பார்வை - 7
நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது பிரபா குடும்பத்தினர் மதுரை வந்து சேர்வதற்கு. தூக்கத்தில் ஆளுக்கொருப் பக்கமாக சாமியாடிக் கொண்டிருந்தத் தங்களதுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மூன்று தமக்கைகளும் தத்தமது இல்லங்களை நோக்கி நகர,
"புள்ளைகளுக்குப் பாலைக் கொடுத்து தூங்க வைங்கத்தா" என்று சொல்லியபடியே சுந்தரவடிவும், பாண்டியும் பிரபாவுடன் நின்றிருந்தனர். பிரபா வேன் டிரைவருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
"அண்ணே உங்க வீடு எங்கிட்டுண்ணே. ரொம்பத் தொலைவென்டா இங்கனயே ரவைக்குத் தூங்கி எந்திரிச்சு காலையில கிளம்புங்கண்ணே" பணத்தைக் கொடுத்ததோடு வேலை முடிந்தது என்றில்லாமல் அவரின் நலனிலும் அக்கறைக் கொண்டு விசாரித்தான் பிரபா.
"பரவால்ல தம்பி. நம்ம வூடு இங்கப் பக்கத்துலதேன். நான் போயிக்கிடுதேன். கண்ணாலத்துக்கும் நம்மகிட்டயே வண்டி எடுத்துக்கிடுங்க தம்பி" என்று அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு அவர் கிளம்பவும் பிரபாவின் அலைப்பேசி 'சொக்குப் பொடி மீனாட்சி' என்று அலறவும் சரியாக இருந்தது.
"ஏன் சித்தி நேத்து ம்ஹூம் இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாமென்டு சொல்லிக்கிட்டு ஒரு பய திரிஞ்சானே அவன நீ எங்கிட்டாச்சும் பார்த்த?" என்று பாண்டி நக்கலடிக்க,
"நானும் அவனத்தேன் பாண்டி தேடுறேன். பய சாயங்காலத்துலயிருந்து கண்ணுலயே அம்புட மாட்டேங்குறான்" என்று கூறி சுந்தரவடிவும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்.
தெரியாத நம்பராக இருக்கவும் செல்லை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனாக, "ம்மா நீயுமாம்மா? அவெங்கூட எல்லாம் சேராதம்மா" என்று சுந்தரவடிவின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சலுகையாகப் பிரபா கூற,
"ஏன்டா பேச மாட்ட. பொண்ணு பார்க்க இங்கேயிருந்து அம்புட்டுப் பேரையும் கிளப்புறதுக்கே என் தலை முடியில பாதி போயிடுச்சு. எதையுங் கண்டும் காணாம சுத்திக்கிட்டு இருந்துப்புட்டு, ஒத்த பாட்டுல சோலிய முடிச்சுட்டியே" தன் ஆதங்கத்தைப் பாண்டி கொட்டித் தீர்க்க,
"உனக்குத்தேன் கல்யாணம் முடிஞ்சுடுச்சே மாப்பி. மூணு புள்ளைகளும் ஆகப் போவுது. இதுக்கு மேல உன் தலையில முடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன?" என்று அசால்ட்டாகக் கூறினான் பிரபா.
"ஹேய் ஹேஹேய்... இது நல்ல கதையா இருக்கே. கல்யாணம் முடிஞ்சுட்டா ஒருத்தனுக்கு முடி இருக்கக் கூடாதா? நல்லா வந்து வாச்சீங்கடா எனக்குன்னு. இனி நீயாச்சு உன் மாமனுங்களாச்சு.
நீ அவெங்க கையைப் புடிப்பியோ, கால்ல விழுவியோ? நீயே உன் கல்யாணத்தை நடத்திக்க. உன் மண்டையில முடி இருக்கா இல்லையான்டு நான் கல்யாணத்தன்னைக்கு வந்து பார்த்திக்கிடுதேன்.
இங்காரு சித்தி இனிமே எதுக்காச்சும் என்னைய கூப்பிட்ட, பார்த்துக்க" பொங்கிவிட்டான் பாண்டி.
