Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்??? உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதையின் 16வது எபியோட வந்துட்டேன்...???
கதைக்கு இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...??? தொடர்ந்து இதே மாதிரி லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்???
அந்த ‘காட்ஸில்லா’ ஓடிப் போய் ஒரு வாரம் கழிந்தது. இந்த ஒரு வாரத்தில் நான் எங்கும் வெளியே செல்லவில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் சுற்றார்த்தாரின் பார்வை என்னை துளைத்தெடுத்தது.
‘இவங்க ஏன் என்ன இப்படி பாக்குறாங்க… என்னமோ நான் தான் ஓடிப் போன மாதிரி…???’
என்னை பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுத்தனர். சிலர் என் முன்னாலேயே என்னை தவறாகப் பேசினர். இவற்றால் நான் எங்கும் வெளியே செல்லாமல் இருந்தேன்.
வீட்டிலேயே அடைந்து இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் இதைப் பற்றி க்ரிஷிடம் கூறியபோது, அவனோ “நீ இப்படி வீட்டிலேயே அடைஞ்சு இருந்தா தான் எல்லாருக்கும் உன் மேல தப்பான அபிப்ராயம் வரும். அவங்க சொல்றத எல்லாம் காதிலேயே வாங்காம கடந்துடு… நாம் ஏதாவது ஒன்னுக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தா தான் அது எல்லாராலையும் கவனிக்கப்படும்… நீ அவங்க சொல்றத பெருசா எடுத்துக்காம விட்டுட்டா அவங்க ஆட்டோமாட்டிக்கா அடுத்த விஷயத்துக்கு போயிடுவாங்க…” என்று எனக்கு அட்வைஸ் பண்ணி மறுபடியும் வெளியில் செல்ல வைத்தான்.
அவன் சொன்னதும் சரியே என்பது போல சில நாட்களில் என்னை விட்டு பக்கத்துக்கு வீட்டு அனிதாவின் டிவோர்ஸ் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
வாழ்க்கையும் ஒரு பக்கம் சென்றுகொண்டே இருந்தது பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்… என் ஜாதகத்தில் திருமண யோகம் வராததால் என் கல்யாணப் பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு தனியாக கடவுளிடம் நன்றி கூறினேன்???
வீடும் பழைய நிலைமைக்குத் திரும்பியது. எப்போதும் போல என் அம்மாவையும் அபியையும் வம்பிழுப்பது, சாண்டியுடன் வெட்டியாக ஊர் சுற்றுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, புலனத்தில் தோழிகளுடன் அரட்டையடிப்பது, நான் சமைத்த ‘கொடுமை’யை போட்டோ எடுத்த ’படவரி’யில் பதிவேற்றுவது, கடைசியாக ‘பற்றிய’த்தில் க்ரிஷுடன் அளவலாவுவது என்று என் நேரம் ‘பயனுள்ளதாக’வே கழிந்தது.
இதற்கிடையில் ராகுலின் ஞாபகம் எழுந்தாலும், என் காதலை சற்று ஆறப் போடுவோம் என்று அவனை (அவன் காதலை) நோக்கி எந்த அடியும் நான் வைக்கவில்லை. மேலும் எப்போதும் நானே அவனிடம் ‘வழிவது’ போன்று தோன்றியது. அதனால் சில நாட்கள் அவனைக் காண்பதை தவிர்த்து வந்தேன். அவன் பேச்சு எழுந்தாலே அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அபி அவன் நண்பனுடன் சேர்ந்து ‘மல்டி குயுஸைன் ரெஸ்டாரண்ட்’ ஒன்றை ஆரம்பித்தான். அங்கு இந்தியன், சைனீஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த யோசனை பிடிக்காத அப்பா கூட அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு உள்ள டிமாண்ட்டைப் பார்த்து வாயடைத்து போனார்.
எனக்கு எப்போதும் அபியின் சமையல் பிடிக்கும். வீட்டில் கூட ஏதாவது புதிதாக சமைத்தால் நான் தான் அதை சுவைப்பேன். அப்பாவிற்கு அண்ணன் சமையலறையில் இருந்தாலே பிடிக்காது. ஆண்கள் சமையல் செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்குள்.
அபி பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை சமையல் கலை பிரிவில் சேர நாட்டம் கொள்ள, அப்பாவோ ‘இன்ஜினியரிங்’ தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதில் சேர்த்து விட்டார். அதிலிருந்தே இருவருக்கும் மோதல் தான்.
கல்லூரியில் அவனுக்கு பிடித்த பிரிவு சேர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், பகுதி நேரமாக சமையல் கலையில் ‘டிப்ளமோ’ முடித்தான்…. அப்பாவிற்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்ததும் அப்பாவோ அவன் ஐடி கம்பெனியில் வேலை தேடுவான் என்று எதிர்பார்க்க, இவனோ அங்கெல்லாம் வேலைக்கு செல்ல முடியாது என்று கூற அன்று வீட்டில் பெரும் கலவரமே.
அதன் பின்பு இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அபியும் பேங்க் லோன் விஷயமாக அலைந்து திரிய அதற்கு அப்பா சிறிதும் உதவ முன்வரவில்லை. கடைசியாக அவன் நண்பனின் உதவியோடு பேங்க் லோன் கிடைத்து ரெஸ்டாரண்ட்டை கஷ்டப்பட்டு திறந்துவிட்டான்.
நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு அடிக்கடி செல்வேன். இப்போதும் அவனின் அதிகாரப்பூர்வ சுவை தேர்வாளர் (official food taster???) நான் தான்.
முதல் தடவை அங்கு சென்ற போது அந்த ரெஸ்டாரண்ட்டின் உட்புற வடிவமைப்பைப் பார்த்து வியந்து தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு அவையெல்லாம் அவன் நண்பனின் யோசனை என்றே கூறினான்.
“எப்படி அபி உனக்கு இப்படி ஒரு அறிவாளி பிரென்ட்.. ஒரு தடவ கூட இந்த மாதிரி பிரென்ட்டெல்லாம் என் கண்ணுல காட்டவே மாட்டிங்குற???… எப்போ பாத்தாலும் பல்லிக்கு பாண்ட் சட்ட போட்ட மாதிரி ஒருத்தனையும் சட்டைக்கு போடுற கஞ்சியை குடிச்சுட்டு வெரப்பா இருக்குற ஒருத்தனையும் தான வீட்டுக்கு கூட்டிட்டு வருவ???… இவன் யாரு புது பிரென்ட்…???”
“நீயெல்லாம் யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டியா…” என்று என்னைஅடிக்க துரத்தினான்.
அதன் பின்பு அவன் நண்பனைப் பற்றி அவன் பேசியதில்லை. நானும் கேட்கவில்லை. இன்று ஏதோ புதிதாக செய்ததாக என்னை அழைத்தான். அங்கு சென்ற போது நிறைய ‘கஸ்ட்மர்ஸ்’ இருந்ததால் நான் காத்திருந்தேன்.
அப்போது அங்கு ராகுலை பார்த்தேன். அவனின் தோழர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். அவனின் மகிழ்ச்சியான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் நான் இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையையும் மனதிற் கொண்டு என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன்.
சிறிது நேரம் அங்கு விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வந்து ரொம்ப நேரம் ஆனதை உணர்ந்து அபியைத் தேடினேன்.
அங்கு ஒரு ஓரத்தில் அபியும் ராகுலும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு வருடங்கள் ராகுல் என் எதிர் வீட்டில் இருந்தாலும் இது வரை அபியும் ராகுலும் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்றோ இருவரும் பல நாட்கள் பழகிய தோழர்கள் போல பேசிக்கொள்வது எனக்கு வியப்பக இருந்தது.
அவர்களின் நட்பில் ஆர்வமாகி அவர்கள் அனைவரும் வெளியேற காத்திருந்தேன். அவன் செல்லும்போது என்னை ஒரு பார்வை பார்த்தான். ‘ஸ்ஸ்ஸ்… உன்ன பாக்கக்கூடாதுன்னு 2 மாசமா பல்ல கடிச்சுட்டு இருந்தா… ஒத்த பார்வைல ஃபுல்லா ஃபிளாட் ஆக்கிட்டு போயிட்டியே டா…’ என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது.
நான் அங்கு நின்று வாசலையே வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபி என்னை உலுக்கி, “அங்க என்ன பாத்துட்டு இருக்க?” என்று வினவினான்.
நானோ வாய்க்கு வந்ததை உலறிவிட்டு அவனை இழுத்து கொண்டு சமையலறைக்கு சென்றேன். அங்கு அவன் சமைத்ததை சுவைத்துக்கொண்டே அவனுக்கும் ராகுலுக்கு என்ன தொடர்பு என்று கேட்டேன்.
அதற்கு அவன், “எதிர் வீட்டுல இருக்குறவனை எப்படி தெரியாம இருக்கும்…”
“நம்புற மாதிரி இல்லையே…” என்று சந்தேகத்தோடு பார்த்தேன் நான்.
“நம்பு டி எரும… 2 வருஷமா தான் அவன எனக்கு பழக்கம். பழகுறதுக்கு ஈஸியா ரொம்ப பிரெண்ட்லியா இருந்தான். நான் படிச்சுட்டு வேலைக்கு போக பிடிக்காம சும்மா சுத்திட்டு இருந்தப்போ இவன் தான் எனக்கு பிடிச்ச வேலைய பார்க்க சொல்லி என்கரேஜ் பண்ணான்.”
“டேய் அண்ணா உண்மைய சொல்லு… இந்த ரெஸ்டாரன்டோட ‘சைலண்ட் பார்ட்னர்’ யாரு?”
அவனோ சிரித்துக்கொண்டே, “ராகுல் தான்…” என்று கூறினான்.
அதைக் கேட்ட அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றேன். என்னை யாரோ பார்ப்பது என்னால் உணரமுடிந்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை.
********
கதைக்கு இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...??? தொடர்ந்து இதே மாதிரி லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்???
ஈர்ப்பு 16
அந்த ‘காட்ஸில்லா’ ஓடிப் போய் ஒரு வாரம் கழிந்தது. இந்த ஒரு வாரத்தில் நான் எங்கும் வெளியே செல்லவில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் சுற்றார்த்தாரின் பார்வை என்னை துளைத்தெடுத்தது.
‘இவங்க ஏன் என்ன இப்படி பாக்குறாங்க… என்னமோ நான் தான் ஓடிப் போன மாதிரி…???’
என்னை பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுத்தனர். சிலர் என் முன்னாலேயே என்னை தவறாகப் பேசினர். இவற்றால் நான் எங்கும் வெளியே செல்லாமல் இருந்தேன்.
வீட்டிலேயே அடைந்து இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் இதைப் பற்றி க்ரிஷிடம் கூறியபோது, அவனோ “நீ இப்படி வீட்டிலேயே அடைஞ்சு இருந்தா தான் எல்லாருக்கும் உன் மேல தப்பான அபிப்ராயம் வரும். அவங்க சொல்றத எல்லாம் காதிலேயே வாங்காம கடந்துடு… நாம் ஏதாவது ஒன்னுக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தா தான் அது எல்லாராலையும் கவனிக்கப்படும்… நீ அவங்க சொல்றத பெருசா எடுத்துக்காம விட்டுட்டா அவங்க ஆட்டோமாட்டிக்கா அடுத்த விஷயத்துக்கு போயிடுவாங்க…” என்று எனக்கு அட்வைஸ் பண்ணி மறுபடியும் வெளியில் செல்ல வைத்தான்.
அவன் சொன்னதும் சரியே என்பது போல சில நாட்களில் என்னை விட்டு பக்கத்துக்கு வீட்டு அனிதாவின் டிவோர்ஸ் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
வாழ்க்கையும் ஒரு பக்கம் சென்றுகொண்டே இருந்தது பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்… என் ஜாதகத்தில் திருமண யோகம் வராததால் என் கல்யாணப் பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு தனியாக கடவுளிடம் நன்றி கூறினேன்???
