• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகிய தீர்ப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒருநாள் அந்த தலைவரின் இரண்டு தொண்டர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் தலைவர் வந்து எதற்காக... இப்படி அடித்து கொள்கிறீர்கள் என்று கேட்டார்.

"நான் தான முதலாளி உங்களுக்கு நிறைய உதவி பண்ணுகிறேன்... இவன் சொல்கிறான்.. இவன்தான் உங்களுக்கு முக்கியமென்று" என்றான் அவரின் ஒற்றன்(இவன்தான் அவர் தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதை அவர் பார்வைக்கு கொண்டு செல்வான்).

"அதுதான முதலாளி உண்மை.. நான்தான நீங்க பண்ணுகிற நல்ல விசயங்களையும்... உங்கள் உயர்ந்த உள்ளத்தையும் எல்லோர்க்கும் பரப்புகிறேன்.." என்றான் அவரின் கொள்கைபரப்புச் செயலாளன்.

அந்த தலைவரோ மிகவும் நேர்மையானவர்... இருவரையும் ஒருவரிடம் விட்டுக்கொடுக்கமுடியாமல் தவித்தார்..

அப்போது அவர் மனைவி வந்து " கொஞ்ச நேரம் அம்முவ வச்சிக்கங்க... கொஞ்சம் வேலையிருக்குங்க.." என்று அவர்களின் ஒன்றரைவயது மகளை அவரிடம் விட்டுச்சென்றார்.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் உடனே தன் தொண்டர்கள் இருவரிடமும், "உங்கள் சண்டைக்கு என் மகள் தீர்ப்பு சொல்லுவாள்... நீங்கள் இருவரும் இவளுக்கு விளையாட்டு காட்டுங்கள். இவள் யாரை பார்த்து சிரித்து முத்தமிடுகிறாளோ.. அவர்தான் முதன்மையானவர். சரியா??" என்று கேட்டார்...

இருவரும் ஆர்வமுடன் தங்கள் வித்தை அத்துனையும் செய்து குழந்தைக்கு வேடிக்கை காட்டினர். குழந்தை இருவரையும் பார்த்து சிரித்து... ஆனால் தன் தந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டது....


அப்போது புரிந்தது அவர்கள் இருவருக்கும் நாம் ஐவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் தம் ஐவருக்குமே(கண், காது, மூக்கு, வாய், தோல்) பெருமையென்று...
பிகு: சண்டையிட்ட இருவரை கண்டுபுடிங்க பார்ப்போம்...????
நைஸ் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top