• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே...வெண்பனிமலரே-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
அவளது முகமாற்றத்தை பார்க்க ஆவலாக கதவை தட்ட திறந்தவனுக்கு அதிர்ச்சி அழகாய் காத்திருந்தது. இவன் சிரித்தபடி நிற்க அவளோ இவனை முறைத்தபடி விழகி நடந்தாள். மலர் நான் சொன்ன மாதிரியே வந்துட்டேன். எப்படி இருக்கற.. அவனது கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தந்தையின் அறைக்குள் சென்றவள் அப்பா உங்களை தேடி வந்து இருக்கறாங்க என்னன்னு கேட்டு அணுப்புங்க என்றபடி தனது அறைக்குள் நுழைந்து காதலை அடைத்து கொண்டாள்.

மது அங்கிள் உங்க பொண்ணுக்கு என்ன ஆச்சு நீங்க சொன்னத நினைச்சு எவ்வளவு ஆசையா ஓடி வந்தா தெரியாதவனை பார்க்கறமாதிரி பார்த்து வைக்கறா..

அபி எனக்கும் தெரியலை. நேற்றைகெல்லாம் நான் சொன்னது மாதிரி தான் இருந்தா.. இப்ப என்ன செய்ய...

தெரியலையே இருங்க வெளியே வரட்டும் பேசிப்பார்க்கறேன். என்றவன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனது பேக்கை வைத்தவிட்டுகதவை சாத்தியவன் யோசித்தபடியே வழக்கம்போல தனது செல்பேசியில் அவனையும் அறியாமல் அவனது தங்கைக்கு அழைத்து இருந்தான்
மறுமுனையில் அட்டென் செய்தவளோ
டேய் அண்ணா அங்கே போயிச்சா... என்ன சொல்லறாங்க என்னோட அண்ணி...

நீ கடுப்படிக்காத... என்ன தெரியாதமாதிரி நடந்துக்கறா.. நானே செம காண்டுல இருக்கிறேன். இப்ப என்ன செய்யறது ஏதாவது ப்ளான் சொல்லு...இவனது பதிலை கேட்டவள் எதிர் முனையில் சிரிக்க ஆரம்பித்தாள்.

ஏய் எதுக்கு இப்ப சிரிக்கற..

என்ன உன்னோட ப்ளான் சொதப்பலா...காலேஜ்ல எத்தனை பேரோட வயிறெரிச்சல கொட்டி இருப்ப... அதெல்லாம்் அவ்வளவு சீக்கிரம் விட்டுடுமா என்ன!! என்னோட ப்ரெண்டுங்களே ரெண்டு பேர் உன் பின்னாடி சுற்றி இருக்கறாங்க... அவங்கல எப்படி அழவச்சி இருக்கற..அப்பல்லாம் என்ன சொன்ன ஞாபகம் இருக்கா...

என்ன சொன்னேன் அதையும் நீயே சொல்லு....

உனக்கு மறந்து போச்சா... தி கிரேட் அபிநந்தன் அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டையும் சிக்க மாட்டேன்... இப்ப என்ன ஆச்சு... இப்படி புளம்பற...

என்ன கிண்டல் பண்ணற நேரமா இது அதுக்காகதான் உனக்கு போன் பண்ணினனா ஏதாவது ஐடியா குடு இல்லைன்னா கட் பண்ணு ...

கோச்சுக்காதணா.. அண்ணா என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா அந்த புள்ளைக்கு உன் மேல லவ் ஸ்டாட் ஆகிடுச்சி.. நீ வேணா கவனிச்சி பாரு உனக்கே புரியும்..

அப்படிங்கற...

அப்படியே தான். அவளுக்கு உண்மை புரிஞ்சிடுச்சி சோ பேசாமல் விலகிடலாம்ன்னு நினைக்கறா... அது சரியான அப்பா பைத்தியம் போல இருக்கு... நீ கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கணும்.

இப்ப நான் என்ன செய்ய..
தாரு...

அண்ணா அவளோட வழியிலேயே போ.. இன்னும் ரெண்டு நாள் வெயிட்பண்ணு நீ வழக்கம்போல பேசிட்டே இரு பார்க்கலாம்.

பேசவே இல்லைன்னா...

அப்படி எல்லாம் இருக்கமாட்டா ...

ஓகே டா...போனை கட் செய்தவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். ஐந்து நிமிடங்களை தாண்டி இருக்க கதவு தட்டும் ஓளி காதில் கேட்டது . இவன் கதவை திறக்க கையில் காபி டம்ளரோடு மலர் நின்றிருந்தாள்.

அவளிடம் ஓருகையில் காபியை வாங்கியபடி ஹாலில் வந்து அமர்ந்தவன் மலர் கார் ஓட்ட போகலாமா...

இல்லை. எனக்கு மூட்இல்ல. இன்னொரு நாள் பார்க்கலாம்.

அடுத்த தடவை லைசென்ஸ் வாங்கணும்தானே...

