ஹாய் மக்காஸ்...
எல்லோரும் எப்படி இருக்கீங்க....? இது என்னோட அடுத்தக்கதையோட டீசர் இல்லனா இண்ட்ரோ எப்படினாலும் சொல்லலாம்....
என்ன தைரியம் இருந்தா அடுத்த கதையோட வந்திருப்ப..? அப்படின்னு நீங்க அலறுவது என் மனசுக்கு புரிஞ்சாலும் என் மூளைக்கு புரிய மாட்டேங்குதே...என்ன பண்ண...?
சரி கோபப்படாம வாங்க கதையை பத்தி கொஞ்சமா பார்த்திடலாம்....
தலைப்பு : உன்னாலே உலகம் அழகாச்சே!!!
நாயகன் : ஃபெரோஸ் ஸ்டீபன் , அருண் செல்வம்
நாயகி : ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி
டீசர் 1:
"கண்மணி..." தனது முதுகிற்கு பின்னால் கேட்கும் செல்லமான அழைப்பில் இருந்தே அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை அறிந்து கொண்டவளுக்கு ரத்தக் கொதிப்பு உயர்நிலையை அடைந்தது....
'அவனைக் கண்டுக்காத மாதிரியே திரும்பி பார்க்காம ஓடிடனும்' மனதிற்குள் நினைத்தவள் பக்கத்தில் நின்ற தனது தோழியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளோ கனகச்சிதமாய் அவன் நின்ற திசையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்...
இன்றைக்குள் அவளது பார்வை தன்னை அழைத்தவனைவிட்டு மீளாது என்பதை உணர்ந்தவள், முன்னேறி மெதுவாய் இரண்டு அடிகளாய் எடுத்து வைத்து பின் மெதுவாய் தனது வேகத்தைக் கூட்ட, இப்போது அவனது குரல் அவளது முதுகிற்கு பின்னால் கேட்டது...
"ஸ்ரீ ஆண்டாள் (எ) அபித்த குஜலாம்பாள் கொஞ்சம் நிக்றேளா.." அவளது பெயரைக் கிண்டலாய் மொழிந்து அவள் முன் சொடக்கிட்டு அழைத்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..
தனது முழுபெயரையும் தவறாய் உச்சரிக்கும் சீனியரை முறைக்க முடியாமல், "அண்ணா..." என்ற அழைப்புவிடுக்க
அவளது அழைப்பில் முகத்தைச் சுருக்கியவன், "ஏன்னா'ன்னு வேணும்னா கூப்பிடு கண்மணி...அண்ணா வேணாமே..." பாவம் போலும் அவனது குரல் இருந்தாலும் முகத்தில் அவ்வளவு சீண்டலும் இதழில் அழகான சிரிப்பும் நிலைத்திருந்தது..
அவனது பேச்சில் வெளிப்படையாக முறைத்தவள், "எதுக்கு இப்படி என்னைப் பாடாப்படுத்தி எடுக்றேள்..." என்க
"ஹேய் மைனா... எத்தன தடவ சொல்லணும்..ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ ரியல்லி லவ் யூன்னு...."
"நேக்கு தான் உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டேனோ இல்லையோ..." அவளது பதிலுக்கு எப்போதையும் போல செவிமடுக்காதவன்...
"ஓஹ் அப்போ மாமி எனக்கு மட்டும் கெட் அவுட்டு அந்த அருணுக்கு மட்டும் கெட் இன்னா..." அவனது கோபமான கேள்விக்கு
"அது தான் நானும் அருணும் லவ் பண்ணுறோம்னு உங்களுக்கு தெரியுமே அப்படியும் ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறீங்க..." அழுது விடுவதை போல கேட்கும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி முன் சொடக்கிட்டவன்...
"ஐ லவ் யூ தர்ஷி" என்றான் தனது பக்கத்தில் வந்து நிற்கும் அவளது காதலன் அருணை கண்டுக் கொள்ளாமல்....
******
எப்படி இருக்குன்னு சொல்லுங்க...? ஆரம்பிக்கலாமான்னு அப்படியே கொஞ்சம் ஹி ஹி திட்டாம குணமா சொல்லிட்டு போங்க ரௌடிஸ்...
இப்படிக்கு
உங்கள் குயந்தை புள்ள
எல்லோரும் எப்படி இருக்கீங்க....? இது என்னோட அடுத்தக்கதையோட டீசர் இல்லனா இண்ட்ரோ எப்படினாலும் சொல்லலாம்....
என்ன தைரியம் இருந்தா அடுத்த கதையோட வந்திருப்ப..? அப்படின்னு நீங்க அலறுவது என் மனசுக்கு புரிஞ்சாலும் என் மூளைக்கு புரிய மாட்டேங்குதே...என்ன பண்ண...?
சரி கோபப்படாம வாங்க கதையை பத்தி கொஞ்சமா பார்த்திடலாம்....
தலைப்பு : உன்னாலே உலகம் அழகாச்சே!!!
நாயகன் : ஃபெரோஸ் ஸ்டீபன் , அருண் செல்வம்
நாயகி : ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி
டீசர் 1:
"கண்மணி..." தனது முதுகிற்கு பின்னால் கேட்கும் செல்லமான அழைப்பில் இருந்தே அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை அறிந்து கொண்டவளுக்கு ரத்தக் கொதிப்பு உயர்நிலையை அடைந்தது....
'அவனைக் கண்டுக்காத மாதிரியே திரும்பி பார்க்காம ஓடிடனும்' மனதிற்குள் நினைத்தவள் பக்கத்தில் நின்ற தனது தோழியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளோ கனகச்சிதமாய் அவன் நின்ற திசையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்...
இன்றைக்குள் அவளது பார்வை தன்னை அழைத்தவனைவிட்டு மீளாது என்பதை உணர்ந்தவள், முன்னேறி மெதுவாய் இரண்டு அடிகளாய் எடுத்து வைத்து பின் மெதுவாய் தனது வேகத்தைக் கூட்ட, இப்போது அவனது குரல் அவளது முதுகிற்கு பின்னால் கேட்டது...
"ஸ்ரீ ஆண்டாள் (எ) அபித்த குஜலாம்பாள் கொஞ்சம் நிக்றேளா.." அவளது பெயரைக் கிண்டலாய் மொழிந்து அவள் முன் சொடக்கிட்டு அழைத்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..
தனது முழுபெயரையும் தவறாய் உச்சரிக்கும் சீனியரை முறைக்க முடியாமல், "அண்ணா..." என்ற அழைப்புவிடுக்க
அவளது அழைப்பில் முகத்தைச் சுருக்கியவன், "ஏன்னா'ன்னு வேணும்னா கூப்பிடு கண்மணி...அண்ணா வேணாமே..." பாவம் போலும் அவனது குரல் இருந்தாலும் முகத்தில் அவ்வளவு சீண்டலும் இதழில் அழகான சிரிப்பும் நிலைத்திருந்தது..
அவனது பேச்சில் வெளிப்படையாக முறைத்தவள், "எதுக்கு இப்படி என்னைப் பாடாப்படுத்தி எடுக்றேள்..." என்க
"ஹேய் மைனா... எத்தன தடவ சொல்லணும்..ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ ரியல்லி லவ் யூன்னு...."
"நேக்கு தான் உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டேனோ இல்லையோ..." அவளது பதிலுக்கு எப்போதையும் போல செவிமடுக்காதவன்...
"ஓஹ் அப்போ மாமி எனக்கு மட்டும் கெட் அவுட்டு அந்த அருணுக்கு மட்டும் கெட் இன்னா..." அவனது கோபமான கேள்விக்கு
"அது தான் நானும் அருணும் லவ் பண்ணுறோம்னு உங்களுக்கு தெரியுமே அப்படியும் ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறீங்க..." அழுது விடுவதை போல கேட்கும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி முன் சொடக்கிட்டவன்...
"ஐ லவ் யூ தர்ஷி" என்றான் தனது பக்கத்தில் வந்து நிற்கும் அவளது காதலன் அருணை கண்டுக் கொள்ளாமல்....
******
எப்படி இருக்குன்னு சொல்லுங்க...? ஆரம்பிக்கலாமான்னு அப்படியே கொஞ்சம் ஹி ஹி திட்டாம குணமா சொல்லிட்டு போங்க ரௌடிஸ்...
இப்படிக்கு
உங்கள் குயந்தை புள்ள
Last edited: