வணக்கம் அன்பர்களே!
'மன மோஹனா...' இனிதே நிறைவு பெற்றிருக்கிறது. கார்த்திக்கும் மித்ரமதியும் உங்களிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்கள்.
நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைப் போல இந்தக் கதையின் நாயகன் 'கார்த்திக்' என் லட்சிய புருஷன் அல்ல. இவன் உங்களிடம் நிறையவே வசை கேட்பான் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் வசைக் கச்சேரியே வைத்தீர்கள்!
அழகியின் கதைகள் ஒன்று போல இருக்கின்றன, வித்தியாசமாக இல்லை, லேசாக போரடிக்கிறது... இது போல சில வார்த்தைகள் என் காது வரை வந்ததன் முயற்சி தான்... இந்த 'மன மோஹனா'.
ஒரு வித்தியாசமான நாயகனை என்னால் படைக்க முடியுமா என்று எனக்கு நானே வைத்துக் கொண்ட சோதனை... இந்த 'மன மோஹனா' என்று கூடச் சொல்லலாம்.
அதில் நான் வெற்றி பெற்றேன் என்பதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவே சாட்சி.
முகம் தெரியாத... ஏன்? ஒரு சிலரின் பெயர் கூட எனக்குத் தெரியாது. நெகிழ்ந்து போய் நிற்கின்றேன் அன்பர்களே!
எஸ்.எம்.தளத்திலும், முக நூலிலும், மெஸென்ஞரிலும், வாட்ஸ்அப்பிலும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
வாழ்த்தினார்கள், பாராட்டினார்கள், ஏசினார்கள், கோபித்தார்கள், குறைபட்டுக் கொண்டார்கள். இதுவெல்லாம் என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று நினைக்கும் போது மனம் நிறைந்து போகிறது.
எஸ்.எம்.தளத்தில் எத்தனையோ புதிய மெம்பர்களின் அறிமுகம் கிடைத்தது. முகநூலில் இதுவரை மௌனமாக இருந்த எத்தனையோ நட்புகள் எனக்காகப் போஸ்ட் போட்டபோது ஆனந்த ஆச்சரியமாக இருந்தது. இதை விட இந்த அழகிக்கு வேறென்ன வேண்டும்?
இந்தப் பயணத்தில் பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். தனித்தனியாக பெயர் குறிப்பிட முடியவில்லை. அனைவருக்கும் அழகியின் பணிவான வணக்கங்களும், நன்றிகளும்.
'மீம்ஸ்' என்ற பெயரில் எஸ்.எம் குழுவையே திணறடித்த நண்பர்களுக்கு என் நன்றிகள். அவர்களின் பொன்னான நேரச் செலவழிப்பிற்கு நான் ஓரளவு நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஒரு சிலர் எபிலாக் கேட்டிருந்தீர்கள். அழகி எந்தக் கதைக்குமே எபிலாக் கொடுத்தில்லையே அன்பர்களே!
ஒரு சிலருக்குக் கதையின் முடிவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். ஒரு சில இடங்களில் அவர்களின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி பண்ணாமலும் போயிருக்கலாம். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கென்று இருக்கும் ஒரு சில தார்மீகக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டே கதையை நகர்த்தி இருக்கிறேன்.
'மன மோஹனா' வின் பயணத்தில் அழகி யாரையாவது புண்படுத்தி இருந்தால் இந்த இடத்தில் அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். எப்போதுமே எனக்கு நீங்கள் அத்தனை பேரும் முக்கியம்.
நீங்கள் போடும் கமெண்ட்டுக்கு பதிலளிப்பதே அழகியின் வழக்கம். இந்த முறை அதிலிருந்தும் தவறி இருக்கிறேன். அதை என்னால் தொடர முடியவில்லை. சொந்த வேலைப்பளு, குறுகிய இடைவெளியில் வந்த தொடர் பதிவுகள் எல்லாமாக என்னை நிலை குலைய வைத்துவிட்டன.
உங்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது டைப்பிங்கில் இறங்கினேன் என்பது தான் உண்மை. அது என் அன்பர்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதை.
ஒரு குறுகிய இடைவெளியின் பின் உங்களைச் சந்திக்க வருகிறேன் அன்பர்களே. அதற்கிடையில் 'கின்டில்' வாசகர்கள் என்னை ஒரு முழு நாவலோடு சந்திக்கலாம்.
அன்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
கூடிய விரைவில் 'மன மோஹனா' புத்தக வடிவிலும் வரும் என்ற உறுதியான நம்பிக்கையோடு...
என்றும் அன்புடன்,
உங்கள் அழகி.??
'மன மோஹனா...' இனிதே நிறைவு பெற்றிருக்கிறது. கார்த்திக்கும் மித்ரமதியும் உங்களிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்கள்.
நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைப் போல இந்தக் கதையின் நாயகன் 'கார்த்திக்' என் லட்சிய புருஷன் அல்ல. இவன் உங்களிடம் நிறையவே வசை கேட்பான் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் வசைக் கச்சேரியே வைத்தீர்கள்!
அழகியின் கதைகள் ஒன்று போல இருக்கின்றன, வித்தியாசமாக இல்லை, லேசாக போரடிக்கிறது... இது போல சில வார்த்தைகள் என் காது வரை வந்ததன் முயற்சி தான்... இந்த 'மன மோஹனா'.
ஒரு வித்தியாசமான நாயகனை என்னால் படைக்க முடியுமா என்று எனக்கு நானே வைத்துக் கொண்ட சோதனை... இந்த 'மன மோஹனா' என்று கூடச் சொல்லலாம்.
அதில் நான் வெற்றி பெற்றேன் என்பதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவே சாட்சி.
முகம் தெரியாத... ஏன்? ஒரு சிலரின் பெயர் கூட எனக்குத் தெரியாது. நெகிழ்ந்து போய் நிற்கின்றேன் அன்பர்களே!
எஸ்.எம்.தளத்திலும், முக நூலிலும், மெஸென்ஞரிலும், வாட்ஸ்அப்பிலும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
வாழ்த்தினார்கள், பாராட்டினார்கள், ஏசினார்கள், கோபித்தார்கள், குறைபட்டுக் கொண்டார்கள். இதுவெல்லாம் என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று நினைக்கும் போது மனம் நிறைந்து போகிறது.
எஸ்.எம்.தளத்தில் எத்தனையோ புதிய மெம்பர்களின் அறிமுகம் கிடைத்தது. முகநூலில் இதுவரை மௌனமாக இருந்த எத்தனையோ நட்புகள் எனக்காகப் போஸ்ட் போட்டபோது ஆனந்த ஆச்சரியமாக இருந்தது. இதை விட இந்த அழகிக்கு வேறென்ன வேண்டும்?
இந்தப் பயணத்தில் பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். தனித்தனியாக பெயர் குறிப்பிட முடியவில்லை. அனைவருக்கும் அழகியின் பணிவான வணக்கங்களும், நன்றிகளும்.
'மீம்ஸ்' என்ற பெயரில் எஸ்.எம் குழுவையே திணறடித்த நண்பர்களுக்கு என் நன்றிகள். அவர்களின் பொன்னான நேரச் செலவழிப்பிற்கு நான் ஓரளவு நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஒரு சிலர் எபிலாக் கேட்டிருந்தீர்கள். அழகி எந்தக் கதைக்குமே எபிலாக் கொடுத்தில்லையே அன்பர்களே!
ஒரு சிலருக்குக் கதையின் முடிவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். ஒரு சில இடங்களில் அவர்களின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி பண்ணாமலும் போயிருக்கலாம். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கென்று இருக்கும் ஒரு சில தார்மீகக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டே கதையை நகர்த்தி இருக்கிறேன்.
'மன மோஹனா' வின் பயணத்தில் அழகி யாரையாவது புண்படுத்தி இருந்தால் இந்த இடத்தில் அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். எப்போதுமே எனக்கு நீங்கள் அத்தனை பேரும் முக்கியம்.
நீங்கள் போடும் கமெண்ட்டுக்கு பதிலளிப்பதே அழகியின் வழக்கம். இந்த முறை அதிலிருந்தும் தவறி இருக்கிறேன். அதை என்னால் தொடர முடியவில்லை. சொந்த வேலைப்பளு, குறுகிய இடைவெளியில் வந்த தொடர் பதிவுகள் எல்லாமாக என்னை நிலை குலைய வைத்துவிட்டன.
உங்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது டைப்பிங்கில் இறங்கினேன் என்பது தான் உண்மை. அது என் அன்பர்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதை.
ஒரு குறுகிய இடைவெளியின் பின் உங்களைச் சந்திக்க வருகிறேன் அன்பர்களே. அதற்கிடையில் 'கின்டில்' வாசகர்கள் என்னை ஒரு முழு நாவலோடு சந்திக்கலாம்.
அன்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
கூடிய விரைவில் 'மன மோஹனா' புத்தக வடிவிலும் வரும் என்ற உறுதியான நம்பிக்கையோடு...
என்றும் அன்புடன்,
உங்கள் அழகி.??