சகோ கதாநாயகியின் பெயர் 'ராதா', அவளது அழகான தங்கையின் பெயர்தான் மீரா! ???அழகான தலைப்பு . அருமையான காதல் கதை. மீரா அபி மேல் காதல் கொள்வதும் அவன் கல்யாணமானவன், ஆறு வயது பிள்ளையின் தந்தை என அறிந்து மன வேதனை அடைந்து அவனை தான் நினைப்பது தவறு என நினைத்து மன மாற நினைக்கையில் அவன் விவாகரத்தானவன் என அறிந்து மனம் மகிழ்வதும் அவன் மீது காதல் மேலும் துளிர்கின்றது. அவனுடைய குழந்தையின் தனிமை நிலையறிந்து அதை போக்கி குழந்தையுடம் அன்பை பொழிவதாகட்டும், பெறாமலே ஒரு குழந்தைக்கு தாய் ஆகுவதும் மீராவின் பெண்மை குணத்தை காட்டுகின்றன . கல்யாணத்தின் பின் இருவருக்கிடையிலான காதலுடன் கூடிய இல்லறமே அழகு. கதையின் முடிவு அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள் ?????????????
Arpudhamana kadhai.edhu 6 murai edhai padipadhu.Superஅன்பு வாசகர்களுக்கு,
குறுநாவல் போட்டிக்காக, வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு, முடிந்த கதைகளை ஒரே லிங்க்கில் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். முதல் நாவலாக அழகியின் 'ஏய்! நீயே ரொம்ப அழகா இருக்கே!' முழு நாவலாக... வரவேற்பை பொறுத்து அனைத்து நாவல்களையும் முழு நாவலாக ஒரே லிங்க்கில் கொடுக்கலாம் என்றிருக்கிறோம். முக்கியமாக நாங்கள் எதிர்பார்ப்பது வாசகர்கள் படிப்பதோடு நிறுத்தாமல் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டும் என்பதுதான். உங்களது கருத்துக்கள் தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. நல்ல விமர்சனங்கள் தான் எழுத்தாளர்களை வளர்த்தெடுக்கும். அந்த பணியினை வாசகர்களாகிய நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துங்கள்.
"ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்