• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னருகில் நீ இருந்தால்-3(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மதிய வேளையில் அஸ்வதியும், சாலினியும் கேண்டீனில் சாப்பிட்டார்கள். அனிதாவும், வனிதாவும் டிபன் கொண்டு வந்திருக்க நிர்மலா கேண்டீனில் சாப்பாடு வாங்கி அவர்கள் இருவருடன் பகிர்ந்துக் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளையில் நிர்மலாவை சந்தித்தான் மதியழகன்.

"நிர்மலா... இப்ப எங்க தங்கி இருக்கற?"
"நான் கம்பெனி ஏற்பாடு பன்னியிருக்கற ஹோட்டலில் தங்கி இருக்கறேன். இன்னிக்கு ஈவினிங் அனிதாவின் வீட்டுக்கு ஷிப்ட் ஆகிட்டு அப்புறமாக பிளாட்டுக்கு மாறலாமுன்னு இருக்கேம்பா"

"சரி நிர்மலா அப்படியே செய்" என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றான் மதியழகன்.

மாலை நிர்மலாவுடன் அனிதா, வனிதா இருவரும் சென்று ஹோட்டலை காலி செய்து விட்டு அனிதா தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து விட்டாள்.

கணபதி பகுதியில் உள்ள ஒர் மாடி வீடு. அந்த வீட்டில் மேல் தளத்தில் உள்ள வீட்டைதான் இவர்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு கீழ் தளத்தில் அவர்கள் குடியிருந்தார்கள்.

பெரும்பாலும் தனியாக வசிக்கும் இளம் பெண்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்க எவரும் தயங்கும் வேளையில் இவர்கள் தர காரணம் அனிதா சொந்தகார பெண் என்பதே ஆகும்.

நிர்மலாவின் உடைமைகளோடு மூவரும் வந்து கேட்டை திறக்கும் பொழுது வீட்டின் சொந்தகாரரும் அனிதாவின் அத்தையுமான சில்வியா மேரி நின்றிருந்தார்.

அனிதா முன்னரே அத்தைக்கு போன் செய்து நிர்மலாவை பற்றி தெரிவித்து இருந்தாள்.

"வா அனிதா... இதுதான் உன் பிரெண்ட் நிர்மலாவா?" என்று கேட்டார் அத்தை.

"ஆமா அத்தை... இவதான் நிர்மலா" என்று அனிதா சொல்ல "வணக்கம்மா" என்றாள் நிர்மலா.

"உன் சொந்த ஊரு எதும்மா?"
"சென்னை ஆண்டி. நான் காலேஜ் படிச்சது இங்கதாம்மா"
"அனிதா நீ வரதா போனில் சொல்லுச்சு. நீ பார்க்க நல்ல புள்ளையாத்தான் தெரியற. சரிம்மா" என்று சொல்ல மூவரும் மாடிக்கு சென்றனர்.

வனிதா சாவி போட்டு கதவைத் திறக்க மூவரும் அறைக்குள் நுழைந்தனர்.

ஒரு பெரிய ஹால், ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன் என அளவான வீடாகத்தான் அது இருந்தது.

அனிதாவின் அத்தையின் உபயத்தால் கலர்டிவி, டேபிள் பேன், சீலிங் பேன், டீயூப்லைட், ஒரு கட்டில், மிக்சி, சோபா என எல்லா வசதிகளும் இருந்தது.

மாடியில் தனி வீடு என்பதால் ஜன்னலை திறந்து விட்டால் காற்று சில்லென்று வீசியது.

"அனிதா... அவங்க உன் சொந்த அத்தையா?" என்றாள் நிர்மலா.

"ஆமாம்பா அவங்க என் சொந்த அத்தைதான். என் அப்பா கூட பிறந்த தங்கை அவங்க" என்ற அனிதாவை கேள்விகளோடு பார்த்தாள் நிர்மலா.

"அப்புறம் ஏன் வாடகைக்கு தங்கியிருக்கேன்னு கேட்க வர்ற?" என்றாள் அனிதா

ஆம் என்பது போல் நிர்மலா தலையசைக்க "எல்லாம் என்னால்தான்" என்றாள் வனிதா.

"உன்னாலேயா?" என்றபடி வனிதாவை பார்த்தாள் நிர்மலா.

"எனக்கும் அனிதாவுக்கும் சொந்த ஊரு திருச்சி. நாங்க ஒரே காலேஜ்ல பிஇ முடிச்சவங்க. இங்க ஜாயின் பன்னதும் அனிதா அவள் அத்தை வீட்டுக்கு வந்துட்டாள். நான் ஹாஸ்டலில் தங்கினேன். சாப்பாடு ஒத்துக்காம புட் பாய்சன் ஆகி ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அனிதா அதை பார்த்துட்டு இந்த வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லி என்னை தங்க வைச்சிட்டாள். அவளும் என்னோட தங்கி செலவை ஷேர்பன்னிக்கிறா" என்றாள் வனிதா.

"அப்ப நான் இனி அதில் ஒரு பகுதியை ஷேர் பன்னப் போறேன்னு சொல்லுங்க" என்றாள் நிர்மலா.

"வேண்டாம்பா. நீ பிளாட் போகிற வரைக்கும்தானே இருக்கப் போகிறாய் அதனால் நீ ஒன்றும் தர வேண்டாம்" என்றாள் அனிதா.

"இவ்வளவு சூப்பரான வீட்டை விட்டுட்டு யாருப்பா பிளாட்டுக்கு போவா? நான் இங்கதான் தங்கப் போகிறேன்" என்று நிர்மலா சொல்லிவிட்டு பார்த்தாள்.
Message…
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"வாவ் சூப்பர்யா!" என்று அனிதா சொல்லி சிரிக்க, "நிம்மிக்கு ஒரு எக்ஸ்ட்ரா கட்டில் போடுப்பா" என்றாள் வனிதா.

"இனி நானும் ஆகற செலவை ஷேர் பன்னிக்கலாமில்லையா?" என்று கேட்டாள் நிர்மலா.

"தாரளமாக" என்று அனிதா சொல்ல இரு பறவைகள் வாழ்ந்த கூட்டில் ஒர் இளம் பறவையாக சேர்ந்தாள்.

"அனிதா... இங்க தங்கறதுன்னு முடிவாயிடுச்சு. உங்க அத்தை வீட்டில் இருப்பவங்களை பற்றி சொல்லிட்டின்னா நான் பார்த்து நடந்துப்பேன்" என்றாள் நிர்மலா.

"அதை நான் சொல்றேன் நிம்மி" என்றாள் வனிதாவை பார்த்தாள் நிர்மலா.

"இவங்க மாமா பேரு ஜான்சன். நம்ம அப்பாக்கள் வயசுதான். நல்லா ஜோவியல் டைப். மிலிட்டரியில் இருக்காரு. வீட்டுக்கு லீவு கிடைக்கிறப்ப வரும் பொழுது எல்லாம் வீடு களை கட்டும். அவருக்கு தப்பு செய்யறவங்களை விட செஞ்ச தப்பை மறைக்கறவங்களை பிடிக்கவே பிடிக்காது." என்றாள் வனிதா.

"அது கரெக்ட்தானேப்பா" என்று நிர்மலா ஆமோதிக்க வனிதா தொடர்ந்தாள்.

"அத்தை பேரு சில்வியா மேரி. அவங்க ஒரு அன்பான குடும்பத் தலைவி. அவங்க என்னையும், அனிதாவையும் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறாங்க" என்று வனிதா சொல்லி முடிக்கும் பொழுது "அனிம்மா" என்றபடி வந்தார் அத்தை மேரி.

"வாங்க அத்தை... உங்களுக்கு நூறு வயசு. வனிதா இப்பதான் உங்களை பற்றி நிம்மிகிட்ட சொல்லிட்டிருந்தாள். நீங்களே வர்றிங்க." என்றாள் அனிதா.

"ஆமாம்மா" என்று நிர்மலா சொல்ல "என்ன நிர்மலா... வீடு எல்லாம் ஒகேவா?" என்றார் அத்தை.

"அம்மா... நிம்மிக்கு வீடு பிடிச்சு போயி இங்கேயே தங்கறதா சொல்லிட்டா" என்று வனிதா சொல்ல "ஆமாம்மா" என்றாள் நிர்மலா.

"ஆமா... நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். எதுக்கெடுத்தாலும் ஆமா சரின்னு மணிரத்னம் பட ஆர்டிஸ்ட் மாதிரி பதில் சொல்ற நீ. இது உன் வீடு மாதிரி. அனி எப்படியோ அப்படித்தான் எனக்கு நீயும் அதனால் தயங்காம நல்லா கலகலப்பா பேசு. என்ன?" என்றார் அத்தை.

"சொல்லிட்டிங்க இல்லை இனி பாருங்க" என்றாள் நிர்மலா.

"அம்மா... நிம்மி பார்க்கதான் சைலண்டா இருப்பாள். அவ என்னை விட ஒவரா பேசுவா" என்றாள் வனிதா.

நிர்மலா அவளை கிள்ள "ஆ!" என்று வனிதா அலற "அதுல என்ன தப்பிருக்கும்மா. எனக்கு பொண்ணுகன்னா நல்ல கலகலப்பாக பேசுனும்" என்றார் அத்தை.

"அனிதா... நீ லக்கிப்பா. இந்த மாதிரி ஒரு ஆண்டி கிடைக்க கொடுத்து வைக்கனும்" என்ற நிர்மலா சொல்ல,
"நிம்மிமா... எனக்கு ஏற்கனவே லைட்டா கோல்டா இருக்கு" என்றார் மேரி.

வனிதாவும், அனிதாவும் அவளை பார்த்து சிரிக்க, "அம்மா... உங்களை" என்று செல்லமாக கோபித்தாள்.

"சரிம்மா... நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன். இன்னிக்கு நைட் டிபன் என் வீட்லதான் அதனால பிரஷ் ஆயிட்டு வந்துடுங்க" என்றார் அத்தை.

"சரி" என்று மூவரும் சொல்ல அத்தை கீழே இறங்கி சென்றார்.

"சரி வாங்க... அம்மாவுக்கு போயி ஹெல்ப் பன்னலாம் அப்புறம் வந்து மத்ததை பேசிக்கலாம்" என்று நிர்மலா சொல்ல மூவரும் பிரஷ் ஆனபின் கீழே சென்றனர்.

சில்வியா மேரி பூரி மசால் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நிர்மலா உருளை கிழங்கு தோல் நீக்கி தந்தாள். அனிதாவும் வனிதாவும் பூரி உருட்டி தர சமையல் முடிய நால்வரும் சாப்பிட்டார்கள்.

"அனிதா... ஒரு கட்டில்தானே அங்கே இருக்கும் அதனால கட்டில் போடறவரைக்கும் நீ இங்கேயே படுத்துக்கோ" என்றார் அத்தை மேரி.

"இல்லம்மா நாங்க அட்ஜஸ்ட் பன்னி படுத்துக்கிறோம்" என்று நிர்மலா சொல்ல "ஆமாம்மா" என்றாள் வனிதா.

"சரி உங்க இஷ்டம்மா. " என்று அத்தை சொல்ல "சரிம்மா. அப்ப நாங்க போயி படுகிறோம்மா" என்றாள் நிர்மலா.

"சரிங்கம்மா. குட்நைட்" என்று அத்தை மேரி சொல்ல "குட்நைட் அம்மா" என்றபடி மூவரும் மேலே வந்தார்கள்.

இரவு படுக்க நைட்டிக்கு மாறிய பின்னர் வனிதா கட்டிலில் படுத்த பின்னர் "நிர்மலா போயி படு" என்றாள் அனிதா.

"அப்ப நீ?" நிர்மலா கேட்க "நீ முதல்ல படு" என்று சொல்ல அவள் தயங்கி படுத்தாள்.

அனிதா அவளுக்கு அருகே படுக்க இருவரும் அவள் மேல் கால் போட்டு அணைக்க "இப்ப எப்படின்னு புரியுதா?" என்றாள் வனிதா.

"கட்டில் போடற வரைக்கும் இப்படித்தான்" என்று அனிதா சொல்ல "கட்டில் போட்டாலும் இப்படித்தான்" என்றாள் நிர்மலா.

தனிக்கட்டிலில் படுத்தே பழகிய நிர்மலாவுக்கு இது புதுசுதான் என்றாலும் அவளுக்கு அது ஆனந்தத்தை அளிக்க சுகமாய் தூங்க ஆரம்பித்தாள்.
Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
நான் எபி போடறப்ப எல்லாம் கரெக்டா ஆஜராகி கமெண்ட் பன்னிடறிங்க. நீங்க கிரேட்ம்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் எபி போடறப்ப எல்லாம் கரெக்டா ஆஜராகி கமெண்ட் பன்னிடறிங்க. நீங்க கிரேட்ம்மா
Thank you so much, சக்திப்ரியா டியர்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Cute ud sis...;);) nimmi, ani nd vani ah pakkarappo ennoda frds nyabagam vandhuruchu:love::love:lovely nd thanks sis
அப்படியா ரிஹா. நட்பு என்பது காதலை விட இனிமையானது அதனால்தான் அதை பற்றி அதிகமாக எழுதறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top