K
kavi sowmi
Guest
அடுத்த நாள் காலை எழும் போதே நிஷா அழைத்திருந்தாள். மலர் தேங்க்ஸ் மலர் சரியான நேரத்தில் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச.. ஒரு வேளை என்னால இந்த நிச்சயதார்த்தம் நின்றிருந்தா
என்னால யோசித்து பார்க்கவே முடியல.. கிஷோர் இல்லாம என்னால வாழ்ந்து இருக்க முடியாது . அவங்களோட பேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க குடும்பத்தில் என்னை ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க..
ஷப்பா சமாதானம் ஆகியாச்சா இப்ப எங்க இருந்து கூப்பிடற..
வீட்ல இருந்துதான். ரெண்டு பேரும் மூவிக்கு போக ப்ளான் பண்ணி இருக்கிறோம். வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லி இருக்கிறான் . நேற்று ஏன் வரல...
மூவி என சொல்லவும் அபியை முதல் முதலாய் பார்த்தது ஞாபகம் வந்தது. முழுதாக ஓரு வாரம் முடிந்திருக்க அவனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை நினைத்தவள்... எப்படி இந்த மாற்றம் வந்தது என இவள் மனம் யோசித்துக்கொண்டு இருக்க...
எதிர் முனையில் நிஷாவோ மலரு இருக்கறயா... இல்லை டிரிம்முக்கு போயிட்டயா அண்ணா கூட எனவும்..
எந்த அண்ணா கூட...
ஏய் ஏமாற்றாத... யாருகிட்ட நேற்று பார்த்தனே வேகமாக விழறதுக்கு முன்னாடி புடிச்சது என்ன.. மேடம் ஏதோ மெத்தையில் படுத்தமாதிரில்ல கண்ணு மூடி கிடந்திங்க.. உண்மைய சொல்லு அந்த பையனைதானே உங்க அப்பா உனக்கு பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க..ஓரே ரொமான்சா அதனால்தான் வராமல் அப்படியே
போய்டிங்களா..
லூசு.. லூசு மாதிரி உளராத.. அவனே என்னை கீழே விழாமல் பிடிக்கறேன்னு இடுப்பு பிடிச்சி வலிக்குதுன்னு சுத்திட்டு இருக்கறான் நீ பூதுசா கதை சொல்லற..
ஹா..ஹா இப்படி வேற சொல்லி இருக்கறாங்களா... நானும் கிஷோரும் வரும் போது கண்ணடிச்சி பை சொல்லி அனுப்பினாங்க.. அது பொய்யா.. நீதான் பார்த்து இருக்கலைன்னா...
நான் பார்த்தேனே...அவங்க கண்ணுல எவ்வளவு லவ் தெரியுமா..உன்னை மட்டும் தான் கண் சிமிட்டாம பார்த்துட்டு இருந்தாங்க.. நீ சொல்லாட்டி போயேன் அடுத்த தடவை அவங்கல பார்க்கும் போது நேரடியாகவே கேட்டுக்கறேன்.
நிஷா காலையில் போன் பண்ணி கடுப்படிக்கறையா... நீ போனை வை..
ஏன்மா உண்மைய சொன்னா கோபம் வருதா.. நம்ம ப்ரண்டுங்க யாருக்கும் சொல்ல மாட்டேன் ப்ராமிஸ்...
நிஷா இதே மாதிரி பேசிட்டு இருந்த இது தான் நான் உன்கிட்ட பேசறது கடைசியாக இருக்கும் புரியுதா...
அம்மா தாயே அப்படி எதுவும் பண்ணிடாத. நான் இனி இத பற்றி பேசலை ஓகே வா. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு என்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய எல்லா ஃபங்சனுக்கும் நீ கூட இருக்கணும்
அத முன்னாடியே சொல்லிடதான் கூப்பிட்டேன்...பை போனேன் வைக்கறேன்டி என்றபடி கட் செய்தாள்.
இவளோ தனது அறையில் இருந்தபடி இவனை எட்டி பார்க்க அங்கே இவளது தந்தையோடு பேசிக்கொண்டு இருந்தான். அவனது முகத்தை ஆழ்ந்து பார்க்க வலிக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஒருவேளை நம்மகிட்டதான் நடிக்கறானோ.. அவள் சொல்லறதுதான் நிஜமாக இருக்குமோ...யோசித்தபடி நடை பயின்று கொண்டிருந்தாள்.
அங்கே அபியோ... என்ன அங்கிள் முகத்தையே பார்க்கறிங்க என்ன ஆச்சு...
அத தான் நான் கேட்கனும் என்ன ஆச்சு... என்னோட பொண்ணு நேற்றிலிருந்து உன்கிட்ட பேசவே விடல கூடவே உன்னை ஸ்பெசலா வேற கவனிக்கறா..உன்னை எழுந்திரிக்க விடாமல் அத்தனை வேலையும் செஞ்சு தர்றா.. எனக்கே என்னுடைய கண்ணை நம்ப முடியலை.. ஆச்சர்யமா இருக்கு..
அங்கிள் ஒரு சின்ன விளையாட்டு ரெண்டு நாளைக்கு இப்படி தான் இருக்கும் கண்டுக்காதிங்க...
என்னவோ சொல்லற அபி.. எனக்கென்ன நல்லது நடந்தால் சரிதான்.
அதெல்லாம் நல்லதாகவே நடக்கும் அங்கிள் என்றவன் எதிரில் வந்த மலரிடம் காபி ஒரு டம்ளர் கிடைக்குமா என கேட்க...
வெயிட் பண்ணுங்க கொண்டு வரேன் என்றபடி அப்பா உங்களுக்கு...
வேண்டாம்டா... நான் இப்ப கிளம்பிடுவேன். ஏன்மா இன்றைக்கு வீட்டு வேலை செய்யற அம்மா வரலையா..
ஆமாம்பா அவங்க பேத்தி ஊர்ல இருந்து வந்து இரூக்கறாங்கலாம் அதனால லீவு எடுக்க சொல்லிட்டேன்.
நான் இன்றைக்கு வீட்டு வேலையை பார்த்துக்கறேன்பா...
சரிடா.. என்றவர் சிறிது நேரத்தில் போன் வர குடோனுக்கு கிளம்பி இருந்தார். இவள் சமையல் செய்தபடி ஹாலில் இருந்தவனை திரும்பி பார்க்க டிவியை ஆன் செய்திருந்தவன் அதிலேயே ஒன்றி இருந்தான். முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது அவனது திருட்டு தனம்...
படவா என்னையவே ஏமாற்றறையா..
நீ இன்றைக்கு மாட்டினடா.. மனதில் நினைத்தவள்.. சாதத்தை குக்கரில் வைத்தவள் நேற்றிலிருந்து வேலையா வாங்கற... இன்றைக்கு எல்லா வேலையும் நீதான் செய்யற... இல்ல செய்ய வைக்கிறேன்.
அருகில் இருந்த பாத்திரத்தில் தண்ணீர் எடுத்தவள் யோசிக்காது தட்டி இருந்தாள் கூடவே அம்மா கால்ல தண்ணீர் கொட்டிடுச்சி என்றபடி. சத்தம் போட அடுத்த நொடி அருகில் நெருங்கியவன் இவளை தனது இரண்டு கைகளால் தூக்கி இருந்தான் சுடுதண்ணீர் வச்சா பார்த்து எடுக்க மாட்டியா.. எரியுதா என கேட்டபடி
என்னால யோசித்து பார்க்கவே முடியல.. கிஷோர் இல்லாம என்னால வாழ்ந்து இருக்க முடியாது . அவங்களோட பேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க குடும்பத்தில் என்னை ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க..
ஷப்பா சமாதானம் ஆகியாச்சா இப்ப எங்க இருந்து கூப்பிடற..
வீட்ல இருந்துதான். ரெண்டு பேரும் மூவிக்கு போக ப்ளான் பண்ணி இருக்கிறோம். வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லி இருக்கிறான் . நேற்று ஏன் வரல...
மூவி என சொல்லவும் அபியை முதல் முதலாய் பார்த்தது ஞாபகம் வந்தது. முழுதாக ஓரு வாரம் முடிந்திருக்க அவனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை நினைத்தவள்... எப்படி இந்த மாற்றம் வந்தது என இவள் மனம் யோசித்துக்கொண்டு இருக்க...
எதிர் முனையில் நிஷாவோ மலரு இருக்கறயா... இல்லை டிரிம்முக்கு போயிட்டயா அண்ணா கூட எனவும்..
எந்த அண்ணா கூட...
ஏய் ஏமாற்றாத... யாருகிட்ட நேற்று பார்த்தனே வேகமாக விழறதுக்கு முன்னாடி புடிச்சது என்ன.. மேடம் ஏதோ மெத்தையில் படுத்தமாதிரில்ல கண்ணு மூடி கிடந்திங்க.. உண்மைய சொல்லு அந்த பையனைதானே உங்க அப்பா உனக்கு பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க..ஓரே ரொமான்சா அதனால்தான் வராமல் அப்படியே
போய்டிங்களா..
லூசு.. லூசு மாதிரி உளராத.. அவனே என்னை கீழே விழாமல் பிடிக்கறேன்னு இடுப்பு பிடிச்சி வலிக்குதுன்னு சுத்திட்டு இருக்கறான் நீ பூதுசா கதை சொல்லற..
ஹா..ஹா இப்படி வேற சொல்லி இருக்கறாங்களா... நானும் கிஷோரும் வரும் போது கண்ணடிச்சி பை சொல்லி அனுப்பினாங்க.. அது பொய்யா.. நீதான் பார்த்து இருக்கலைன்னா...
நான் பார்த்தேனே...அவங்க கண்ணுல எவ்வளவு லவ் தெரியுமா..உன்னை மட்டும் தான் கண் சிமிட்டாம பார்த்துட்டு இருந்தாங்க.. நீ சொல்லாட்டி போயேன் அடுத்த தடவை அவங்கல பார்க்கும் போது நேரடியாகவே கேட்டுக்கறேன்.
நிஷா காலையில் போன் பண்ணி கடுப்படிக்கறையா... நீ போனை வை..
ஏன்மா உண்மைய சொன்னா கோபம் வருதா.. நம்ம ப்ரண்டுங்க யாருக்கும் சொல்ல மாட்டேன் ப்ராமிஸ்...
நிஷா இதே மாதிரி பேசிட்டு இருந்த இது தான் நான் உன்கிட்ட பேசறது கடைசியாக இருக்கும் புரியுதா...
அம்மா தாயே அப்படி எதுவும் பண்ணிடாத. நான் இனி இத பற்றி பேசலை ஓகே வா. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு என்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய எல்லா ஃபங்சனுக்கும் நீ கூட இருக்கணும்
அத முன்னாடியே சொல்லிடதான் கூப்பிட்டேன்...பை போனேன் வைக்கறேன்டி என்றபடி கட் செய்தாள்.
இவளோ தனது அறையில் இருந்தபடி இவனை எட்டி பார்க்க அங்கே இவளது தந்தையோடு பேசிக்கொண்டு இருந்தான். அவனது முகத்தை ஆழ்ந்து பார்க்க வலிக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஒருவேளை நம்மகிட்டதான் நடிக்கறானோ.. அவள் சொல்லறதுதான் நிஜமாக இருக்குமோ...யோசித்தபடி நடை பயின்று கொண்டிருந்தாள்.
அங்கே அபியோ... என்ன அங்கிள் முகத்தையே பார்க்கறிங்க என்ன ஆச்சு...
அத தான் நான் கேட்கனும் என்ன ஆச்சு... என்னோட பொண்ணு நேற்றிலிருந்து உன்கிட்ட பேசவே விடல கூடவே உன்னை ஸ்பெசலா வேற கவனிக்கறா..உன்னை எழுந்திரிக்க விடாமல் அத்தனை வேலையும் செஞ்சு தர்றா.. எனக்கே என்னுடைய கண்ணை நம்ப முடியலை.. ஆச்சர்யமா இருக்கு..
அங்கிள் ஒரு சின்ன விளையாட்டு ரெண்டு நாளைக்கு இப்படி தான் இருக்கும் கண்டுக்காதிங்க...
என்னவோ சொல்லற அபி.. எனக்கென்ன நல்லது நடந்தால் சரிதான்.
அதெல்லாம் நல்லதாகவே நடக்கும் அங்கிள் என்றவன் எதிரில் வந்த மலரிடம் காபி ஒரு டம்ளர் கிடைக்குமா என கேட்க...
வெயிட் பண்ணுங்க கொண்டு வரேன் என்றபடி அப்பா உங்களுக்கு...
வேண்டாம்டா... நான் இப்ப கிளம்பிடுவேன். ஏன்மா இன்றைக்கு வீட்டு வேலை செய்யற அம்மா வரலையா..
ஆமாம்பா அவங்க பேத்தி ஊர்ல இருந்து வந்து இரூக்கறாங்கலாம் அதனால லீவு எடுக்க சொல்லிட்டேன்.
நான் இன்றைக்கு வீட்டு வேலையை பார்த்துக்கறேன்பா...
சரிடா.. என்றவர் சிறிது நேரத்தில் போன் வர குடோனுக்கு கிளம்பி இருந்தார். இவள் சமையல் செய்தபடி ஹாலில் இருந்தவனை திரும்பி பார்க்க டிவியை ஆன் செய்திருந்தவன் அதிலேயே ஒன்றி இருந்தான். முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது அவனது திருட்டு தனம்...
படவா என்னையவே ஏமாற்றறையா..
நீ இன்றைக்கு மாட்டினடா.. மனதில் நினைத்தவள்.. சாதத்தை குக்கரில் வைத்தவள் நேற்றிலிருந்து வேலையா வாங்கற... இன்றைக்கு எல்லா வேலையும் நீதான் செய்யற... இல்ல செய்ய வைக்கிறேன்.
அருகில் இருந்த பாத்திரத்தில் தண்ணீர் எடுத்தவள் யோசிக்காது தட்டி இருந்தாள் கூடவே அம்மா கால்ல தண்ணீர் கொட்டிடுச்சி என்றபடி. சத்தம் போட அடுத்த நொடி அருகில் நெருங்கியவன் இவளை தனது இரண்டு கைகளால் தூக்கி இருந்தான் சுடுதண்ணீர் வச்சா பார்த்து எடுக்க மாட்டியா.. எரியுதா என கேட்டபடி