தன்னை அழுத்தமாய் காட்டிக்கொண்டு ..
முரட்டுதனமாய் சுற்றும் ஆண்களின் உதட்டிலும்.புன்னகையை பூக்க வைக்கும் சக்தி !
மகள்களிடம் மட்டுமே உள்ளது....!!!
அத்தியாயம் 8 :
முந்தின தினம் என் பத்ரா நிச்சயம் என் ஆசையை நிறைவேத்துவாரு என பரியா நம்பிக்கையாய் சொல்லிச்சென்றிருக்க,
மறுநாள் அவள் சொன்னதுபோல் அவள் அறையில் கனகாம்புறமும், மல்லியும் சேர்த்து தைத்திருந்த ஜடை இருந்தது .
யாஹூ !!!! ப்ரிக்குட்டி நான் சொன்னேன்ல பாரு என் பத்ரா என்னோட ஆசைய நிறைவேத்திட்டாரு என சந்தோஷத்தில் எகிறி குதித்தவள் , நான் இப்பவே இத வச்சிக்கபோறேன் என அதை எடுக்க சென்றாள்.
ஏய் ! குளிக்காம அதில கைய வச்சினா கைய உடைச்சிபுடுவேன் என அதட்டலாய் கேட்ட குரலில் சந்தோஷமாய் சகோதரிகள் இருவரும் திரும்ப அங்கு பவித்ரா (அவர்களது அன்னை) நின்றிருந்தார் .
மாம் ........ என கத்திகொண்டே இருவரும் அவரை கட்டிக்கொள்ள , அட என் பொண்ணுங்களா இது இவ்ளோ சீக்கிரம் எழுந்தது என அங்கு வந்தார் பிரபு.
அப்பாபா என மகள்கள் இருவரும் அவரிடம் செல்ல , ம்ம்ம்கும் அப்பா வந்த உடனே அம்மா கண்ணுக்கு தெரியமாட்டனே என நொடித்த பவித்ரா,
சரிசரி கொஞ்சுனது போதும் , போய் குளிங்க ரெண்டுபேரும் . ஏங்க நீங்க மொதல்ல கிளம்புங்க அப்போ தான் அவளுங்க கிளம்புவாளுங்க என அனைவரையும் விரட்டினார் .
நாங்க ஒண்ணா இருந்தா போதும் உடனே பொறாமையில பொசுங்க ஆரம்பிச்சிடுவியே என பிரபு முனங்க வழக்கம்போல் அது பவித்ராவின் காதில் விழிந்து தொலைத்தது .
உங்கள என ஆரம்பிக்க ...இதோ இந்தா கிளம்பிட்டேன் மா என வெற்றிகரமாய் பின்வாங்கியவர் ஓடியேவிட்டார் .
பரியாவோ தான் நம்பியது பொய்த்துப்போகவில்லை என சந்தோஷத்தில் இருக்க ,
ப்ரியாவின் பத்திரிக்கை மூளை சும்மாஇல்லத்தில் தன் முக்கிய சந்தேகத்தை அன்னையிடம் கேட்டாள்.
மாம்! எப்ப வந்திங்க ? இந்த ஜடையை நீங்களா வரும்போது வாங்கிட்டு வந்திங்க.
ஏண்டி இங்க வருமுன்ன நல்லா தான இருந்த .இப்போஎன்ன ஆச்சி லூசுத்தனமா கேக்கற .
மா ...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மா
ம்ம்க்கும் இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு .
ஏண்டி நீங்க இங்கதான் இருக்கீங்கன்ற விஷயத்தை உங்க அப்பா என்கிட்டே மூச்சேவிடல . அப்றம் எதுக்குடி நான் வாங்கிட்டு வரப்போறேன் .
அப்போ இது எப்படி இங்க வந்தது என அவள் யோசனையாய் கேட்க,
இது என்ற அண்ணன் மவன் குடுத்தான் டி . நாங்க வரப்போவே புள்ள இத தச்சிட்டு இருந்துச்சி . எம்புட்டு அழகா இருக்குல்ல என அதை தொட போக ,
அது வரை தன்னவனுடனான கனவில் இருந்த பரியா இவர்களின் பேச்சில் நிஜத்திற்கு வந்தாள்.
அவர் ஜடையின் அருகில் செல்வதை பார்த்து அவரின் முன் சென்று தடுத்தவள், மா இது எனக்குனு பண்ணது . நான் தான் முதல்ல தொடுவேன் என சிறுபிள்ளையாய் சிணுங்கினாள் .
தன்னவன் தன் ஆசைக்காய் இதை எப்படியேனும் கொண்டுவருவான் என நினைத்திருந்தாலே தவிர அவனே இதை முழுக்க முழுக்க செய்வான் என எதிர்பார்க்கத்தில் அவளின் மனம் தன் காதலை அடக்க இயலாமல் விம்மியது.
ஏய் ரொம்ப பண்ணாதடி .இத இங்க எடுத்துட்டு வந்து வச்சதே நான் தான்டி .போ போய் குளி முதல்ல என அவளை விரட்டியவர் ,
முழித்துகொண்டிருந்த ப்ரியாவை பார்த்து , நீ என்னடி முழிச்சிட்டு நிக்குற என்றார்.
மாம் ! நான் கேக்றதுக்கு சரியானா பதில் சொல்லுங்க . அண்ணன் மகன்னு நீங்க யாரை சொல்றிங்க என விடாமல் கேட்டவளிர்க்கோ தன் தமக்கையின் காதலில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் எழுந்திருந்தது .
இது என்ன டி கேள்வி , அண்ணன் மகன்னு நா யாரை சொல்ல போறேன் என்று தொடர போனவரை தடுத்தது கீழிருந்து வந்த கோதண்டநாகாவின் குரல்.
சீக்கிரம் கிளம்புங்கடி , நீ போய் உன் ரூம்ல குளிச்சிட்டு வா .அண்ணன் கூப்புட்றாரு நான் போய்ப்பாக்குறேன் என கிளம்ப ,
மா ..மா....சொல்லிட்டு போமா என ப்ரியா கத்த பவித்ராவோ கண்டுகொள்ளாலே சென்றார்.
பரியா குளித்துவிட்டு வந்தபொழுது ப்ரியா குளித்துமுடித்து கிளம்பிருந்தவள் , கட்டிலில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தால் .
ப்ரி இது ரெண்டுல எந்த புடவை நல்லா இருக்குனு சொல்றி என அவளிடம் கேட்க ,
அதுலாம் வேணாம் கண்ணு இந்தா இந்த சேலைய கட்டிக்கோ என ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை தந்த ஜானகி (பவனஜின் அம்மா) அதற்கு தோதான நகைகளும் உடன் தந்தார் .
ப்ரியாவோ அதை பார்த்து முட்டை கண்ணை விரித்து முழிக்க ,
பரியா தான் அவரிடம் ,என்ன அத்த.... இதெல்லாம் எதுக்கு என கேட்டாள்.
பின்ன ஜடை வைக்கணும்னு சொன்னல அதுக்குதான் இது என கொடுத்தவரின் உதடுகளோ கேலிசிரிப்பில் பூத்திருந்தது.
அங்கிருந்த ஜடையை பார்த்த அவரும் , ராசா னா ராசா தான். நேத்து தான் அயித்த சொன்னாங்க ஜட தைக்கமுடிலனு .அதுக்குள்ள ஒரே ராவுல புள்ள எம்புட்டு ஜோரா தைச்சிருக்கு என மோவாயில் கை வைத்து அதிசயத்தார் .
அவளின் முகத்தை வழித்து நெட்டுடைத்தவர் , எம்புட்டு அம்சமா இருக்க உனக்கு அந்த ஜட பொருத்தமா இருக்கும் கண்ணு .என் ராசா ரொம்ப குடுத்துவச்சிக்கணும் என பேசிக்கொண்டே கீழிறங்கி சென்றார்.
யக்காவ் ...எனகென்னமோ உனக்கு பெரிய ஆப்பா எதுவோ வைக்கப்போறாங்கனு தோணுது .நா இப்போ இங்க வரும்போது கூட பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் பண்ணிருக்காங்க . தங்கச்சி சொல்றேன் வா இங்க இருந்து எஸ் ஆவோம் .
சும்மா இருடி , எப்பப்பாரு லூசு மாதிரி உளறிட்டு இருக்க என அழுத்த பரியாவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவள் கீழிருந்தவர்களை காட்டி , அங்க பாருக்கா என்றாள்.
என்னடி அங்க ? தாத்தாவும் , வஜ்ரநாகா மாமாவும் தான இருக்காங்க என அசால்டாக கேட்டாள் பெரியவள் .
ஐயோ இந்த தத்தி அக்காவை வச்சிக்கிட்டு நான் இன்னும் என்ன பாடுபடபோறனோ என ப்ரியா புலம்ப பரியா அவளின் தலையில் கொட்டினாள்.
அவ்ச் யக்காவ் எதுக்கு இப்போ கொட்டுன என முறைக்க .
ஏண்டி அவங்க வீட்ல அவங்க இருக்றதுல என்ன இருக்கு ? இத கேட்டா லூசு மாதிரி ஒலர்ற .
அக்கா இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோ நீ லாம் சத்தியமா போலீஸ் ஆவமாட்ட.
முறைச்சா பயந்துருவோமா ,பின்ன என்னக்கா ...நம்ப மொதல் நாள் இந்த வீட்டை கண்டுபிடிக்க ஒருத்தர்ட்ட விசாரிச்சப்ப என்ன சொன்னாரு .
என்ன சொன்னாரு என யோசித்தாள் பரியா . இவர்கள் கோதண்டநாக , வஜ்ரநாகா இருவரின் பெயரையும் சொல்லி விசாரிக்க ,
இங்குட்டுல இருந்து நேருக்கா போன கடைசியா ரெண்டு பெரிய வீடு ஒட்டினாப்ல இருக்கும் . ரெண்டுக்கும் நடுவுல மதி சுவர் சின்னுண்டா இருக்கும் பாருங்க .
அதுல வலப்பக்கமா இருக்கிறது தாத்தைய்யா வூடு. அங்கிட்டு தான் வஜ்ரநாகா ஐயா இருப்பாரு .
இடப்பக்கம் இருக்கிறது நம்ப கோதண்டநாக ஐயா வூடுங்க என்றிருந்தார் .
பிறகு இங்குவந்தபின் சௌவுந்தரம்மாளிடம் , விசாரித்த பொழுதுதான் தந்தை மகன் விவாவதத்தில் இப்படி பிரிந்திருப்பது தெரிந்தது . இதுவரை கோதண்டநாக வீட்டீற்க்குள் கப்பீஷ்வர் வந்ததே இல்லை.
அதை எண்ணிப்பார்த்த பரியா ,
இதுவரைக்கும் இங்க நம்ப தாத்தைய்யா வந்ததே இல்லனு தான அம்மாயி சொன்னாங்க என கண்களை உருட்டினாள்.
அதேதான் கா ...ஆனாபாரு இப்போ அவரும் வஜ்ராமாமாவும் காலம்காலமா இந்த வீட்லயே இருக்க மாறி உட்காந்து சிரிச்சிட்டே இருக்கிறத. அதான் சொல்றேன் ஏதோ ஆப்பு ரெடி பண்றங்க வா எஸ் ஆகிடுவோம் .
ஏய் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே நம்பளுக்கு தெரியாது .ஏதோ இப்போ சரிஆகிடிச்சிபோல . அதுக்கும் நம்பளுக்கும் என்ன டி சம்மந்தம்.
அப்பொழுது அங்கு வந்த பவித்ரா , மகள்கள் இருவரும் படிகளில் நின்று பேசிகொண்டிப்பதை பார்த்தவர் , இங்க என்னாடி பண்ணுறீங்க ரெண்டுபேரும் . பரி நீ போய் ரெடியாகுமா , ப்ரி நீ அக்காக்கு உதவி பண்ணு ப்ங்க்ஷன் ஆரம்பிக்கிறவரைக்கும் கீழ வர கூடாது ஓடுங்க என விரட்ட ,
மா ப்ங்க்ஷனா ! என்ன ப்ங்க்ஷன் மா என பரியா கேட்க ,
உன் நிச்சயதார்த்தம் தான்டா குட்டி என சொல்லியபடியே அங்கு வந்தார் பிரபு.
சொன்னவரை பவித்ரா முறைக்க , ஏன்மா பொண்ணுகிட்ட சொல்லவேண்டிது நம்ப கடமை இல்லையா என பதிலுக்கு பிரபு கேட்க,
எப்படி பா ? நிச்சயத்துக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னடியா என ப்ரியா கேட்ட விதத்தில் பரியாவே அதிர்ந்து பார்க்க ,
பிரபு என்ன சொல்வதென தெரியாமல் வாயடைத்துப்போனார் .
ஏய் என்னடி பேசுற அவர்ட்ட என ப்ரியாவை திட்டிய பவித்ரா , இதுக்குதான் செல்லம் குடுக்காதிங்க சொன்னேன் கேட்டீங்களா என பிரபுவையும் ஏசினார் .
பிரபுவோ பரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு , அப்பா உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான்டா சொல்லல . நீ பவன் மேல எம்புட்டு ஆச வச்சிருக்கேன்னு எனக்கு தெரியாதா.
காலைல பவன் அந்த ஜடைய கொடுக்கும்போது பெரியஅத்த பேச்சுவாக்கல , எதுக்கு வெறும் ஜட துணிமணியும் எடுத்துகுடு இன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கிடலாம் னு சொன்னாங்கமா . நம்ப சொல்லாமே நம்ப பொண்ணோட ஆசை நிறைவேறுதுன்னு தான்மா நான் சொல்லல என மகள்கள் தன்னை தவறாய் எடுத்துக்கொள்வார்களோ என நீண்டதாய் விளக்கம் கொடுத்தார் .
மனதினுள் பழகுழப்பங்கள் இருந்தாலும் தன் தந்தை வருந்துவது பிடிக்காமல் மகள்கள் அவரை சமாதானபடுத்த ஆரம்பிக்க அங்கு ஒரு பாச அலை உருவாகி அனைவரையும் நனைத்து சென்றது .
************************************************************************************
முரட்டுதனமாய் சுற்றும் ஆண்களின் உதட்டிலும்.புன்னகையை பூக்க வைக்கும் சக்தி !
மகள்களிடம் மட்டுமே உள்ளது....!!!
அத்தியாயம் 8 :
முந்தின தினம் என் பத்ரா நிச்சயம் என் ஆசையை நிறைவேத்துவாரு என பரியா நம்பிக்கையாய் சொல்லிச்சென்றிருக்க,
மறுநாள் அவள் சொன்னதுபோல் அவள் அறையில் கனகாம்புறமும், மல்லியும் சேர்த்து தைத்திருந்த ஜடை இருந்தது .
யாஹூ !!!! ப்ரிக்குட்டி நான் சொன்னேன்ல பாரு என் பத்ரா என்னோட ஆசைய நிறைவேத்திட்டாரு என சந்தோஷத்தில் எகிறி குதித்தவள் , நான் இப்பவே இத வச்சிக்கபோறேன் என அதை எடுக்க சென்றாள்.
ஏய் ! குளிக்காம அதில கைய வச்சினா கைய உடைச்சிபுடுவேன் என அதட்டலாய் கேட்ட குரலில் சந்தோஷமாய் சகோதரிகள் இருவரும் திரும்ப அங்கு பவித்ரா (அவர்களது அன்னை) நின்றிருந்தார் .
மாம் ........ என கத்திகொண்டே இருவரும் அவரை கட்டிக்கொள்ள , அட என் பொண்ணுங்களா இது இவ்ளோ சீக்கிரம் எழுந்தது என அங்கு வந்தார் பிரபு.
அப்பாபா என மகள்கள் இருவரும் அவரிடம் செல்ல , ம்ம்ம்கும் அப்பா வந்த உடனே அம்மா கண்ணுக்கு தெரியமாட்டனே என நொடித்த பவித்ரா,
சரிசரி கொஞ்சுனது போதும் , போய் குளிங்க ரெண்டுபேரும் . ஏங்க நீங்க மொதல்ல கிளம்புங்க அப்போ தான் அவளுங்க கிளம்புவாளுங்க என அனைவரையும் விரட்டினார் .
நாங்க ஒண்ணா இருந்தா போதும் உடனே பொறாமையில பொசுங்க ஆரம்பிச்சிடுவியே என பிரபு முனங்க வழக்கம்போல் அது பவித்ராவின் காதில் விழிந்து தொலைத்தது .
உங்கள என ஆரம்பிக்க ...இதோ இந்தா கிளம்பிட்டேன் மா என வெற்றிகரமாய் பின்வாங்கியவர் ஓடியேவிட்டார் .
பரியாவோ தான் நம்பியது பொய்த்துப்போகவில்லை என சந்தோஷத்தில் இருக்க ,
ப்ரியாவின் பத்திரிக்கை மூளை சும்மாஇல்லத்தில் தன் முக்கிய சந்தேகத்தை அன்னையிடம் கேட்டாள்.
மாம்! எப்ப வந்திங்க ? இந்த ஜடையை நீங்களா வரும்போது வாங்கிட்டு வந்திங்க.
ஏண்டி இங்க வருமுன்ன நல்லா தான இருந்த .இப்போஎன்ன ஆச்சி லூசுத்தனமா கேக்கற .
மா ...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மா
ம்ம்க்கும் இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு .
ஏண்டி நீங்க இங்கதான் இருக்கீங்கன்ற விஷயத்தை உங்க அப்பா என்கிட்டே மூச்சேவிடல . அப்றம் எதுக்குடி நான் வாங்கிட்டு வரப்போறேன் .
அப்போ இது எப்படி இங்க வந்தது என அவள் யோசனையாய் கேட்க,
இது என்ற அண்ணன் மவன் குடுத்தான் டி . நாங்க வரப்போவே புள்ள இத தச்சிட்டு இருந்துச்சி . எம்புட்டு அழகா இருக்குல்ல என அதை தொட போக ,
அது வரை தன்னவனுடனான கனவில் இருந்த பரியா இவர்களின் பேச்சில் நிஜத்திற்கு வந்தாள்.
அவர் ஜடையின் அருகில் செல்வதை பார்த்து அவரின் முன் சென்று தடுத்தவள், மா இது எனக்குனு பண்ணது . நான் தான் முதல்ல தொடுவேன் என சிறுபிள்ளையாய் சிணுங்கினாள் .
தன்னவன் தன் ஆசைக்காய் இதை எப்படியேனும் கொண்டுவருவான் என நினைத்திருந்தாலே தவிர அவனே இதை முழுக்க முழுக்க செய்வான் என எதிர்பார்க்கத்தில் அவளின் மனம் தன் காதலை அடக்க இயலாமல் விம்மியது.
ஏய் ரொம்ப பண்ணாதடி .இத இங்க எடுத்துட்டு வந்து வச்சதே நான் தான்டி .போ போய் குளி முதல்ல என அவளை விரட்டியவர் ,
முழித்துகொண்டிருந்த ப்ரியாவை பார்த்து , நீ என்னடி முழிச்சிட்டு நிக்குற என்றார்.
மாம் ! நான் கேக்றதுக்கு சரியானா பதில் சொல்லுங்க . அண்ணன் மகன்னு நீங்க யாரை சொல்றிங்க என விடாமல் கேட்டவளிர்க்கோ தன் தமக்கையின் காதலில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் எழுந்திருந்தது .
இது என்ன டி கேள்வி , அண்ணன் மகன்னு நா யாரை சொல்ல போறேன் என்று தொடர போனவரை தடுத்தது கீழிருந்து வந்த கோதண்டநாகாவின் குரல்.
சீக்கிரம் கிளம்புங்கடி , நீ போய் உன் ரூம்ல குளிச்சிட்டு வா .அண்ணன் கூப்புட்றாரு நான் போய்ப்பாக்குறேன் என கிளம்ப ,
மா ..மா....சொல்லிட்டு போமா என ப்ரியா கத்த பவித்ராவோ கண்டுகொள்ளாலே சென்றார்.
பரியா குளித்துவிட்டு வந்தபொழுது ப்ரியா குளித்துமுடித்து கிளம்பிருந்தவள் , கட்டிலில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தால் .
ப்ரி இது ரெண்டுல எந்த புடவை நல்லா இருக்குனு சொல்றி என அவளிடம் கேட்க ,
அதுலாம் வேணாம் கண்ணு இந்தா இந்த சேலைய கட்டிக்கோ என ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை தந்த ஜானகி (பவனஜின் அம்மா) அதற்கு தோதான நகைகளும் உடன் தந்தார் .
ப்ரியாவோ அதை பார்த்து முட்டை கண்ணை விரித்து முழிக்க ,
பரியா தான் அவரிடம் ,என்ன அத்த.... இதெல்லாம் எதுக்கு என கேட்டாள்.
பின்ன ஜடை வைக்கணும்னு சொன்னல அதுக்குதான் இது என கொடுத்தவரின் உதடுகளோ கேலிசிரிப்பில் பூத்திருந்தது.
அங்கிருந்த ஜடையை பார்த்த அவரும் , ராசா னா ராசா தான். நேத்து தான் அயித்த சொன்னாங்க ஜட தைக்கமுடிலனு .அதுக்குள்ள ஒரே ராவுல புள்ள எம்புட்டு ஜோரா தைச்சிருக்கு என மோவாயில் கை வைத்து அதிசயத்தார் .
அவளின் முகத்தை வழித்து நெட்டுடைத்தவர் , எம்புட்டு அம்சமா இருக்க உனக்கு அந்த ஜட பொருத்தமா இருக்கும் கண்ணு .என் ராசா ரொம்ப குடுத்துவச்சிக்கணும் என பேசிக்கொண்டே கீழிறங்கி சென்றார்.
யக்காவ் ...எனகென்னமோ உனக்கு பெரிய ஆப்பா எதுவோ வைக்கப்போறாங்கனு தோணுது .நா இப்போ இங்க வரும்போது கூட பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் பண்ணிருக்காங்க . தங்கச்சி சொல்றேன் வா இங்க இருந்து எஸ் ஆவோம் .
சும்மா இருடி , எப்பப்பாரு லூசு மாதிரி உளறிட்டு இருக்க என அழுத்த பரியாவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவள் கீழிருந்தவர்களை காட்டி , அங்க பாருக்கா என்றாள்.
என்னடி அங்க ? தாத்தாவும் , வஜ்ரநாகா மாமாவும் தான இருக்காங்க என அசால்டாக கேட்டாள் பெரியவள் .
ஐயோ இந்த தத்தி அக்காவை வச்சிக்கிட்டு நான் இன்னும் என்ன பாடுபடபோறனோ என ப்ரியா புலம்ப பரியா அவளின் தலையில் கொட்டினாள்.
அவ்ச் யக்காவ் எதுக்கு இப்போ கொட்டுன என முறைக்க .
ஏண்டி அவங்க வீட்ல அவங்க இருக்றதுல என்ன இருக்கு ? இத கேட்டா லூசு மாதிரி ஒலர்ற .
அக்கா இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோ நீ லாம் சத்தியமா போலீஸ் ஆவமாட்ட.
முறைச்சா பயந்துருவோமா ,பின்ன என்னக்கா ...நம்ப மொதல் நாள் இந்த வீட்டை கண்டுபிடிக்க ஒருத்தர்ட்ட விசாரிச்சப்ப என்ன சொன்னாரு .
என்ன சொன்னாரு என யோசித்தாள் பரியா . இவர்கள் கோதண்டநாக , வஜ்ரநாகா இருவரின் பெயரையும் சொல்லி விசாரிக்க ,
இங்குட்டுல இருந்து நேருக்கா போன கடைசியா ரெண்டு பெரிய வீடு ஒட்டினாப்ல இருக்கும் . ரெண்டுக்கும் நடுவுல மதி சுவர் சின்னுண்டா இருக்கும் பாருங்க .
அதுல வலப்பக்கமா இருக்கிறது தாத்தைய்யா வூடு. அங்கிட்டு தான் வஜ்ரநாகா ஐயா இருப்பாரு .
இடப்பக்கம் இருக்கிறது நம்ப கோதண்டநாக ஐயா வூடுங்க என்றிருந்தார் .
பிறகு இங்குவந்தபின் சௌவுந்தரம்மாளிடம் , விசாரித்த பொழுதுதான் தந்தை மகன் விவாவதத்தில் இப்படி பிரிந்திருப்பது தெரிந்தது . இதுவரை கோதண்டநாக வீட்டீற்க்குள் கப்பீஷ்வர் வந்ததே இல்லை.
அதை எண்ணிப்பார்த்த பரியா ,
இதுவரைக்கும் இங்க நம்ப தாத்தைய்யா வந்ததே இல்லனு தான அம்மாயி சொன்னாங்க என கண்களை உருட்டினாள்.
அதேதான் கா ...ஆனாபாரு இப்போ அவரும் வஜ்ராமாமாவும் காலம்காலமா இந்த வீட்லயே இருக்க மாறி உட்காந்து சிரிச்சிட்டே இருக்கிறத. அதான் சொல்றேன் ஏதோ ஆப்பு ரெடி பண்றங்க வா எஸ் ஆகிடுவோம் .
ஏய் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே நம்பளுக்கு தெரியாது .ஏதோ இப்போ சரிஆகிடிச்சிபோல . அதுக்கும் நம்பளுக்கும் என்ன டி சம்மந்தம்.
அப்பொழுது அங்கு வந்த பவித்ரா , மகள்கள் இருவரும் படிகளில் நின்று பேசிகொண்டிப்பதை பார்த்தவர் , இங்க என்னாடி பண்ணுறீங்க ரெண்டுபேரும் . பரி நீ போய் ரெடியாகுமா , ப்ரி நீ அக்காக்கு உதவி பண்ணு ப்ங்க்ஷன் ஆரம்பிக்கிறவரைக்கும் கீழ வர கூடாது ஓடுங்க என விரட்ட ,
மா ப்ங்க்ஷனா ! என்ன ப்ங்க்ஷன் மா என பரியா கேட்க ,
உன் நிச்சயதார்த்தம் தான்டா குட்டி என சொல்லியபடியே அங்கு வந்தார் பிரபு.
சொன்னவரை பவித்ரா முறைக்க , ஏன்மா பொண்ணுகிட்ட சொல்லவேண்டிது நம்ப கடமை இல்லையா என பதிலுக்கு பிரபு கேட்க,
எப்படி பா ? நிச்சயத்துக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னடியா என ப்ரியா கேட்ட விதத்தில் பரியாவே அதிர்ந்து பார்க்க ,
பிரபு என்ன சொல்வதென தெரியாமல் வாயடைத்துப்போனார் .
ஏய் என்னடி பேசுற அவர்ட்ட என ப்ரியாவை திட்டிய பவித்ரா , இதுக்குதான் செல்லம் குடுக்காதிங்க சொன்னேன் கேட்டீங்களா என பிரபுவையும் ஏசினார் .
பிரபுவோ பரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு , அப்பா உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான்டா சொல்லல . நீ பவன் மேல எம்புட்டு ஆச வச்சிருக்கேன்னு எனக்கு தெரியாதா.
காலைல பவன் அந்த ஜடைய கொடுக்கும்போது பெரியஅத்த பேச்சுவாக்கல , எதுக்கு வெறும் ஜட துணிமணியும் எடுத்துகுடு இன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கிடலாம் னு சொன்னாங்கமா . நம்ப சொல்லாமே நம்ப பொண்ணோட ஆசை நிறைவேறுதுன்னு தான்மா நான் சொல்லல என மகள்கள் தன்னை தவறாய் எடுத்துக்கொள்வார்களோ என நீண்டதாய் விளக்கம் கொடுத்தார் .
மனதினுள் பழகுழப்பங்கள் இருந்தாலும் தன் தந்தை வருந்துவது பிடிக்காமல் மகள்கள் அவரை சமாதானபடுத்த ஆரம்பிக்க அங்கு ஒரு பாச அலை உருவாகி அனைவரையும் நனைத்து சென்றது .
************************************************************************************