• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 1 - வினைச்சொல் விகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம்,

’கற்கக் கற்கண்டாய்’ இழையின் பின்னூட்டத்தில் ஒரு சகோதரி குழப்பம் விளைக்கும் சொற்களையும் நாளுக்கு நான்காய்ப் பதிவிடுக என்று கேட்டிருந்தார். அதுவும் சரிதான் என்று தோன்றியது.

ஆனால், அது என் ஒருவனால் மட்டுமே செவ்வனே செய்து முடித்துவிடக் கூடிய செயலன்று. அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை.

நீங்கள் கவனித்த சொற் குழப்பங்களை, எழுத்துப் பிழைகளை இங்கே சுட்டிக்காட்டுங்கள். அவற்றை விவாதித்து நாம் அனைவரும் கற்போம்!

அச்சகோதரி ‘போனாள் - போனால்’ குழப்பத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

நான் பொதுவாகத் தமிழ் வினைச்சொற்களின் ’விகுதி’ பற்றி இப்பதிவில் பேச விழைகிறேன்.

தொல்காப்பிய இலக்கணம் சொல்லைச் சொல்லாகத்தான் கையாள்கிறது. ஆனால், பின் வந்த நன்னூலில் சொல்லைக் கூறுபோட்டுப் ‘பகுபதம்’ & ‘பகாபதம்’ என்று இலக்கணம் கூறப்படுகிறது.

ஒரு தீவிர தொல்காப்பியர் இரசிகனாய் எனக்கு நன்னூலாரின் முறையில் முழுமையான உடன்பாடில்லை என்றாலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு நன்னூல் இலக்கணம் ஒரு எளிய வழி என்பதை மறுக்க இயலாது.

MEME-pagupatham.jpeg
:LOL::LOL::LOL::LOL:

நன்னூல் முறையில் சொல்லைத் துண்டு துண்டாக வெட்டுகையில் சொல்லின் முதலில் உள்ளது பகுதி என்றும், இறுதியில் உள்ளது விகுதி என்றும் அழைக்கப்படும்.

ஒரு சொல்லில் பகுதி விகுதிகளுக்கிடையே பிற கூறுகளும் இருக்கலாம்.

அவையாவன: இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியன.

பகுதி: இது சொல்லின் அடிப்படை உறுப்பு. வேர்ச்சொல்லாகவோ, அடிச்சொல்லாகவோ இருக்கும். ஏவல் வடிவில் இருக்கும் (நட, படி, ஓடு, வா, இரு, எழுது...)

விகுதி: இது சொல்லின் இறுதி. இது மூவிடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை) ஐம்பால் (ஆண், பெண், பலர், ஒன்று, பல) எண் (ஒருமை, பன்மை) ஆகியவற்றைக் குறிக்கும்.

இடைநிலை: இது பொதுவில் காலம் காட்டும் (த், ட், ற் - இறந்தகாலம்; கிறு, கின்று, இன்று - நிகழ்காலம்; ப், வ் - எதிர்காலம்)

சாரியை: இதற்குத் தனியே பொருள் இருக்காது. இது விகுதிக்கு முன் வரும். விகுதியை அதற்கு முன் உள்ள உறுப்போடு இயல்பாக ஒட்ட வைக்கப் பயன்படுகிறது.

சந்தி: இது புணர்ச்சி. இரண்டு உறுப்புகள் இணைகையில் அவற்றுக்கேற்ற புணர்ச்சி. (வல்லினம் மிகுதல், தோன்றல், திரிதல் போன்ற மாற்றங்கள்)

விகாரம்: இது உருமாற்றம். பகுதியோ, இடைநிலையோ, சந்தியினாலோ எழுத்துகள் மாறுதல் விகாரம் எனப்படும்.

கீழுள்ள படத்தில் இவற்றைக் காட்ட முயன்றுள்ளேன்.
‘வந்தனர்’ என்ற சொல் பகுபத உறுப்பிலக்கண முறையில் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள்.

pagupatham.png

சரி, நாம் விகுதிக்கு வருவோம்.

தமிழ் வினைச்சொற்களின் மிக முக்கியமான உறுப்பு இந்த விகுதிதான். இது நமக்குப் பல தகவல்களைத் தருகிறது.

நான் மேலேயே குறிப்பிட்டதைப் போல, விகுதி நமக்கு இடம், திணை, எண் ஆகிய மூன்று தகவல்களையும் தரும்.

எடுத்துக்காட்டாய்:

viguthi-details.png

விகுதியின் இந்த சூக்குமத்தைப் புரிந்துகொண்டால் ‘போனால் / போனாள்’ குழப்பமே வராதுதானே?

போனால் - இங்கு விகுதி ‘ஆல்’, இது 'if' என்ற பொருளுடையது.
(மழை வந்தால் குடைபிடி! வீட்டுக்குப் போனால் சாப்பிடு!)

போனாள் - இங்கு விகுதி ‘ஆள்’, இது உயர்திணைப் பெண்பால் வினைமுற்று விகுதி.
(மேலே இருக்கும் அட்டவணையைக் காண்க!)

போ+ன்+ஆள்: போதாலாகிய செயலைச் செய்தது ஒரு பெண் என்ற தகவலைப் பெறுகிறோம்.

வந்தால் / வந்தாள்
செய்தால் / செய்தாள்
படித்தால் / படித்தாள்


எல்லாம் இவ்வாறே பொருள் தரும்.

இனி இந்தக் குழப்பம் உங்களுக்கு வராதுதானே?

(மேலே காட்டிய பகுபத இலக்கணம் அனைத்தும் ‘வினைமுற்று’ என்றவகை வினைச்சொற்களுக்கானவை. மேலே காட்டிய அனைத்துத் தகவல்களையும் முற்றாகத் தருவது ‘வினைமுற்று’ ஆகும். இதில் சில தகவல்களைத் தராமல் எஞ்சி இருக்கும் வினைச்சொற்கள் ‘வினையெச்சம்’ எனப்படும். அவற்றை நாம் நமது வல்லினம் மிகுதல் பகுதிகளில் பார்ப்போம்!)

பயிற்சி: ஏதேனும் கதையை எடுத்துக்கொண்டு அதில் வரும் வினைமுற்றுச் சொற்களைப் பட்டியலிடுக்கள்.

பின் அச்சொற்களின் விகுதிகளைத் தனியாக எழுதி அது தரும் தகவல்கள் என்னென்ன என்று அலசுங்கள் (இதைத் தனியாக எழுதத் தேவையிருக்காது, வேண்டுமானால் எழுதிப் பாருங்கள்!)

----
கொசுறு: என் மனைவி குறிப்பிட்டது (அவளும் இத்தளத்தின் வாசகி. சொல்லப்போனால் (’சொல்லப்போனாள் அல்ல!) இத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தவளே அவள்தான்!)

சில இடங்களில் ‘தமயன்’ / ‘தனயன்’ குழப்பத்தைக் கண்டதாக அவள் சொன்னாள்.

தமயன் / தமையன்: இது தூய தமிழ்ச் சொல். இதன் பொருள் ‘அண்ணன்’ (மூத்த சகோதரன்) என்பது.

[இதே அடிப்படையில் ‘தமக்கை’ என்ற சொல்லும் உள்ளது. இது ‘அக்கா’வைக் குறிக்கும்.]

தனயன்: இது சமற்கிருதச் சொல். இதன் பொருள் ‘மைந்தன் / மகன்’ என்பது.

[இதனை ‘னையன்’ என்றும் எழுதுகின்றனர். அவ்வாறே ‘தனயள்’ என்பது மகளைக் குறிக்கும்!]

[’சகோதரன்’ என்ற சொல்லும் சமற்கிருதம்தான்! ‘உதரம்’ என்றால் வயிறு, ‘சக+உதரன்’ - ஓரே வயிற்றில் பிறந்தவன் என்று பொருள்! தமிழில் இதனை ‘உடன்பிறப்பு’ என்றோ ‘கூடப் பிறந்தவன்’ என்றோ சொல்கிறோம்!]
-----

(அடுத்த பதிவில் ‘கள்’ விகுதியைப் பற்றிப் பேசுவோம், இதிலும் பலருக்குப் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது!)

உங்கள் கருத்துகளை / வினாக்களைத் தயங்காது கூறுங்கள் / வினவுங்கள்..

நன்றி,
-வி
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
உள்ளேன் ஐயா.. ???
இன்று உங்களை எதிர்பார்த்தேன். வந்ததற்கு நன்றி அண்ணா. ???
ஏதோ இப்ப விடுப்புன்றதால ரெண்டு நாளா தெனமும் எழுத முடியுது... வேலைக்குப் போறப்ப இப்படிலாம் எதிர்பார்க்கக் கூடாது... :giggle::giggle::giggle:

அதுமட்டுமில்லாம, தெனமும் பதிவு போட்டா கத்துக்குறது நீர்த்துப் போயிடும்... அதனால, வாரத்துக்கு ஒன்னு ரெண்டு பதிவோட நிறுத்துக்குவோம்...

’கற்கக் கற்கண்டாய்’ பகுதியை வாரத்துக்கு ஒருமுறையும், இடையிடையே ‘உதிரி’ பகுதியை இயன்றளவும் இடுகிறேன்... (உதிரி பேருக்கேத்த மாதிரி கோர்வையா இல்லாத, சின்னச் சின்ன இலக்கண தகவல்களாத்தான் இருக்கும்!)

எப்போதும் முதல் மாணவியா ஆஜர் ஆகுறதுக்கு உனக்கு ஒரு சிறப்புப் பாராட்டு (y)(y):):)

(’ஏண்டி எப்பப் பாரு மொபைலும் கையுமாவே இருக்க? வந்து இந்தக் காயலாம் நறுக்கு’னு உங்க அம்மாவோ அப்பாவோ திட்டினா அதுக்கு நான் பொறுப்பில்ல!!)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மிகவும் நன்றி சகோதரரே நான் கேட்ட சிறு கேள்விக்கு தங்களின் பெரிய பதிவு அருமை இது எனக்கு மட்டுமில்லை இதை படிக்கும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான பதிவு :love::love: சொல்ல போனால் தமிழில் கதை கட்டுரை ஏனைய பிற பதிவு கொடுக்கும் அனைவரும் உங்களின் இலக்கண பதிவை படித்து விட்டு ஆரம்பித்தால் பிழைகள் இல்லாமல் எழுத்து பிரயோகம் செய்ய முடியும்(y)(y)(y) என்பதே எனது இப்போதைய எண்ணம் அருமையான பதிவு
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
பகுபத உறுப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள தமிழ் 11 புதிய பாடநூலைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்....விரிவாக எளிய தமிழிலேயே உள்ளது
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இதைப்போலவே ன- ண, ற-- ர, ச, ஷ, ஸ--- இந்த எழுத்துக்களை எப்படி எந்த முறையில் எந்த இடத்தில் பயன் படுத்துவது என்பதையும் விளக்கவும் தங்களின் ஓய்வு நேரத்தில் இந்த பதிவை செய்யவும் தோழரே மிக்க நன்றி
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஒஹ்.. இது உதிரி இலக்கணப் பகுதியா அண்ணா.. நன்று. நானும் நான்காம் வேற்றுமை உருபு எங்கே என்று நினைத்தேன். ??

