சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி - 4
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. கௌதம் இங்கிருந்தே தன் அலுவல் வேலைகளை கவனித்துக்கொள்ள, ராகேஷோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல ஊரைச்சுற்றுவதிலேயே பொழுதை கழித்தான்.
மற்ற நேரமாய் இருந்தால் கௌதமிடம் வண்டி வண்டியாய் வசவுகள் வாங்கியிருப்பான்தான்! ஆனால் இப்போது அதை செய்ய இயலா நிலையில் கௌதமால் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பதான் முடிந்தது.
ஒரு நேரம் கலையரசனுடன் என்றால், இன்னொரு நேரம் நம் கொரில்லா கேங்குடன் கழிந்தது. ஆம் இப்போது அவனும் கொரில்லா கேங்கில் அடக்கம். ஆனால் அதில் சேர்வதற்க்குள் பல வீரதீர சாகசங்களை செய்ய வேண்டியதாய் போயிற்று.
அதாவது அவர்களுடன் சேர்ந்து ஓணான் பிடிப்பது, மாங்காய் அடிப்பது, வீட்டிற்குள் கௌதம் குளிக்க சென்றால் அவன் வருவதற்குள் உடுத்த வைத்திருக்கும் உடையில் எதாவது குளறுபடி செய்வது, குளிக்கும் போது தண்ணீரை அடைப்பது இது போன்ற சிலபல நல்ல செயல்கள்.
இவர்கள் செய்யும் கலாட்டாவில் மாட்டிக்கொள்வது என்னவோ நாச்சியார்தான். "அம்மாடி கௌதம் ரூம்ல தண்ணி அடைச்சுகிச்சு போல இந்த வாளிதண்ணிய கொண்டு போய் வச்சிடுடா" என தன் பாட்டி கூறும் போது, சரியென தலையாட்டிவிட்டு எடுத்து செல்வாள்.
அவருக்கு தெரியும் விருந்தாளிகளை உபசரிப்பதில் குறும்புதனத்தை கைவிட்டு பொறுப்பாய் நடந்துகொள்வாள் என்று. ஆனால் இன்னொன்று அவருக்கு தெரியாதே அவர் இந்த பக்கம் சென்றதும் அவள் கண்களில் தோன்றும் கள்ள புன்னகை.
கௌதமிற்கு என்றால் அவள் எதுவும் செய்யகூடியவள். எங்கு எப்படி ஆரம்பித்தது என்றால் அது அவளுக்கே தெரியாது.
ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அவளுக்கு பிடித்தம்தான்,அதீத பிடித்தம். சிறு வயதில் சீண்டி விளையாடிய ஞாபகம், அஞ்சுகத்தின் மூலம் கேள்விபட்ட அவன் ஆளுமைகள், தன் பாட்டியின் மேல் அவன் கொண்ட பாசம் அனைத்தும் கலந்துகட்டி அவளுள் விதைத்த நேசம் இது.
ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டாள். அதற்கு வெட்கம் காரணமல்ல, பிடித்தத்தை அவனே முதலில் கூற வேண்டும் என்ற அவா.
நீ என்ன பெரிய அழகியா! பார்த்தவுடன் அவனும் உன்னை விரும்புவான் என்று எதிர்பார்க்கிறாயோ? என்று எதிர் கேள்விகேட்ட மனசாட்சியை சுடுநீர் ஊற்றி அடக்கியவள், அது அவனது விருப்பம் என் பிடித்தம் என்னோடே! யாருக்கும் தெரிய வேண்டாம். நடப்பது நடக்கட்டும்.
பார்க்காத போதுதான் அப்படியென்றால், இப்போது நேரில் இருக்கும் போதோ! பேச்சு வார்த்தைகள் அவ்வளவாக இருப்பதில்லை, பல நேரங்களில் மௌனத்திலேயே கடந்துவிடும். இதுவும் ஒரு வகை நேசமே, மனதினில் இருத்தி நினைப்பில் வாழ்வது.
அனைவரிடமும் படபட பட்டாசாக பொரிபவள் இவனை கண்டால் மட்டும் புஸ்வானமாக அடங்கிவிடுவாள். அவ்வப்போது அவன் பார்த்து வைக்கும் பார்வையில் மூச்சுக்காற்றுக்கே சிரமம் எனும் போது பேச்சு எங்கிருந்து வரும்? திட்டி பார்த்த மனசாட்சி இது திருந்தாது! என்று அடங்கிவிட இவளது கள்ள சைட்டுகள் தாராளமாக நடைபெற்றது.
இவள் இப்படியென்றால் கௌதமின் நிலை வேறு! இவளை பற்றிய சிறுவயது ஞாபகங்கள் இன்றளவும் உண்டு.
ஏனோ! எந்நேரமும் தன்னிடம் வம்பிழுக்கும் பொசுபொசுவென்று இருக்கும் அந்த குட்டி பெண்ணை அவனால் மறக்க இயலவில்லை. இங்கே வரும்போதே இப்போது எப்படி இருப்பாள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆனால் எப்போது அவளை பார்த்தானோ, மாலை நேர கதிரவனின் இளமஞ்சள் நிற ஒளியை போன்ற நிறத்தில், ஐந்தரை அடி உயரத்தில், கொடியிடையுடன் தாவணி பாவாடையில் பாந்தமாக இருந்தவளை கண்டு அவளா இவள்? என்னும் பாவனைதான்.
என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் வசியம் வைத்தது போல கண்களை அவளிடம் இருந்து திருப்ப முடியவில்லை.
கண்களில் காந்தம்தான் வைத்திருக்கிறாளோ? விழிகள் கொஞ்சம் வித்தியாசம்தான் அவளுக்கு. "செங்கண்" என்பார்களே அதுபோல. அதன் உள் புகுந்து விடலாமா? என்று கூட யோசித்தான்.
"ச்சே என்ன இது இப்படி எல்லாம் யோசிக்கிறேன், ம்ஹும் என்னவோ செய்கிறாள் அவளை பார்க்காதே" என்று எச்சரித்தாலும் பார்த்தே ஆவேன் என்னும் கண்களை திரையிட்டு மறைக்கவா முடியும் அதன் போக்கில் விட்டுவிட்டான்.
அடுத்தநாள் அவள் அடித்த லூட்டிகளை பார்த்தவன் இன்னும் மீளமுடியா சுழலுக்குள் அவள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்தான். அவள் மாறவில்லை. இன்னும் சுவாரசியமாய் விரும்பியே தொலையவும் செய்தான்.
கௌதம் ப்ரபாகர் அழகிய கந்தர்வனை போல தோற்றம். பரந்து விரிந்த " ஏ. கே. பி" நிறுவனத்தின் ஒரே வாரிசு. இப்போது அதன் ஒரே உரிமையான அதிபதியும் கூட,
அதனால் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இளம் பெண்களின் கண்களும், அதைவிட "இவன் நம் மாப்பிள்ளையாக வந்தால்? " என்று பெண்ணை பெற்றவர்களின் கண்களும் இவனை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டும் காணாமல் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். அதில் சிறு கர்வம் கூட.
அதற்காக பெண் தோழிகள் இல்லாமல் இல்லை அமெரிக்காவில் படித்த போது பழக்கமானவள் " ஸ்டெல்லா" அமெரிக்க, இந்திய கலவை. ஆனால் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் கொண்ட தோற்றம். இன்னும் இணைப்பில் இருக்கும் நல்ல தோழிப்பெண்.
ஆனால் நாச்சியாரின் பார்வையோ இவனை ஆர்வமாய் தீண்டியதில்லை (அவனறிந்தவரை) தானாக அவளிடம் செல்ல வேண்டுமா என்ற ஈகோ, எனவேதான் விருப்பம் இருந்தாலும் நானாக கூற கூடாது என்ற எண்ணம். இப்படி இருவரும் போட்டி போட, சொல்லாத காதல் சேராது என்று அறியாமல் போனது யார் குற்றம்?
நாங்கலாம் அப்பவே அப்படி - 4
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. கௌதம் இங்கிருந்தே தன் அலுவல் வேலைகளை கவனித்துக்கொள்ள, ராகேஷோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல ஊரைச்சுற்றுவதிலேயே பொழுதை கழித்தான்.
மற்ற நேரமாய் இருந்தால் கௌதமிடம் வண்டி வண்டியாய் வசவுகள் வாங்கியிருப்பான்தான்! ஆனால் இப்போது அதை செய்ய இயலா நிலையில் கௌதமால் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பதான் முடிந்தது.
ஒரு நேரம் கலையரசனுடன் என்றால், இன்னொரு நேரம் நம் கொரில்லா கேங்குடன் கழிந்தது. ஆம் இப்போது அவனும் கொரில்லா கேங்கில் அடக்கம். ஆனால் அதில் சேர்வதற்க்குள் பல வீரதீர சாகசங்களை செய்ய வேண்டியதாய் போயிற்று.
அதாவது அவர்களுடன் சேர்ந்து ஓணான் பிடிப்பது, மாங்காய் அடிப்பது, வீட்டிற்குள் கௌதம் குளிக்க சென்றால் அவன் வருவதற்குள் உடுத்த வைத்திருக்கும் உடையில் எதாவது குளறுபடி செய்வது, குளிக்கும் போது தண்ணீரை அடைப்பது இது போன்ற சிலபல நல்ல செயல்கள்.
இவர்கள் செய்யும் கலாட்டாவில் மாட்டிக்கொள்வது என்னவோ நாச்சியார்தான். "அம்மாடி கௌதம் ரூம்ல தண்ணி அடைச்சுகிச்சு போல இந்த வாளிதண்ணிய கொண்டு போய் வச்சிடுடா" என தன் பாட்டி கூறும் போது, சரியென தலையாட்டிவிட்டு எடுத்து செல்வாள்.
அவருக்கு தெரியும் விருந்தாளிகளை உபசரிப்பதில் குறும்புதனத்தை கைவிட்டு பொறுப்பாய் நடந்துகொள்வாள் என்று. ஆனால் இன்னொன்று அவருக்கு தெரியாதே அவர் இந்த பக்கம் சென்றதும் அவள் கண்களில் தோன்றும் கள்ள புன்னகை.
கௌதமிற்கு என்றால் அவள் எதுவும் செய்யகூடியவள். எங்கு எப்படி ஆரம்பித்தது என்றால் அது அவளுக்கே தெரியாது.
ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அவளுக்கு பிடித்தம்தான்,அதீத பிடித்தம். சிறு வயதில் சீண்டி விளையாடிய ஞாபகம், அஞ்சுகத்தின் மூலம் கேள்விபட்ட அவன் ஆளுமைகள், தன் பாட்டியின் மேல் அவன் கொண்ட பாசம் அனைத்தும் கலந்துகட்டி அவளுள் விதைத்த நேசம் இது.
ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டாள். அதற்கு வெட்கம் காரணமல்ல, பிடித்தத்தை அவனே முதலில் கூற வேண்டும் என்ற அவா.
நீ என்ன பெரிய அழகியா! பார்த்தவுடன் அவனும் உன்னை விரும்புவான் என்று எதிர்பார்க்கிறாயோ? என்று எதிர் கேள்விகேட்ட மனசாட்சியை சுடுநீர் ஊற்றி அடக்கியவள், அது அவனது விருப்பம் என் பிடித்தம் என்னோடே! யாருக்கும் தெரிய வேண்டாம். நடப்பது நடக்கட்டும்.
பார்க்காத போதுதான் அப்படியென்றால், இப்போது நேரில் இருக்கும் போதோ! பேச்சு வார்த்தைகள் அவ்வளவாக இருப்பதில்லை, பல நேரங்களில் மௌனத்திலேயே கடந்துவிடும். இதுவும் ஒரு வகை நேசமே, மனதினில் இருத்தி நினைப்பில் வாழ்வது.
அனைவரிடமும் படபட பட்டாசாக பொரிபவள் இவனை கண்டால் மட்டும் புஸ்வானமாக அடங்கிவிடுவாள். அவ்வப்போது அவன் பார்த்து வைக்கும் பார்வையில் மூச்சுக்காற்றுக்கே சிரமம் எனும் போது பேச்சு எங்கிருந்து வரும்? திட்டி பார்த்த மனசாட்சி இது திருந்தாது! என்று அடங்கிவிட இவளது கள்ள சைட்டுகள் தாராளமாக நடைபெற்றது.
இவள் இப்படியென்றால் கௌதமின் நிலை வேறு! இவளை பற்றிய சிறுவயது ஞாபகங்கள் இன்றளவும் உண்டு.
ஏனோ! எந்நேரமும் தன்னிடம் வம்பிழுக்கும் பொசுபொசுவென்று இருக்கும் அந்த குட்டி பெண்ணை அவனால் மறக்க இயலவில்லை. இங்கே வரும்போதே இப்போது எப்படி இருப்பாள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆனால் எப்போது அவளை பார்த்தானோ, மாலை நேர கதிரவனின் இளமஞ்சள் நிற ஒளியை போன்ற நிறத்தில், ஐந்தரை அடி உயரத்தில், கொடியிடையுடன் தாவணி பாவாடையில் பாந்தமாக இருந்தவளை கண்டு அவளா இவள்? என்னும் பாவனைதான்.
என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் வசியம் வைத்தது போல கண்களை அவளிடம் இருந்து திருப்ப முடியவில்லை.
கண்களில் காந்தம்தான் வைத்திருக்கிறாளோ? விழிகள் கொஞ்சம் வித்தியாசம்தான் அவளுக்கு. "செங்கண்" என்பார்களே அதுபோல. அதன் உள் புகுந்து விடலாமா? என்று கூட யோசித்தான்.
"ச்சே என்ன இது இப்படி எல்லாம் யோசிக்கிறேன், ம்ஹும் என்னவோ செய்கிறாள் அவளை பார்க்காதே" என்று எச்சரித்தாலும் பார்த்தே ஆவேன் என்னும் கண்களை திரையிட்டு மறைக்கவா முடியும் அதன் போக்கில் விட்டுவிட்டான்.
அடுத்தநாள் அவள் அடித்த லூட்டிகளை பார்த்தவன் இன்னும் மீளமுடியா சுழலுக்குள் அவள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்தான். அவள் மாறவில்லை. இன்னும் சுவாரசியமாய் விரும்பியே தொலையவும் செய்தான்.
கௌதம் ப்ரபாகர் அழகிய கந்தர்வனை போல தோற்றம். பரந்து விரிந்த " ஏ. கே. பி" நிறுவனத்தின் ஒரே வாரிசு. இப்போது அதன் ஒரே உரிமையான அதிபதியும் கூட,
அதனால் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இளம் பெண்களின் கண்களும், அதைவிட "இவன் நம் மாப்பிள்ளையாக வந்தால்? " என்று பெண்ணை பெற்றவர்களின் கண்களும் இவனை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டும் காணாமல் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். அதில் சிறு கர்வம் கூட.
அதற்காக பெண் தோழிகள் இல்லாமல் இல்லை அமெரிக்காவில் படித்த போது பழக்கமானவள் " ஸ்டெல்லா" அமெரிக்க, இந்திய கலவை. ஆனால் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் கொண்ட தோற்றம். இன்னும் இணைப்பில் இருக்கும் நல்ல தோழிப்பெண்.
ஆனால் நாச்சியாரின் பார்வையோ இவனை ஆர்வமாய் தீண்டியதில்லை (அவனறிந்தவரை) தானாக அவளிடம் செல்ல வேண்டுமா என்ற ஈகோ, எனவேதான் விருப்பம் இருந்தாலும் நானாக கூற கூடாது என்ற எண்ணம். இப்படி இருவரும் போட்டி போட, சொல்லாத காதல் சேராது என்று அறியாமல் போனது யார் குற்றம்?
Last edited: