அதிகாலையும் அந்திமாலையும்....
கார்மேகமும் தோகையானின் நடனமும்...
அடைமழையும் மண்வாசமும்....
முழு நிலாவும் ஆர்ப்பரிக்கும் அலையும்....
நெடுஞ்சாலையும் சீரிப்பாயும் பயணமும்....
உறையும் குளிரும் இறுகிய அணைப்பும்....
பறவையின் சத்தமும் காலை துயிலும்....
சரசரக்கும் பட்டும் ரசனையாய் அவனின் பார்வையும்....
ரோஜா தோட்டமும் ஒற்றை ஊஞ்சலும்....
விரிந்த கடலும் அவனுடன் தனித்த கப்பல் பயணமும்...
விழும் அருவியும் அவனுடன் கரம் கோர்த்த ஓர் குளியலும்....
அமைதியான சூழலும் ரகுமானின் மெல்லிசையும்...
இத்தனை ஆசையில் பேராசையாய் மன்னவனின் மார் மஞ்சத்தில் ஏகாந்த இரவும்...