வீடும் பழைய நிலைமைக்குத் திரும்பியது. எப்போதும் போல என் அம்மாவையும் அபியையும் வம்பிழுப்பது, சாண்டியுடன் வெட்டியாக ஊர் சுற்றுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, புலனத்தில் தோழிகளுடன் அரட்டையடிப்பது, நான் சமைத்த ‘கொடுமை’யை போட்டோ எடுத்த ’படவரி’யில் பதிவேற்றுவது, கடைசியாக ‘பற்றிய’த்தில் க்ரிஷுடன் அளவலாவுவது என்று என் நேரம் ‘பயனுள்ளதாக’வே கழிந்தது.
இதற்கிடையில் ராகுலின் ஞாபகம் எழுந்தாலும், என் காதலை சற்று ஆறப் போடுவோம் என்று அவனை (அவன் காதலை) நோக்கி எந்த அடியும் நான் வைக்கவில்லை. மேலும் எப்போதும் நானே அவனிடம் ‘வழிவது’ போன்று தோன்றியது. அதனால் சில நாட்கள் அவனைக் காண்பதை தவிர்த்து வந்தேன். அவன் பேச்சு எழுந்தாலே அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அபி அவன் நண்பனுடன் சேர்ந்து ‘மல்டி குயுஸைன் ரெஸ்டாரண்ட்’ ஒன்றை ஆரம்பித்தான். அங்கு இந்தியன், சைனீஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த யோசனை பிடிக்காத அப்பா கூட அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு உள்ள டிமாண்ட்டைப் பார்த்து வாயடைத்து போனார்.
எனக்கு எப்போதும் அபியின் சமையல் பிடிக்கும். வீட்டில் கூட ஏதாவது புதிதாக சமைத்தால் நான் தான் அதை சுவைப்பேன். அப்பாவிற்கு அண்ணன் சமையலறையில் இருந்தாலே பிடிக்காது. ஆண்கள் சமையல் செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்குள்.
அபி பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை சமையல் கலை பிரிவில் சேர நாட்டம் கொள்ள, அப்பாவோ ‘இன்ஜினியரிங்’ தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதில் சேர்த்து விட்டார். அதிலிருந்தே இருவருக்கும் மோதல் தான்.
கல்லூரியில் அவனுக்கு பிடித்த பிரிவு சேர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், பகுதி நேரமாக சமையல் கலையில் ‘டிப்ளமோ’ முடித்தான்…. அப்பாவிற்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்ததும் அப்பாவோ அவன் ஐடி கம்பெனியில் வேலை தேடுவான் என்று எதிர்பார்க்க, இவனோ அங்கெல்லாம் வேலைக்கு செல்ல முடியாது என்று கூற அன்று வீட்டில் பெரும் கலவரமே.
அதன் பின்பு இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அபியும் பேங்க் லோன் விஷயமாக அலைந்து திரிய அதற்கு அப்பா சிறிதும் உதவ முன்வரவில்லை. கடைசியாக அவன் நண்பனின் உதவியோடு பேங்க் லோன் கிடைத்து ரெஸ்டாரண்ட்டை கஷ்டப்பட்டு திறந்துவிட்டான்.
நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு அடிக்கடி செல்வேன். இப்போதும் அவனின் அதிகாரப்பூர்வ சுவை தேர்வாளர் (official food taster???) நான் தான்.
முதல் தடவை அங்கு சென்ற போது அந்த ரெஸ்டாரண்ட்டின் உட்புற வடிவமைப்பைப் பார்த்து வியந்து தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு அவையெல்லாம் அவன் நண்பனின் யோசனை என்றே கூறினான்.
“எப்படி அபி உனக்கு இப்படி ஒரு அறிவாளி பிரென்ட்.. ஒரு தடவ கூட இந்த மாதிரி பிரென்ட்டெல்லாம் என் கண்ணுல காட்டவே மாட்டிங்குற???… எப்போ பாத்தாலும் பல்லிக்கு பாண்ட் சட்ட போட்ட மாதிரி ஒருத்தனையும் சட்டைக்கு போடுற கஞ்சியை குடிச்சுட்டு வெரப்பா இருக்குற ஒருத்தனையும் தான வீட்டுக்கு கூட்டிட்டு வருவ???… இவன் யாரு புது பிரென்ட்…???”
“நீயெல்லாம் யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டியா…” என்று என்னைஅடிக்க துரத்தினான்.
அதன் பின்பு அவன் நண்பனைப் பற்றி அவன் பேசியதில்லை. நானும் கேட்கவில்லை. இன்று ஏதோ புதிதாக செய்ததாக என்னை அழைத்தான். அங்கு சென்ற போது நிறைய ‘கஸ்ட்மர்ஸ்’ இருந்ததால் நான் காத்திருந்தேன்.
அப்போது அங்கு ராகுலை பார்த்தேன். அவனின் தோழர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். அவனின் மகிழ்ச்சியான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் நான் இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையையும் மனதிற் கொண்டு என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன்.
சிறிது நேரம் அங்கு விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வந்து ரொம்ப நேரம் ஆனதை உணர்ந்து அபியைத் தேடினேன்.
அங்கு ஒரு ஓரத்தில் அபியும் ராகுலும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு வருடங்கள் ராகுல் என் எதிர் வீட்டில் இருந்தாலும் இது வரை அபியும் ராகுலும் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்றோ இருவரும் பல நாட்கள் பழகிய தோழர்கள் போல பேசிக்கொள்வது எனக்கு வியப்பக இருந்தது.
அவர்களின் நட்பில் ஆர்வமாகி அவர்கள் அனைவரும் வெளியேற காத்திருந்தேன். அவன் செல்லும்போது என்னை ஒரு பார்வை பார்த்தான். ‘ஸ்ஸ்ஸ்… உன்ன பாக்கக்கூடாதுன்னு 2 மாசமா பல்ல கடிச்சுட்டு இருந்தா… ஒத்த பார்வைல ஃபுல்லா ஃபிளாட் ஆக்கிட்டு போயிட்டியே டா…’ என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது.
நான் அங்கு நின்று வாசலையே வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபி என்னை உலுக்கி, “அங்க என்ன பாத்துட்டு இருக்க?” என்று வினவினான்.
நானோ வாய்க்கு வந்ததை உலறிவிட்டு அவனை இழுத்து கொண்டு சமையலறைக்கு சென்றேன். அங்கு அவன் சமைத்ததை சுவைத்துக்கொண்டே அவனுக்கும் ராகுலுக்கு என்ன தொடர்பு என்று கேட்டேன்.
அதற்கு அவன், “எதிர் வீட்டுல இருக்குறவனை எப்படி தெரியாம இருக்கும்…”
“நம்புற மாதிரி இல்லையே…” என்று சந்தேகத்தோடு பார்த்தேன் நான்.
“நம்பு டி எரும… 2 வருஷமா தான் அவன எனக்கு பழக்கம். பழகுறதுக்கு ஈஸியா ரொம்ப பிரெண்ட்லியா இருந்தான். நான் படிச்சுட்டு வேலைக்கு போக பிடிக்காம சும்மா சுத்திட்டு இருந்தப்போ இவன் தான் எனக்கு பிடிச்ச வேலைய பார்க்க சொல்லி என்கரேஜ் பண்ணான்.”
“டேய் அண்ணா உண்மைய சொல்லு… இந்த ரெஸ்டாரன்டோட ‘சைலண்ட் பார்ட்னர்’ யாரு?”
அவனோ சிரித்துக்கொண்டே, “ராகுல் தான்…” என்று கூறினான்.
அதைக் கேட்ட அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றேன். என்னை யாரோ பார்ப்பது என்னால் உணரமுடிந்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை.
********