• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - திலகம் இடாத தாய்,அவள்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
குழந்தை நீ கருவிலே உன்
தகப்பன் இங்கே நெருப்பிலே!
காத்திருந்த வசந்த காலமும்
எட்டி கனியாய் ஆனதே!

நெற்றியில் திலகம் இட்டவனும்
நீட்டமாய் படுத்திருக்க...
செய்த தவறு புரியாமல்
மங்கை நானும் கலங்கி நின்னேன்!

சிரிப்பொலியில் நிறைந்த இல்லம்
காலன் வரவால் இருள் சூழ
நிஜம் எல்லாம் கனவென்று ஆகாதோ?
பேதை நான் புலம்பி தள்ள!

சோலை நிறைந்த வாழ்வும்
இன்று பாலைவனம் ஆனதே!
காலை போட்ட கோலம் போல்
கலை இழந்து போனதே!

திருமண பந்தமும் திருட பட்டிருக்க
சுமங்கலி பட்டம் பொய்யாய் போக
மங்கள நாணும் அறுந்து தொங்க
குலுங்கும் வளையலும் உடைந்தெரிய

கூப்பாடு போட்டேனே!
கேட்பார் யாருமில்ல...
கதறி நான் அழுதேனே!
கண்டுகொள்ள ஆளில்ல!

காலன் செய்த வேலையில
வீடும் எனக்கு நரகமானதே!
காதல் செய்த வேளைகளும்
நெருஞ்சி முள்ளாய் தெய்க்குதே!

வண்ணம் கலைந்து
வெள்ளாடை தான் உடுத்த...
வேற்றோனாகி போனேனே
பிறந்து வளந்த வீட்டிலும்!

கள்ளமில்லா முகம்
களையிழந்து போனேனே...
சமுதாய வாழ்க்கையிலே
சருகாகி ஆனேனே!

அன்னை என் விரல் பிடித்து
அன்ன நடை நீ பழக...
இருமுகம் கொண்ட மனிதர்களை
எதிர்த்து வாழ நான் பயின்றேனே!

உன் பொக்கை வாய் சிரிப்பினிலே
என் துன்பமும் பஞ்சாய் போக...
உன்னை மட்டுமே நங்கூரமாய் பற்றி
வாழ்க்கை சமூத்திரத்தில் எதிர்நீச்சலிட்டு பயணக்கிறேன்...
நான்,உன் விதவை தாய்!
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Superb sister?????
Padikkum pothu manam athu kanathup pochu.

Chinna thaayaval thantha raasaave...
Mullil thonriya chinna raasaave...
Sollavaa aaraaro...nam sonthangal yaraaro...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top