ஹாய் மக்களே
இங்கு எக்ஸ்க்ளுசிவாக இருக்கும் எழுத்தாளர்களின் நாவல்களை நாமே வெளியிட்டு வருவது யாவரும் அறிந்ததே. நம்மிடம் ஸ்லாட் காலி இல்லாத பட்சத்தில் நமது தோழமை பதிப்பகங்கள் மூலமும் நாவல்களை வெளியிட்டு வருகிறோம். இப்படி இருக்கும் போது எழுத்தாளர்களை நாங்கள் எங்குமிருந்து கட்டியிழுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மை தேடி வரும் எழுத்தாளர்களை வேண்டாம் என்று சொல்வதில்லை. எக்ஸ்க்ளுசிவாக இல்லாமல் மற்ற தளங்களிலும் எழுதும் எழுத்தாளர்களும் நம்மிடம் இருக்கிறார்கள் தான். அவர்கள் எல்லோருமே பரந்துபட்ட பார்வை உடையவர்கள். அனைத்து இடங்களையும் ஒன்றாக பாவிக்க தெரிந்தவர்கள் என்று தான் இதுநாள் வரை நினைத்திருந்தேன்.
ஆனால் இப்போது முகநூலில் ஏற்பட்ட சிறு சலசலப்பை காரணமாக கொண்டு சிலர் இங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அறிந்து அதிர்ந்து போனேன், இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று!
எழுத்தாளர்களுக்கு இந்த வகையான அழுத்தம் கொடுப்பது எந்த வகையான அணுகுமுறை? இப்படி செய்து தான் அவர்களது தளத்தையும் பதிப்பகத்தையும் வளர்க்க வேண்டுமா? அவர்களே நம்பர் ஒன்னாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். இந்த விளையாட்டுக்குள் எந்த இடத்திலும் நாங்கள் இல்லை.
இந்த தளம் தரமான எழுத்துக்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், புதுமைக்கும், வித்தியாசமான முயற்சிகளுக்கும் பெயர் வாங்கியது. இங்கிருக்கும் நம்முடைய தோழிகளுக்கும் இதே பரந்துபட்ட பார்வை இருக்கிறது. ஒவ்வொருவரும் சுயமாக சிந்திப்பவர்கள். ஒவ்வொன்றிலும் தனித்தன்மை வேண்டும் என்று நினைப்பவர்கள். அதை தான் நான் ஆதரிக்கிறேன். ஒரு சிலரின் சுயநலமான அழுத்தங்களுக்கு தலைசாய்த்து தானாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இது இடமல்ல. தயவு செய்து என்னிடம் வந்து கூறிவிடுங்கள்.
எங்களது ஒற்றுமையை, தனித்தன்மையை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.
இதுவரை நான் இதுபோன்ற சில்லரைத்தனங்களை கண்டுகொள்ளாமல் போயிருக்கிறேன். எங்களது மௌனம் இயலாமை அல்ல, முதிர்ச்சி. அதை புரிந்து கொள்ளவும் சற்றேனும் முதிர்ச்சி வேண்டும். அது அவர்களிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி!
இங்கு எக்ஸ்க்ளுசிவாக இருக்கும் எழுத்தாளர்களின் நாவல்களை நாமே வெளியிட்டு வருவது யாவரும் அறிந்ததே. நம்மிடம் ஸ்லாட் காலி இல்லாத பட்சத்தில் நமது தோழமை பதிப்பகங்கள் மூலமும் நாவல்களை வெளியிட்டு வருகிறோம். இப்படி இருக்கும் போது எழுத்தாளர்களை நாங்கள் எங்குமிருந்து கட்டியிழுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மை தேடி வரும் எழுத்தாளர்களை வேண்டாம் என்று சொல்வதில்லை. எக்ஸ்க்ளுசிவாக இல்லாமல் மற்ற தளங்களிலும் எழுதும் எழுத்தாளர்களும் நம்மிடம் இருக்கிறார்கள் தான். அவர்கள் எல்லோருமே பரந்துபட்ட பார்வை உடையவர்கள். அனைத்து இடங்களையும் ஒன்றாக பாவிக்க தெரிந்தவர்கள் என்று தான் இதுநாள் வரை நினைத்திருந்தேன்.
ஆனால் இப்போது முகநூலில் ஏற்பட்ட சிறு சலசலப்பை காரணமாக கொண்டு சிலர் இங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அறிந்து அதிர்ந்து போனேன், இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று!
எழுத்தாளர்களுக்கு இந்த வகையான அழுத்தம் கொடுப்பது எந்த வகையான அணுகுமுறை? இப்படி செய்து தான் அவர்களது தளத்தையும் பதிப்பகத்தையும் வளர்க்க வேண்டுமா? அவர்களே நம்பர் ஒன்னாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். இந்த விளையாட்டுக்குள் எந்த இடத்திலும் நாங்கள் இல்லை.
இந்த தளம் தரமான எழுத்துக்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், புதுமைக்கும், வித்தியாசமான முயற்சிகளுக்கும் பெயர் வாங்கியது. இங்கிருக்கும் நம்முடைய தோழிகளுக்கும் இதே பரந்துபட்ட பார்வை இருக்கிறது. ஒவ்வொருவரும் சுயமாக சிந்திப்பவர்கள். ஒவ்வொன்றிலும் தனித்தன்மை வேண்டும் என்று நினைப்பவர்கள். அதை தான் நான் ஆதரிக்கிறேன். ஒரு சிலரின் சுயநலமான அழுத்தங்களுக்கு தலைசாய்த்து தானாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இது இடமல்ல. தயவு செய்து என்னிடம் வந்து கூறிவிடுங்கள்.
எங்களது ஒற்றுமையை, தனித்தன்மையை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.
இதுவரை நான் இதுபோன்ற சில்லரைத்தனங்களை கண்டுகொள்ளாமல் போயிருக்கிறேன். எங்களது மௌனம் இயலாமை அல்ல, முதிர்ச்சி. அதை புரிந்து கொள்ளவும் சற்றேனும் முதிர்ச்சி வேண்டும். அது அவர்களிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி!