காமுகன்களின்
கற்பு நிலை தவறுதலுக்குக்
காரணம்
கன்னியர்களின் தளிர்மேனி
காட்டும் ஆடையாம்...
தளிர்மேனி காண்கையிலே
தாபங்கள் துளிர்விடுமாம்...
அதுதான்
அவர்களது இயல்பாம்..
இப்படி அவர்கள்
இச்சை கேட்கும் பிச்சைக்கு
ஒரு சப்பைக்கட்டு!!!
இதில்
கன்னியர்களின் இயல்பென்ன,
விழி நோக்கி
வழிசல் இல்லா பேச்சுக்களும்...
அஞ்சன இரவிலும்
ஆண்மை அருகாமையில் உணரும்
பாதுகாப்பும்....
கன்னியர்களின்
தாபம் துளிர்விட போதும்...
வாசல் தாண்டி வரும்
இவர்கள்,
எத்தனைக் கண்ணியவான்களிடம்
இதைக் காணப் பெறுகிறார்கள்
தெரியுமா...
அப்பொழுதெல்லாம்
இவர்களின் இச்சைக்கு
கடிவாளம் இடுகின்றார்கள்...
கொச்சையாக பிச்சை கேட்பதில்லை...
இப்படி
கன்னிக்குச் சாத்தியமானது..
கலியுகத்தின்
கயவன்களுக்கு - ஏன்
சாத்தியமில்லை!!!
கற்பு நிலை தவறுதலுக்குக்
காரணம்
கன்னியர்களின் தளிர்மேனி
காட்டும் ஆடையாம்...
தளிர்மேனி காண்கையிலே
தாபங்கள் துளிர்விடுமாம்...
அதுதான்
அவர்களது இயல்பாம்..
இப்படி அவர்கள்
இச்சை கேட்கும் பிச்சைக்கு
ஒரு சப்பைக்கட்டு!!!
இதில்
கன்னியர்களின் இயல்பென்ன,
விழி நோக்கி
வழிசல் இல்லா பேச்சுக்களும்...
அஞ்சன இரவிலும்
ஆண்மை அருகாமையில் உணரும்
பாதுகாப்பும்....
கன்னியர்களின்
தாபம் துளிர்விட போதும்...
வாசல் தாண்டி வரும்
இவர்கள்,
எத்தனைக் கண்ணியவான்களிடம்
இதைக் காணப் பெறுகிறார்கள்
தெரியுமா...
அப்பொழுதெல்லாம்
இவர்களின் இச்சைக்கு
கடிவாளம் இடுகின்றார்கள்...
கொச்சையாக பிச்சை கேட்பதில்லை...
இப்படி
கன்னிக்குச் சாத்தியமானது..
கலியுகத்தின்
கயவன்களுக்கு - ஏன்
சாத்தியமில்லை!!!
Last edited: