Sarva Magizhavan
நாட்டாமை
அனைவரும் வருக!!!!
இல்லத்தில் அனைவரும் நலம் என நம்புகிறோம்...அகராதியும் எழிலனும் உங்களுக்குப் பரிச்சயம் தானே...
இல்லாவிடில் என்ன... யாதும் ஊரே யாவரும் கேளிர்....
எங்கள் அன்பின் சாட்சியாக இவ்வுலகினில் அவதரித்தவள் எங்களால் அகராதி என்ற பெயர் சூட்டப்பட்டவள்... அன்பின் பால் அதி என அழைக்கப் பெறுபவளாம் எங்கள் செல்லப் பெண்ணின் மறுமனை மாற்று விழாவிற்கு உங்களை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!!!!
வணக்கம் நல்லோரே!!!
எழிலன் என அழைக்கப் படுகின்ற எங்களின் வழிதோன்றலின் நம்பிக்கைக் கரம் பற்றப் போகின்றவளும் எங்கள் மனையில் அமரப் போகும் மங்களப் பெண்ணுமான புதுமகள் காண வந்திருக்கும்
அனைவருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவிக்கிறோம்!!!
எங்களின் திருமணம்!!!
திருமணம்...பெருங்கனவாக இல்லாவிடினும் சின்ன சின்ன ஆசைகளாவது இருக்கத் தானே செய்யும்... யாருக்கு எப்படியோ இவர்களுக்கு நிஜமாகவே பெருங்கனவு தான்...
காதல் செய்து கரம் பிடித்தால் தான் கனவா??
கற்பனைகளில் ஒரு பாத்திரத்தை உருவேற்றி கருவாக்கி வைத்திருந்து அவ்வுருவம் கண் திறக்கக் காத்திருக்கும் அந்நொடி எத்தனை பெருங்கனா?
அதனை உணர்ந்தான் எழிலன்... அவர்களின் திருமண அழைப்பிதழ் பிரிக்கும் பொழுது...
அந்தப் பத்திரிக்கையைப் பிரிக்கிற பொழுதே அத்தனை ஆவல் அவனுக்குள்ளே... இருக்காதா பின்னே? இது அவர்களின் அழைப்பிதழ் அல்லவா? அதுவும் அவன் அறிந்திரவே அறிந்திராத அவனின் மனையாளும் அவனுமாய் சென்று எழுதிக் கொடுத்து வந்தது....
பத்திரிக்கையை படித்தவன் மனதில் பதியம் போட்ட செடியா அழுந்தப் பதிஞ்சு போனா அவனின் ஆசை பஞ்சுபொதி.... ஆமாம் அவன் அவளுக்கு வைத்த செல்லப் பேர் அது தான்... அந்தக் கதையை போற போக்குல சொல்றேன் அது வரைக்கும் அவளுக்கு இவன் ஏலியன் தான் இவனுக்கு அவ பஞ்சுபொதி தான்!!!!
இவளை எனக்கு எப்படித்தான் பிடிச்சது???
பிடிக்காம போய் இருந்தா தான் பாஸ் அதிசயம் அசரீரியாய் ஒலித்தது அவள் நண்பன் திவாவின் குரல்...
அவளைக் காணச் சென்ற அன்றே நிச்சயம் நடக்குமென அவன் நினைக்கவே இல்லை....
அதை மட்டுமா நினைக்கலை?
அகராதி பெயர் நல்லாருக்கே...
பாக்க எப்படி இருப்பா என்ற கற்பனைகளை எல்லாம் உடைத்து எறிந்து வந்து நின்ற அவளைக் கண்ட உடன் காதல் மலரவில்லை என்றாலும் ஒரு மரியாதையும் சிநேகமும் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தின்னுட்டு வந்தது...
இவள் என் கீதாஞ்சலி... பிரியசகி... கண்ணம்மா... அன்பினி... அனைத்தும் இவள் ஆவாள் எனும் நம்பிக்கை அளித்தவள் அவனின் அகராதி...
பார்த்த உடன் பட்டுன்னு கையை நீட்டி அகராதி என அறிமுகப் படுத்திக் கொண்டவளை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது...
அதென்னப்பா நியாயம் உங்க ஊருல மட்டும் முத முத பொண்ணு பாக்க வந்த உடனே மாப்பிள்ளைக்கு பொண்ணை புடிச்சுப் போயிருமான்னு கேள்வி எல்லாம் கேப்பீங்கன்னு எனக்குத் தெரியுமே...
போக போக நீங்களே புரிஞ்சுக்குவீங்க ஏன்னு...
வீட்டுக்கு வந்த உடனே வாங்கன்னு வரவேற்க முடியலைன்னாலும் இப்போ சொல்லலாமே... எனக்கும் ரொம்ப நாளா ஆசைப்பா...இந்த கிளாசிக் படங்கள்ல வர்ற மாதிரி வரவேற்கணும்னு... இந்த ஹே ராம் படத்துல கமல் வசுந்தராவ பொண்ணு பாக்க போறப்போ வரவேற்பாங்களே அப்படி...
ப்ளீஸ் ப்ளீஸ் நான் அப்படி வரவேற்கட்டா? என கண்களைச் சுருக்கிக் கேட்டவளை கன்னத்தில் குழி விழ சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலை சம்மதமாக அசைந்தாடியது...
இவளா என் கண்ணாட்டி??? கன்னுக்குட்டின்னு வேணும்னா சொல்லலாம்... இதனை அவளிடம் சொல்லும் பொழுது அவள் கண்கள் சுருக்கி முறைக்கும் அழகினைக் கற்பனை செய்து கொண்டான்...
நொடியில் நிகழ்விற்குத் திரும்பியவன் சரி நீ வரவேற்பு குடுத்தா போதுமா???
பின்ன?
பாட்டு??? வீணை???
ஓஹோ இவரு பெரிய சங்கீத வித்வான்... போயா... என நகர முயன்றவளை ஆதிம்மா என்ற அழைப்பு நிற்க வைத்தது....
ஆதியா?
எனக்கு இனி ஆதி அந்தம் அனைத்தும் நீயாக இருப்பாயா ஆதிமா?
மாட்டேன் என சொல்ல நினைத்தவளை சொல்ல விடாமல் 144 போட்டது அவளின் இதழ்கள்... கண்கள் மட்டும் கோலி குண்டு மாறி உருண்டு முழிச்சுட்டு இருந்தாலும் தலை மட்டும் அசைந்தது சம்மதமாக...
நான் போகட்டா என கண்களால் வினவியவளின் கையைப் பிடித்துக் கொண்டவன் சீக்கிரம் இந்த கைக்குள்ள வரணும்னு தோணுது ஆதி... உனக்கு இது நிச்சயம் மிகையாக கூட இருக்கலாம்... ஆனால் எனக்கு தோணுதுடா நீயும் நானுமா இருக்கும் நாட்களைப் பகிர்ந்து வாழ முடியும்னு...
நிமிர்ந்து அவனை நேராகப் பார்த்தவளை சில நொடிகளுக்கு மேலே எதிர்கொள்ள முடியாதவன் ஆதி கண்ணு கூசுது ஆதி அந்தப் பக்கமா உன் டார்ச் லைட் கண்ணைத் திருப்பு என்றதும் படக்கென சிரித்தவளைக் கண்ட பின்பே அவனுக்குள் ஒரு நிம்மதி வந்தது...
ஆனா நிஜமாவே உன் கண்கள் ரொம்ப வசீகரமானது தான்... கொஞ்சம் உத்துப் பாத்தா நான் மொத்தமா காலி தான் என்றவனை அய்ய போதுமே என்று விட்டு அவனையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.
இந்த அறைக்குள்ளே நுழைந்த பொழுது இருந்த அந்த குறும்புக்காரியை வெளி வர வைக்கவே இந்த விளையாட்டு...
மீண்டும் நடப்பிற்கு வந்தவன் அவள் குறித்து சிந்திக்கலானான்
இவளை என்ன செஞ்சாத் தேவலாம்??? எங்கு காணினும் அவளாக இருந்தால் என்ன செய்ய நானும்???
எல்லாம் அவளை சொல்லணும் சரியான பஞ்சுபொதி... மேல சாஞ்சுக்குறா... மூஞ்சி திருப்பிக்குறா... கன்னம் கிள்ளிக் கொஞ்சுறா... கொஞ்சம் நெருங்கினா நெட்டித் தள்ளுறா... ஆனாலும் சுகமா தான் இருக்கு...
இவளை எல்லாருக்கும் பிடிச்சுப் போறது ஆச்சர்யமே இல்லை என்றவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஒரு நன்றியை நவிழ நினைத்து அலைபேசியை எடுத்தான்... என்ன நினைத்தானோ தெரியவில்லை... ஒலிப் பதிவொன்றைத் தயார் செய்து அனுப்பலாமா வேண்டாமா என்ற அலைப்புருதலில் சிக்கித் தவித்து இறுதியில் அனுப்பி விட்டான்...
உபயம் அவளின் நண்பர்கள்....
நிச்சயதார்த்த நிகழ்வின் பொழுது வருகை புரிந்த அவளின் நண்பர்கள் அனைவரிடத்தும் அவள் அவனை அறிமுகம் செய்த விதத்தை எண்ணியவன் வாய் விட்டே சிரித்தான்...
ஒருத்தியைக் காணும் பொழுதெல்லாம் வியப்பேன் என எவரேனும் நேற்று சொல்லி இருந்தால் நிச்சயம் எள்ளி நகைத்து இருப்பேன்... இன்று என் நிலை மாறியதே... உன்னை காணும் பொழுதெல்லாம் வியக்கிறேன்...
நிச்சயத்தன்று நடந்ததைபேச்சின் நடுவே அவள் நண்பர்கள் சொன்னது இவன் காதில் விழுந்தது... அவ அனுப்புற வாய்ஸ் கிளிப் எல்லாமே இனி ரொம்ப மிஸ் பண்ணுவோம் இல்லைடா என நண்பன் ஒருவன் பேசிக் கொண்டிருக்கற வேளையில் உள்நுழைந்தாள் அவனுக்குச் சொந்தமான அகராதி....
நெஜமாவா??? விக்கி பேபி உனக்கு ஏதும் ஆகலையே??? இருந்தாலும் நீ என்னை அவ்வளோ லவ் பண்ணியா பேபி என இடைவிடாது பேசிக் கொண்டே போனவளை அலாரத்தை அமத்தர மாதிரியே தலையில் தட்டி ஆஃப் பண்ணான் ஒருத்தன்... டே பென்சில் எப்போடா வந்த??? என இன்னமும் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவளை முகம் முழுதும் சிரிப்புடன் எதிர் கொண்டவனை என்ன உடையில் இருக்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஓடி வந்தவளை சரியான குங்பூ பாண்டாவாகிட்ட நீ என்றவனை எல்லாம் மதிக்காமல் அவன் சட்டைப் பையில் சாவகாசமா கையை விட்டு மேடம் என்னமோ தேடிட்டு இருந்தாங்க...
ஏய் பாண்டா என்னடி தேடுற என்றவனை சட்டை செய்யாமல் தேடி கடைசில ஏமாந்து நின்னவளை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் நண்பன் தயாநிதி... நம்ம அதிக்கு மட்டும் பென்சில்...
இந்தா இதைத் தான தேடுற என ஒரு பெரிய சாக்கலேட் டப்பாவை கையில் திணித்தது தான் மாயம் மேடம் எல்லாம் மறந்து ஒரு ஓரமா சாக்கலேட் சாப்ட ஆரம்பிச்சுட்டாங்க... தூரத்தில் நின்று இவளைக் கவனித்துக் கொண்டு இருந்தவன் அகம் நிறைந்த புன்னகையுடன் அவள் எதிரே நின்றான்.... நின்னது தான் மாயம்...
பாஸ் கிட்ட போகாதீங்க கடிச்சு வச்சுர போறா இருக்கற பசியில... என்ற அவளின் நண்பர்கள் யாரையும் சட்டை செய்யாமல் அவளருகே சென்று அமர்ந்தவன் யாருக்கோ அழைத்து விட்டு பேசி முடித்து நிமிர சாப்பாடு வர சரியாக இருந்தது...
ஆதிம்மா என்ற அவனின் அழைப்பில் என்ன என சாக்கலேட் சாப்பிட்ட வாயைக் கூட துடைக்காமல் கேட்டவளைக் கண்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை....
போடா ஏலியன் என்றவளை மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான் அவளின் மணாளன்... நான் ஏலியனா??? இந்தம்மா செவ்வா கிரகம் நான் வெள்ளி போடி இவளே...
இந்தா சாப்பிடு என அவளுக்குப் பிடித்த கேசரியை எடுத்து ஒரு வாய் ஊட்டி விட்டான்... மீதியை தான் அவளே புடுங்கி சாப்பிட ஆரம்பிச்சுட்டாளே...
ஏண்டி நான் சாப்பிட்டேனான்னு கேட்டியா என்றவனை கொஞ்சமும் மதிக்காமல் வாயில் இருந்த சாப்பாட்டை முழுங்கி விட்டே பேச ஆரம்பித்தாள்...
நீ தான் நல்லா அமுக்கிட்டு தான எனக்குக் கொண்டுட்டு வர சொன்ன ... அந்தத் தீவெட்டி திவா உன் கூட தான சுத்திட்டு இருந்தான் எப்படியும் உன்னை நல்லா கவனிச்சு அனுப்பிருக்கும் என்னைப் பெத்த ஆத்தா... இல்லைன்னு சொல்லு பாப்போம்...
அவளின் முகபாவனைகளில் சிரித்தவன் உன்னை நான் சாப்பிட கூப்பிடவே இல்லைன்னு நீ சொல்லு பாப்போம் என்றதும் நம்மாளு வாயை மூடிட்டு மறுபடியும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க...
இதற்காகத் தான் நான் இத்தனை நாள் காத்திருந்தேனா? தேவை இல்லா வார்த்தைகள் இல்லை... உரிமை கோரும் முயற்சிகள் இல்லை... இயற்கையின் இன்னொரு அதிசயம் என்றாகி வாழும் இவளுடன் தான் என் வாழ்வு....
மீண்டு மீண்டு எழுந்தாலும் ஆழியாய் என்னை இழுத்துப் போகின்ற உன்னைக் கரம் பற்றி என்னுடன் கூட்டிப் போவது தவிர்த்து ஒரு தப்பிக்கும் மார்க்கம் எனக்கு இல்லையடி பிரியசகி...
அவளுக்கு அனுப்பி விட்டு அவளின் பதிலுக்கு எல்லாம் காத்திருக்க எழில் என்ன பழைய எழிலா என்ன... அவன் மிஸ்டர் அகராதியா என்னைக்கோ மாறிப் போனானே...
நானே நானே தானான்னு பாட்டு பாடிட்டே நம்மாளு எங்கயோ வெளில கெளம்பிட்டாரு...
அதிகாலை 11 மணிக்கே துயில் கலைந்த அதி கண்ணு முழிச்சதே அவனின் முகத்தில் தான்... நீங்க நினைக்கிற மாதிரி நம்மாளு நேர்ல போயி சர்ப்ரைஸ் எல்லாம் குடுக்கலை... ஸ்கிரீன் சேவர் அவன் போட்டோ தான்...
ஏலியன் என திரையில் வரவும் வாட்ஸப் பாத்தா ஒலி பதிவு... உற்சாகம் கரை புரள அதனைக் கேட்க கூட இல்லை... You made my day என அவனுக்கு பதில் அனுப்பி விட்டு வேக வேகமாக சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தாள்....
அவனின் ஒலிப் பதிவினை ஓட விட்டாள்...
மிஸஸ் அகராதி எழிலன்.... மிஸ்டர் அகராதி... நல்லாருக்கு இல்லை... இப்போ தான் நம்மளோட கல்யாண பத்திரிக்கை வந்தது.... நிஜமா அதை வாசிச்சுட்டு கண்ணுல கொஞ்சமா தண்ணி வந்துடுச்சுடா...
இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா ஆசீர்வதிக்கப் பட்டவனா உணருறேன்னா அது உன்னால ஆதி...
என் கிட்ட வந்துரு ஆதிம்மா... உன் கைகளுக்குள் என்னை சேர்த்து கூட்டிட்டு போயிரு... உன்னுடனே நானும் நம் பிள்ளையும் வருவோம்...
நம் பிள்ளை என்றதிலேயே அவள் கண்களும் லேசாகக் கலங்கி விட்டது...
அவன் ஆதிம்மா என்ற பொழுது லேசாக அதிர்ந்தாலும் இதனை அவனிடம் இருந்து அவளும் எதிர்பார்க்கவில்லை....
என் பிள்ளையை அவன் நம் பிள்ளை என்றானா???
பக்கத்தில் அவளைப் போலவே கோணல் மானலாக உறங்கிய அவளின் செல்ல வெல்லக் கட்டி சுதனைக் கண்டவள் அவனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து விட்டு அவன் அருகிலே அமர்ந்து விட்டாள்...
நினைவுகள் பின்னோக்கி திரும்புவது அவளின் முறை ஆகிற்று...
இல்லத்தில் அனைவரும் நலம் என நம்புகிறோம்...அகராதியும் எழிலனும் உங்களுக்குப் பரிச்சயம் தானே...
இல்லாவிடில் என்ன... யாதும் ஊரே யாவரும் கேளிர்....
எங்கள் அன்பின் சாட்சியாக இவ்வுலகினில் அவதரித்தவள் எங்களால் அகராதி என்ற பெயர் சூட்டப்பட்டவள்... அன்பின் பால் அதி என அழைக்கப் பெறுபவளாம் எங்கள் செல்லப் பெண்ணின் மறுமனை மாற்று விழாவிற்கு உங்களை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!!!!
வணக்கம் நல்லோரே!!!
எழிலன் என அழைக்கப் படுகின்ற எங்களின் வழிதோன்றலின் நம்பிக்கைக் கரம் பற்றப் போகின்றவளும் எங்கள் மனையில் அமரப் போகும் மங்களப் பெண்ணுமான புதுமகள் காண வந்திருக்கும்
அனைவருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவிக்கிறோம்!!!
எங்களின் திருமணம்!!!
திருமணம்...பெருங்கனவாக இல்லாவிடினும் சின்ன சின்ன ஆசைகளாவது இருக்கத் தானே செய்யும்... யாருக்கு எப்படியோ இவர்களுக்கு நிஜமாகவே பெருங்கனவு தான்...
காதல் செய்து கரம் பிடித்தால் தான் கனவா??
கற்பனைகளில் ஒரு பாத்திரத்தை உருவேற்றி கருவாக்கி வைத்திருந்து அவ்வுருவம் கண் திறக்கக் காத்திருக்கும் அந்நொடி எத்தனை பெருங்கனா?
அதனை உணர்ந்தான் எழிலன்... அவர்களின் திருமண அழைப்பிதழ் பிரிக்கும் பொழுது...
அந்தப் பத்திரிக்கையைப் பிரிக்கிற பொழுதே அத்தனை ஆவல் அவனுக்குள்ளே... இருக்காதா பின்னே? இது அவர்களின் அழைப்பிதழ் அல்லவா? அதுவும் அவன் அறிந்திரவே அறிந்திராத அவனின் மனையாளும் அவனுமாய் சென்று எழுதிக் கொடுத்து வந்தது....
பத்திரிக்கையை படித்தவன் மனதில் பதியம் போட்ட செடியா அழுந்தப் பதிஞ்சு போனா அவனின் ஆசை பஞ்சுபொதி.... ஆமாம் அவன் அவளுக்கு வைத்த செல்லப் பேர் அது தான்... அந்தக் கதையை போற போக்குல சொல்றேன் அது வரைக்கும் அவளுக்கு இவன் ஏலியன் தான் இவனுக்கு அவ பஞ்சுபொதி தான்!!!!
இவளை எனக்கு எப்படித்தான் பிடிச்சது???
பிடிக்காம போய் இருந்தா தான் பாஸ் அதிசயம் அசரீரியாய் ஒலித்தது அவள் நண்பன் திவாவின் குரல்...
அவளைக் காணச் சென்ற அன்றே நிச்சயம் நடக்குமென அவன் நினைக்கவே இல்லை....
அதை மட்டுமா நினைக்கலை?
அகராதி பெயர் நல்லாருக்கே...
பாக்க எப்படி இருப்பா என்ற கற்பனைகளை எல்லாம் உடைத்து எறிந்து வந்து நின்ற அவளைக் கண்ட உடன் காதல் மலரவில்லை என்றாலும் ஒரு மரியாதையும் சிநேகமும் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தின்னுட்டு வந்தது...
இவள் என் கீதாஞ்சலி... பிரியசகி... கண்ணம்மா... அன்பினி... அனைத்தும் இவள் ஆவாள் எனும் நம்பிக்கை அளித்தவள் அவனின் அகராதி...
பார்த்த உடன் பட்டுன்னு கையை நீட்டி அகராதி என அறிமுகப் படுத்திக் கொண்டவளை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது...
அதென்னப்பா நியாயம் உங்க ஊருல மட்டும் முத முத பொண்ணு பாக்க வந்த உடனே மாப்பிள்ளைக்கு பொண்ணை புடிச்சுப் போயிருமான்னு கேள்வி எல்லாம் கேப்பீங்கன்னு எனக்குத் தெரியுமே...
போக போக நீங்களே புரிஞ்சுக்குவீங்க ஏன்னு...
வீட்டுக்கு வந்த உடனே வாங்கன்னு வரவேற்க முடியலைன்னாலும் இப்போ சொல்லலாமே... எனக்கும் ரொம்ப நாளா ஆசைப்பா...இந்த கிளாசிக் படங்கள்ல வர்ற மாதிரி வரவேற்கணும்னு... இந்த ஹே ராம் படத்துல கமல் வசுந்தராவ பொண்ணு பாக்க போறப்போ வரவேற்பாங்களே அப்படி...
ப்ளீஸ் ப்ளீஸ் நான் அப்படி வரவேற்கட்டா? என கண்களைச் சுருக்கிக் கேட்டவளை கன்னத்தில் குழி விழ சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலை சம்மதமாக அசைந்தாடியது...
இவளா என் கண்ணாட்டி??? கன்னுக்குட்டின்னு வேணும்னா சொல்லலாம்... இதனை அவளிடம் சொல்லும் பொழுது அவள் கண்கள் சுருக்கி முறைக்கும் அழகினைக் கற்பனை செய்து கொண்டான்...
நொடியில் நிகழ்விற்குத் திரும்பியவன் சரி நீ வரவேற்பு குடுத்தா போதுமா???
பின்ன?
பாட்டு??? வீணை???
ஓஹோ இவரு பெரிய சங்கீத வித்வான்... போயா... என நகர முயன்றவளை ஆதிம்மா என்ற அழைப்பு நிற்க வைத்தது....
ஆதியா?
எனக்கு இனி ஆதி அந்தம் அனைத்தும் நீயாக இருப்பாயா ஆதிமா?
மாட்டேன் என சொல்ல நினைத்தவளை சொல்ல விடாமல் 144 போட்டது அவளின் இதழ்கள்... கண்கள் மட்டும் கோலி குண்டு மாறி உருண்டு முழிச்சுட்டு இருந்தாலும் தலை மட்டும் அசைந்தது சம்மதமாக...
நான் போகட்டா என கண்களால் வினவியவளின் கையைப் பிடித்துக் கொண்டவன் சீக்கிரம் இந்த கைக்குள்ள வரணும்னு தோணுது ஆதி... உனக்கு இது நிச்சயம் மிகையாக கூட இருக்கலாம்... ஆனால் எனக்கு தோணுதுடா நீயும் நானுமா இருக்கும் நாட்களைப் பகிர்ந்து வாழ முடியும்னு...
நிமிர்ந்து அவனை நேராகப் பார்த்தவளை சில நொடிகளுக்கு மேலே எதிர்கொள்ள முடியாதவன் ஆதி கண்ணு கூசுது ஆதி அந்தப் பக்கமா உன் டார்ச் லைட் கண்ணைத் திருப்பு என்றதும் படக்கென சிரித்தவளைக் கண்ட பின்பே அவனுக்குள் ஒரு நிம்மதி வந்தது...
ஆனா நிஜமாவே உன் கண்கள் ரொம்ப வசீகரமானது தான்... கொஞ்சம் உத்துப் பாத்தா நான் மொத்தமா காலி தான் என்றவனை அய்ய போதுமே என்று விட்டு அவனையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.
இந்த அறைக்குள்ளே நுழைந்த பொழுது இருந்த அந்த குறும்புக்காரியை வெளி வர வைக்கவே இந்த விளையாட்டு...
மீண்டும் நடப்பிற்கு வந்தவன் அவள் குறித்து சிந்திக்கலானான்
இவளை என்ன செஞ்சாத் தேவலாம்??? எங்கு காணினும் அவளாக இருந்தால் என்ன செய்ய நானும்???
எல்லாம் அவளை சொல்லணும் சரியான பஞ்சுபொதி... மேல சாஞ்சுக்குறா... மூஞ்சி திருப்பிக்குறா... கன்னம் கிள்ளிக் கொஞ்சுறா... கொஞ்சம் நெருங்கினா நெட்டித் தள்ளுறா... ஆனாலும் சுகமா தான் இருக்கு...
இவளை எல்லாருக்கும் பிடிச்சுப் போறது ஆச்சர்யமே இல்லை என்றவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஒரு நன்றியை நவிழ நினைத்து அலைபேசியை எடுத்தான்... என்ன நினைத்தானோ தெரியவில்லை... ஒலிப் பதிவொன்றைத் தயார் செய்து அனுப்பலாமா வேண்டாமா என்ற அலைப்புருதலில் சிக்கித் தவித்து இறுதியில் அனுப்பி விட்டான்...
உபயம் அவளின் நண்பர்கள்....
நிச்சயதார்த்த நிகழ்வின் பொழுது வருகை புரிந்த அவளின் நண்பர்கள் அனைவரிடத்தும் அவள் அவனை அறிமுகம் செய்த விதத்தை எண்ணியவன் வாய் விட்டே சிரித்தான்...
ஒருத்தியைக் காணும் பொழுதெல்லாம் வியப்பேன் என எவரேனும் நேற்று சொல்லி இருந்தால் நிச்சயம் எள்ளி நகைத்து இருப்பேன்... இன்று என் நிலை மாறியதே... உன்னை காணும் பொழுதெல்லாம் வியக்கிறேன்...
நிச்சயத்தன்று நடந்ததைபேச்சின் நடுவே அவள் நண்பர்கள் சொன்னது இவன் காதில் விழுந்தது... அவ அனுப்புற வாய்ஸ் கிளிப் எல்லாமே இனி ரொம்ப மிஸ் பண்ணுவோம் இல்லைடா என நண்பன் ஒருவன் பேசிக் கொண்டிருக்கற வேளையில் உள்நுழைந்தாள் அவனுக்குச் சொந்தமான அகராதி....
நெஜமாவா??? விக்கி பேபி உனக்கு ஏதும் ஆகலையே??? இருந்தாலும் நீ என்னை அவ்வளோ லவ் பண்ணியா பேபி என இடைவிடாது பேசிக் கொண்டே போனவளை அலாரத்தை அமத்தர மாதிரியே தலையில் தட்டி ஆஃப் பண்ணான் ஒருத்தன்... டே பென்சில் எப்போடா வந்த??? என இன்னமும் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவளை முகம் முழுதும் சிரிப்புடன் எதிர் கொண்டவனை என்ன உடையில் இருக்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஓடி வந்தவளை சரியான குங்பூ பாண்டாவாகிட்ட நீ என்றவனை எல்லாம் மதிக்காமல் அவன் சட்டைப் பையில் சாவகாசமா கையை விட்டு மேடம் என்னமோ தேடிட்டு இருந்தாங்க...
ஏய் பாண்டா என்னடி தேடுற என்றவனை சட்டை செய்யாமல் தேடி கடைசில ஏமாந்து நின்னவளை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் நண்பன் தயாநிதி... நம்ம அதிக்கு மட்டும் பென்சில்...
இந்தா இதைத் தான தேடுற என ஒரு பெரிய சாக்கலேட் டப்பாவை கையில் திணித்தது தான் மாயம் மேடம் எல்லாம் மறந்து ஒரு ஓரமா சாக்கலேட் சாப்ட ஆரம்பிச்சுட்டாங்க... தூரத்தில் நின்று இவளைக் கவனித்துக் கொண்டு இருந்தவன் அகம் நிறைந்த புன்னகையுடன் அவள் எதிரே நின்றான்.... நின்னது தான் மாயம்...
பாஸ் கிட்ட போகாதீங்க கடிச்சு வச்சுர போறா இருக்கற பசியில... என்ற அவளின் நண்பர்கள் யாரையும் சட்டை செய்யாமல் அவளருகே சென்று அமர்ந்தவன் யாருக்கோ அழைத்து விட்டு பேசி முடித்து நிமிர சாப்பாடு வர சரியாக இருந்தது...
ஆதிம்மா என்ற அவனின் அழைப்பில் என்ன என சாக்கலேட் சாப்பிட்ட வாயைக் கூட துடைக்காமல் கேட்டவளைக் கண்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை....
போடா ஏலியன் என்றவளை மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான் அவளின் மணாளன்... நான் ஏலியனா??? இந்தம்மா செவ்வா கிரகம் நான் வெள்ளி போடி இவளே...
இந்தா சாப்பிடு என அவளுக்குப் பிடித்த கேசரியை எடுத்து ஒரு வாய் ஊட்டி விட்டான்... மீதியை தான் அவளே புடுங்கி சாப்பிட ஆரம்பிச்சுட்டாளே...
ஏண்டி நான் சாப்பிட்டேனான்னு கேட்டியா என்றவனை கொஞ்சமும் மதிக்காமல் வாயில் இருந்த சாப்பாட்டை முழுங்கி விட்டே பேச ஆரம்பித்தாள்...
நீ தான் நல்லா அமுக்கிட்டு தான எனக்குக் கொண்டுட்டு வர சொன்ன ... அந்தத் தீவெட்டி திவா உன் கூட தான சுத்திட்டு இருந்தான் எப்படியும் உன்னை நல்லா கவனிச்சு அனுப்பிருக்கும் என்னைப் பெத்த ஆத்தா... இல்லைன்னு சொல்லு பாப்போம்...
அவளின் முகபாவனைகளில் சிரித்தவன் உன்னை நான் சாப்பிட கூப்பிடவே இல்லைன்னு நீ சொல்லு பாப்போம் என்றதும் நம்மாளு வாயை மூடிட்டு மறுபடியும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க...
இதற்காகத் தான் நான் இத்தனை நாள் காத்திருந்தேனா? தேவை இல்லா வார்த்தைகள் இல்லை... உரிமை கோரும் முயற்சிகள் இல்லை... இயற்கையின் இன்னொரு அதிசயம் என்றாகி வாழும் இவளுடன் தான் என் வாழ்வு....
மீண்டு மீண்டு எழுந்தாலும் ஆழியாய் என்னை இழுத்துப் போகின்ற உன்னைக் கரம் பற்றி என்னுடன் கூட்டிப் போவது தவிர்த்து ஒரு தப்பிக்கும் மார்க்கம் எனக்கு இல்லையடி பிரியசகி...
அவளுக்கு அனுப்பி விட்டு அவளின் பதிலுக்கு எல்லாம் காத்திருக்க எழில் என்ன பழைய எழிலா என்ன... அவன் மிஸ்டர் அகராதியா என்னைக்கோ மாறிப் போனானே...
நானே நானே தானான்னு பாட்டு பாடிட்டே நம்மாளு எங்கயோ வெளில கெளம்பிட்டாரு...
அதிகாலை 11 மணிக்கே துயில் கலைந்த அதி கண்ணு முழிச்சதே அவனின் முகத்தில் தான்... நீங்க நினைக்கிற மாதிரி நம்மாளு நேர்ல போயி சர்ப்ரைஸ் எல்லாம் குடுக்கலை... ஸ்கிரீன் சேவர் அவன் போட்டோ தான்...
ஏலியன் என திரையில் வரவும் வாட்ஸப் பாத்தா ஒலி பதிவு... உற்சாகம் கரை புரள அதனைக் கேட்க கூட இல்லை... You made my day என அவனுக்கு பதில் அனுப்பி விட்டு வேக வேகமாக சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தாள்....
அவனின் ஒலிப் பதிவினை ஓட விட்டாள்...
மிஸஸ் அகராதி எழிலன்.... மிஸ்டர் அகராதி... நல்லாருக்கு இல்லை... இப்போ தான் நம்மளோட கல்யாண பத்திரிக்கை வந்தது.... நிஜமா அதை வாசிச்சுட்டு கண்ணுல கொஞ்சமா தண்ணி வந்துடுச்சுடா...
இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா ஆசீர்வதிக்கப் பட்டவனா உணருறேன்னா அது உன்னால ஆதி...
என் கிட்ட வந்துரு ஆதிம்மா... உன் கைகளுக்குள் என்னை சேர்த்து கூட்டிட்டு போயிரு... உன்னுடனே நானும் நம் பிள்ளையும் வருவோம்...
நம் பிள்ளை என்றதிலேயே அவள் கண்களும் லேசாகக் கலங்கி விட்டது...
அவன் ஆதிம்மா என்ற பொழுது லேசாக அதிர்ந்தாலும் இதனை அவனிடம் இருந்து அவளும் எதிர்பார்க்கவில்லை....
என் பிள்ளையை அவன் நம் பிள்ளை என்றானா???
பக்கத்தில் அவளைப் போலவே கோணல் மானலாக உறங்கிய அவளின் செல்ல வெல்லக் கட்டி சுதனைக் கண்டவள் அவனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து விட்டு அவன் அருகிலே அமர்ந்து விட்டாள்...
நினைவுகள் பின்னோக்கி திரும்புவது அவளின் முறை ஆகிற்று...