ரைட்டான முகத்தில அந்தச் சிவந்த கண் அப்படியே காட்டுது போ?” கையைப் பிடித்துக் குலுக்கினான் அஷோக்.
அவனைப் பார்த்தவன் “எது? இந்த மூஞ்சில உனக்கு மிங்கிள் ஆனா சந்தோசம் அப்படியே தெரிது?” கடுப்புடன் வினவினான்.
“இல்லையா பின்ன... கண்ணெல்லாம் சிவந்து இருக்கு இதுலையே தெரிய வேண்டாமா?”
“ஓஒ... இப்படிக் கூட நீ மிங்கிள் ஆனதக் கண்டுபிடிப்ப அப்படித் தானே?” கேட்டபடியே அஷோக் கையைப் பிடிக்க,
“என்ன, எதுக்குக் கையைப் பிடிக்க?”
“பின்ன இப்படி ஒரு கை உனக்கு இருக்கணுமாக்கும்?” பிடித்துத் திருக ஆரம்பிக்க,
“ஐயோ மச்சான் பால்கோவா வேலை செய்யலியா?”
“எவன்டா உனக்கு இந்த விளங்காத ஐடியா தந்தது?”
“அது தான் மச்சான், நம்ம இந்தர் இருக்கான்ல அவன் தான் சொன்னான். அவளுக்குப் பால்கோவா பிடிக்கும்னு”
“....”
“என்னாச்சு மச்சான்...?”
“என்ன ஆச்சா? ஒன்னுமே ஆகலடா... என்னை வெளிய படுக்க வச்சுட்டாடா? பனில படுத்துக் கண்ணெல்லாம் சிவந்திருக்கு நீ வேற காலம் காத்தால கடுப்படிகிற? சரி வா காலேஜ் கிளம்புவோம்... நமக்கு இதான் எழுதிருக்கு”
“என்னாச்சுடா அவளுக்கு உன் மேலே இன்னும் கோபமா, நீ தான் எல்லாதையும் அங்க வச்சு சொல்லிட்டியே... வேற என்னடா பிரச்சனை” உண்மையான கவலையில் வினவினான் அஷோக்.
“அவளுக்கு என் மேல கோபம் இருக்கும் தானே? அது தான் அப்படி நடந்துக்கிறா... என்னோட அன்பு புரிந்து அவளே தேடி வருவாடா... அதுவரை இப்படி அவளைப் பார்த்துட்டே இருக்கேன்”
“எப்படித் தினமும் பால்கோவா வாங்கிக் கொடுத்து வெளியில் காவலுக்குப் படுக்கப் போறியா?”
“ஆமாடா... இப்படி அவ கிட்ட விளையாடுறது கூட நல்லா தான் இருக்கு” அவனிடம் கூறியவன் வீட்டின் உள்ளே சென்றான். அவனையே வினோதமாகப் பார்த்தபடி அவனின் பின்னே நடந்தான் அஷோக்.
மதி கிளம்பி வெளியில் வர, அவள் பின்னே கௌதமும் கிளம்பி வந்தான். கமலா தான் இருவரையும் ஜோடியாகக் காலேஜ் செல்ல கூறியிருந்தார்.
ஆனால் மதிக்கு அதில் உடன்பாடில்லை. அவளுக்குத் திருமணம் முடிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் அவளின் கணவர் கௌதம் என்பது, சுபிக்கு மட்டுமே தெரியும்.
ஏனோ அவளுக்குப் படிக்கும் பொழுது ப்ரொபசர் தான் அவள் கணவன் என்று எல்லார் முன்னும் நிற்க ஒப்பவில்லை.
அன்று பிறகு இன்னும் சுபியிடம் கூட மதி சரியாகப் பேசவில்லை. நேற்று சுமங்கலி பூஜையில் கூட அவளிடம் சரியாகப் பேசவில்லை.
காலேஜ் சென்று தான் அவளைச் சமாதானபடுத்த வேண்டும். எண்ணியவள் வெளியில் வர, கெளதம் பைக்கை கிளப்பிக் கொண்டிருந்தான்.
‘மதியை கோவிலுக்குக் கூட்டிட்டு போயிட்டு, அப்படியே காலேஜ் போ’ என்று கமலா கூறியிருந்தார். அதே சந்தோஷ முகத்துடன் என்றும் இல்லாத திருநாளாகப் பைக்கை வெளியில் எடுத்தான்.
அந்த நேரம் வீட்டு வாசலில் தனது ஸ்கூட்டியில் வந்து நின்றாள் சுபி.
“மதி வாரியா?”
“இதோ வந்துட்டேன்டி” துள்ளி ஓடினாள் மதி.
“மதி என்னம்மா கெளதம் கூடப் போகலியா?” கமலா கேட்க,
“இல்ல அத்தை, நான் தான் சுபியை வர சொன்னேன். அவகிட்ட கொஞ்சம் பேசணும் அது தான்” தயக்கத்துடன் இழுத்தாள்.
அவள் முகத்தைப் பார்த்த கெளதம், ஏதோ தோன்றியவனாக, “அம்மா... மதி அவ கூடவே போகட்டும், காலேஜ்ல எங்க விஷயம் யாருக்கும் தெரியாது. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் தெரியவேண்டாம்னு நேத்து பேசிட்டு இருந்தோம், அது தான் அவளை வர சொல்லிருப்பா? அப்படித் தானே மதி”
“ஆமாங்க...” என்றவள் கமலாவை நோக்கி “அத்தை...” என அழைக்க,
“நீ எது செய்தாலும் சரியா தான் இருக்கும்... பாத்து போயிட்டு வாங்க” என அவர்களை அனுப்பினார் அவர்.
செல்லும் அவளையே சிறு ஏக்கமாகப் பார்த்திருந்தான் கெளதம். சிறு வயதில், அவள் எங்குச் சென்றாலும் அவனை இழுத்து செல்வாள். ஆனால் இன்றோ தனியாக விட்டு செல்கிறாள்! அவளையே பார்த்து நின்றான்.
“கெளதம்” மெதுவாக அவன் தோளில் கையை வைக்க,
“சொல்லுடா அஷோக்”
“காலேஜ் கிளம்பலாம்?”
“வா” என்றவன் சோகத்துடன் பைக்கை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு அசோக்குடன் காரில் காலேஜ் நோக்கி சென்றான். மனம் மிகவும் சோர்ந்து கிடந்தது.
மதி, சுபியிடம் நடந்ததைக் கூற, அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். பதில் ஓன்றும் பேசவில்லை. எல்லாம் அஷோக் அவளிடம் கூறி விட்டிருந்தான்.
அவள் கணவன், யார் என்றே அவளுக்குத் தெரியாத நிலையில் அவளிடம் என்ன கூறுவது.
“சரி விடுடி... எப்படிப் பாத்துக்கார் வசந்தியோட ஜி. கே சார்” கிண்டலாகக் கேட்டாள் சுபி.
“ஏய்... என்ன விளையாடுறியா? அவ இனி ஜி. கே சார் அப்படி இப்படின்னு சொல்லட்டும் அதுக்குப் பிறகு இருக்கு அவளுக்கு”
“அட...! கோபத்தைப் பாரேன்... அன்னைக்கு என்னமோ சொன்ன... அவன் பெரிய இவன்ன இன்னைக்கு என்னாச்சு?”
“அது அன்னைக்கு... இது இன்னைக்கு” இருவரும் பேசியபடியே காலேஜில் நுழைந்தனர்.
எப்பொழுதும் போல எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிளாஸ் சென்றது. இந்தச் செமஸ்டரில் கெளதம் அவர்கள் கிளாஸ் பக்கமே வரவில்லை.
மதிக்கு கூட ஆச்சரியம் “என்னாச்சு” சுபியிடம் மெதுவாக வினவ,
“அவர் கண் முன்னால் நீ இருந்தால், கிளாஸ்ல எல்லாரும் பெயில் ஆகிருவாங்களாம்” நமட்டு சிரிப்புடன் கூறினாள் அவள்.
“அட...போடி!” கூறியவளுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
வசந்திக்கு தான் இருக்க முடியலை ‘சார் வரவே இல்லை. நானும் அவர் கிளாஸ் போகப் போகிறேன்னு’ புலம்பி தள்ளினாள்.
கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த மதி, வேகமாக அவள் காலை மிதித்து விட்டிருந்தாள்.
ஏனோ, அவள், அவனைப் பற்றிப் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
Last edited: