அந்தி வானென அவள்முகமே – அதில்
......அழகிய மேகக் கோலமெனச்
சிந்திக் கிடந்தென் உயிர்வாங்கும் – இருள்
......திரளெனக் கருத்த நறுங்கூந்தல்!
நீலக் கடலென இருவிழிகள் – அதில்
......நீந்தி எழுசெஞ் சுடரெனவே
கோலத் திருநுதல் நடுவினிலே – இடும்
......குங்குமத் திலகம் திகழ்கிறதே!
காலன் கைச்சிலை ஒருபுறமும் – அந்தக்
......காமனின் கருப்புவில் மறுபுறமும்
நீல விழிஎனும் அம்புகளைக் – குறி
......நீட்டி என்னுயிர் கொளநிற்கும்!
[சிலை = வில்; புருவங்களுக்கு உவமை]
தைய்யத் தகதிமித் தைய்யவென – இமை
......தாளம் போட்டிடத் தானாடும்
மையது உண்ட கருவிழிகள் – என்
......மனமே களமாய்ப் போராடும்!
மாமுன் நிரையோ இலக்கணமே* – அதை
......மாற்றுகி றோம்காண் இக்கணமே – எனத்
தாமுன் நிறையும் என்பாவில் – எனைத்
......தளைகெட வைக்கும் வெண்பாவில்!
ஒளியே உள்ளே வீழ்ந்தாலும் – மீண்டு
......ஓடிட இயலாக் கருங்குழியாய் – அவள்
விழிகள் இரண்டும் முகவெளியில் – அடர்
......விசையொடு என்னை விழுங்கினவே!
[கருங்குழி – Black Hole, முகவெளி – (உருவகம்) முகமாகிய வெளி (Space), விசை – Force (Here, Gravity)]
கவியென நானும் கிறுக்குவதை – அவள்
......கண்கள் எள்ளி நகையாடும் – கடை
விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!
- அவள்
விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!
[விலையில் – விலை இல்லாத; மதிப்பற்ற]
*’மாமுன் நிரை’ என்பது இயற்சீர் வெண்டளை என்னும் தளை.
வெண்பாவில் அமையும் ஒரு இலக்கணம். மற்றது ‘விளமுன் நேர்’.
அன்புடன்,
--வி
......அழகிய மேகக் கோலமெனச்
சிந்திக் கிடந்தென் உயிர்வாங்கும் – இருள்
......திரளெனக் கருத்த நறுங்கூந்தல்!
நீலக் கடலென இருவிழிகள் – அதில்
......நீந்தி எழுசெஞ் சுடரெனவே
கோலத் திருநுதல் நடுவினிலே – இடும்
......குங்குமத் திலகம் திகழ்கிறதே!
காலன் கைச்சிலை ஒருபுறமும் – அந்தக்
......காமனின் கருப்புவில் மறுபுறமும்
நீல விழிஎனும் அம்புகளைக் – குறி
......நீட்டி என்னுயிர் கொளநிற்கும்!
[சிலை = வில்; புருவங்களுக்கு உவமை]
தைய்யத் தகதிமித் தைய்யவென – இமை
......தாளம் போட்டிடத் தானாடும்
மையது உண்ட கருவிழிகள் – என்
......மனமே களமாய்ப் போராடும்!
மாமுன் நிரையோ இலக்கணமே* – அதை
......மாற்றுகி றோம்காண் இக்கணமே – எனத்
தாமுன் நிறையும் என்பாவில் – எனைத்
......தளைகெட வைக்கும் வெண்பாவில்!
ஒளியே உள்ளே வீழ்ந்தாலும் – மீண்டு
......ஓடிட இயலாக் கருங்குழியாய் – அவள்
விழிகள் இரண்டும் முகவெளியில் – அடர்
......விசையொடு என்னை விழுங்கினவே!
[கருங்குழி – Black Hole, முகவெளி – (உருவகம்) முகமாகிய வெளி (Space), விசை – Force (Here, Gravity)]
கவியென நானும் கிறுக்குவதை – அவள்
......கண்கள் எள்ளி நகையாடும் – கடை
விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!
- அவள்
விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!
[விலையில் – விலை இல்லாத; மதிப்பற்ற]
*’மாமுன் நிரை’ என்பது இயற்சீர் வெண்டளை என்னும் தளை.
வெண்பாவில் அமையும் ஒரு இலக்கணம். மற்றது ‘விளமுன் நேர்’.
அன்புடன்,
--வி