Allivisalatchi
முதலமைச்சர்
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அப்படியே நமது மொழியில் இணைந்து உள்ள சமஸ்கிருத சொற்களை பிரித்து அதனை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா???
இயலும், ஆனால், ஓரளவிற்குத்தான்...தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அப்படியே நமது மொழியில் இணைந்து உள்ள சமஸ்கிருத சொற்களை பிரித்து அதனை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா???
மிக்க நன்றி உங்களுக்கு அந்த நூல் கிடைக்க வாழ்த்துக்கள்இயலும், ஆனால், ஓரளவிற்குத்தான்...
பல சொற்கள் ‘தமிழா, சமற்கிருதமா’ என்று அறுதியிட்டுக் கூற இயலாத நிலையில் ஆதிமுதலே கலந்துள்ளன (மனம், காலம், குங்குமம், முகம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்!)
மேலும், இதற்கென்று ஏதும் விதிகள் இல்லை, ஒரு சொல்லை அதன் இலக்கிய பயன்பாட்டின் வழி மட்டுமே மூல மொழியை அறிய வேண்டியிருக்கிறது... இருமொழி இலக்கண இலக்கியப் பயிற்சி மட்டுமே இதற்குத் துணை நிற்கும்! (சான்றாக, ‘விண்ணப்பம்’ என்ற சொல் தூய தமிழ்ச் சொல் போலத் தோன்றினாலும் இது ‘விஞ்ஞாபநம்’ என்ற சமற்கிருதச் சொல்லின் மரூஉ, அதே வேளை ‘அவசியம்’ (அவஷ்யகம் என்று சமற்கிருதத்தில் வழங்குகிறது), ‘பூஜை’ போன்றவை சமற்கிருதம் என்று தோன்றினாலும் இவை தூய தமிழ்ச் சொற்களே (’அகத்தியம்’ என்பது மருவி ‘அவசியம்’ ஆனது, ‘பூசெய்’ என்பது ‘பூசை’ ஆனது, இவற்றுக்கு சமற்கிருதத்தில் வேர்ச்சொல்லோ மூலமோ இல்லை!)
எனவே, தமிழ்-சமற்கிருதச் சொற்கள் முத்தும் மணியும் போலன்றிப் பாலுந்தேனும் போலக் கலந்துவிட்டவை... இவற்றைப் பிரித்தெடுத்தல் ஏறக்குறைய இயலாத காரியம்... (காரியம், காரணம் என்ற சொற்களும் இருமொழிக்கும் உரியவை, எதற்கு ஆதியாய் உரியவை என்று தெரியாது!)
நான் என்னால் இயன்றவரை பட்டியலிட முயல்கிறேன்...
----
கொசுறு:
பாம்பன் சிரீ குமரகுருதாச சுவாமிகள் தாம் பாடிய ’சேந்தன் செந்தமிழ்’ என்று ம ‘அமைதி ஐம்பது’ என்ற நூலைத் தனித்தமிழ் நூலாக படைத்தருளியுள்ளார். இந்நூலின் முன்னுரையில் சுவாமிகள் தமிழில் புழங்கும் சுமார் 3000 சமற்கிருதச் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கிணையான தமிழ்ச் சொற்களையும் தந்துள்ளார்... இந்நூலை சுவாமிகளின் பத்தர் ஒருவரிடம் காணும் வாய்ப்பு எனக்கு ஒரு முறை கிட்டியது, பின்னர் நானும் நூலை எனக்கு ஒரு படி வாங்க முயன்றேன், முயற்சி பலிக்கவில்லை...
இறையருளால் அந்நூல் கிட்டினால் பெரும் உதவியாக இருக்கும்... பார்ப்போம்...
நன்றிமிக்க நன்றி உங்களுக்கு அந்த நூல் கிடைக்க வாழ்த்துக்கள்
உண்மையில் ரகரமும் றகரமும் உச்சரிப்பிலும் மிகுந்த வேறுபாடு உடையவை... இதைப் பற்றித்தான் அடுத்த பதிவை எழுதப் போகிறேன் இப்போது...ஒன்று போல் இருக்கும் உச்சரிக்கும் பொழுது.....
ஆனால் எத்தனை எத்தனை வேறுபாடு.....
இது ஒரு நல்ல வினா...? enaku pothuvaaga oru doubt iruku bro....
eppalaam, " Cha" "Chi" enru azhuthamagavum, "sa" "si" enru menmaiyagavum "ச" varisaiyai pronounce panna vendum.. ean ?