K
kavi sowmi
Guest
இரண்டு பேருமே குளியல் முடித்து வெளியில் வர.. இவனை பார்த்ததுமே அப்பா.. என மறுபடியும் கத்த ஆரம்பித்தாள். இவள் என்ன சொல்ல போகிறாள் என தெரிந்தவனோ அவளுக்கு முன்பே அங்கிள் என சத்தமிட்டு இருந்தான்.
இப்ப என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்.. வந்து சாப்பிடுங்க... சாப்பிட்டதற்கு அப்புறமா நானும் வரேன் மூனுபேரும் சேர்ந்து சமையல் ரூம்ப கிளின் பண்ணலாம்.
அப்பா... வயசு பொண்ணு இருக்கற இடத்துல இப்படி தான் டிரஸ் போடுவானா..நீங்க சொல்ல மாட்டிங்கலா..
அங்கிள் நானும் இதையே கேட்கலாம்ல.. நீ மட்டும் என்ன போட்டு இருக்கற...வயசு பையன் இருக்கற இடத்துக்கு இப்படி டிரஸ் போட்டுட்டு வருவியா...
யாரு... நீ உனக்கு அங்கிள் வயசாகுது. நீ வயசு பையனா வெளியே சொல்லாத... சிரிக்க போறாங்க..
பாப்பா இப்படியெல்லாம் பேச கூடாது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா...வந்து சாப்பிடுங்க...
அவள் போட்டு இருந்தது முட்டியை தாண்டிய சாட்ஸ் டீ சர்ட்.... அதே போல்
அவனும் ஷாட்ஸ் கையில்லா பனியன்
ஒன்று என்ன இவன் சற்று உயரம் ஆதலால் முட்டியோடு நின்றிருந்தது.
அவனது சிவந்த நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் அழகாக தான் இருந்தது.
அவனை முறைத்தபடி அப்பா... இப்ப சொல்லறது தான் இவன் கிளம்பற வரைக்கும் இது போல அரை குறையா டிரஸ் போட்டுவிட்டு என்
முன்னாடி வந்து நிற்க கூடாது.
இதையே நானும் சொல்லலாம்ல...
பாத்ரூம்குல்ல யார் இருக்கறாங்கன்னு தெரியாம பேச கூடாது. அப்புறம் மாவ தலையில கொட்ட கூடாது. முட்டையை தலையில் தேய்க்க கூடாது.
அத்தனையும் நீ தான் செஞ்ச... ஓகே வா. இனி பேசாத... நீ செஞ்சதுக்கு பதில் நான் செஞ்சிட்டுடேன். முடிஞ்சது. திரும்ப ஆரம்பிக்க கூடாது. வாங்கப்பா என்றபடி அழைத்து சென்றாள்.
அமைதியாக சாப்பிட்டு முடிக்க எதுவும் சொல்லாமல் சமையல் அறையை சரி செய்ய மலர் சென்றிருந்தாள். அவளை தொடர்ந்து வந்த மதுசூதனனை பார்த்து அப்பா... நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன் இப்படி ஓரமாக உட்காருங்கபா...
எப்படியும் அவரை அவள் வேலை எதையும் செய்ய விடுவதில்லை நீண்ட நாட்களாய் இன்றும் அதே போல் அமர...பின்னோடு வந்த அபியோ அணைத்து பாத்திரங்களையும் எடுத்து கழுவ ஆரம்பித்தான். சமையல் மேடையை சரி செய்து அணைத்தையும் ஒதுங்க வைக்கவும் இவள் தரையை துடைத்து முடிக்கவும் சரியாக இருந்தது.
எதுவும் பேசாமல் மலரின் முகம் பார்க்க அவள் கோபத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது நிறைய யோசிக்க வேண்டியது இருந்தது அவனுக்கு அமைதியாக வெளியேறியவன் நேராக மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்திருந்தான்.
பெளர்ணமிக்கு சில நாட்கள் இருக்க நல்ல வெளிச்சமாய் இருந்தது.
சுற்றிலும் பார்க்க தோட்டத்தில் இருந்து ஜாதி பூ செடியை கொடியாக மாடி வரை இழுத்து விட்டிருந்தனர். பூக்களின் சீசன் ஆதலால் காற்றோடு சேர்த்து பூவின் வாசம் அவனின் குழப்பமான மனதை அமைதி படுத்தியது. அமைதியாக ஓரமாக அமர்ந்தவன் ஹெட்செட்டை காதில் மாட்டியவன் தனது மொபைலில் தனக்கு பிடித்த பாடலை போட்டபடி கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.
பாடல்கள் இனிமையாய் காதில் ஒலிக்க மூளை தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தது. வந்ததிலிருந்து இந்த நிமிடம் நடந்த சண்டை வரை யோசித்தவனுக்கு தனது செயலின் தவறு நன்றாக புரிந்தது. தொடர்ந்து இது போல் சண்டையிட்டு கொண்டிருந்தால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பு குறைவதை உணர்ந்தவன். இனி எங்காரணம் கொண்டும் சண்டையிட கூடாது தீர்மாணித்தபடி இருந்தான்.
அதே நேரம் இரவு மலரோ தனக்கும் தந்தைக்கும் பால் காய்ச்சியவள் டம்ளரில் ஊற்றியபடி தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். இவளது குழப்ப முகத்தை பார்த்தவர்...
ஸாரிமா அவன் இங்கே தங்கறது உனக்கு பிடிக்கலையா... நாளைக்கு வேணும்னா போக சொல்லிடறேன்.
இல்லைபா.. வேண்டாம். பத்து நாள் தங்க சொல்லிட்டு போன்னு சொன்னா நல்லா இருக்காது. நீங்க உங்க ப்ரெண்டுக்கு என்ன பதில் சொல்லுவிங்க...இங்கேயே இருக்கட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
சரிடா.. அவனுக்கும் ஒரு டம்ளர் பால் குடுத்திடு...****** மாடி பக்கம் போறத பார்த்தேன்.
சரிபா கொடுத்துடறேன் என்றவள் அவனுக்கானதை எடுத்தபடி மாடிப்படி ஏறினாள். அங்கே அவன் அமர்ந்திருந்த தோற்றம் இவன் தான் அங்கு அத்தனை ரகளை செய்தான் என்றால் யாரும் நம்மி இருக்க மாட்டார்கள்..இதமான காற்றா நிலவு வெளிச்சமாக ஏதோ ஒன்று அவனை மோனநிலையில் ஆழ்த்தி இருந்தது.
இவளும் தன்னை அறியாமல் அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். கண்கள் மூடி இருக்க காற்றில் லேசாக கலைந்தாடிய தலைகேசம்... இருக்கம் குறைந்து முகத்தில் தெரிந்த அமைதி அவனை இளமையாய் இன்னும் அழகாய் காட்டியது.தானும் அவரையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனின் பெயர் சொல்லி அழைத்தாள்.அவளது சத்தம் மட்டுமே தனியாய் கேட்டது.
அவன் கண் திறப்பது போல் தெரியவில்லை..
இப்ப என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்.. வந்து சாப்பிடுங்க... சாப்பிட்டதற்கு அப்புறமா நானும் வரேன் மூனுபேரும் சேர்ந்து சமையல் ரூம்ப கிளின் பண்ணலாம்.
அப்பா... வயசு பொண்ணு இருக்கற இடத்துல இப்படி தான் டிரஸ் போடுவானா..நீங்க சொல்ல மாட்டிங்கலா..
அங்கிள் நானும் இதையே கேட்கலாம்ல.. நீ மட்டும் என்ன போட்டு இருக்கற...வயசு பையன் இருக்கற இடத்துக்கு இப்படி டிரஸ் போட்டுட்டு வருவியா...
யாரு... நீ உனக்கு அங்கிள் வயசாகுது. நீ வயசு பையனா வெளியே சொல்லாத... சிரிக்க போறாங்க..
பாப்பா இப்படியெல்லாம் பேச கூடாது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா...வந்து சாப்பிடுங்க...
அவள் போட்டு இருந்தது முட்டியை தாண்டிய சாட்ஸ் டீ சர்ட்.... அதே போல்
அவனும் ஷாட்ஸ் கையில்லா பனியன்
ஒன்று என்ன இவன் சற்று உயரம் ஆதலால் முட்டியோடு நின்றிருந்தது.
அவனது சிவந்த நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் அழகாக தான் இருந்தது.
அவனை முறைத்தபடி அப்பா... இப்ப சொல்லறது தான் இவன் கிளம்பற வரைக்கும் இது போல அரை குறையா டிரஸ் போட்டுவிட்டு என்
முன்னாடி வந்து நிற்க கூடாது.
இதையே நானும் சொல்லலாம்ல...
பாத்ரூம்குல்ல யார் இருக்கறாங்கன்னு தெரியாம பேச கூடாது. அப்புறம் மாவ தலையில கொட்ட கூடாது. முட்டையை தலையில் தேய்க்க கூடாது.
அத்தனையும் நீ தான் செஞ்ச... ஓகே வா. இனி பேசாத... நீ செஞ்சதுக்கு பதில் நான் செஞ்சிட்டுடேன். முடிஞ்சது. திரும்ப ஆரம்பிக்க கூடாது. வாங்கப்பா என்றபடி அழைத்து சென்றாள்.
அமைதியாக சாப்பிட்டு முடிக்க எதுவும் சொல்லாமல் சமையல் அறையை சரி செய்ய மலர் சென்றிருந்தாள். அவளை தொடர்ந்து வந்த மதுசூதனனை பார்த்து அப்பா... நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன் இப்படி ஓரமாக உட்காருங்கபா...
எப்படியும் அவரை அவள் வேலை எதையும் செய்ய விடுவதில்லை நீண்ட நாட்களாய் இன்றும் அதே போல் அமர...பின்னோடு வந்த அபியோ அணைத்து பாத்திரங்களையும் எடுத்து கழுவ ஆரம்பித்தான். சமையல் மேடையை சரி செய்து அணைத்தையும் ஒதுங்க வைக்கவும் இவள் தரையை துடைத்து முடிக்கவும் சரியாக இருந்தது.
எதுவும் பேசாமல் மலரின் முகம் பார்க்க அவள் கோபத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது நிறைய யோசிக்க வேண்டியது இருந்தது அவனுக்கு அமைதியாக வெளியேறியவன் நேராக மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்திருந்தான்.
பெளர்ணமிக்கு சில நாட்கள் இருக்க நல்ல வெளிச்சமாய் இருந்தது.
சுற்றிலும் பார்க்க தோட்டத்தில் இருந்து ஜாதி பூ செடியை கொடியாக மாடி வரை இழுத்து விட்டிருந்தனர். பூக்களின் சீசன் ஆதலால் காற்றோடு சேர்த்து பூவின் வாசம் அவனின் குழப்பமான மனதை அமைதி படுத்தியது. அமைதியாக ஓரமாக அமர்ந்தவன் ஹெட்செட்டை காதில் மாட்டியவன் தனது மொபைலில் தனக்கு பிடித்த பாடலை போட்டபடி கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.
பாடல்கள் இனிமையாய் காதில் ஒலிக்க மூளை தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தது. வந்ததிலிருந்து இந்த நிமிடம் நடந்த சண்டை வரை யோசித்தவனுக்கு தனது செயலின் தவறு நன்றாக புரிந்தது. தொடர்ந்து இது போல் சண்டையிட்டு கொண்டிருந்தால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பு குறைவதை உணர்ந்தவன். இனி எங்காரணம் கொண்டும் சண்டையிட கூடாது தீர்மாணித்தபடி இருந்தான்.
அதே நேரம் இரவு மலரோ தனக்கும் தந்தைக்கும் பால் காய்ச்சியவள் டம்ளரில் ஊற்றியபடி தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். இவளது குழப்ப முகத்தை பார்த்தவர்...
ஸாரிமா அவன் இங்கே தங்கறது உனக்கு பிடிக்கலையா... நாளைக்கு வேணும்னா போக சொல்லிடறேன்.
இல்லைபா.. வேண்டாம். பத்து நாள் தங்க சொல்லிட்டு போன்னு சொன்னா நல்லா இருக்காது. நீங்க உங்க ப்ரெண்டுக்கு என்ன பதில் சொல்லுவிங்க...இங்கேயே இருக்கட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
சரிடா.. அவனுக்கும் ஒரு டம்ளர் பால் குடுத்திடு...****** மாடி பக்கம் போறத பார்த்தேன்.
சரிபா கொடுத்துடறேன் என்றவள் அவனுக்கானதை எடுத்தபடி மாடிப்படி ஏறினாள். அங்கே அவன் அமர்ந்திருந்த தோற்றம் இவன் தான் அங்கு அத்தனை ரகளை செய்தான் என்றால் யாரும் நம்மி இருக்க மாட்டார்கள்..இதமான காற்றா நிலவு வெளிச்சமாக ஏதோ ஒன்று அவனை மோனநிலையில் ஆழ்த்தி இருந்தது.
இவளும் தன்னை அறியாமல் அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். கண்கள் மூடி இருக்க காற்றில் லேசாக கலைந்தாடிய தலைகேசம்... இருக்கம் குறைந்து முகத்தில் தெரிந்த அமைதி அவனை இளமையாய் இன்னும் அழகாய் காட்டியது.தானும் அவரையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனின் பெயர் சொல்லி அழைத்தாள்.அவளது சத்தம் மட்டுமே தனியாய் கேட்டது.
அவன் கண் திறப்பது போல் தெரியவில்லை..