Soundarya Krish
முதலமைச்சர்
அன்பில் நிறைந்து சொக்கரும் மீனாட்சியும் ஆண்ட மாமதுரைச் சீமை. அதைச் சுற்றிப் பல குக்கிராமங்கள் எழிலும் பொழிலும் கொஞ்ச நிமிர்ந்து நின்றன. அப்படி ஒரு கிராமம் தான் பூம்பொழில்.(யாரும் இந்த ஊரை மதுரையில் தேடிராதீங்கோ?). விவசாயத்தை நம்பி வாழும் மக்களைப் பெற்ற ஊர். குழந்தைவேலு லட்சுமியம்மாள் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான பதினைந்து ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கரில் மாந்தோப்பும் ஐந்து ஏக்கரில் தென்னையும் வளர்த்து தோட்டங்களாய் உருவாக்கி மீதி ஐந்து ஏக்கரில் பயிரிட்டு விவசாயம் செய்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் சீதா, மகன் விதுரன்.
குழந்தைவேலு ஐயாவிற்கு விவசாயம் செய்வது வெல்லம் என்றால் கதை கேட்பதோ கற்கண்டு போல். வானொலியில் வரும் சொற்பொழிவுகள் முக்கியமாகக் கதைகள் கேட்பது அவரது தினசரி பழக்கங்களில் ஒன்று. அப்படிக் கதை கேட்டதில் அவரை மிகவும் பாதித்த இருவர் சீதா(இராமாயணம்), விதுரன்(மகாபாரதம்). ஆகையால் தன் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்த பெயர்களையே சூட்டினார்.
குழந்தைகள் இருவரும் தான் அவர்களின் உலகம். ஆனாலும் விதுரனைச் சிறுவயதிலேயே வெளியூர் பள்ளியில் சேர்த்து விடுதியிலேயே அவனை வளரவிட்டார். அவனைப் பிரிந்து வாழும் வேதனையைத் தெரிந்தே ஏற்றனர் பெற்றோர் இருவரும். அதற்கு முக்கிய காரணம் சீதாவிற்கும் விதுரனிற்கும் உள்ள வயது வித்தியாசமே. ஆம்! சீதாவிற்கும் விதுரனிற்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம்.
லட்சுமியம்மாளுக்கு சீதா பிறந்த பின் இரண்டு குழந்தைகள் இறந்தே பிறந்தன. அதன் பிறகு அவர் கருத்தரிக்கவேயில்லை. சீதா ஆறாம் வகுப்பு வந்ததால் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மகளைப் பள்ளிக்குத் தினமும் லட்சுமியம்மாவே சென்று அழைத்து வருவார். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தவர் மயக்கம் வருவது போல் இருக்கவும் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே அழைத்து வந்தார் மகளை. இதை தன் கணவரிடம் கூற மறந்துவிட்டார். ஆனால் சீதா தந்தை வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தாயின் உடல்நிலையைப் பற்றிக் கூற, உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தார் குழந்தைவேலு.
மருத்துவச்சி வந்து பார்த்து விட்டுப் புன்னகை முகமாக, "லட்சுமி! மறுபடியும் உண்டாயிருக்குத் தம்பி. பக்குவமா பார்த்துக்கோங்க!" என்று கூறிச் சென்றார்.
மருத்துவச்சி கூறிய செய்தியைக் கேட்டுச் சந்தோசமடைந்த குழந்தைவேலு அவருக்குப் பணமும் நெல்லும் காய்கறிகளும் கொடுத்தனுப்பினார். மனைவியைக் காணச் சென்றவர் அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார். தான் மறுமுறை தாயாகப் போவதை அறிந்து முதலில் மகிழ்ந்த லட்சுமியம்மா பின்னர் தான் இரண்டு முறை கருவுற்று குழந்தை இறந்தே பிறந்ததை நினைத்து இந்த குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழத்தொடங்கினார்.
மனைவியின் முகத்தை வைத்தே அவர் மனதில் உள்ளதை அறிந்த குழந்தைவேலு, அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்பு அவரிடம்,"ஏம்புள்ள இப்படி அழுவனும்? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுது வடிஞ்சு வயித்துக்குள்ளாற இருக்குத புள்ளையவும் வெளியாற இருக்குத புள்ளையவும் மிரளவைக்குறவ! கண்ணைத் துடைச்சிபுட்டு சிரிப் புள்ள. சீதா கண்ணு பயந்துகிடுச்சு பாரு."
அவர் கூறிய பின்னர் தான் சீதாவைத் தேடினார் லட்சும்மா(லட்சுமியம்மா டைப் பண்ணக் கஷ்டமா இருக்குதுப்பா!?). அந்த அறையின் மரக்கதவின் குமிழைத் திருகிக்கொண்டு உம்மென்று நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் வேதனைகள் அனைத்தும் தூரம் சென்றது.
"ஏன் ஆத்தா! எப்பப் பிடிச்சு இப்படி உம்மனாம் மூஞ்சியா மாறுனாவ? இது என் தங்கமயிலு இல்லியே வேற புள்ளை போலையே! நான்பெத்த வைரம் சிரிச்சிட்டே பம்பரமா சுத்தி சுத்தி வருமே! நீ யாரு புள்ளத்தா? என் குட்டிக் கிளியைப் பார்த்தியாத்தா?"
அவர் கூறியதைக் கேட்ட குட்டி சீதா அவரை நோக்கிச் சிட்டாய் பறந்து வந்து அவரை கட்டிக்கொண்டு,"ஏம்மா அழுறீங்க? உங்க வயித்துக்குள்ள இருக்குற தம்பி பயந்துக்கப் போறான்! பாவம்மா தம்பி பையன். இனிமே இப்படி அழாதீங்க சொல்லிட்டேன். இல்லாட்டிக்கா உங்களுக்கு அழுமூஞ்சினு பட்ட பேரு வச்சு வீட்டு சுவத்துல எழுதி வைப்பேன்" என்று வம்பிழுத்தாள் சின்னவள்.
முதலில் அவளைப் பார்த்து முறைத்த லச்சும்மா, பின்னர் அவளை அணைத்தபடியே,"ஆத்தா மீனாட்சி ஏம்புள்ளைய ஒருவழியா கண்டுகிட்டேன். அந்த உம்மனாம் மூஞ்சி யாருனும் காட்டிக் கொடுத்துறு ஆத்தா!" என்றார் நக்கலுடன்.
அதில் சிணுங்கியவாறே," ம்ம்மா..ஆ..!" என்று அவரை அணைத்துக் கொண்டாள். லச்சும்மாவும் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தார். தன் மனைவி மற்றும் மகள் நடத்திய பாச விளையாட்டில் கண் கலங்கிய வேலு (சேம் சோம்பேறித்தனம் ?) இறைவனிடம் அவர்கள் குடும்பம் என்றும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
லச்சும்மா வயிற்றில் நம் விதுரன் மூன்றுமாதக் குழந்தையாக வளர்ந்திருந்தான். வயலில் வேலை செய்வோரை மேற்பார்வையிட்டு வீடு வந்தார். அப்போது அவர் அங்குக் கண்ட விசயத்தில் அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது. லச்சும்மா வீட்டின் நடவிலிருந்த வானவெளியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அவரின் அக்கா பவளமோ அவரை பேச்சிலேயே சித்ரவதை செய்து கொண்டிருந்தார்.
"இது என்னடீ புதுக் கூத்தா இருக்கு... மக இன்னும் நாளே வருசத்துல குத்த வச்சுருவா! மறுமாசமே அவளுக்கு எவனையாச்சு புடிச்சு கட்டி வச்சோம்னா அவ மவறுருசம் புள்ள பெத்துருவா! இப்பப் போய் ஆத்தா வைத்த தள்ளிக்கிட்டு நின்னா என் தம்பி குடும்ப மானம் சந்திச் சிரிச்சுரும்... இப்படி அவனை நாலு பயலுக நக்கலா பேசத்தான் நல்லூர் சீமையில இருந்து உன்னக் நலங்கு வச்சு கூட்டியாந்தோமா?"
"அக்கா..ஆ!" என்று கத்தினார் வேலு.
"எய்யா! வேலு இதென்னய்யா இப்படி ஒரு சங்கடம் உனக்கு. இப்படி நாலு பேரு முன்னாடி தலை குனியத்தேன் நாங்க உன்ன ராசாவாட்டம் வளத்தோமா?"
"நாலு பேரு முன்னாடி தலை குனியிற மாதிரி சோலி ஒண்ணும் இங்க நடக்கல! எங்க வீட்டுக்கு இன்னோரு புது உசுரு வரப்போவுது! என் பொஞ்சாதி சதையில முளைச்சு என் ரத்தத்துல பூத்து என் மகள மாதிரியே சிரிக்கப் போற இன்னோர் பூ! அத கொண்டாடி சீராட்டாட்டிக் கூட பரவாயில்லை... அசிங்கப் படுத்தி தூத்தாத!"
"அதில்லய்யா..." என்று தொடங்கிய பவளத்தைத் தடுத்தது வேலுவின் கர்ஜனைக் குரல்.
"இன்னும் நா பேசி முடிக்கலைக்கா! நீ வந்து ஒப்பாரி வைக்குரியே உன் தம்பி என்ன செத்தா போயிட்டேன்! நான் இன்னொரு தடவை அப்பாவாயிட்டேன்! நான் செத்ததுக்கப்பறம் வந்து ஒப்பாரி வச்சிக்க. இப்போ போயி வேலையைப் பாரு!"
அவர் பேச்சில் அரண்டு போன பவளம் கண்களாலேயே இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார். லச்சும்மாவோ பதறி விரைந்து வந்து,"என்சாமி எதுக்குய்யா அபசகுனமா பேசுறீக! அத்தாச்சி ஏதோ கோவத்துல பேசுறாக, அதுக்கு இப்படி பேசனுமா?" என்று கண்களில் நீரோடு கணவனை அணைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் கூறி அமைதியடைந்தனர்.
இவ்வாறு கலவையான சூழலில் வாழ்க்கை நகர்ந்தது அவர்களுக்கு. விதுரன் பிறந்ததை ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். பெற்றோரின் பாசத்திலும் தமக்கையின் அன்பிலும் இனிய சூழலில் வளர்ந்தான் விதுரன். ஊராரின் ஏச்சுகளும் பேச்சுக்களும் தங்கள் குடும்பத்தை அண்டாமலிருக்க தங்கள் தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டி குடியேறினர்.
விதுரனிற்கு மூன்று வயதிருக்கையில் பள்ளிக்குச் சென்ற சீதா உம்மென்று வந்தாள். வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் விதுரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவு உணவு முடிந்ததும் தன் முடிவைப் பெற்றவரிடம் கூறி அவர்களை அதிரவைத்தாள் சீதா.
"ப்பா.. நான் இனிமே பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்ப்பா!"
அவள் கூற்றில் அதிர்ந்த லச்சும்மா,"என்னடீ இது பேச்சு பத்தாங்கிளாஸ் பரீட்சையை அடுத்த மாசம் வச்சுகிட்டு!" என்று மகளை அதட்டினார்.
அவரை பார்த்த வேலு அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மகளிடம்,"எதுனாலம்மா இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்ட? வாத்தியார் யாரும் வஞ்சாய்ங்களா? இல்ல கூட்டாளிகள் கூட சண்டையா? என்ன காரணம்னு சொல்லுடா!" என்று வினவினார்.
"அப்பா பள்ளிக்கூடத்துல கூட படிக்கிறவளுங்க என்கிட்டவந்து என்னடீ உங்க தம்பிக்கு ஆயா வேலை பார்த்துட்டே படிக்கப் போறியா?னு கேக்கறாளுகப்பா.. அவளுங்க தங்கச்சி தம்பிலாம் எங்க பள்ளிக்கூடத்திலேயே சின்ன கிளாஸ் படிக்குறாய்ங்கப்பா... நம்பத் தம்பி மட்டும் குழந்தையா இருக்கான்னு என்னிய ஆயான்னு ஏடாசி பண்ணுதாகப்பா.. " என்று சிணுங்கினாள் சீதா.
மகளைச் சமாதானப்படுத்த வேலு முயல்கையில், "இதுக்குத்தான் சொன்னேன் இந்த புள்ளய பெத்துக்குற வேணாமுன்னு யாரு கேட்டீக! புள்ள எப்படி வெக்கப்படுது பாருங்க! இப்படி பச்சை மனச வெசனப்பட விட்டுடீகளே!" என்றபடியே வந்தார் வேலுவின் தமக்கை பவளம்.
"இதிலென்ன ஐயித்த வெக்கமும் வெசனமும் பட? என் தம்பியை பார்த்து கிட இந்த பாழாய்ப்போன படிப்பு தடையா இருக்கு.. அதான் படிப்ப விடலாம்னு தோனுச்சு!" என்று தன் அத்தையை அதிர வைத்தாள்.
மகள் பள்ளிப் படிப்பை விட முடிவெடுத்தது வருத்தமளித்தாலும் அவளது சகோதரப் பாசம் அவர் நெஞ்சில் அளப்பரிய ஆனந்தத்தை வாரி இறைத்தது. மகளின் பக்குவப்பட்ட மனதை நினைத்து அந்த பெற்றோர் பெருமிதம் கொண்டனர். இதே சூழலில் தன் மகனை நினைத்த அந்த தந்தையுள்ளம் பிஞ்சு மனதில் வெறுப்பும் பேதைமையும் வராதிருக்க அவனை உறவுகளை விட்டுத் தள்ளி வளர்க்க முடிவு செய்தார்.
குழந்தைவேலு ஐயாவிற்கு விவசாயம் செய்வது வெல்லம் என்றால் கதை கேட்பதோ கற்கண்டு போல். வானொலியில் வரும் சொற்பொழிவுகள் முக்கியமாகக் கதைகள் கேட்பது அவரது தினசரி பழக்கங்களில் ஒன்று. அப்படிக் கதை கேட்டதில் அவரை மிகவும் பாதித்த இருவர் சீதா(இராமாயணம்), விதுரன்(மகாபாரதம்). ஆகையால் தன் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்த பெயர்களையே சூட்டினார்.
குழந்தைகள் இருவரும் தான் அவர்களின் உலகம். ஆனாலும் விதுரனைச் சிறுவயதிலேயே வெளியூர் பள்ளியில் சேர்த்து விடுதியிலேயே அவனை வளரவிட்டார். அவனைப் பிரிந்து வாழும் வேதனையைத் தெரிந்தே ஏற்றனர் பெற்றோர் இருவரும். அதற்கு முக்கிய காரணம் சீதாவிற்கும் விதுரனிற்கும் உள்ள வயது வித்தியாசமே. ஆம்! சீதாவிற்கும் விதுரனிற்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம்.
லட்சுமியம்மாளுக்கு சீதா பிறந்த பின் இரண்டு குழந்தைகள் இறந்தே பிறந்தன. அதன் பிறகு அவர் கருத்தரிக்கவேயில்லை. சீதா ஆறாம் வகுப்பு வந்ததால் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மகளைப் பள்ளிக்குத் தினமும் லட்சுமியம்மாவே சென்று அழைத்து வருவார். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தவர் மயக்கம் வருவது போல் இருக்கவும் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே அழைத்து வந்தார் மகளை. இதை தன் கணவரிடம் கூற மறந்துவிட்டார். ஆனால் சீதா தந்தை வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தாயின் உடல்நிலையைப் பற்றிக் கூற, உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தார் குழந்தைவேலு.
மருத்துவச்சி வந்து பார்த்து விட்டுப் புன்னகை முகமாக, "லட்சுமி! மறுபடியும் உண்டாயிருக்குத் தம்பி. பக்குவமா பார்த்துக்கோங்க!" என்று கூறிச் சென்றார்.
மருத்துவச்சி கூறிய செய்தியைக் கேட்டுச் சந்தோசமடைந்த குழந்தைவேலு அவருக்குப் பணமும் நெல்லும் காய்கறிகளும் கொடுத்தனுப்பினார். மனைவியைக் காணச் சென்றவர் அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார். தான் மறுமுறை தாயாகப் போவதை அறிந்து முதலில் மகிழ்ந்த லட்சுமியம்மா பின்னர் தான் இரண்டு முறை கருவுற்று குழந்தை இறந்தே பிறந்ததை நினைத்து இந்த குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழத்தொடங்கினார்.
மனைவியின் முகத்தை வைத்தே அவர் மனதில் உள்ளதை அறிந்த குழந்தைவேலு, அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்பு அவரிடம்,"ஏம்புள்ள இப்படி அழுவனும்? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுது வடிஞ்சு வயித்துக்குள்ளாற இருக்குத புள்ளையவும் வெளியாற இருக்குத புள்ளையவும் மிரளவைக்குறவ! கண்ணைத் துடைச்சிபுட்டு சிரிப் புள்ள. சீதா கண்ணு பயந்துகிடுச்சு பாரு."
அவர் கூறிய பின்னர் தான் சீதாவைத் தேடினார் லட்சும்மா(லட்சுமியம்மா டைப் பண்ணக் கஷ்டமா இருக்குதுப்பா!?). அந்த அறையின் மரக்கதவின் குமிழைத் திருகிக்கொண்டு உம்மென்று நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் வேதனைகள் அனைத்தும் தூரம் சென்றது.
"ஏன் ஆத்தா! எப்பப் பிடிச்சு இப்படி உம்மனாம் மூஞ்சியா மாறுனாவ? இது என் தங்கமயிலு இல்லியே வேற புள்ளை போலையே! நான்பெத்த வைரம் சிரிச்சிட்டே பம்பரமா சுத்தி சுத்தி வருமே! நீ யாரு புள்ளத்தா? என் குட்டிக் கிளியைப் பார்த்தியாத்தா?"
அவர் கூறியதைக் கேட்ட குட்டி சீதா அவரை நோக்கிச் சிட்டாய் பறந்து வந்து அவரை கட்டிக்கொண்டு,"ஏம்மா அழுறீங்க? உங்க வயித்துக்குள்ள இருக்குற தம்பி பயந்துக்கப் போறான்! பாவம்மா தம்பி பையன். இனிமே இப்படி அழாதீங்க சொல்லிட்டேன். இல்லாட்டிக்கா உங்களுக்கு அழுமூஞ்சினு பட்ட பேரு வச்சு வீட்டு சுவத்துல எழுதி வைப்பேன்" என்று வம்பிழுத்தாள் சின்னவள்.
முதலில் அவளைப் பார்த்து முறைத்த லச்சும்மா, பின்னர் அவளை அணைத்தபடியே,"ஆத்தா மீனாட்சி ஏம்புள்ளைய ஒருவழியா கண்டுகிட்டேன். அந்த உம்மனாம் மூஞ்சி யாருனும் காட்டிக் கொடுத்துறு ஆத்தா!" என்றார் நக்கலுடன்.
அதில் சிணுங்கியவாறே," ம்ம்மா..ஆ..!" என்று அவரை அணைத்துக் கொண்டாள். லச்சும்மாவும் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தார். தன் மனைவி மற்றும் மகள் நடத்திய பாச விளையாட்டில் கண் கலங்கிய வேலு (சேம் சோம்பேறித்தனம் ?) இறைவனிடம் அவர்கள் குடும்பம் என்றும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
லச்சும்மா வயிற்றில் நம் விதுரன் மூன்றுமாதக் குழந்தையாக வளர்ந்திருந்தான். வயலில் வேலை செய்வோரை மேற்பார்வையிட்டு வீடு வந்தார். அப்போது அவர் அங்குக் கண்ட விசயத்தில் அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது. லச்சும்மா வீட்டின் நடவிலிருந்த வானவெளியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அவரின் அக்கா பவளமோ அவரை பேச்சிலேயே சித்ரவதை செய்து கொண்டிருந்தார்.
"இது என்னடீ புதுக் கூத்தா இருக்கு... மக இன்னும் நாளே வருசத்துல குத்த வச்சுருவா! மறுமாசமே அவளுக்கு எவனையாச்சு புடிச்சு கட்டி வச்சோம்னா அவ மவறுருசம் புள்ள பெத்துருவா! இப்பப் போய் ஆத்தா வைத்த தள்ளிக்கிட்டு நின்னா என் தம்பி குடும்ப மானம் சந்திச் சிரிச்சுரும்... இப்படி அவனை நாலு பயலுக நக்கலா பேசத்தான் நல்லூர் சீமையில இருந்து உன்னக் நலங்கு வச்சு கூட்டியாந்தோமா?"
"அக்கா..ஆ!" என்று கத்தினார் வேலு.
"எய்யா! வேலு இதென்னய்யா இப்படி ஒரு சங்கடம் உனக்கு. இப்படி நாலு பேரு முன்னாடி தலை குனியத்தேன் நாங்க உன்ன ராசாவாட்டம் வளத்தோமா?"
"நாலு பேரு முன்னாடி தலை குனியிற மாதிரி சோலி ஒண்ணும் இங்க நடக்கல! எங்க வீட்டுக்கு இன்னோரு புது உசுரு வரப்போவுது! என் பொஞ்சாதி சதையில முளைச்சு என் ரத்தத்துல பூத்து என் மகள மாதிரியே சிரிக்கப் போற இன்னோர் பூ! அத கொண்டாடி சீராட்டாட்டிக் கூட பரவாயில்லை... அசிங்கப் படுத்தி தூத்தாத!"
"அதில்லய்யா..." என்று தொடங்கிய பவளத்தைத் தடுத்தது வேலுவின் கர்ஜனைக் குரல்.
"இன்னும் நா பேசி முடிக்கலைக்கா! நீ வந்து ஒப்பாரி வைக்குரியே உன் தம்பி என்ன செத்தா போயிட்டேன்! நான் இன்னொரு தடவை அப்பாவாயிட்டேன்! நான் செத்ததுக்கப்பறம் வந்து ஒப்பாரி வச்சிக்க. இப்போ போயி வேலையைப் பாரு!"
அவர் பேச்சில் அரண்டு போன பவளம் கண்களாலேயே இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார். லச்சும்மாவோ பதறி விரைந்து வந்து,"என்சாமி எதுக்குய்யா அபசகுனமா பேசுறீக! அத்தாச்சி ஏதோ கோவத்துல பேசுறாக, அதுக்கு இப்படி பேசனுமா?" என்று கண்களில் நீரோடு கணவனை அணைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் கூறி அமைதியடைந்தனர்.
இவ்வாறு கலவையான சூழலில் வாழ்க்கை நகர்ந்தது அவர்களுக்கு. விதுரன் பிறந்ததை ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். பெற்றோரின் பாசத்திலும் தமக்கையின் அன்பிலும் இனிய சூழலில் வளர்ந்தான் விதுரன். ஊராரின் ஏச்சுகளும் பேச்சுக்களும் தங்கள் குடும்பத்தை அண்டாமலிருக்க தங்கள் தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டி குடியேறினர்.
விதுரனிற்கு மூன்று வயதிருக்கையில் பள்ளிக்குச் சென்ற சீதா உம்மென்று வந்தாள். வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் விதுரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவு உணவு முடிந்ததும் தன் முடிவைப் பெற்றவரிடம் கூறி அவர்களை அதிரவைத்தாள் சீதா.
"ப்பா.. நான் இனிமே பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்ப்பா!"
அவள் கூற்றில் அதிர்ந்த லச்சும்மா,"என்னடீ இது பேச்சு பத்தாங்கிளாஸ் பரீட்சையை அடுத்த மாசம் வச்சுகிட்டு!" என்று மகளை அதட்டினார்.
அவரை பார்த்த வேலு அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மகளிடம்,"எதுனாலம்மா இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்ட? வாத்தியார் யாரும் வஞ்சாய்ங்களா? இல்ல கூட்டாளிகள் கூட சண்டையா? என்ன காரணம்னு சொல்லுடா!" என்று வினவினார்.
"அப்பா பள்ளிக்கூடத்துல கூட படிக்கிறவளுங்க என்கிட்டவந்து என்னடீ உங்க தம்பிக்கு ஆயா வேலை பார்த்துட்டே படிக்கப் போறியா?னு கேக்கறாளுகப்பா.. அவளுங்க தங்கச்சி தம்பிலாம் எங்க பள்ளிக்கூடத்திலேயே சின்ன கிளாஸ் படிக்குறாய்ங்கப்பா... நம்பத் தம்பி மட்டும் குழந்தையா இருக்கான்னு என்னிய ஆயான்னு ஏடாசி பண்ணுதாகப்பா.. " என்று சிணுங்கினாள் சீதா.
மகளைச் சமாதானப்படுத்த வேலு முயல்கையில், "இதுக்குத்தான் சொன்னேன் இந்த புள்ளய பெத்துக்குற வேணாமுன்னு யாரு கேட்டீக! புள்ள எப்படி வெக்கப்படுது பாருங்க! இப்படி பச்சை மனச வெசனப்பட விட்டுடீகளே!" என்றபடியே வந்தார் வேலுவின் தமக்கை பவளம்.
"இதிலென்ன ஐயித்த வெக்கமும் வெசனமும் பட? என் தம்பியை பார்த்து கிட இந்த பாழாய்ப்போன படிப்பு தடையா இருக்கு.. அதான் படிப்ப விடலாம்னு தோனுச்சு!" என்று தன் அத்தையை அதிர வைத்தாள்.
மகள் பள்ளிப் படிப்பை விட முடிவெடுத்தது வருத்தமளித்தாலும் அவளது சகோதரப் பாசம் அவர் நெஞ்சில் அளப்பரிய ஆனந்தத்தை வாரி இறைத்தது. மகளின் பக்குவப்பட்ட மனதை நினைத்து அந்த பெற்றோர் பெருமிதம் கொண்டனர். இதே சூழலில் தன் மகனை நினைத்த அந்த தந்தையுள்ளம் பிஞ்சு மனதில் வெறுப்பும் பேதைமையும் வராதிருக்க அவனை உறவுகளை விட்டுத் தள்ளி வளர்க்க முடிவு செய்தார்.
Last edited: