- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்
வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.
கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.
பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.
கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்
பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும்.
பொடுகை சரியாக கவனிக்காவிட்டால் பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும். வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். அது எப்படி என பார்க்கலாம்.
வேப்பிலை நீர்
தேவையான பொருட்கள் :
வேப்பிலை - இரண்டு கைப்பிடி
நீர் - ஒரு லிட்டர்
தேன் - ஒரு ஸ்பூன்
செய்முறை :
நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் இரண்டு கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.
மறுநாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடுகு தூர ஓடிடும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்லபலனை காணலாம்.
வேப்பிலை மாஸ்க்
தேவையான பொருட்கள் :
வேப்பிலை - இரண்டு கைப்பிடி
வெந்தயம் - இரண்டு ஸ்பூன்
யோகார்ட் - அரை கப்
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்.
செய்முறை :
வெந்தயத்தை முன்தினமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.
வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.
கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.
பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.
கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்
பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும்.
பொடுகை சரியாக கவனிக்காவிட்டால் பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும். வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். அது எப்படி என பார்க்கலாம்.
வேப்பிலை நீர்
தேவையான பொருட்கள் :
வேப்பிலை - இரண்டு கைப்பிடி
நீர் - ஒரு லிட்டர்
தேன் - ஒரு ஸ்பூன்
செய்முறை :
நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் இரண்டு கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.
மறுநாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடுகு தூர ஓடிடும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்லபலனை காணலாம்.
வேப்பிலை மாஸ்க்
தேவையான பொருட்கள் :
வேப்பிலை - இரண்டு கைப்பிடி
வெந்தயம் - இரண்டு ஸ்பூன்
யோகார்ட் - அரை கப்
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்.
செய்முறை :
வெந்தயத்தை முன்தினமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.