ஏன் என்றால் நேற்று நான் கதை எழுதுகையில் அனைத்து வேற்றுமை விரியும் கண்ணில் பட்டு வல்லினம் மிகும் மிகாவை கவனிக்க வைத்தது. ☺☺☺

எனக்கு இன்று நீங்கள் கூறிய பிழை வராது. நிறைய தமிழ் நூல்கள் படித்துள்ளதால் வார்த்தைகளின் எழுத்தே மூளையில் பதிந்து விட்டது. ஆனாலும் நீங்கள் இன்று கூறிய விதம் என்னை கவர்ந்தது அண்ணா.. இலக்கணத்தை கரைத்துக் குடித்துள்ளீர்கள்.. ???? வாழ்த்துகள்.

பொதுவாக இந்த புது சொற்களின் அர்த்தத்திற்கு பயந்தே அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற சொல்லை பயன்படுத்துவேன். ???

சரி இனி வாரம் ஒன்றோ இரண்டோ படிப்போம். ?? கடைசி ஒரு கேள்வி.. அண்ணி இங்கே உள்ளார் என்றீர்கள் அல்லவா அவர்கள் என்ன பெயரில் உள்ளார்கள் என்று கூறவும்.. ?? ( சும்மா தான் தெரிந்து கொள்வதற்கு.. கண்டிப்பாக கூற வேண்டும் என்றில்லை.. ☺)

அம்மா என்னிடம் காய் நறுக்கச் சொல்வதற்கு அவர்களே சமைத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள். ??? சொல்லிச் சொல்லி அலுத்து என்னமோ பண்ணு என்று விட்ட கேஸ் நானு.. ????
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மிகவும் நன்றி சகோதரரே நான் கேட்ட சிறு கேள்விக்கு தங்களின் பெரிய பதிவு அருமை இது எனக்கு மட்டுமில்லை இதை படிக்கும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான பதிவு :love::love: சொல்ல போனால் தமிழில் கதை கட்டுரை ஏனைய பிற பதிவு கொடுக்கும் அனைவரும் உங்களின் இலக்கண பதிவை படித்து விட்டு ஆரம்பித்தால் பிழைகள் இல்லாமல் எழுத்து பிரயோகம் செய்ய முடியும்(y)(y)(y) என்பதே எனது இப்போதைய எண்ணம் அருமையான பதிவு
மிக்க நன்றி...

ஒன்றைச் செய்கிறோம் என்பதனினும், பயனுடைய ஒன்றைச் செய்கிறோம் என்பதே தலை. அவ்வகையில், ‘இது தேவை’ என்று எனக்குச் சுட்டிக்காட்டி எழுத வைத்த தங்களுக்கே இதன் புகழ் சேரும்...

இப்பதிவுகள் இங்கிருக்கும் எழுத்தாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அதைவிட வேறு வெகுமதி எனக்கு வேண்டா...

:giggle::giggle::giggle::coffee::coffee:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இதைப்போலவே ன- ண, ற-- ர, ச, ஷ, ஸ--- இந்த எழுத்துக்களை எப்படி எந்த முறையில் எந்த இடத்தில் பயன் படுத்துவது என்பதையும் விளக்கவும் தங்களின் ஓய்வு நேரத்தில் இந்த பதிவை செய்யவும் தோழரே மிக்க நன்றி
செய்கிறேன்... (y):)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பகுபத உறுப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள தமிழ் 11 புதிய பாடநூலைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்....விரிவாக எளிய தமிழிலேயே உள்ளது
அப்படியா.. எனக்கு வார்த்தை மட்டும் குடுத்து எப்படி பிரிக்கணும் என்று மட்டும் தாண்டா இருந்தது. இப்போ இந்த வந்தனர் இருக்குல்ல அதை பிரித்து.. வா பகுதி ந் சந்தி ந் த் ஆனது விகாரம் இப்படின்னு சொல்லிருக்கும். நான் என்ன பண்ணுவேன் மனப்பாடம் தான் பாரு இப்போ கூட சொல்றேன்.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top