????
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
????
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
Nice ud ma.அதிசயங்கள் ஏதும் இல்லை ஆனாலும் வியந்து கொண்டே இருக்கிறேன்.... மழலையின் குறும்பில்......
ஏரிக்கரை 10 :
"இறைவனின் நிழல் "
வருபவர்களை வரவேற்பது போல தலை சாய்த்து நிற்கும் பூக்களையும் தலையை அசைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்த மழலைகளையும் நின்று ரசிக்க நேரமில்லாமல் அங்கிருந்த அலுவலகஅறையினுள் நுழைந்தார்கள் அரசுவும் முகிலும் . அங்கிருந்தது அன்று அக்குழந்தையை எடுத்து சென்ற அப்பெண்மணியே.... அவரே அவ்வில்லநிறுவனர் அவரின் முன்னிருந்த டேபிளில் சாரதாம்மாள் , நிறுவனர் என்ற பெயர் பலகை இருந்தது .
உள்ளே வந்தவர்களை கண்டவர் , வாங்க சார் உக்காருங்க ...இருவரும் அமர்ந்ததும் ....சொல்லுங்க சார் , என்ன விஷயமா வந்திருக்கீங்க ...
அரசு ,மேடம் நான் இன்ஸ்பெக்டர் அரசு... இவர் இன்ஸ்பெக்டர் முகில் ....நாங்க ஒருத்தர பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கோம் .
சொல்லுங்க சார் ...யாரை பத்தி தெரியணும் .
அரசு , மேடம் ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி மீனவர் ஒருவர் குழந்தையை கொண்டுவந்து உங்க கிட்ட ஒப்படைச்சதா தெரிஞ்சிது . நாங்க அந்த குழந்தையை பத்திதான் விசாரிக்க வந்தோம் .
சார் ...நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .... நீங்க எதுக்காக இப்போ அதை பற்றி விசாரிக்க வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா.
அரசு , நிச்சயமா மேடம் ....அந்தகுழந்தையோட அம்மா தன் தப்ப உணர்ந்துட்டாங்க தப்புக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்டாங்க .... இத்தனை நாள் தன்னோட மகனை தானே கொன்னுட்டோமோன்னு தவிச்சிட்டு இருந்தவங்க இப்போ தன் பிள்ளை உயிரோட இருக்கிறதாவும் , கண்டுபிடிச்சி தர சொன்னதுனாளையும் இந்த கேச விசாரிச்சு அந்த மீனவரை சந்திச்சோம் . அவர் தான் குழந்தையை உங்க ஆசிரமத்துல விட்டதா சொன்னாரு .
இவன் சொன்னதை கேட்டு பாஸ் என்ன இப்டி அண்ட புளுகு ஆகாச புளுகு புளுகுறாரு என திறந்தவாய் மூடாமல் பார்த்திருந்த முகிலின் தொடையை அழுத்தி கிள்ளினான் .
முகில், ஆஆஆ ....என வலியில் கத்தியவன் சாரதாம்மாள் கவனிப்பதை உணர்ந்து, ஹீஹீ ஆமா அம்மா என்றான் .
சாரதாம்மாள் , அவன் இங்க தான் வளர்ந்தான் ஆனா இப்போ இங்க இல்ல ...அவன் எங்க இருக்கானும் எனக்கு தெரியாதுங்களே ..
முகில் , ஏன் அவன் இங்கிருந்து போனான்.
சாரதாம்மாள், சார் இந்த இல்ல விதிப்படி ஒருத்தர் 20 வயசு வரைக்கும் தான் இங்க இருக்க முடியும் . அதுகப்றம் தனக்கான வேலைய தேடிக்கிட்டு அவங்க இங்கேயிருந்து வெளியேறிடணும் . அதுபடிதான் அவனும் இங்கேயிருந்து போனான் .
அரசு , அவர் போகும்போது எங்க போறாருனு எதுவும் உங்ககிட்ட சொல்லலையா .
சாரதாம்மாள், இல்ல சார் அவன் அத பத்திலாம் ஒன்னும் சொல்லல ...ஆனா அவனுமே அவங்க அம்மாவை தேடிட்டு தான் இருந்தான் .
அவர் சொன்னதைக்கேட்டு ஏதோ கேட்க வந்த அரசுவை தடுத்தது குழந்தையின் அழுகுரல் .
குழந்தையை தூக்கிவந்த அவ்வில்லத்தில் பணிபுரியும் பெண் ...மன்னிச்சிக்கோங்க மா , பாப்பா அழுகையை நிறுத்தவே மாடிக்குறா உங்க கிட்ட வந்தா சமாதானம் ஆகிடுவானுதான் கூட்டிட்டு வந்துட்டேன் .
உடனே அக்குழந்தையை வாங்கி சமாதானம் செய்தவரை பார்த்து தன் தாயை பற்றி நினைத்தவனின் உதடுகள் புன்னகை பூத்தது .
அக்குழந்தையை பார்த்த முகிலிற்குகோ எங்கோ பார்த்ததுபோல் தோன்ற யோசித்தவன் சிந்தனையின் முடிவில் அதிர்ந்து அரசுவின் கையை சுரண்டினான் ....
முகில் ,பாஸ்....பாஸ்
அரசு , என்னடா
முகில் , பாஸ் இந்த குழந்தை மிஸஸ் .சுஜித்ரா சுரேந்தர் குழந்தை மாதிரியே இருக்கு பாஸ் .
அரசு , உளறாதடா
முகில் , அச்சோ பாஸ் ...நான்சொல்றத கேளுங்க. நான் அவங்க வீட்டுக்குப்போனப்போ ஹால்லயே போட்டோ மாட்டிவைச்சிருந்தாங்க பாஸ் . எனக்கு நல்ல நியாபகம் இருக்கு இது அவங்க பாப்பா தான்.இவன் சொன்னதை கேட்டு யோசனையுடன் ...மேடம் இந்த குழந்தை எப்படி இந்த இல்லத்திற்கு வந்துச்சின்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா .
சாரதாம்மாள் , நிச்சயமா ....நானும் யார்கிட்ட சொல்றதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன் .எங்க இல்லத்திற்கு வெளியே பெரிய மணி வச்சிருக்கோம். குழந்தைகளை விட வருகிரவங்க நிச்சயம் தன்னோட அடையாளம் வெளிப்படுத்த விரும்பமாட்டாங்க... அதுனால தான் நிறைய குழந்தைகள் குப்பைதொட்டில கிடக்குது . அதுக்காகத்தான் நாங்க அந்த மணி வச்சிருக்கோம் . குழந்தையை கொண்டுவந்து அந்த மணியடிச்சிட்டு அவங்க போய்டலாம் , நாங்க குழந்தையை கொண்டுவந்துருவோம் .ஆனா எனக்கு கடைசியா வந்த மூணு குழந்தைங்க விசயத்துல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு .
அரசு , எதுனால மேடம்
சாரதாம்மாள் , இந்த மூணு குழந்தைகளுமே வரும்பொழுது சில காயங்களுடன் இருந்திச்சி சார் ...அதுமட்டுமில்லாம அந்த காயங்களுக்கு பக்குவமா மருந்தும் போட்டிருந்திசி .அந்த விஷயம் தான் கொஞ்சம் நெருடல் ஆஹ் இருக்கு .
முகில் , பாஸ் நான் சொன்னேன்ல அந்த குழந்தை தான் இது ...அப்றம் பாஸ் அந்த ரெண்டு குழந்தைங்களும் காணாம போன ரெண்டுகுழந்தைகள்னுதான் நினைக்கிறேன் . நம்ப உண்மைய சொல்லி குழந்தைகள கூட்டிட்டு போய்டலாமா .
அரசு , கூட்டிட்டு போய்.
முகில் , என்ன பாஸ் ...அவங்க குடும்பத்துல இருக்கவங்க கிட்ட கொடுப்போம் .
அரசு , வேணாம் டா அங்க கூட்டிட்டு போனா குழந்தைங்களோட அம்மா இல்லாததுல சரியா யாரும் பாதுக்கமாட்டாங்க ...அதுவும் அந்த சுரேந்தர் வீட்ல அவருக்கு அடுத்த கல்யாணம் பண்ண பிளான் போடறாங்கனு நீ தான சொன்ன. அவங்க எப்படி இந்த குழந்தையை பார்த்துப்பாங்க . அதுவே இங்க பாரு இந்தம்மா எவ்ளோ பாசத்தோடு அந்த குழந்தையை கொஞ்சிறாங்க . நம்ப எதுவும் சொல்ல வேணாம் ,வேணும்னா அந்த கேச ஹாண்ட்ல் பண்ற போலீஸ் கண்டுபிடிச்சா பாப்போம் .
சாரதாம்மாள் ,சாரி சார் உங்கள விசாரிக்க விடாம நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் .சொல்லுங்க சார் வேற எதுனா அவனை பத்தி தெரியனுமா .
முகில் ,மேடம் அவர் பத்தி குறிப்பிட்டு சொல்ற மாதிரி எந்த விசயம்னா இருக்கா...இருந்தா சொல்லுங்ளேன் எங்களுக்கு தேட வசதியா இருக்கும் .
சிறிது நேரம் யோசித்தவர் ...சிரிப்புடன் ஒன்னே ஒன்னு இருக்கு சார் என்றார் .
அவர் சிரிப்பை அடக்குவதை கண்ட முகில் , மேடம் சிரிப்பு வர அளவுக்கு என்ன விஷயம் இருக்கு .
சாரதாம்மாள் , அது ஒண்ணுமில்லை தம்பி மை டியர் பூதம்னு ஒரு படம் வந்திச்சி தெரியுங்களா ?
அரசு , மேடம் அந்த படத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ...
சாரதாம்மாள் , ஹாஹா அதுஒண்ணுமில்லை சார் . அந்த படம் பார்த்ததுல இருந்து அவன் ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லுவான் .எத்தனையோ தடவ அப்டி சொல்லதனு நான் சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல.
அரசு , என்ன வார்த்தை மேடம் .
சாரதாம்மாள் , மை டியர் மாதா .
அவர் சொன்ன பதிலில் அதிர்ந்துபோன இருவரும் ஒரே சமயத்தில் எழுந்து நின்றனர் .
சில மணிநேரத்திற்கு முன்பு :
அரசுவின் பைக்கில் இருவரும் ஆசிரமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே மோதுவதுபோல் வந்த காரை கண்டு சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய அரசுவை தொடர்ந்து பைக்கில் இருந்து இறங்கிய முகில் , ஹேய் ...யார்யா அது ராங் சைட்ல அதுவும் இவ்ளோ வேகமா ஓட்டிடுவரது ? குடிச்சிருக்கியா ? இறங்குயா முதல்ல என கத்த ...காரிலிருந்து இறங்கினான் அவன் .
இறங்கும்போத "ஓ மை டியர் மாதா " என சொல்லிக்கொண்டே இறங்கியவன், மன்னிச்சுக்கோங்க சார்... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போயிட்டு இப்போ தான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் . அவங்கள பத்தியே யோசிச்சிட்டு வந்ததுல சரியா கவனிக்கல சாரி சார் .
தாய்க்கு உடம்பு சரியில்லை என சொன்னவுடன் அமைதியாகி விட்ட முகில், அவனின் தாய் பாசத்தை கண்டு வியந்து சரி சரி பார்த்து கார ஓட்டிட்டு போங்க என்றான் .
அமைதியாய் தங்களை பார்த்துகொண்டிருந்த அரசுவிடம் செல்ல நகர்ந்தவனின் காதில் கார்காரன், மன்னிச்சிக்கோ "மை டியர் மாதா " சீக்கிரமா வீட்டுக்கு போய்டலாம் என சொன்னதை கேட்டு அரசுவிடம் , பாஸ் எல்லோரும் இப்போ ஸ்டைல் னு சொல்லிக்கிட்டு பெத்த அம்மாவை மீ- னு கூப்டுகிட்டு திரியும் போது இவன் இன்னும் மாதா னு எவ்ளோ மரியாதையா கூப்புட்றான்ல என அந்த கார்காரனை பத்தி சிலாகித்தான் .
தற்பொழுது :
கை அருகில் கிடைத்தவனை தவறவிட்டதை எண்ணி நொந்துகொண்டே இருவரும் அவ்வில்லத்தை விட்டு வெளிவருகையில் அரசுவின் கைபேசி ஒலியெழுப்பியது .
எடுத்து பேசியவன் என்னனன என அதிர்ச்சியாய் கேட்க ..
முகில் , பாஸ் என்னாச்சி
அரசு , அந்த நிர்மலாவை காணோமாம் டா.
முகில் , நிர்மலாவா அது யாரு பாஸ்.
அரசு , டேய் அவங்க தான் டா நம்ப சந்தேகப்படற கொலைகாரனோட அம்மா .கேஸ் பைலை ல இருந்துச்சே நீ பார்க்கலையா ?? வசந்த் கிட்ட சொல்லி தண்டனை முடிஞ்சபிறகு அவங்க எங்க இருக்காங்கனு விசாரிக்க சொல்லிருந்தேன் டா ..
முகில் , பாஸ் அப்போ அந்த காருக்குள்ள இருந்த மை டியர் மாதா ??????
------------------------------------------------
????????Nice ud ma.
Enna order ka?.....yamuna than ka santhoshi banuma koopudra name???ah.... order maaripoidiche..., antha accident....
dei.... yammu thana da un name.... santhoshi yum ma...
"my dear madha" matter therinja apram arasu vum muhilum antha nandu raja car la modhi irunthaaa... athan sonnen order maari pochu nu.... athuku ne ean da ippadi pallai kadikura.... inga varai kekuthu....Enna order ka?.....yamuna than ka santhoshi banuma koopudra name???
??????Semma sahi
Ohhhokk ka ...akka athu srippu hehe???????"my dear madha" matter therinja apram arasu vum muhilum antha nandu raja car la modhi irunthaaa... athan sonnen order maari pochu nu.... athuku ne ean da ippadi pallai kadikura.... inga varai kekuthu....