"என் ராசா, நீ மட்டும் இல்லாட்டி இந்த விசயம் இம்புட்டு சுளுவா முடிஞ்சுருக்குமா? ஏன்டா பாண்டி இம்புட்டுக் கோவப்படுற? இந்தக் கண்ணாலம் மட்டும் நல்லபடியா முடியட்டும். உன்னைத் திருப்பதிக்கு கூட்டிப் போய் முடியிறக்கறதா நான் அந்த ஏழுமலையானுக்கு நேர்ந்துக்கிடலாமென்டு இருக்கேன்" என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுந்தரவடிவு.
"ஆக ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் என் முடியிலதேன் கண்ணு. நீ என்னத்த வேண்டிக்கிறது? இந்தக் கல்யாணம் முடிஞ்சும் என் மண்டையில முடி இருந்தா நானே திருப்பதிக்குப் போய் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா? இப்ப திருப்தியா ரெண்டு பேருக்கும்?" படபடவென பாண்டி பொரிந்து கொண்டிருக்கும் பொழுதே பிரபாவின் அலைப்பேசி மறுபடியும் அதே பாடலைப் பாடியது.
இம்முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான் பிரபாகரன். முகில் தான் அழைத்திருந்தான். முகில் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் அக்கா தம்பி இருவரும் உறங்குவது மட்டும் ஒரே அறையில் தான்.
கீழே உள்ள அறைகளில் ஒன்று கோதையம்மாள் பயன்படுத்துவது. மற்றொன்று விருந்தினருக்கானது. மாடியில் குமரப்பன் - லலிதா தம்பதியினர் ஒரு அறையிலும், மீனாவுக்கும் முகிலுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அறைகளும் இருந்தன. இது போக விருந்தினருக்காக இங்கொரு அறையும் இருந்தது.
தம்பி ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து ஒரு வாரக் கதையும் ஒட்டு மொத்தமாக பேசித் தீர்ப்பதற்காக இருவரும் எதாவது ஒரு அறையில் ஒன்றாகக் கதை பேசியபடித் தூங்குவது வழக்கம். இன்றும் அவ்வாறு தூங்கியிருக்க அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு மீனா தம்பியை எழுப்பினாள்.
"முகில், டேய் முகில்... எந்திரி கண்ணு"
"இப்ப எதுக்குங்க்கா உசுப்பி விடுறீங்க். தூக்கம் வருதுங்க்கா."
"இல்ல கண்ணு அவியெல்லாம் மதுரைக்குப் பத்திரமா போயிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஒரு போன் போட்டுக் கேளு சாமி."
"வரத் தெரிஞ்சவங்களுக்குப் போகத் தெரியாதுங்களாக்கும். அதெல்லாம் அவங்க பத்திரமா போயிருப்பாங்க. நீங்க பேசாம போய் தூங்குங்கக்கா. எனக்குத் தூக்கம் வருதுங்க்கா" தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்ட பொழுதிலும் தமக்கையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான் முகிலன்.
"என் கண்ணு இல்ல, என் தங்கம் இல்ல. ஒருக்கா அக்காவுக்காக கேளு சாமி" மீனாவும் விடுவதாக இல்லை.
நன்றாகத் திரும்பி அவள் முகம் தெரியும் வகையில் படுத்துக் கொண்டவன், "சரி கேட்டுச் சொன்னா எனக்கு என்னங்க்கா கிடைக்கும்" கட்டிலுக்கு அருகில் டென்ஷனுடன் நின்றிருக்கும் தமக்கையிடம் அழகாக டீல் பேசினான் இளையவன்.
"நீ அடுத்த வாரம் வரும் போது அக்காவுக்கு சேலரி கொடுத்திருப்பாங்கல்ல அதை முழுசா உனக்கே தந்திடுறேன் தங்கம். இப்ப போன் பண்ணு சாமி"
"ஹைய! இனி யாருக்கு வேணும் அந்த ஐயாயிரம் ரூபாய். இனி இந்த சில்லறைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற. என்ர மச்சான் பெரிய ஆளாக்கும். கப்பல்ல பல நாட்டுக்குப் போய் வாரவங்க. அதால என்ர மச்சான் போற ஊருலயிருந்தெல்லாம் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வருவாராக்கும். வேற எதாவது பெட்டர் டீல் இருந்தா சொல்லுங்க்கா. இல்ல என்னைய தூங்க விடுங்க" விடாமல் சீண்டிக் கொண்டிருந்தான் சின்னவன்.
இப்பொழுது என்ன சொல்லி முகிலை வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் "முகிலு" என்று பாவமாக அழைத்தாள் மீனலோசினி.
அதற்கு மேலும் அவளைக் கெஞ்ச விடாமல் சிரித்தபடியே, "க்கா என்ர போன்ல மச்சான் நம்பர் இருக்குதுங்க். மச்சான்னு போட்டே ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன். நீங்களே கூப்பிட்டுக் கேளுங்க்கா" என்றான்.
"ஐயோ நானெல்லாம் பேச முடியாது முகிலு. அம்மாவுக்கும் அம்மத்தாவுக்கும் தெரிஞ்சுது அவ்வளவு தான். கொஞ்சம் நீயே கேட்டு சொல்லேன். ப்ளீஸ் என் செல்ல முகில் இல்ல."
"நானும் பார்க்கத்தானே போறேன், நீங்க போனும் கையுமா சுத்தப் போறதையெல்லாம்" என்று கூறியபடியே அவனுடைய அலைப்பேசியை எடுக்க,
ஐயோ அவனுடைய அலைப்பேசியில் இருந்து அழைத்தால் நமக்கு எப்படி அவங்க நம்பர் தெரியிறது என்று மனதுக்குள் அலறியவளாக, கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,
"முகில் இதுல இருந்து கால் பண்றியா?" என்று கூறியபடியே தன்னுடைய அலைப்பேசியை எடுத்து நீட்டினாள் மீனா.
"இப்ப மட்டும் அம்மாவும் அம்மத்தாவும் திட்ட மாட்டாங்களாக்கும். நம்பர் எக்ஸ்சேஞ்சுக்கு நல்ல நேரம் பார்த்தீங்க்கா" என்று கூறிச் சிரித்தபடியே அவளுடைய அலைப்பேசியிலிருந்தே பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
"மச்சான் நான் முகில் பேசுறேனுங்க."
"சொல்லு முகில். நம்பர் புதுசா வரவும் முதல் தடவை கட் பண்ணிட்டேன். நீ எங்கிட்ட வேற நம்பர் கொடுத்திருந்தியா, அதான் தெரியலை."
"நான் கொடுத்தது தாங்க மச்சான் என்ர நம்பரு. இங்க ஒருத்தவங்களுக்கு நீங்க பத்திரமா மதுரைக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சுக்கணுமாமா. அதுக்குத் தானுங்க நல்லா தூங்கிட்டு இருந்தவனை உசுப்பி விட்டு கேட்கச் சொல்றாங்க.
இதுல போன் பண்றது வேற அவிய போன்ல இருந்து பண்ணனுமாம். ஏனுங்க மச்சான் நீங்களே இந்த நாயத்தைக் கேளுங்க. இப்படி என்னை உசுப்பி விட்டு அவங்க போன்ல பேசச் சொல்றதுக்குப் பதிலா அவங்களே உங்கிட்ட பேசி இருக்கலாம் இல்லீங்" என்று முகில் பேசிக் கொண்டே போக தொப் தொப்பென்று முகில் அடி வாங்கும் சத்தம் இங்கு பிரபா வரைக் கேட்டது.
ஹா...ஹாவென்று பெருங் குரலெடுத்துச் சிரித்தான் பிரபாகரன். "ஐயோ மச்சான் என்ர காது போச்சுங்க். இவ்வளவு சத்தமாவா சிரிப்பீங்க்? அக்கம் பக்கம் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் பாவமுங்க மச்சான்" இப்பொழுது பிரபாவையும் கலாய்க்கத் தொடங்கி இருந்தான் முகில்.
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாண்டியை அருகில் இழுத்து அவன் தோளில் கையைப் போட்டவாறே, "அவனுக எல்லாம் தூங்குனா என்ன? தூங்காட்டி எனக்கென்ன? நான் சிரிக்கிறது உன் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் கேட்கணுமில்ல. அதான் இந்தச் சத்தம். நாங்க பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோமுன்னு அவங்க கிட்ட சொல்லிடு முகில்" என்றான் மச்சான்.
"சாடிக்கேத்த மூடிங்க மச்சான். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னு வைங்க நான் தூங்கின மாதிரிதான். அதனால நீங்களே உங்க வாயால நீங்க பத்திரமா ஊருக்குப் போய்ட்ட விவரத்தை என்ர அக்கா கிட்ட சொல்லிடுங்க் மச்சான். குட் நைட்" என்று கூறியவாறே அலைப்பேசியை மீனாவிடம் நீட்டினான் முகில்.
நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது பிரபா குடும்பத்தினர் மதுரை வந்து சேர்வதற்கு. தூக்கத்தில் ஆளுக்கொருப் பக்கமாக சாமியாடிக் கொண்டிருந்தத் தங்களதுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மூன்று தமக்கைகளும் தத்தமது இல்லங்களை நோக்கி நகர,
"புள்ளைகளுக்குப் பாலைக் கொடுத்து தூங்க வைங்கத்தா" என்று சொல்லியபடியே சுந்தரவடிவும், பாண்டியும் பிரபாவுடன் நின்றிருந்தனர். பிரபா வேன் டிரைவருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
"அண்ணே உங்க வீடு எங்கிட்டுண்ணே. ரொம்பத் தொலைவென்டா இங்கனயே ரவைக்குத் தூங்கி எந்திரிச்சு காலையில கிளம்புங்கண்ணே" பணத்தைக் கொடுத்ததோடு வேலை முடிந்தது என்றில்லாமல் அவரின் நலனிலும் அக்கறைக் கொண்டு விசாரித்தான் பிரபா.
"பரவால்ல தம்பி. நம்ம வூடு இங்கப் பக்கத்துலதேன். நான் போயிக்கிடுதேன். கண்ணாலத்துக்கும் நம்மகிட்டயே வண்டி எடுத்துக்கிடுங்க தம்பி" என்று அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு அவர் கிளம்பவும் பிரபாவின் அலைப்பேசி 'சொக்குப் பொடி மீனாட்சி' என்று அலறவும் சரியாக இருந்தது.
"ஏன் சித்தி நேத்து ம்ஹூம் இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாமென்டு சொல்லிக்கிட்டு ஒரு பய திரிஞ்சானே அவன நீ எங்கிட்டாச்சும் பார்த்த?" என்று பாண்டி நக்கலடிக்க,
"நானும் அவனத்தேன் பாண்டி தேடுறேன். பய சாயங்காலத்துலயிருந்து கண்ணுலயே அம்புட மாட்டேங்குறான்" என்று கூறி சுந்தரவடிவும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்.
தெரியாத நம்பராக இருக்கவும் செல்லை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனாக, "ம்மா நீயுமாம்மா? அவெங்கூட எல்லாம் சேராதம்மா" என்று சுந்தரவடிவின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சலுகையாகப் பிரபா கூற,
"ஏன்டா பேச மாட்ட. பொண்ணு பார்க்க இங்கேயிருந்து அம்புட்டுப் பேரையும் கிளப்புறதுக்கே என் தலை முடியில பாதி போயிடுச்சு. எதையுங் கண்டும் காணாம சுத்திக்கிட்டு இருந்துப்புட்டு, ஒத்த பாட்டுல சோலிய முடிச்சுட்டியே" தன் ஆதங்கத்தைப் பாண்டி கொட்டித் தீர்க்க,
"உனக்குத்தேன் கல்யாணம் முடிஞ்சுடுச்சே மாப்பி. மூணு புள்ளைகளும் ஆகப் போவுது. இதுக்கு மேல உன் தலையில முடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன?" என்று அசால்ட்டாகக் கூறினான் பிரபா.
"ஹேய் ஹேஹேய்... இது நல்ல கதையா இருக்கே. கல்யாணம் முடிஞ்சுட்டா ஒருத்தனுக்கு முடி இருக்கக் கூடாதா? நல்லா வந்து வாச்சீங்கடா எனக்குன்னு. இனி நீயாச்சு உன் மாமனுங்களாச்சு.
நீ அவெங்க கையைப் புடிப்பியோ, கால்ல விழுவியோ? நீயே உன் கல்யாணத்தை நடத்திக்க. உன் மண்டையில முடி இருக்கா இல்லையான்டு நான் கல்யாணத்தன்னைக்கு வந்து பார்த்திக்கிடுதேன்.
இங்காரு சித்தி இனிமே எதுக்காச்சும் என்னைய கூப்பிட்ட, பார்த்துக்க" பொங்கிவிட்டான் பாண்டி.
"என் ராசா, நீ மட்டும் இல்லாட்டி இந்த விசயம் இம்புட்டு சுளுவா முடிஞ்சுருக்குமா? ஏன்டா பாண்டி இம்புட்டுக் கோவப்படுற? இந்தக் கண்ணாலம் மட்டும் நல்லபடியா முடியட்டும். உன்னைத் திருப்பதிக்கு கூட்டிப் போய் முடியிறக்கறதா நான் அந்த ஏழுமலையானுக்கு நேர்ந்துக்கிடலாமென்டு இருக்கேன்" என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுந்தரவடிவு.
"ஆக ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் என் முடியிலதேன் கண்ணு. நீ என்னத்த வேண்டிக்கிறது? இந்தக் கல்யாணம் முடிஞ்சும் என் மண்டையில முடி இருந்தா நானே திருப்பதிக்குப் போய் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா? இப்ப திருப்தியா ரெண்டு பேருக்கும்?" படபடவென பாண்டி பொரிந்து கொண்டிருக்கும் பொழுதே பிரபாவின் அலைப்பேசி மறுபடியும் அதே பாடலைப் பாடியது.
இம்முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான் பிரபாகரன். முகில் தான் அழைத்திருந்தான். முகில் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் அக்கா தம்பி இருவரும் உறங்குவது மட்டும் ஒரே அறையில் தான்.
கீழே உள்ள அறைகளில் ஒன்று கோதையம்மாள் பயன்படுத்துவது. மற்றொன்று விருந்தினருக்கானது. மாடியில் குமரப்பன் - லலிதா தம்பதியினர் ஒரு அறையிலும், மீனாவுக்கும் முகிலுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அறைகளும் இருந்தன. இது போக விருந்தினருக்காக இங்கொரு அறையும் இருந்தது.
தம்பி ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து ஒரு வாரக் கதையும் ஒட்டு மொத்தமாக பேசித் தீர்ப்பதற்காக இருவரும் எதாவது ஒரு அறையில் ஒன்றாகக் கதை பேசியபடித் தூங்குவது வழக்கம். இன்றும் அவ்வாறு தூங்கியிருக்க அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு மீனா தம்பியை எழுப்பினாள்.
"முகில், டேய் முகில்... எந்திரி கண்ணு"
"இப்ப எதுக்குங்க்கா உசுப்பி விடுறீங்க். தூக்கம் வருதுங்க்கா."
"இல்ல கண்ணு அவியெல்லாம் மதுரைக்குப் பத்திரமா போயிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஒரு போன் போட்டுக் கேளு சாமி."
"வரத் தெரிஞ்சவங்களுக்குப் போகத் தெரியாதுங்களாக்கும். அதெல்லாம் அவங்க பத்திரமா போயிருப்பாங்க. நீங்க பேசாம போய் தூங்குங்கக்கா. எனக்குத் தூக்கம் வருதுங்க்கா" தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்ட பொழுதிலும் தமக்கையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான் முகிலன்.
"என் கண்ணு இல்ல, என் தங்கம் இல்ல. ஒருக்கா அக்காவுக்காக கேளு சாமி" மீனாவும் விடுவதாக இல்லை.
நன்றாகத் திரும்பி அவள் முகம் தெரியும் வகையில் படுத்துக் கொண்டவன், "சரி கேட்டுச் சொன்னா எனக்கு என்னங்க்கா கிடைக்கும்" கட்டிலுக்கு அருகில் டென்ஷனுடன் நின்றிருக்கும் தமக்கையிடம் அழகாக டீல் பேசினான் இளையவன்.
"நீ அடுத்த வாரம் வரும் போது அக்காவுக்கு சேலரி கொடுத்திருப்பாங்கல்ல அதை முழுசா உனக்கே தந்திடுறேன் தங்கம். இப்ப போன் பண்ணு சாமி"
"ஹைய! இனி யாருக்கு வேணும் அந்த ஐயாயிரம் ரூபாய். இனி இந்த சில்லறைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற. என்ர மச்சான் பெரிய ஆளாக்கும். கப்பல்ல பல நாட்டுக்குப் போய் வாரவங்க. அதால என்ர மச்சான் போற ஊருலயிருந்தெல்லாம் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வருவாராக்கும். வேற எதாவது பெட்டர் டீல் இருந்தா சொல்லுங்க்கா. இல்ல என்னைய தூங்க விடுங்க" விடாமல் சீண்டிக் கொண்டிருந்தான் சின்னவன்.
இப்பொழுது என்ன சொல்லி முகிலை வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் "முகிலு" என்று பாவமாக அழைத்தாள் மீனலோசினி.
அதற்கு மேலும் அவளைக் கெஞ்ச விடாமல் சிரித்தபடியே, "க்கா என்ர போன்ல மச்சான் நம்பர் இருக்குதுங்க். மச்சான்னு போட்டே ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன். நீங்களே கூப்பிட்டுக் கேளுங்க்கா" என்றான்.
"ஐயோ நானெல்லாம் பேச முடியாது முகிலு. அம்மாவுக்கும் அம்மத்தாவுக்கும் தெரிஞ்சுது அவ்வளவு தான். கொஞ்சம் நீயே கேட்டு சொல்லேன். ப்ளீஸ் என் செல்ல முகில் இல்ல."
"நானும் பார்க்கத்தானே போறேன், நீங்க போனும் கையுமா சுத்தப் போறதையெல்லாம்" என்று கூறியபடியே அவனுடைய அலைப்பேசியை எடுக்க,
ஐயோ அவனுடைய அலைப்பேசியில் இருந்து அழைத்தால் நமக்கு எப்படி அவங்க நம்பர் தெரியிறது என்று மனதுக்குள் அலறியவளாக, கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,
"முகில் இதுல இருந்து கால் பண்றியா?" என்று கூறியபடியே தன்னுடைய அலைப்பேசியை எடுத்து நீட்டினாள் மீனா.
"இப்ப மட்டும் அம்மாவும் அம்மத்தாவும் திட்ட மாட்டாங்களாக்கும். நம்பர் எக்ஸ்சேஞ்சுக்கு நல்ல நேரம் பார்த்தீங்க்கா" என்று கூறிச் சிரித்தபடியே அவளுடைய அலைப்பேசியிலிருந்தே பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
"மச்சான் நான் முகில் பேசுறேனுங்க."
"சொல்லு முகில். நம்பர் புதுசா வரவும் முதல் தடவை கட் பண்ணிட்டேன். நீ எங்கிட்ட வேற நம்பர் கொடுத்திருந்தியா, அதான் தெரியலை."
"நான் கொடுத்தது தாங்க மச்சான் என்ர நம்பரு. இங்க ஒருத்தவங்களுக்கு நீங்க பத்திரமா மதுரைக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சுக்கணுமாமா. அதுக்குத் தானுங்க நல்லா தூங்கிட்டு இருந்தவனை உசுப்பி விட்டு கேட்கச் சொல்றாங்க.
இதுல போன் பண்றது வேற அவிய போன்ல இருந்து பண்ணனுமாம். ஏனுங்க மச்சான் நீங்களே இந்த நாயத்தைக் கேளுங்க. இப்படி என்னை உசுப்பி விட்டு அவங்க போன்ல பேசச் சொல்றதுக்குப் பதிலா அவங்களே உங்கிட்ட பேசி இருக்கலாம் இல்லீங்" என்று முகில் பேசிக் கொண்டே போக தொப் தொப்பென்று முகில் அடி வாங்கும் சத்தம் இங்கு பிரபா வரைக் கேட்டது.
ஹா...ஹாவென்று பெருங் குரலெடுத்துச் சிரித்தான் பிரபாகரன். "ஐயோ மச்சான் என்ர காது போச்சுங்க். இவ்வளவு சத்தமாவா சிரிப்பீங்க்? அக்கம் பக்கம் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் பாவமுங்க மச்சான்" இப்பொழுது பிரபாவையும் கலாய்க்கத் தொடங்கி இருந்தான் முகில்.
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாண்டியை அருகில் இழுத்து அவன் தோளில் கையைப் போட்டவாறே, "அவனுக எல்லாம் தூங்குனா என்ன? தூங்காட்டி எனக்கென்ன? நான் சிரிக்கிறது உன் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் கேட்கணுமில்ல. அதான் இந்தச் சத்தம். நாங்க பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோமுன்னு அவங்க கிட்ட சொல்லிடு முகில்" என்றான் மச்சான்.
"சாடிக்கேத்த மூடிங்க மச்சான். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னு வைங்க நான் தூங்கின மாதிரிதான். அதனால நீங்களே உங்க வாயால நீங்க பத்திரமா ஊருக்குப் போய்ட்ட விவரத்தை என்ர அக்கா கிட்ட சொல்லிடுங்க் மச்சான். குட் நைட்" என்று கூறியவாறே அலைப்பேசியை மீனாவிடம் நீட்டினான் முகில்.