K
kavi sowmi
Guest
சில நிமிடத்திலேயே இயல்பை தொலைத்து இருந்தவன் எதுவும் கூறாமல் அவளை வேகமாக அவளது கையை பிடித்து இழுத்தபடி வெளியேறினான். காரணம் புரியாத மலரோ.. ஏன் இப்படி இழுத்திட்டு வர்ற.. என்ன ஆச்சு..உனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு அங்கே பார்த்தவங்க என்ன சொல்வாங்க.. இதுக்காகதான் உன்ன கூப்பிட்டுட்டு வரமாட்டேன்னேன்.
உன்னோட போன் எங்கே..
வீட்ல இருக்கு. அது ஸ்விச் ஆப் ஆகிடுச்சி..அதனால நான் எடுத்துட்டு வரல..
எப்பவுமே இப்படி தான் செய்வாயா..
வெளிய கிளம்பினா போன் எடுக்கணும்ன்னு கூட தெரியாதா..
சும்மா திட்டாதே நான் ஓன்னும் தனியா வரல. உன் கூட தான் வந்தேன். நீ கூட இருக்கறதாலதான் போன் எடுத்துட்டு வரல போதுமா..இந்த பதில் அவனது கோபத்தை கொஞ்சமாய் குறைத்தது.
அப்பா கூப்பிட்டு இருந்தாங்க..ஏதோ எமர்ஜென்சி போல உடனே வரச்சொல்லி இருக்கறாங்க..
அப்பாவுக்கு ஒன்றும் இல்லைல்ல...
ஏய்.. கூல் அப்பாவுக்கு எதுவும் இல்லை...வீட்டு பக்கத்தில.. யாரோ கட்சிக்காரனை வெட்டிட்டாங்கலாம். பிரச்சினை ஆகும் போல இருக்கு ரெண்டு பேரும் வீட்டுக்கு உடனே வாங்கன்னு சொன்னாங்க...
இன்னும் நாலு நாள்ல இவங்களோட நிச்சயம் இருக்குல்ல அன்றைக்கு நிறைய நேரம் இருப்பயாம் இப்ப கிளம்பலாம்... நீ வண்டி ஓட்ட வேண்டாம். நான் வண்டி ஓட்டறேன் பின்னால் ஊட்காரு சரியா என்றவன் இவள் உட்காரவும் வண்டி வேகமாக பறந்தது.
கொஞ்சம் நிதானமா போங்க அபி இவள் சொன்னது காற்றின் கேகத்தில் அவன் காதில் விழுந்ததோ! இல்லையோ..பயத்தில் கைகளுக்கு அருகில் இருந்த கம்மியை பற்றிய படி கண்கள் இருக்கமாக மூடி அமர்ந்தவள் தான் வண்டி நிற்கவும் கண் திறந்து பார்த்தாள். கண்முன்னால் அவள் கண்ட காட்சி கைகள் தானாக நடுங்க...
இப்ப என்ன செய்யறது... சற்று தூரத்தில் ஐம்பதிற்துக்கும் மேற்பட்டோர் கையில் கம்பு ,கத்தி,தடிகளோடு ஒவ்வொரு கடையையும் எதிர் பட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கியபடி வந்து கொண்டிருந்தனர்.
அருகில் இருந்த குறுகலான தெருவில் வண்டியை விட்டவன் இந்த வழியா போனா எங்க போகலாம் மலர்.
இது கட் ரோடு..வழி கிடையாது.
அந்த ரோட்டிலும் அங்கங்கு வண்டி
நிறுத்தி இருக்க சற்று தொலைவில் வண்டியை நிறுத்தியவன்.. இவளை அழைத்தபடி சற்று மறைவாக நின்றிருந்தான். கட் ரோட்டுக்கு வர மாட்டாங்க. மெயின் ரோடு வழியா போகத்தான் பார்ப்பாங்க. எப்படியும்
இன்னேரம் போலீஸ்டேசனுக்கு கம்லைன்ட் போய் இருக்கும். பயப்படாதே என்றவன் இவளை தன் பின் புறமாக நிற்க வைத்து கொண்டான்.
கூச்சல் ஒருபுறம் கூடவே பொருட்கள் உடைபடும் சத்தம் அந்த கும்பல் அந்த தெருவை கடக்கும் சத்தம் தெளிவாக கேட்டது ஹோ என்ற கூச்சல் அருகில் கேட்க கடை விளக்குகளை உடைக்கும் சத்தம் உடைந்த கண்ணாடி சிதறலின் சத்தம் தெளிவாக காதில் கேட்க பயத்தில் கண்களை இருக்க மூடியபடி அவனது முதுகில் இருக்கி அணைத்தபடி நின்றிருந்தாள்.
அவளது இதய துடிப்பு அவனுக்கு நன்றாக கேட்டது. கைகளின் நடுக்கம் அவளது பயத்தை அப்பட்டமாய் அவனுக்கு உறைத்தது. பயப்படாத மலர் நடுங்கும் அவளது கைகளை தனது கைகளுக்குள் வைத்தபடி... இன்னும் ஐந்து நிமிடம் அவங்க நகர்ந்து போயிடுவாங்க.. இவளது பயத்தை அதிகப்படுத்தும் படி கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.
தலைவா..இந்த ரோட்டுக்கும் போய் ஒரு காட்டு காட்டிட்டு வரலாமா...இதை கேட்டதும் பயத்தில் இன்னும் அவனது முதுகில் நன்றாகவே ஓண்டினாள்.
வேண்டாம்டா அது கட் ரோடு... உள்ளே போன நேரம் போலீஸ் வந்தாங்கன்னா ஓடி தப்பிக்க வழி இருக்காது. அப்படியே நேரா போ...
போலீஸ் வண்டி சத்தம் கேட்டா ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிடுங்க...
மேலும் பத்து நிமிடம் தாண்டியிருக்க
போலீஸ் வாகனம் போகும் சத்தத்தை தொடர்ந்து அமைதியாய் இருக்க ...
மலர் போகலாம் என்றவன் இவளை அழைத்தபடி வீட்டிற்கு வண்டியை விட இன்னமும் நடுங்கி கொண்டிருந்தாள்.
கம்மியை இருக்கி பிடித்தவளின் கைகளை பிரித்து விட்டவன் ஓரு கையை எடுத்து தனது தோளில் வைத்தபடி... பயப்படாத... இன்னும் ஐந்து நிமிடம் வீட்டுக்கு போயிடலாம்
சொன்னவனின் நம்பிக்கை குரலில் அவளது பயம் மெல்ல மெல்ல விலகியது.
மெயின் ரோட்டில் அங்கிங்கு போலீஸ் நின்றிருக்க வீடு வரவும்
வாசலிலேயே காத்திருந்த மதுசூதனனோடு உள் சென்ற போது தான் தெரிந்தது பிரச்சினையின் தீவிரம்... எந்த அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என... லோக்கல் சேனலில் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் அட்டகாசத்தை.... எதிர் பட்டவர்களுக்கு அடி பட்டதாக கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தனர். நூற்றுக்கனக்கான வாகனங்கள் சேதம் என...திரும்ப திரும்ப ப்ளாஸ் நியூஸில் கொட்டை எழுத்தில் ஓடிக்கொண்டு இருந்தது.
சற்று நேரம் டிவியை பார்த்தபடி அமர்ந்தவளுக்கு தெரிந்தது தனியாக ஓரு வேளை வந்திருந்தால் என்னவாகி இருக்கும்.
உன்னோட போன் எங்கே..
வீட்ல இருக்கு. அது ஸ்விச் ஆப் ஆகிடுச்சி..அதனால நான் எடுத்துட்டு வரல..
எப்பவுமே இப்படி தான் செய்வாயா..
வெளிய கிளம்பினா போன் எடுக்கணும்ன்னு கூட தெரியாதா..
சும்மா திட்டாதே நான் ஓன்னும் தனியா வரல. உன் கூட தான் வந்தேன். நீ கூட இருக்கறதாலதான் போன் எடுத்துட்டு வரல போதுமா..இந்த பதில் அவனது கோபத்தை கொஞ்சமாய் குறைத்தது.
அப்பா கூப்பிட்டு இருந்தாங்க..ஏதோ எமர்ஜென்சி போல உடனே வரச்சொல்லி இருக்கறாங்க..
அப்பாவுக்கு ஒன்றும் இல்லைல்ல...
ஏய்.. கூல் அப்பாவுக்கு எதுவும் இல்லை...வீட்டு பக்கத்தில.. யாரோ கட்சிக்காரனை வெட்டிட்டாங்கலாம். பிரச்சினை ஆகும் போல இருக்கு ரெண்டு பேரும் வீட்டுக்கு உடனே வாங்கன்னு சொன்னாங்க...
இன்னும் நாலு நாள்ல இவங்களோட நிச்சயம் இருக்குல்ல அன்றைக்கு நிறைய நேரம் இருப்பயாம் இப்ப கிளம்பலாம்... நீ வண்டி ஓட்ட வேண்டாம். நான் வண்டி ஓட்டறேன் பின்னால் ஊட்காரு சரியா என்றவன் இவள் உட்காரவும் வண்டி வேகமாக பறந்தது.
கொஞ்சம் நிதானமா போங்க அபி இவள் சொன்னது காற்றின் கேகத்தில் அவன் காதில் விழுந்ததோ! இல்லையோ..பயத்தில் கைகளுக்கு அருகில் இருந்த கம்மியை பற்றிய படி கண்கள் இருக்கமாக மூடி அமர்ந்தவள் தான் வண்டி நிற்கவும் கண் திறந்து பார்த்தாள். கண்முன்னால் அவள் கண்ட காட்சி கைகள் தானாக நடுங்க...
இப்ப என்ன செய்யறது... சற்று தூரத்தில் ஐம்பதிற்துக்கும் மேற்பட்டோர் கையில் கம்பு ,கத்தி,தடிகளோடு ஒவ்வொரு கடையையும் எதிர் பட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கியபடி வந்து கொண்டிருந்தனர்.
அருகில் இருந்த குறுகலான தெருவில் வண்டியை விட்டவன் இந்த வழியா போனா எங்க போகலாம் மலர்.
இது கட் ரோடு..வழி கிடையாது.
அந்த ரோட்டிலும் அங்கங்கு வண்டி
நிறுத்தி இருக்க சற்று தொலைவில் வண்டியை நிறுத்தியவன்.. இவளை அழைத்தபடி சற்று மறைவாக நின்றிருந்தான். கட் ரோட்டுக்கு வர மாட்டாங்க. மெயின் ரோடு வழியா போகத்தான் பார்ப்பாங்க. எப்படியும்
இன்னேரம் போலீஸ்டேசனுக்கு கம்லைன்ட் போய் இருக்கும். பயப்படாதே என்றவன் இவளை தன் பின் புறமாக நிற்க வைத்து கொண்டான்.
கூச்சல் ஒருபுறம் கூடவே பொருட்கள் உடைபடும் சத்தம் அந்த கும்பல் அந்த தெருவை கடக்கும் சத்தம் தெளிவாக கேட்டது ஹோ என்ற கூச்சல் அருகில் கேட்க கடை விளக்குகளை உடைக்கும் சத்தம் உடைந்த கண்ணாடி சிதறலின் சத்தம் தெளிவாக காதில் கேட்க பயத்தில் கண்களை இருக்க மூடியபடி அவனது முதுகில் இருக்கி அணைத்தபடி நின்றிருந்தாள்.
அவளது இதய துடிப்பு அவனுக்கு நன்றாக கேட்டது. கைகளின் நடுக்கம் அவளது பயத்தை அப்பட்டமாய் அவனுக்கு உறைத்தது. பயப்படாத மலர் நடுங்கும் அவளது கைகளை தனது கைகளுக்குள் வைத்தபடி... இன்னும் ஐந்து நிமிடம் அவங்க நகர்ந்து போயிடுவாங்க.. இவளது பயத்தை அதிகப்படுத்தும் படி கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.
தலைவா..இந்த ரோட்டுக்கும் போய் ஒரு காட்டு காட்டிட்டு வரலாமா...இதை கேட்டதும் பயத்தில் இன்னும் அவனது முதுகில் நன்றாகவே ஓண்டினாள்.
வேண்டாம்டா அது கட் ரோடு... உள்ளே போன நேரம் போலீஸ் வந்தாங்கன்னா ஓடி தப்பிக்க வழி இருக்காது. அப்படியே நேரா போ...
போலீஸ் வண்டி சத்தம் கேட்டா ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிடுங்க...
மேலும் பத்து நிமிடம் தாண்டியிருக்க
போலீஸ் வாகனம் போகும் சத்தத்தை தொடர்ந்து அமைதியாய் இருக்க ...
மலர் போகலாம் என்றவன் இவளை அழைத்தபடி வீட்டிற்கு வண்டியை விட இன்னமும் நடுங்கி கொண்டிருந்தாள்.
கம்மியை இருக்கி பிடித்தவளின் கைகளை பிரித்து விட்டவன் ஓரு கையை எடுத்து தனது தோளில் வைத்தபடி... பயப்படாத... இன்னும் ஐந்து நிமிடம் வீட்டுக்கு போயிடலாம்
சொன்னவனின் நம்பிக்கை குரலில் அவளது பயம் மெல்ல மெல்ல விலகியது.
மெயின் ரோட்டில் அங்கிங்கு போலீஸ் நின்றிருக்க வீடு வரவும்
வாசலிலேயே காத்திருந்த மதுசூதனனோடு உள் சென்ற போது தான் தெரிந்தது பிரச்சினையின் தீவிரம்... எந்த அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என... லோக்கல் சேனலில் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் அட்டகாசத்தை.... எதிர் பட்டவர்களுக்கு அடி பட்டதாக கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தனர். நூற்றுக்கனக்கான வாகனங்கள் சேதம் என...திரும்ப திரும்ப ப்ளாஸ் நியூஸில் கொட்டை எழுத்தில் ஓடிக்கொண்டு இருந்தது.
சற்று நேரம் டிவியை பார்த்தபடி அமர்ந்தவளுக்கு தெரிந்தது தனியாக ஓரு வேளை வந்திருந்தால் என்னவாகி இருக்கும்.