• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
தன்னை அழுத்தமாய் காட்டிக்கொண்டு ..
முரட்டுதனமாய் சுற்றும் ஆண்களின் உதட்டிலும்.புன்னகையை பூக்க வைக்கும் சக்தி !
மகள்களிடம் மட்டுமே உள்ளது....!!!



அத்தியாயம் 8 :


முந்தின தினம் என் பத்ரா நிச்சயம் என் ஆசையை நிறைவேத்துவாரு என பரியா நம்பிக்கையாய் சொல்லிச்சென்றிருக்க,
மறுநாள் அவள் சொன்னதுபோல் அவள் அறையில் கனகாம்புறமும், மல்லியும் சேர்த்து தைத்திருந்த ஜடை இருந்தது .


யாஹூ !!!! ப்ரிக்குட்டி நான் சொன்னேன்ல பாரு என் பத்ரா என்னோட ஆசைய நிறைவேத்திட்டாரு என சந்தோஷத்தில் எகிறி குதித்தவள் , நான் இப்பவே இத வச்சிக்கபோறேன் என அதை எடுக்க சென்றாள்.

ஏய் ! குளிக்காம அதில கைய வச்சினா கைய உடைச்சிபுடுவேன் என அதட்டலாய் கேட்ட குரலில் சந்தோஷமாய் சகோதரிகள் இருவரும் திரும்ப அங்கு பவித்ரா (அவர்களது அன்னை) நின்றிருந்தார் .

மாம் ........ என கத்திகொண்டே இருவரும் அவரை கட்டிக்கொள்ள , அட என் பொண்ணுங்களா இது இவ்ளோ சீக்கிரம் எழுந்தது என அங்கு வந்தார் பிரபு.

அப்பாபா என மகள்கள் இருவரும் அவரிடம் செல்ல , ம்ம்ம்கும் அப்பா வந்த உடனே அம்மா கண்ணுக்கு தெரியமாட்டனே என நொடித்த பவித்ரா,


சரிசரி கொஞ்சுனது போதும் , போய் குளிங்க ரெண்டுபேரும் . ஏங்க நீங்க மொதல்ல கிளம்புங்க அப்போ தான் அவளுங்க கிளம்புவாளுங்க என அனைவரையும் விரட்டினார் .

நாங்க ஒண்ணா இருந்தா போதும் உடனே பொறாமையில பொசுங்க ஆரம்பிச்சிடுவியே என பிரபு முனங்க வழக்கம்போல் அது பவித்ராவின் காதில் விழிந்து தொலைத்தது .

உங்கள என ஆரம்பிக்க ...இதோ இந்தா கிளம்பிட்டேன் மா என வெற்றிகரமாய் பின்வாங்கியவர் ஓடியேவிட்டார் .

பரியாவோ தான் நம்பியது பொய்த்துப்போகவில்லை என சந்தோஷத்தில் இருக்க ,

ப்ரியாவின் பத்திரிக்கை மூளை சும்மாஇல்லத்தில் தன் முக்கிய சந்தேகத்தை அன்னையிடம் கேட்டாள்.

மாம்! எப்ப வந்திங்க ? இந்த ஜடையை நீங்களா வரும்போது வாங்கிட்டு வந்திங்க.

ஏண்டி இங்க வருமுன்ன நல்லா தான இருந்த .இப்போஎன்ன ஆச்சி லூசுத்தனமா கேக்கற .

மா ...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மா

ம்ம்க்கும் இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு .
ஏண்டி நீங்க இங்கதான் இருக்கீங்கன்ற விஷயத்தை உங்க அப்பா என்கிட்டே மூச்சேவிடல . அப்றம் எதுக்குடி நான் வாங்கிட்டு வரப்போறேன் .


அப்போ இது எப்படி இங்க வந்தது என அவள் யோசனையாய் கேட்க,

இது என்ற அண்ணன் மவன் குடுத்தான் டி . நாங்க வரப்போவே புள்ள இத தச்சிட்டு இருந்துச்சி . எம்புட்டு அழகா இருக்குல்ல என அதை தொட போக ,

அது வரை தன்னவனுடனான கனவில் இருந்த பரியா இவர்களின் பேச்சில் நிஜத்திற்கு வந்தாள்.

அவர் ஜடையின் அருகில் செல்வதை பார்த்து அவரின் முன் சென்று தடுத்தவள், மா இது எனக்குனு பண்ணது . நான் தான் முதல்ல தொடுவேன் என சிறுபிள்ளையாய் சிணுங்கினாள் .

தன்னவன் தன் ஆசைக்காய் இதை எப்படியேனும் கொண்டுவருவான் என நினைத்திருந்தாலே தவிர அவனே இதை முழுக்க முழுக்க செய்வான் என எதிர்பார்க்கத்தில் அவளின் மனம் தன் காதலை அடக்க இயலாமல் விம்மியது.

ஏய் ரொம்ப பண்ணாதடி .இத இங்க எடுத்துட்டு வந்து வச்சதே நான் தான்டி .போ போய் குளி முதல்ல என அவளை விரட்டியவர் ,

முழித்துகொண்டிருந்த ப்ரியாவை பார்த்து , நீ என்னடி முழிச்சிட்டு நிக்குற என்றார்.

மாம் ! நான் கேக்றதுக்கு சரியானா பதில் சொல்லுங்க . அண்ணன் மகன்னு நீங்க யாரை சொல்றிங்க என விடாமல் கேட்டவளிர்க்கோ தன் தமக்கையின் காதலில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் எழுந்திருந்தது .

இது என்ன டி கேள்வி , அண்ணன் மகன்னு நா யாரை சொல்ல போறேன் என்று தொடர போனவரை தடுத்தது கீழிருந்து வந்த கோதண்டநாகாவின் குரல்.

சீக்கிரம் கிளம்புங்கடி , நீ போய் உன் ரூம்ல குளிச்சிட்டு வா .அண்ணன் கூப்புட்றாரு நான் போய்ப்பாக்குறேன் என கிளம்ப ,

மா ..மா....சொல்லிட்டு போமா என ப்ரியா கத்த பவித்ராவோ கண்டுகொள்ளாலே சென்றார்.

பரியா குளித்துவிட்டு வந்தபொழுது ப்ரியா குளித்துமுடித்து கிளம்பிருந்தவள் , கட்டிலில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தால் .

ப்ரி இது ரெண்டுல எந்த புடவை நல்லா இருக்குனு சொல்றி என அவளிடம் கேட்க ,

அதுலாம் வேணாம் கண்ணு இந்தா இந்த சேலைய கட்டிக்கோ என ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை தந்த ஜானகி (பவனஜின் அம்மா) அதற்கு தோதான நகைகளும் உடன் தந்தார் .

ப்ரியாவோ அதை பார்த்து முட்டை கண்ணை விரித்து முழிக்க ,
பரியா தான் அவரிடம் ,என்ன அத்த.... இதெல்லாம் எதுக்கு என கேட்டாள்.


பின்ன ஜடை வைக்கணும்னு சொன்னல அதுக்குதான் இது என கொடுத்தவரின் உதடுகளோ கேலிசிரிப்பில் பூத்திருந்தது.

அங்கிருந்த ஜடையை பார்த்த அவரும் , ராசா னா ராசா தான். நேத்து தான் அயித்த சொன்னாங்க ஜட தைக்கமுடிலனு .அதுக்குள்ள ஒரே ராவுல புள்ள எம்புட்டு ஜோரா தைச்சிருக்கு என மோவாயில் கை வைத்து அதிசயத்தார் .

அவளின் முகத்தை வழித்து நெட்டுடைத்தவர் , எம்புட்டு அம்சமா இருக்க உனக்கு அந்த ஜட பொருத்தமா இருக்கும் கண்ணு .என் ராசா ரொம்ப குடுத்துவச்சிக்கணும் என பேசிக்கொண்டே கீழிறங்கி சென்றார்.

யக்காவ் ...எனகென்னமோ உனக்கு பெரிய ஆப்பா எதுவோ வைக்கப்போறாங்கனு தோணுது .நா இப்போ இங்க வரும்போது கூட பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் பண்ணிருக்காங்க . தங்கச்சி சொல்றேன் வா இங்க இருந்து எஸ் ஆவோம் .

சும்மா இருடி , எப்பப்பாரு லூசு மாதிரி உளறிட்டு இருக்க என அழுத்த பரியாவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவள் கீழிருந்தவர்களை காட்டி , அங்க பாருக்கா என்றாள்.

என்னடி அங்க ? தாத்தாவும் , வஜ்ரநாகா மாமாவும் தான இருக்காங்க என அசால்டாக கேட்டாள் பெரியவள் .

ஐயோ இந்த தத்தி அக்காவை வச்சிக்கிட்டு நான் இன்னும் என்ன பாடுபடபோறனோ என ப்ரியா புலம்ப பரியா அவளின் தலையில் கொட்டினாள்.

அவ்ச் யக்காவ் எதுக்கு இப்போ கொட்டுன என முறைக்க .

ஏண்டி அவங்க வீட்ல அவங்க இருக்றதுல என்ன இருக்கு ? இத கேட்டா லூசு மாதிரி ஒலர்ற .

அக்கா இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோ நீ லாம் சத்தியமா போலீஸ் ஆவமாட்ட.

முறைச்சா பயந்துருவோமா ,பின்ன என்னக்கா ...நம்ப மொதல் நாள் இந்த வீட்டை கண்டுபிடிக்க ஒருத்தர்ட்ட விசாரிச்சப்ப என்ன சொன்னாரு .

என்ன சொன்னாரு என யோசித்தாள் பரியா . இவர்கள் கோதண்டநாக , வஜ்ரநாகா இருவரின் பெயரையும் சொல்லி விசாரிக்க ,

இங்குட்டுல இருந்து நேருக்கா போன கடைசியா ரெண்டு பெரிய வீடு ஒட்டினாப்ல இருக்கும் . ரெண்டுக்கும் நடுவுல மதி சுவர் சின்னுண்டா இருக்கும் பாருங்க .
அதுல வலப்பக்கமா இருக்கிறது தாத்தைய்யா வூடு. அங்கிட்டு தான் வஜ்ரநாகா ஐயா இருப்பாரு .


இடப்பக்கம் இருக்கிறது நம்ப கோதண்டநாக ஐயா வூடுங்க என்றிருந்தார் .

பிறகு இங்குவந்தபின் சௌவுந்தரம்மாளிடம் , விசாரித்த பொழுதுதான் தந்தை மகன் விவாவதத்தில் இப்படி பிரிந்திருப்பது தெரிந்தது . இதுவரை கோதண்டநாக வீட்டீற்க்குள் கப்பீஷ்வர் வந்ததே இல்லை.

அதை எண்ணிப்பார்த்த பரியா ,
இதுவரைக்கும் இங்க நம்ப தாத்தைய்யா வந்ததே இல்லனு தான அம்மாயி சொன்னாங்க என கண்களை உருட்டினாள்.


அதேதான் கா ...ஆனாபாரு இப்போ அவரும் வஜ்ராமாமாவும் காலம்காலமா இந்த வீட்லயே இருக்க மாறி உட்காந்து சிரிச்சிட்டே இருக்கிறத. அதான் சொல்றேன் ஏதோ ஆப்பு ரெடி பண்றங்க வா எஸ் ஆகிடுவோம் .

ஏய் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே நம்பளுக்கு தெரியாது .ஏதோ இப்போ சரிஆகிடிச்சிபோல . அதுக்கும் நம்பளுக்கும் என்ன டி சம்மந்தம்.


அப்பொழுது அங்கு வந்த பவித்ரா , மகள்கள் இருவரும் படிகளில் நின்று பேசிகொண்டிப்பதை பார்த்தவர் , இங்க என்னாடி பண்ணுறீங்க ரெண்டுபேரும் . பரி நீ போய் ரெடியாகுமா , ப்ரி நீ அக்காக்கு உதவி பண்ணு ப்ங்க்ஷன் ஆரம்பிக்கிறவரைக்கும் கீழ வர கூடாது ஓடுங்க என விரட்ட ,

மா ப்ங்க்ஷனா ! என்ன ப்ங்க்ஷன் மா என பரியா கேட்க ,

உன் நிச்சயதார்த்தம் தான்டா குட்டி என சொல்லியபடியே அங்கு வந்தார் பிரபு.

சொன்னவரை பவித்ரா முறைக்க , ஏன்மா பொண்ணுகிட்ட சொல்லவேண்டிது நம்ப கடமை இல்லையா என பதிலுக்கு பிரபு கேட்க,

எப்படி பா ? நிச்சயத்துக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னடியா என ப்ரியா கேட்ட விதத்தில் பரியாவே அதிர்ந்து பார்க்க ,

பிரபு என்ன சொல்வதென தெரியாமல் வாயடைத்துப்போனார் .

ஏய் என்னடி பேசுற அவர்ட்ட என ப்ரியாவை திட்டிய பவித்ரா , இதுக்குதான் செல்லம் குடுக்காதிங்க சொன்னேன் கேட்டீங்களா என பிரபுவையும் ஏசினார் .

பிரபுவோ பரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு , அப்பா உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான்டா சொல்லல . நீ பவன் மேல எம்புட்டு ஆச வச்சிருக்கேன்னு எனக்கு தெரியாதா.

காலைல பவன் அந்த ஜடைய கொடுக்கும்போது பெரியஅத்த பேச்சுவாக்கல , எதுக்கு வெறும் ஜட துணிமணியும் எடுத்துகுடு இன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கிடலாம் னு சொன்னாங்கமா . நம்ப சொல்லாமே நம்ப பொண்ணோட ஆசை நிறைவேறுதுன்னு தான்மா நான் சொல்லல என மகள்கள் தன்னை தவறாய் எடுத்துக்கொள்வார்களோ என நீண்டதாய் விளக்கம் கொடுத்தார் .

மனதினுள் பழகுழப்பங்கள் இருந்தாலும் தன் தந்தை வருந்துவது பிடிக்காமல் மகள்கள் அவரை சமாதானபடுத்த ஆரம்பிக்க அங்கு ஒரு பாச அலை உருவாகி அனைவரையும் நனைத்து சென்றது .


************************************************************************************
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
எங்க அக்காகேத்த மாப்பிளை எங்கிருக்கான் பயபுள்ள ...
எங்க அக்காகேத்த மாப்பிளை எங்கிருக்கான் பயபுள்ள ..


- பாடி கொண்டே தான் அணிந்திருந்த தாவணியின் முந்தானையை சுத்திகொண்டு வந்த ப்ரியா , அதான் அவர் இந்த வீட்ல தான் இருக்காருன்னு தெரிஞ்சிடிச்சே . சரி வேற பாட்டு யோசிப்போம் என எண்ணிகொண்டே வந்தவள் பரியா அதே உடையுடன் இருப்பதை பார்த்து குழம்பினாள் .

அக்கா நீ இன்னும் புடவை கட்டலையா ? சீக்கிரம் கட்டுக்கா நான் உனக்கு மேக்கப் பண்ணிவிடறேன் இல்ல அம்மா வந்து கச்சேரியை ஆரம்பிச்சா நிறுத்தமாட்டாங்க .

அவள் பேசியதற்கு எதுவும் சொல்லாமல் பரியா அமைதியா இருக்க , அக்கா என்னாச்சி கா என அவளை தன்புறம் திருப்பினாள்.

ப்ரிக்குட்டி...அது....நிச்சயம்...எனக்கும்...பவன்....என்று பரியா தடுமாற ,

அக்கா என்னனு சொல்லுக்கா.

ப்ரிக்குட்டி ! இன்னிக்கு எனக்கு நிச்சயதார்த்தம் சரி ஆனா அது யார் கூட ???

என்னக்கா அதான் அப்பா சொன்னாருல்ல நீ விரும்பறது தெரியும்னு ,நீயும் தான அப்பாக்கு தெரியும் னு சொன்ன.

சொன்னான் தான்டி ...அன்னிக்கு அப்பாகிட்ட ஒருநாள் முன்னடியே அங்க போறேன்னு சொல்லும்போது ஏன்னு கேட்டவர்கிட்ட உங்க " பவன் கண்ணா" வ நான் விரும்பறேன். அவனுக்காக போறேன்னு தான் சொன்னேன்.

அதான் சொல்டியேகா அப்றம் என்ன ?

இல்ல ப்ரி , நான் பவன்புத்ரா மட்டும்தான்னு நினைச்சி தான் அப்டி சொன்னேன் . ஆனா இங்க ஒரே மாதிரி கிட்டத்தட்ட ஒரே பேர்ல ரெண்டு பேர் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாதே டி. இப்போ அப்பா ரெண்டுபேர்ல யாரை பவன் கண்ணா னு சொல்றாருனு குழப்பமா இருக்கு ப்ரி.

என்னக்கா நீ , இத அப்பாகிட்டயே கேட்ருக்கலாம்ல இல்ல என்கிட்டே சொல்லிருந்தாலவது நான் கேட்ருப்பேன் என்று இது என்ன புதுகுழப்பம் என்ற எண்ணத்தில் தமைக்கையை கடிந்தாள்.

அடியே எனக்கு முன்னடியே தெரிஞ்சிருந்தா கேட்ருக்கமாட்டேனா ?

மேல வரும்போதுதான் கேட்டேன் ஜானகிஅத்த அந்த பன்ரொட்டி அண்ணாகிட்ட , போய் பவனஜ கூட்டிடுவா ராத்திரி முழுக்க முழிச்சிட்டு இருந்த புள்ள சரியா சாப்டாமகூட போய்ட்டான் . கொஞ்சம் அதான் உறங்குனாதா ப்ங்க்ஷன்ல முகம் பளிச்சுனு இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்கடி . அதுகப்றம் தான் எனக்கே சந்தேகமா இருக்கு.

என்னக்கா இப்டி சொல்ற இப்போ என்ன பண்றது என சிறிது நேரம் என யோசிக்க ,

அதுமட்டுமில்லை ப்ரி அப்பா என்ன சொன்னாரு பவன் ஜடை குடுகும்போது தான் அம்மாயி நிச்சயம் பத்தி பேசுனாங்கனு . ஆனா ஜானகி அத்த சொன்னதை கவனிச்சியா என் ராசா குடுத்து வச்சிருக்குனு சொன்னாங்க . அவங்க யாரை பத்தி சொன்னாங்க .

அச்சோ அக்கா இப்டி வரிசையா சந்தேக பட்டு பேசுனா எப்படி ?

ப்ரி எனக்கு ஒண்ணுமே புரிலடி . நான் இப்பவே பத்ராவ பார்த்து பேசணும் . அவர்கிட்ட பேசுனா இந்த குழப்பத்துக்குலாம் ஒரு முடிவு கிடைக்கும்ல .

ஆனா அக்கா இப்போ உன்ன வெளிய விடமாட்டாங்களே. அதுவும் நான் வரும்போது தான் பெரிய மாமா சின்ன மாமாகிட்ட பவன்புத்ரா ஸ்டேஷன் போய்ர்க்கான் இப்போ வந்துருவான்னு சொல்லிட்டு இருந்தாரு .

அவருக்கும் எனக்கும் தான் நிச்சயதார்த்தம்னா அவரை மட்டும் எப்படி வெளிய விட்ருப்பாங்க . நான் உடனே அவரை பார்க்கணும் டி என ப்ரியாவின் கைகளை பிடித்து ஜன்னலின் புறம் சென்றாள்.

அக்கா...அக்கா ...நில்லுக்கா என்னபண்ணப்போற அம்மாக்கு தெரிஞ்சா நம்பளுக்கு சங்கு தான்.

சும்மா இரு ப்ரி அதுலாம் அப்பாகிட்ட மெஸ்ஸேஜ் பண்ணி யாரும் இங்க வராம பார்த்துக்கலாம் . அதுவும் லேட் ஆனா மட்டும் ... இப்போ வா போவோம் .

எப்படி கா போவ ? இங்க போறதுக்கு வழியே இல்லையே
.

ஆன் என்ற பரியா , இப்படி தான் என ஜன்னல் வழியாய் குதித்து அங்கிருந்த தடுப்பின் மேல் நின்றாள் .

யக்காவ் ! போலீஸ் ஆகப்போறேன்னு நிரூபிக்கிறியோ . சரி சரி நீ சுடிதார் போட்டதுனால சட்டுனு குதிச்சிட்ட நான் எப்படி என புலம்பிய படியே முந்தியை இடுப்பில் சொருகியவள் பாவாடையையும் தூக்கி சொருகியபடி இறங்கிய " எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா " என்றாள் .


- பண்ணிடுவோம் ...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
சூப்பர் ...குதிக்க போராங்களா... மாப்பிள்ளை யாருப்பா சீக்கிரம் வந்து சொல்லுங்க author ji??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top