இல்லை இந்த தடவை டூவிலருக்கு மட்டும் போட்டுக்கலாம்ண்ணு இருக்கறேன்..

ஓ...என்றவன் அடுத்து எதுவும் கேட்கவில்லை . சற்று நேரம் வரை இவளாக ஏதாவது பேசுவாள் என எதிர் பார்க்க அவளோ எதுவும் பேசவில்லை..அமைதியாக வெளியேறினான் அபி...

இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இரண்டு நாட்களாய் தொடர்ந்து கொண்டிருந்தது. அபிக்கோ பொறுமை அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகிக் கொண்டு இருந்தது. அவன் உணர்ந்தே இருந்தான் அவள் அவன் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு மூளையில் நின்றபடி இவனை பார்த்துக் கொண்டு இருப்பதை...

இவளுக்கு என்ன தான் பிரச்சினை அங்கங்கே நின்று பார்க்க மட்டும் தான் செய்வாளா.. பனிமலர் உனக்கு இருக்குதுடி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி மொத்தமாக தர போறேன்..
இதையும் மனதிற்குள் மட்டுமே சொல்ல முடிந்தது.

இரண்டு நாட்கள் கழிய மூன்றாவது நாள் நிஷாவின் நிச்சயதார்த்த விழாவை பிரபல ஹோட்டலில் ஹால் புக் செய்து விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். காலை முதலே அவளது தந்தையிடம் அனுமதி வாங்கியிருந்தாள். மாலை முதலே சற்றே அழகாய் புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை ஏழுமணிக்கு அவசரமாக கிஷோர் அழைத்து கொண்டு இருந்தான்.

மலர் எங்க ரெண்டு பேருக்கும் சின்ன பிரச்சினை ஆகிடுச்சி... நிஷா இந்த கல்யாணம் பிடிக்கலைண்ணு சொல்லி வீட்டை விட்டு கிளம்பி மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கிறா நீ உடனே கிளம்பி நிஷா வீட்டுக்கு வா ...

வாட்... என்ன பிரச்சினை...

ப்ளீஸ் நீ வாயேன்..நிஷா வீட்ல தான்
நானும் இருக்கிறேன். சீக்கிரம் வா மலர்..
 




K

kavi sowmi

Guest
அடுத்த நிமிடம் அபியின் அறைக்கதவை தட்டிக்கொண்டு இருந்தாள் மலர்.. கதவை திறந்தவன் இவளை பார்க்க... பார்த்த நொடி கண்களை அவள் புறம் இருந்து திருப்ப முடியவில்லை. 'அபி உனக்கு வந்த சோதனையா "மனதில் நினைத்தவன். அவளிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாய் அவளை மட்டும் பார்த்தபடி நின்றான்.

அவளோ அவனை தடுமாற வைப்பதை உணராமல் உடனே புறப்படு என்றபடி நின்றாள்.

எங்கே என்றவனுக்கு மறுவார்த்தை கூற தோன்றவில்லை.
இளமஞ்சல் நிற டிசைனர் சுடிதார் முழுக்க முழுக்க கற்கள் பதித்திருக்க தேவதை போல எதிரில் நிற்க தடுமாறிய மனதை அடக்கியபடி எங்கே என மறுபடியும் கேட்டான்....

அபி வெரி அர்ஜெண்ட் நாம உடனே நிஷா வீட்டுக்கு போகணும்..

யார் நிஷா.. நான் ஏன் வரணும். உன் கூட என்ன எதுக்கு கூட்டு சேர்க்கிற..

நிஷா தெரியாதா..அன்றைக்கு பார்ட்டிக்கு போணமே..அவ தான்...

அங்கே போனது உனக்கு ஞாபகம் இருக்கா. எனக்கு எல்லாம் மறந்திடுச்சி.. இந்த ரெண்டு நாளா பேசாமல் சுத்தறது தான் ஞாபகம் இருக்கு.

விளையாடாத அபி... சொல்லி காட்ட இது தான் நேரமா..எனக்கு நீதான் உதவி செய்யணும் அவளோட வீடு கொஞ்சம் அவுட்டர். இப்ப போணாதான் சரியா இருக்கும் வந்து காரை எடு ...

அவள் கெஞ்சிக்கொண்டு இருக்க இப்போது மிஞ்சுவது இவனது முறை ஆனது. ஏம்மா .. நிச்சயதார்த்தம் ஏதோ ஹோட்டல் பேர் தான் சொன்ன இப்ப வீட்டுக்கு கூப்பிடற.. நான் என்ன உன்னோட டிரைவரா என்னால வர முடியாது.

அபி... இப்ப வர முடியுமா முடியாதா.. நீ வரலைன்னா நான் கால்டாக்சி புக் பண்ணிட்டு கிளம்பிடுவேன். பிரச்சினைன்னு அக்கே கிஷோர் கூப்பிடறான் நீ இருந்தா நல்லா இருக்குமேன்னு பார்த்தேன். முடியாதுன்னா போ நானே பார்த்துக்கறேன்...

இரு வரேன் என்றவன் தயாராகி வர வண்டியை எடுத்தவன் இடம் எங்கேன்னு சொல்லு...அவள் சொல்ல சொல்ல அந்த இடத்திற்கு வண்டியை செலுத்தினான்.

என்ன பிரச்சனையாம் ஏதாவது சொன்னானா...

எனக்கு தெரியாது அன்றைக்கு பங்சனுக்கு அப்புறம் இப்ப தான் பேசி இருக்கிறான்.

ஓ... என்று முடிக்க அதற்கு பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேச வில்லை அவ்வப்போது அடிக்கடி மலர் இவனை திரும்பி பார்த்ததோடு சரி... நிஷாவின் வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தியவன் இவள் முகம் பார்க்க...

இவனையும் அழைத்தபடி அவர்களது வீட்டில் நின்ற வாட்ச்மேனுக்கு அறிமுக புன்னகையை அளித்தவள் இவனோடு உள் சென்றாள். ஹாலில் கிஷோர் இவர்களை வரவேற்றவன் அவ மாடில அவ ரூம்ல இருக்கறா ... கதவை திறக்க மாட்டேங்கறா திறந்தாலாவது
பேசலாம். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை ப்ளீஸ் ஏதாவது செய். அங்கே என்னோட வீட்ல எல்லோரும் மண்டபத்தில் வெயிட் பண்ணிட்டு இருக்கறாங்க..

நிஷாவோட அம்மா அப்பா எங்கே...

எல்லோரும் மண்டபத்தில் தான் இருக்கறாங்க... இவ எனக்கு போன் பண்ணி இந்த கல்யாணம் வேணாம்
உனக்கும் எனக்கும் செட் ஆகாது. கடைசி வரைக்கும் என்னால சண்டை போட்டுவிட்டு சந்தேகத்தோட வாழ முடியாதுன்னு சொல்லறா.. உனக்கே தெரியும்ல... இந்த கல்யாணத்துக்காக எவ்வளவு போராடி இருக்கறேன்னு... சம்மதம் வாங்க எவ்வளவு சிரமபட்டேன். ஒரே நிமிடத்தில் எல்லாத்தையும் வேண்டாம்ன்னா என்ன அர்த்தம்...

மூனு நாள்ல அப்படி என்ன தான் சண்டை போட்டிங்க...இந்த அளவு போறதுக்கு..

அது அது வந்து முதல்ல அவகிட்ட பேசு அப்புறம் சொல்லறேன்... இவர்களை மாடிக்கு அழைத்து சென்று நிஷாவின் அறையின் முன் நின்றவன் முதல்ல கதவை திறக்க சொல்லு எதா இருந்தாலும் பேசிக்கலாம்.

ப்ரோ ..பிரச்சினை என்ன.. அத சொல்லுங்க முதல்ல.. புரியாத மொழி படம் பார்க்கறமாதிரி இருக்கு என்னன்னு தெரிஞ்சா தானே ஏதாவது பேச முடியும் அபி கிஷோரை பார்த்து கேட்க ..

என்னடா ஆச்சு...

நீ முதல்ல அவள கதவை திறக்க சொல்லு அப்புறம் சொல்லறேன்.

ஓகே இரு... என்றவள் நிஷா நிஷா என கதவை தட்ட... அந்த புறமோ நிஷாவின் அழுகை குரல் காதில் விழுந்தது.

மலர் அவன் என்ன ஏமாத்திட்டேன். நம்பிக்கை துரோகம் பண்ணிட்டான்
நான் தப்பு பண்ணிட்டேன்...

அழாத நிஷா முதல்ல கதவை திற... அப்புறம் பேசலாம்.

அந்த இடியட் போயிட்டான் தான...

யாரை சொல்லற.. கிஷோரையா...

ஆமாம் அவன் தான் அவனை பார்க்கவே பிடிக்கலை...

அவன் போயிட்டான் கதவை திற...

இவளுக்காக கதவை திறக்க இவளோடு மற்ற இருவரும் ஊள் நுழைந்தனர் .

கிஷோரை பார்த்த உடன் நிஷா ஏற்கனவே உட்புற கதவில் சாவி மாட்டியிருக்க யோசிக்காமல் கதவை பூட்டியவள் சாவியை ஜன்னல் வழியாக வீசி இருந்தாள். வரமாட்டேன்னா வரமாட்டேன் தான் எப்படி கூப்பிட்டுட்டு போவ என கேட்க..

என்ன செய்யற நிஷா என மலரும்...

லூசாடி நீ என கிஷோரும் ஓரே நேரத்தில் கத்தி இருந்தனர். அருகில் இருந்த சேரில் தலையை பிடித்தபடி கிஷோர் அமர..

மலரோ என்ன தான் நடந்துச்சு முதல்ல அத சொல்லு தெரிஞ்சா தானே ஏதாவது செய்ய முடியும் என்றவள் கதை கேட்க தயார் ஆனாள்.

உருகாதே!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சௌமி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top