K
kavi sowmi
Guest
பனிமலர் புறப்பட்டு போகவும் அபி சாப்பிடலாமா என கேட்டவரிடம்..
அங்கிள் நீங்க உட்காருங்க நான் எடுத்துவிட்டு வரேன் என்றவன் சமையல் அறையை நோக்கி போக...
மதுசூதனனோ வேண்டாம்பா அதெல்லாம் வேண்டாம் நான் எடுத்துவிட்டு வரேன்.
நோ பார்மாலிட்டிஸ் அங்கிள் நான் நல்லாவே சமைப்பேன். இது எனக்கு பிடிச்ச வேலையும் கூட...
இத என் பொண்ணு கிட்ட சொல்லிடாதே வருசம் முழுசும் உன்னையவே சமைக்க வச்சிடுவா. அவ சரியான சோம்பேறி . கவனிக்காம விட்டா அவ சாப்பிடவே மாட்டா இதுக்காகவே அவள் கூட சாப்பிட ஆரம்பிச்சேன் இப்போ எனக்காகவே நேரநேரத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சிட்டா ..
சொன்னவர் முகம் வருத்தத்தை தத்தெடுத்தது.
அங்கிள்... வொய் சோகம்..ஏன் இப்போ கவல படறிங்க. .
அதில்ல அபி இவளுக்கு உன்ன பிடிக்குமா... இப்பவே இவ்வளவு சண்டை போடறிங்க. எனக்கு கவலையாக இருக்கு அவளுக்கு பிடிக்காதத என்னால திணிக்க முடியாது உனக்கு புரியுது தான ...
அங்கிள்... புரியுது அங்கிள் நீங்க நினைச்சு பயப்படற அளவுக்கு எதுவும் நடக்காது. நான் ப்ராமிஸ் பண்ணறேன் உங்க பொண்ணுக்கு என்ன கட்டாயம் பிடிக்கும். பிடிக்க வச்சிடுவேன் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இன்றைக்கு நடந்ததே எப்பவும் நடக்காது மாறிடுவா... இன்னும் ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்க எல்லாமே மாறிடும் .
மாறினால் சரி தான். வா சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். போன் வர்றதுகுல்ல குடோன் போய்விடலாம்.
அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் கிளம்பி இருந்தனர்.
அபி.. நீ கார் ஓட்டுவதான..அதிலே போயிடலாமா..
நானும் காரை பார்த்ததும் கேட்கணும்ன்னு நினைச்சேன் டிரைவர் வரலையா...
நீ வேற அபி இந்த கார் மலருக்காக வாங்கியது. டிரைவிங்கிளாஸ் போறா இல்லையா... ஓட்டி பார்க்கறதுக்காக வாங்கினது. அவளுக்கு ஏனோ தனியா காரை எடுக்க பயந்துக்கறா..
அவள் எடுக்காட்டி என்ன... ஏன் அங்கிள் உங்களுக்கு ஓட்ட தெரியாதா...
இந்த வயசுக்கு மேல பழகி என்ன செய்ய போறேன். எனக்கு என்னுடைய டூவிலர் போதும் ஓட்டற அரை கிலோமீட்டருக்கு அதுவே அதிகம்.
வண்டி சாவியை வாங்கியவன் காரை வெளியில் எடுத்து ஓட்டும்போதே தெரிந்தது கார் அந்த அளவுக்கு நல்ல கன்டிசனில் இருந்தது. வண்டி நல்ல கன்டிசன்ல இருக்கு அங்கிள்.
என்ன செய்ய அபி... வண்டி வாங்கின நாளில் இருந்து ஒருத்தன் வரச்சொல்லி இருக்கிறேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து கொஞ்ச நேரம் ஆன் பண்ணி அரைமணி நேரம் ஓட்டிட்டு வந்து நிப்பாட்டுவான். இந்த பக்கம் தான் அபி லெப்ட் திருப்பு.. அந்த கேட் பக்கம் தான்.. சொன்ன இடத்தில் நிற்பாட்ட.. சாவியை எடுத்தவர் கேட்டை திறக்க இங்கே அபியின் போன் அவனை அழைத்தது.
கதவை திறந்தவரை பார்த்தவன் அங்கிள் உள்ளே போங்க... போன் பேசிவிட்டு வரேன் என்றவன் போனை ஆன் செய்ய...
டேய் அண்ணா.. என ஆர்பாட்டமாய் தாரிகாவின் குரல் கேட்டது..
ஏய்.. வாலு நீ கத்தறதுல என்னுடைய காது ஸ்பீக்கர் போய்விடும் போல இருக்கு ஏன் இப்படி கத்தற... காதை தேய்த்து விட்டபடி பதில் கூற.. அவளோ..
சும்மா பேச்ச மாத்தாத...இப்பதான் அப்பாகிட்ட பேசினேன் அவர்தான் சொன்னாங்க நீ பெட்டி படுக்கையை கட்டிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கே போயிட்டயாம். கேட்க்கும் போதே எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா.. அத்தான் எப்பவுமே உன்னபத்தி பேசும் போது சொல்லுவாங்க... கல்யாணமே வேணாம்ன்னு சொல்லற இந்த மாதிரி பசங்க விழுந்தா தலைகுப்புற விழுவாங்க அப்படின்னு.. அதே மாதிரி நடந்துக்கறடா...
ஏய்... நான் எப்ப சொன்னேன் கல்யாணம் வேணாம்ன்னு.... இப்போதைக்கு வேணாம்னேன் அவ்வளவுதான்...ஆக டைம் போகலைனா என்ன தான்
கழுவி ஊத்தறிங்க ரெண்டு பேரும் அப்படித்தானே..
சேச்சே அத இவ்வளவு பப்லிக்கா ஆமாம்ன்னு சொல்வனா...
அவளது பதில் கேட்டு சிரித்தவன் சரி மச்சான் எங்கே...
இவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்ப தான் வெளிய புறப்பட்டு போணாங்க...அப்புறம் அண்ணா நான் சீக்கிரமே அங்கே வரலாம்ல உன்னோட கல்யாணத்துக்கு...
அதுக்கு் பொண்ணு சம்மதிக்கணுமே இந்த நிமிஷம் வரை மூஞ்சை தூக்கி வச்சிட்டு சண்டை போட்டுவிட்டு இருக்கறா ... பத்து நாள் தங்க போறேன்னதுக்கே இந்த பாடு.. நான் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா கல்ல எடுத்து தலையில போட்டாலும் போடுவா...ஆனா இவ கூட வம்பிழுக்கறது கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. அவ கூட இருந்தா நேரம் போறதே தெரியலை தெரியுமா..
அண்ணா டேய் உனக்கு முத்தி போச்சிடா. நான் வைக்கிறேன் நீ சொன்னத அப்படியே அம்மாகிட்ட சொல்ல போறேன்.
தாரு செல்லம் எதையாவது உளரி
வைக்காதடா... இதையே சொல்லி அம்மா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க...
அது... சொல்ல முடியாதுன்ணா என்னுடைய மூட பொறுத்து...பை வைக்கிறேன் என்றபடி கட் செய்ய இவனும் குடோனிற்குல் நுழைந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணல் எடுத்து செல்ல வண்டி வர வேகவேகமாக வேலை நடந்தது.
சற்று நேரத்தில் சல்லி கற்கள் இறக்க வாகனம் வர இரண்டு மணி
அங்கிள் நீங்க உட்காருங்க நான் எடுத்துவிட்டு வரேன் என்றவன் சமையல் அறையை நோக்கி போக...
மதுசூதனனோ வேண்டாம்பா அதெல்லாம் வேண்டாம் நான் எடுத்துவிட்டு வரேன்.
நோ பார்மாலிட்டிஸ் அங்கிள் நான் நல்லாவே சமைப்பேன். இது எனக்கு பிடிச்ச வேலையும் கூட...
இத என் பொண்ணு கிட்ட சொல்லிடாதே வருசம் முழுசும் உன்னையவே சமைக்க வச்சிடுவா. அவ சரியான சோம்பேறி . கவனிக்காம விட்டா அவ சாப்பிடவே மாட்டா இதுக்காகவே அவள் கூட சாப்பிட ஆரம்பிச்சேன் இப்போ எனக்காகவே நேரநேரத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சிட்டா ..
சொன்னவர் முகம் வருத்தத்தை தத்தெடுத்தது.
அங்கிள்... வொய் சோகம்..ஏன் இப்போ கவல படறிங்க. .
அதில்ல அபி இவளுக்கு உன்ன பிடிக்குமா... இப்பவே இவ்வளவு சண்டை போடறிங்க. எனக்கு கவலையாக இருக்கு அவளுக்கு பிடிக்காதத என்னால திணிக்க முடியாது உனக்கு புரியுது தான ...
அங்கிள்... புரியுது அங்கிள் நீங்க நினைச்சு பயப்படற அளவுக்கு எதுவும் நடக்காது. நான் ப்ராமிஸ் பண்ணறேன் உங்க பொண்ணுக்கு என்ன கட்டாயம் பிடிக்கும். பிடிக்க வச்சிடுவேன் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இன்றைக்கு நடந்ததே எப்பவும் நடக்காது மாறிடுவா... இன்னும் ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்க எல்லாமே மாறிடும் .
மாறினால் சரி தான். வா சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். போன் வர்றதுகுல்ல குடோன் போய்விடலாம்.
அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் கிளம்பி இருந்தனர்.
அபி.. நீ கார் ஓட்டுவதான..அதிலே போயிடலாமா..
நானும் காரை பார்த்ததும் கேட்கணும்ன்னு நினைச்சேன் டிரைவர் வரலையா...
நீ வேற அபி இந்த கார் மலருக்காக வாங்கியது. டிரைவிங்கிளாஸ் போறா இல்லையா... ஓட்டி பார்க்கறதுக்காக வாங்கினது. அவளுக்கு ஏனோ தனியா காரை எடுக்க பயந்துக்கறா..
அவள் எடுக்காட்டி என்ன... ஏன் அங்கிள் உங்களுக்கு ஓட்ட தெரியாதா...
இந்த வயசுக்கு மேல பழகி என்ன செய்ய போறேன். எனக்கு என்னுடைய டூவிலர் போதும் ஓட்டற அரை கிலோமீட்டருக்கு அதுவே அதிகம்.
வண்டி சாவியை வாங்கியவன் காரை வெளியில் எடுத்து ஓட்டும்போதே தெரிந்தது கார் அந்த அளவுக்கு நல்ல கன்டிசனில் இருந்தது. வண்டி நல்ல கன்டிசன்ல இருக்கு அங்கிள்.
என்ன செய்ய அபி... வண்டி வாங்கின நாளில் இருந்து ஒருத்தன் வரச்சொல்லி இருக்கிறேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து கொஞ்ச நேரம் ஆன் பண்ணி அரைமணி நேரம் ஓட்டிட்டு வந்து நிப்பாட்டுவான். இந்த பக்கம் தான் அபி லெப்ட் திருப்பு.. அந்த கேட் பக்கம் தான்.. சொன்ன இடத்தில் நிற்பாட்ட.. சாவியை எடுத்தவர் கேட்டை திறக்க இங்கே அபியின் போன் அவனை அழைத்தது.
கதவை திறந்தவரை பார்த்தவன் அங்கிள் உள்ளே போங்க... போன் பேசிவிட்டு வரேன் என்றவன் போனை ஆன் செய்ய...
டேய் அண்ணா.. என ஆர்பாட்டமாய் தாரிகாவின் குரல் கேட்டது..
ஏய்.. வாலு நீ கத்தறதுல என்னுடைய காது ஸ்பீக்கர் போய்விடும் போல இருக்கு ஏன் இப்படி கத்தற... காதை தேய்த்து விட்டபடி பதில் கூற.. அவளோ..
சும்மா பேச்ச மாத்தாத...இப்பதான் அப்பாகிட்ட பேசினேன் அவர்தான் சொன்னாங்க நீ பெட்டி படுக்கையை கட்டிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கே போயிட்டயாம். கேட்க்கும் போதே எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா.. அத்தான் எப்பவுமே உன்னபத்தி பேசும் போது சொல்லுவாங்க... கல்யாணமே வேணாம்ன்னு சொல்லற இந்த மாதிரி பசங்க விழுந்தா தலைகுப்புற விழுவாங்க அப்படின்னு.. அதே மாதிரி நடந்துக்கறடா...
ஏய்... நான் எப்ப சொன்னேன் கல்யாணம் வேணாம்ன்னு.... இப்போதைக்கு வேணாம்னேன் அவ்வளவுதான்...ஆக டைம் போகலைனா என்ன தான்
கழுவி ஊத்தறிங்க ரெண்டு பேரும் அப்படித்தானே..
சேச்சே அத இவ்வளவு பப்லிக்கா ஆமாம்ன்னு சொல்வனா...
அவளது பதில் கேட்டு சிரித்தவன் சரி மச்சான் எங்கே...
இவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்ப தான் வெளிய புறப்பட்டு போணாங்க...அப்புறம் அண்ணா நான் சீக்கிரமே அங்கே வரலாம்ல உன்னோட கல்யாணத்துக்கு...
அதுக்கு் பொண்ணு சம்மதிக்கணுமே இந்த நிமிஷம் வரை மூஞ்சை தூக்கி வச்சிட்டு சண்டை போட்டுவிட்டு இருக்கறா ... பத்து நாள் தங்க போறேன்னதுக்கே இந்த பாடு.. நான் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா கல்ல எடுத்து தலையில போட்டாலும் போடுவா...ஆனா இவ கூட வம்பிழுக்கறது கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. அவ கூட இருந்தா நேரம் போறதே தெரியலை தெரியுமா..
அண்ணா டேய் உனக்கு முத்தி போச்சிடா. நான் வைக்கிறேன் நீ சொன்னத அப்படியே அம்மாகிட்ட சொல்ல போறேன்.
தாரு செல்லம் எதையாவது உளரி
வைக்காதடா... இதையே சொல்லி அம்மா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க...
அது... சொல்ல முடியாதுன்ணா என்னுடைய மூட பொறுத்து...பை வைக்கிறேன் என்றபடி கட் செய்ய இவனும் குடோனிற்குல் நுழைந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணல் எடுத்து செல்ல வண்டி வர வேகவேகமாக வேலை நடந்தது.
சற்று நேரத்தில் சல்லி கற்கள் இறக்க வாகனம் வர இரண்டு மணி