(இது நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை, நாளை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்... இன்றுவரை நிலைமை இதுதான்! இப்பாடலின் யாப்பு வடிவம் சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடல்களைத் தழுவி அமைக்கப்பட்டது!)
(தானே தானதன்னா தானே தானதன்னா
தானே தானதன்னா தன்னானா - தன்னா... என்ற மெட்டில் படிக்க / பாடவும்!)
ஆட்டுக் கூட்டமொன்னை அடிச்சுத் தின்றத்துக்குப்
போட்டி ரெண்டு சிங்கம் போட்டுச்சாம் - அங்க
போட்டி ரெண்டு சிங்கம் போடப் பக்கம் நின்னு
ஆட்டுக் கூட்டம் அது பார்த்துச்சாம்...
மக்கள் ஆட்சியென்னும் மகத்துவ கொள்கை ஒன்னை
அக்கணம் சிங்கம் ரெண்டும் பேசிச்சாம் - அங்க
அக்கணம் சிங்கம் ரெண்டும் பேசின பேச்சையெல்லாம்
மக்களாய் ஆடுங்கல்லாம் கேட்டுச்சாம்...
சென்ற ஆண்டுமுதல் சைவம் ஆயிட்டேனு
நின்ற சிங்கமொன்னு சொல்லிச்சாம் - அங்க
நின்ற சிங்கமது சொல்வதெல்லாம் பொய்யினு
இன்னொரு சிங்கம் அதும் சொல்லிச்சாம்...
ஆடேநான் தின்னதில்ல அருகம்புல்லேதான்
காடேதான் சாட்சினு சொல்லிச்சாம் - அங்க
காடேதான் சாட்சினு சிங்கம் சொன்னதையும்
ஆடுங்க அப்படியே நம்பிச்சாம்...
ஆட்டுக் கூட்டமதை எந்தச் சிங்கம் தின்னனும்னு
ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுச்சாம் - அங்க
ஓட்டு போடச் சொல்லிச் சிங்கம் ரெண்டும் கேக்க
ஆட்டுக் கூட்டம் எல்லாம் போட்டுச்சாம்...
ஓட்டும் போட்டு அதை எண்ணி முடிச்சதுல
காட்டுச் சிங்கம் ஒன்னு ஜெயிச்சுச்சாம் - அங்க
காட்டுச் சிங்கம் ஒன்னு ஜெயிச்சத வெடிவெடிச்சு
ஆட்டுக் கூட்டம் கொண் டாடிச்சாம்...
----
அன்புடன்,
--வி
(தானே தானதன்னா தானே தானதன்னா
தானே தானதன்னா தன்னானா - தன்னா... என்ற மெட்டில் படிக்க / பாடவும்!)
ஆட்டுக் கூட்டமொன்னை அடிச்சுத் தின்றத்துக்குப்
போட்டி ரெண்டு சிங்கம் போட்டுச்சாம் - அங்க
போட்டி ரெண்டு சிங்கம் போடப் பக்கம் நின்னு
ஆட்டுக் கூட்டம் அது பார்த்துச்சாம்...
மக்கள் ஆட்சியென்னும் மகத்துவ கொள்கை ஒன்னை
அக்கணம் சிங்கம் ரெண்டும் பேசிச்சாம் - அங்க
அக்கணம் சிங்கம் ரெண்டும் பேசின பேச்சையெல்லாம்
மக்களாய் ஆடுங்கல்லாம் கேட்டுச்சாம்...
சென்ற ஆண்டுமுதல் சைவம் ஆயிட்டேனு
நின்ற சிங்கமொன்னு சொல்லிச்சாம் - அங்க
நின்ற சிங்கமது சொல்வதெல்லாம் பொய்யினு
இன்னொரு சிங்கம் அதும் சொல்லிச்சாம்...
ஆடேநான் தின்னதில்ல அருகம்புல்லேதான்
காடேதான் சாட்சினு சொல்லிச்சாம் - அங்க
காடேதான் சாட்சினு சிங்கம் சொன்னதையும்
ஆடுங்க அப்படியே நம்பிச்சாம்...
ஆட்டுக் கூட்டமதை எந்தச் சிங்கம் தின்னனும்னு
ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுச்சாம் - அங்க
ஓட்டு போடச் சொல்லிச் சிங்கம் ரெண்டும் கேக்க
ஆட்டுக் கூட்டம் எல்லாம் போட்டுச்சாம்...
ஓட்டும் போட்டு அதை எண்ணி முடிச்சதுல
காட்டுச் சிங்கம் ஒன்னு ஜெயிச்சுச்சாம் - அங்க
காட்டுச் சிங்கம் ஒன்னு ஜெயிச்சத வெடிவெடிச்சு
ஆட்டுக் கூட்டம் கொண் டாடிச்சாம்...
----
அன்புடன்,
--வி