Chitrasaraswathi
முதலமைச்சர்
அழகியின் தேன்மழையில் சுகமாக நனைந்த ரசிகை நான். இந்தக் கதை அவரின் முதலாவது வரலாற்று புதினம் என்பதை நம்ப முடியாது இதை ஆழ்ந்து படித்தவர்களால். சாண்டில்யனின் பாதிப்பு இல்லாமல் அவரின் ரசிகரால் கதை எழுத முடியாது. ஆனால் இவர் அவரின் வழித்தோன்றல் என்று எண்ணும்படி வர்ணனைகள், போர் யுக்திகள், அவரின் மோகனாஸ்திரம் என்ற வார்த்தை பிரயோகம். அனைத்தையும் லாவகமாக கையாண்டு உள்ளார். நான் இவரின் இந்தக் கதைக்கு ரசிகர் இல்லை பரம ரசிகர் ஆகிவிட்டேன். இன்றைய காலத்தில் ஒரு புதினம் எழுதுவது மிக சுலபமாக ஆகிவிட்டது. ஆனால் வரலாறு தெரிந்து வரலாற்று புதினம் எழுத இவருக்கு எளிதாக உள்ளது. இவரிடமிருந்து சாண்டில்யன் அவர்கள் எழுத முடியாமல் விட்ட கதைகளை எழுதும் ஆற்றல் கொண்டவராக உள்ளார். நான் அடுத்து இவரிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு வரலாற்று புதினமே