Soundarya Krish
முதலமைச்சர்
அமைதி அவனே!
நான் ஏசும் பொழுதுகளில்..
ஆளுமை அவனே!
நான் குழந்தையாகும் பொழுதுகளில்...
இனிமை அவனே!
என் கசப்பான பொழுதுகளில்...
ஈர்ப்பவன் அவனே!
என் தேடல் பொழுதுகளில்...
உயிர்ப்பு அவனே!
நான் உடைகின்ற பொழுதுகளில்...
ஊண் அவனே!
நான் பசிமறக்கும் பொழுதுகளில்...
எத்தன் அவனே!
நான் ஏமாறும் பொழுதுகளில்...
ஏகன் அவனே!
என் ரசனைப் பொழுதுகளில்...
ஐயம் அவனே!
என் கனவுப் பொழுதுகளில்...
ஒருமை அவனே!
என் காதல் பொழுதுகளில்...
ஓடம் அவனே!
என் சயனப் பொழுதுகளில்...
ஔடதம் அவனே!
என் வேதனைப் பொழுதுகளில்...
எஃகு அவனே!
என் சோதனைப் பொழுதுகளில்...
என் உயிர் அவனுக்கு...
உயிரெழுத்தில் ஓர் அகராதி!!!
?????????
நான் ஏசும் பொழுதுகளில்..
ஆளுமை அவனே!
நான் குழந்தையாகும் பொழுதுகளில்...
இனிமை அவனே!
என் கசப்பான பொழுதுகளில்...
ஈர்ப்பவன் அவனே!
என் தேடல் பொழுதுகளில்...
உயிர்ப்பு அவனே!
நான் உடைகின்ற பொழுதுகளில்...
ஊண் அவனே!
நான் பசிமறக்கும் பொழுதுகளில்...
எத்தன் அவனே!
நான் ஏமாறும் பொழுதுகளில்...
ஏகன் அவனே!
என் ரசனைப் பொழுதுகளில்...
ஐயம் அவனே!
என் கனவுப் பொழுதுகளில்...
ஒருமை அவனே!
என் காதல் பொழுதுகளில்...
ஓடம் அவனே!
என் சயனப் பொழுதுகளில்...
ஔடதம் அவனே!
என் வேதனைப் பொழுதுகளில்...
எஃகு அவனே!
என் சோதனைப் பொழுதுகளில்...
என் உயிர் அவனுக்கு...
உயிரெழுத்தில் ஓர் அகராதி!!!
?????????
Last edited: