ஹாய் டியர்ஸ்...
வெரி வெரி சாரி... லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன் இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. நீங்க எதிர்பார்த்தது போல் ஹீரோவை ஊரின் உள் கொண்டு வந்துட்டாங்க கோட்டையம்மாள்..???
கட்டு – 10
View attachment 2982
அகலெழிலன் இப்பொழுது எல்லாம் அவனது தாத்தா தொழிலை தான் பார்த்துக் கொள்கிறான்... அவனுக்கு அவனின் வாழ்வு எல்லாம் அவன் கண்ணில் வந்துப் போனது..
மீனின் வாழ்வு மிக குறுகியதே... அதே போல் தான் இவனின் வாழ்வும். இதற்கிடையில் அந்த கனவு தேவதையை தான் மனத்தால் கூட எண்ணவே கூடாது என்று எண்ணினான் அவன்....
அதன்படி தான் இப்பொழுது விவசாயத்தை கையில் எடுத்துக் கொண்டான்... அவனின் அம்மாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நல்ல முறையில் முன்னேறி வருகிறான்... அந்த ஊருக்கு எல்லாமே இவர்களின் குடும்பம் தான். நல்லது கெட்டது எது என்றாலும் முன் நிலையில் இருபது அவர்களே...
விண்பா அவன் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவனுக்கு அவளை மறப்பது என்பது முடியாத காரணமாக இருந்தது... அப்போ அப்போ அவளின் முகம் மின்னி மறையும்...
ஏதாவது சிறு குழந்தையை கண்டாலே அவள் நினைவு தான் அவனுக்கு...
கோட்டைத்தாய் அவன் அயராத உழைப்பைக் கண்டு அவளுக்குமே ஆச்சரியம் “ இவனுக்கு விண்பா கொஞ்சமும் நினைவு இல்லையா ” என்று அவனை யோசனையாகப் பார்த்துக் கொண்டாள்...
நாளுக்கு நாள் அவனை கவனித்ததில் தான் அவள் கண்டுக் கொண்டாள் “ இவன் அவளை மறந்துவிட்டான்” என்று.
அது தான் தினமும் சிறுகுழந்தைகளை இவனை நோக்கி அனுப்பி விண்பாவின் நினைவை அவனுக்கு வர செய்து எப்பொழுதும் அவனுக்கு அவளின் நினைப்பை வரசெய்தாள்...
அவனின் காதலையும் கண்டுக் கொண்டாள்... அவளின் வாரிசை காப்பாற்ற அவளுக்கு வேற வழியும் இல்லை... அது தான் அவனின் ஆசையை அவள் நிறைவேற்ற எண்ணினாள்...
அவனின் ஆயுசு நாள்களை அறிந்தும், அந்த நேரம் அவள் முடிவெடுத்தாள்...அவனை விண்பா திருமணம் செய்தால் கண்டிப்பாக பாதியில் வாழ்கையை இழந்து நிற்பாள் என்பதும் அவள் அறிந்ததே... ஆனாலும் விண்பாவின் உயிரை காக்க அவள் மிக பெரிய முடிவை எடுத்தாள்....
அந்த நேரம் அக்ரதா தன் காதலை விண்பாவிடம் எப்படி கூறுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்...
அவனின் யோசனையை கண்ட மகரிஷி சித்தருக்கு பெரும் கோபம்.. “ தன் உடமையை அவன் பறித்துக் கொள்வதாகவே எண்ணினார்,” அந்த எண்ணம் வரவும் அக்ரதா மனதை அடக்கி தன் மனதை வெளிபடுத்த எண்ணினார் அவர்...
இனிமேல் அக்ரதாவை வெளியில் வர வைக்க அவர் எண்ணவே இல்லை என்று விண்பாவை அவர் மனதில் குடிவைத்தாரோ அன்றோ அவர் முடிவெடுத்துவிட்டார்... அவரின் வசதிக்காய் அவன் மனத்தை அவர் கொல்ல முடிவெடுத்தார்....
அதன்படி அவனை, அவன் மனத்தை அடைக்கி அவர் அவன் உடலை ஆள ஆரம்பித்தார்...
அக்ரதா (மகரிஷி ) மெதுவாக எழுந்து அவர் செய்து வைத்திருக்கும் சிலை நோக்கி சென்றார்...
அந்த இடத்துக்கு வரும்பொழுது அவர் முகம் மிகவும் மென்மையாக மாறியது...
அந்த இடம் ஒரு மண்டபம் போல் அமைத்திருந்தார் அவர்... “ தளம் அமைத்து 8 தூண் அமைத்து அந்த தூணில் ஒவ்வொரு சக்தியையும் வைத்தார்...
அதாவது தன்னை மீறி எதுவும் அந்த மண்டபத்தை அணுகாத படி கண்ணுக்கு தெரியாதபடி சில மந்திரங்களை கூறி பாதுகாப்பாக வைத்திருந்தார்...
அந்த சிலையை அவர் மிகவும் ரசித்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கினார்....
அவரின் மனதுக்கு பிடித்தபடி, தினமும் அங்கு கோட்டைநல்லூருக்கு அக்ரதா செல்லும் பொழுது விண்பாவை அவர் மனது அதிகமாக ரசிக்க ஆரம்பித்தது...
முதலில் அவளின் பாதத்தை செதுக்கவே அவர் ஒரு வாரம் எடுத்துக் கொண்டார்... காரணம் அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவள் பாதத்தை அவர் காணவே முடியாது....
அன்று ஒரு நாள் அவள் காலை மடக்கி முட்டில் கைவைத்து அமர்ந்து இருந்தாள் அந்த அருவிக் கரையோரம், அவளுக்கு முன் அமர்ந்திருந்தான் அக்ரதா..
அப்பொழுது அவளின் பாதத்தை நன்கு தன் கண்களை விரித்து, ஸ்கேல் வைத்து அளப்பதை விட அழகாக அளந்து கண்களில் நிறைத்துக் கொண்டார்... அப்படி தான் அவளை அங்குலம் அங்குலமாக அளந்து அவளை அப்படியே சிலையாக வடித்தார்..
அவர் வடிக்கும் பொழுது முகத்தை புன்னகை முகமாக வடித்தார் எப்பொழுதும் அவரை பார்த்து சிரிப்பது போல்...
சிலையை முழுவதுமாக செதுக்கி முடித்த அவர் கடைசியாக கண்களை செதுக்க 1 வருடம் முழுதாக எடுத்துக் கொண்டார்.... என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை,
சரியாக 1 வருடம் கழித்த பிறகு தான் கண்களை செதுக்க எண்ணி சிலை அருகில் வந்து நின்றார்... சிலை நிற்பது போல் இல்லாமல் கிழே அமர்ந்திருப்பதை போல் வடித்தார்...
அவர் அப்படி வடிக்க காரணம் எப்பொழுதும் அதன் அருகில் அமர்ந்துகொண்டும், அதன் மடியில் தலை சாய்த்துக் கொள்வது போல் எப்பொழுதும் அதன் அருகிலையே இருப்பதுப் போல வடித்தார்....
அன்று அவர் கண்களை செதுக்க சிலை அருகில் வந்தார், வந்தவர் அப்படியே அதன் அருகில் அமர்ந்துக் கொண்டார்...
அவருக்கு அந்த சிலையை பார்க்க பார்க்க இப்பொழுதே அந்த சிலைக்கு உயிர் கொடுத்து அதன் கூட எப்பொழுதும் இருக்க ஆசை கொண்டது...
அது தான் இத்தனை நாள் சிலைக்கு கண்ணை செதுக்காமல் இருந்தார்...இன்று அவருக்கு அந்த சிலையை முழுதாக செதுக்க ஆசை வந்துவிட்டது...
அது தான் இன்றே அந்த சிலைக்கு கண்ணை செதுக்க ஆரம்பித்தார் அந்த கண்கள் எப்பொழுதும் அவரை காதலுடன் நோக்கிக் கொண்டிருப்பதுப் போல் வடித்தார்....
அந்த சிலையை பார்க்கும் பொழுது எல்லாம் அவருக்கு விண்பா அவர் அருகில் இருப்பது போலவே தோன்றியது.. அது மட்டும் அவருக்கு போதவில்லை, அவள் தன்னிடம் பேசவேண்டும், அவள் தன்னிடம் உரிமையாக சண்டை இட வேண்டும் என்று இப்படி பலவாறாக எண்ணினார் அவர்...
அக்ரதா உடலில் அவர் இருப்பதால் அவனின் ஆசை எல்லாம் அவர் ஆசையாக மாறியது,
இனி அந்த சிலைக்கு உயிர் கொடுப்பது மட்டுமே பாக்கி, அந்த சிலை உயிர் பெறும் நாளுக்காக காத்திருந்தார் சித்தர். அந்த சிலைக்கு உயிர் கிடைப்பது அக்ரதாவின் கையில் தான் உள்ளது...
வெரி வெரி சாரி... லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன் இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. நீங்க எதிர்பார்த்தது போல் ஹீரோவை ஊரின் உள் கொண்டு வந்துட்டாங்க கோட்டையம்மாள்..???
கட்டு – 10
View attachment 2982
அகலெழிலன் இப்பொழுது எல்லாம் அவனது தாத்தா தொழிலை தான் பார்த்துக் கொள்கிறான்... அவனுக்கு அவனின் வாழ்வு எல்லாம் அவன் கண்ணில் வந்துப் போனது..
மீனின் வாழ்வு மிக குறுகியதே... அதே போல் தான் இவனின் வாழ்வும். இதற்கிடையில் அந்த கனவு தேவதையை தான் மனத்தால் கூட எண்ணவே கூடாது என்று எண்ணினான் அவன்....
அதன்படி தான் இப்பொழுது விவசாயத்தை கையில் எடுத்துக் கொண்டான்... அவனின் அம்மாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நல்ல முறையில் முன்னேறி வருகிறான்... அந்த ஊருக்கு எல்லாமே இவர்களின் குடும்பம் தான். நல்லது கெட்டது எது என்றாலும் முன் நிலையில் இருபது அவர்களே...
விண்பா அவன் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவனுக்கு அவளை மறப்பது என்பது முடியாத காரணமாக இருந்தது... அப்போ அப்போ அவளின் முகம் மின்னி மறையும்...
ஏதாவது சிறு குழந்தையை கண்டாலே அவள் நினைவு தான் அவனுக்கு...
கோட்டைத்தாய் அவன் அயராத உழைப்பைக் கண்டு அவளுக்குமே ஆச்சரியம் “ இவனுக்கு விண்பா கொஞ்சமும் நினைவு இல்லையா ” என்று அவனை யோசனையாகப் பார்த்துக் கொண்டாள்...
நாளுக்கு நாள் அவனை கவனித்ததில் தான் அவள் கண்டுக் கொண்டாள் “ இவன் அவளை மறந்துவிட்டான்” என்று.
அது தான் தினமும் சிறுகுழந்தைகளை இவனை நோக்கி அனுப்பி விண்பாவின் நினைவை அவனுக்கு வர செய்து எப்பொழுதும் அவனுக்கு அவளின் நினைப்பை வரசெய்தாள்...
அவனின் காதலையும் கண்டுக் கொண்டாள்... அவளின் வாரிசை காப்பாற்ற அவளுக்கு வேற வழியும் இல்லை... அது தான் அவனின் ஆசையை அவள் நிறைவேற்ற எண்ணினாள்...
அவனின் ஆயுசு நாள்களை அறிந்தும், அந்த நேரம் அவள் முடிவெடுத்தாள்...அவனை விண்பா திருமணம் செய்தால் கண்டிப்பாக பாதியில் வாழ்கையை இழந்து நிற்பாள் என்பதும் அவள் அறிந்ததே... ஆனாலும் விண்பாவின் உயிரை காக்க அவள் மிக பெரிய முடிவை எடுத்தாள்....
அந்த நேரம் அக்ரதா தன் காதலை விண்பாவிடம் எப்படி கூறுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்...
அவனின் யோசனையை கண்ட மகரிஷி சித்தருக்கு பெரும் கோபம்.. “ தன் உடமையை அவன் பறித்துக் கொள்வதாகவே எண்ணினார்,” அந்த எண்ணம் வரவும் அக்ரதா மனதை அடக்கி தன் மனதை வெளிபடுத்த எண்ணினார் அவர்...
இனிமேல் அக்ரதாவை வெளியில் வர வைக்க அவர் எண்ணவே இல்லை என்று விண்பாவை அவர் மனதில் குடிவைத்தாரோ அன்றோ அவர் முடிவெடுத்துவிட்டார்... அவரின் வசதிக்காய் அவன் மனத்தை அவர் கொல்ல முடிவெடுத்தார்....
அதன்படி அவனை, அவன் மனத்தை அடைக்கி அவர் அவன் உடலை ஆள ஆரம்பித்தார்...
அக்ரதா (மகரிஷி ) மெதுவாக எழுந்து அவர் செய்து வைத்திருக்கும் சிலை நோக்கி சென்றார்...
அந்த இடத்துக்கு வரும்பொழுது அவர் முகம் மிகவும் மென்மையாக மாறியது...
அந்த இடம் ஒரு மண்டபம் போல் அமைத்திருந்தார் அவர்... “ தளம் அமைத்து 8 தூண் அமைத்து அந்த தூணில் ஒவ்வொரு சக்தியையும் வைத்தார்...
அதாவது தன்னை மீறி எதுவும் அந்த மண்டபத்தை அணுகாத படி கண்ணுக்கு தெரியாதபடி சில மந்திரங்களை கூறி பாதுகாப்பாக வைத்திருந்தார்...
அந்த சிலையை அவர் மிகவும் ரசித்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கினார்....
அவரின் மனதுக்கு பிடித்தபடி, தினமும் அங்கு கோட்டைநல்லூருக்கு அக்ரதா செல்லும் பொழுது விண்பாவை அவர் மனது அதிகமாக ரசிக்க ஆரம்பித்தது...
முதலில் அவளின் பாதத்தை செதுக்கவே அவர் ஒரு வாரம் எடுத்துக் கொண்டார்... காரணம் அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவள் பாதத்தை அவர் காணவே முடியாது....
அன்று ஒரு நாள் அவள் காலை மடக்கி முட்டில் கைவைத்து அமர்ந்து இருந்தாள் அந்த அருவிக் கரையோரம், அவளுக்கு முன் அமர்ந்திருந்தான் அக்ரதா..
அப்பொழுது அவளின் பாதத்தை நன்கு தன் கண்களை விரித்து, ஸ்கேல் வைத்து அளப்பதை விட அழகாக அளந்து கண்களில் நிறைத்துக் கொண்டார்... அப்படி தான் அவளை அங்குலம் அங்குலமாக அளந்து அவளை அப்படியே சிலையாக வடித்தார்..
அவர் வடிக்கும் பொழுது முகத்தை புன்னகை முகமாக வடித்தார் எப்பொழுதும் அவரை பார்த்து சிரிப்பது போல்...
சிலையை முழுவதுமாக செதுக்கி முடித்த அவர் கடைசியாக கண்களை செதுக்க 1 வருடம் முழுதாக எடுத்துக் கொண்டார்.... என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை,
சரியாக 1 வருடம் கழித்த பிறகு தான் கண்களை செதுக்க எண்ணி சிலை அருகில் வந்து நின்றார்... சிலை நிற்பது போல் இல்லாமல் கிழே அமர்ந்திருப்பதை போல் வடித்தார்...
அவர் அப்படி வடிக்க காரணம் எப்பொழுதும் அதன் அருகில் அமர்ந்துகொண்டும், அதன் மடியில் தலை சாய்த்துக் கொள்வது போல் எப்பொழுதும் அதன் அருகிலையே இருப்பதுப் போல வடித்தார்....
அன்று அவர் கண்களை செதுக்க சிலை அருகில் வந்தார், வந்தவர் அப்படியே அதன் அருகில் அமர்ந்துக் கொண்டார்...
அவருக்கு அந்த சிலையை பார்க்க பார்க்க இப்பொழுதே அந்த சிலைக்கு உயிர் கொடுத்து அதன் கூட எப்பொழுதும் இருக்க ஆசை கொண்டது...
அது தான் இத்தனை நாள் சிலைக்கு கண்ணை செதுக்காமல் இருந்தார்...இன்று அவருக்கு அந்த சிலையை முழுதாக செதுக்க ஆசை வந்துவிட்டது...
அது தான் இன்றே அந்த சிலைக்கு கண்ணை செதுக்க ஆரம்பித்தார் அந்த கண்கள் எப்பொழுதும் அவரை காதலுடன் நோக்கிக் கொண்டிருப்பதுப் போல் வடித்தார்....
அந்த சிலையை பார்க்கும் பொழுது எல்லாம் அவருக்கு விண்பா அவர் அருகில் இருப்பது போலவே தோன்றியது.. அது மட்டும் அவருக்கு போதவில்லை, அவள் தன்னிடம் பேசவேண்டும், அவள் தன்னிடம் உரிமையாக சண்டை இட வேண்டும் என்று இப்படி பலவாறாக எண்ணினார் அவர்...
அக்ரதா உடலில் அவர் இருப்பதால் அவனின் ஆசை எல்லாம் அவர் ஆசையாக மாறியது,
இனி அந்த சிலைக்கு உயிர் கொடுப்பது மட்டுமே பாக்கி, அந்த சிலை உயிர் பெறும் நாளுக்காக காத்திருந்தார் சித்தர். அந்த சிலைக்கு உயிர் கிடைப்பது அக்ரதாவின் கையில் தான் உள்ளது...