JeyaBharathi
மண்டலாதிபதி
அசௌகரிய விழுதுகள்
இன்னொரு அறைகட்ட
தூரோடு துடைத்த
கொல்லை தென்னை..
கேபிள்வயர் பறிமாற
மொட்டையடிக்கபட்ட
தெருவோர வேங்கை..
வாலெறும்பு தொல்லையென
வஞ்சக சாக்கிட்டு
அறுவாளுக்கு பலியிட்ட
திண்ணையோர சீதாமரம்..
இன்னொரு சன்னிதானம் எழ
தன்னுயிர் துறந்த
பிள்ளையார் கோவில் அரசமரம்..
நிழல்பட்டு பயிர் கெட்டதென
கூரரிவாள் பசியாறிய
வரப்போர வாகை...
பயணவேகங்கூட்ட
கூச்சமின்றி வெட்டி வீழ்த்திய
ரோட்டோர புளியமரங்கள்...
நிதர்சன சௌகர்யந்தேடி
செதுக்கித்தள்ளிய
மரமது ஒவ்வொன்றும்,
நிஜமுணர்ந்த ஆழ்மனமெங்கும்
குற்றவுணர்வு கிளைபரப்பி
அசௌகர்ய ஆலவிருட்சமாய்...
Last edited: