• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 12 (Final - 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் நட்பூஸ்,

நான் இதோ நான் மிட் நைட்ல வந்துவிட்டேன்.. ஓடிப்போலாமா இறுதி அத்தியாயம் இது மக்களே.. இதுவரை வந்த பதிவுகளில் சுமிம்மாவும் அவர்களின் பட்டாளமும் உங்களுக்கு எப்படி பிடித்ததோ அதே மாதிரி எனக்கும் அவர்களை பிடித்தது.. என்னடா இவ்வளவு சீக்கிரம் கதையை முடித்துவிட்டேனே என்று எனக்கும் கவலையாக இருக்கு.. இருந்தாலும் பரவல்ல இவ்வளவு பேரின் மனதில் சுமிம்மா என்ற சின்ன கதாப்பாத்திரத்தை எந்த குறைகளும் இல்லாமல் குறுகிய காலத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன் என்று நினைக்கவே நிம்மதியாக இருக்கிறது.. இந்த பதிவை படித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.. இதுவரை லைக் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்கபடுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.. அடுத்து மௌனமாகவே படித்தவர்கள் எல்லோரும் வந்து உங்களின் கருத்தை பகிர்ந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோசமாக இருக்கும்.. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்னோடு பயணித்த அனைவரும் கதை பற்றி நான்கு வரிகளுக்கு மிகாமல் உங்களின் கருத்தை சொல்லிவிடுங்கள்.. பாய் பிரிண்ட்ஸ்.. குட் நைட்..

அன்புடன்
சந்தியா ஸ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 12

அவர்களை அதிர வைத்த சுமிம்மா அடுத்த நொடியே, “ஏன் நித்தியைப் பார்த்தால் என்னோட மகள் மாதிரி தெரியலையா..?” என்றவர் சிரித்துக்கொண்டே கேட்க, “நிஜமாவே தெரியல சுமிம்மா..” என்றாள் அனிதா பாவமாக..!

அவளின் பேச்சில் அவருக்கு சிரிப்பு வந்துவிட, “நித்தி எனக்காக அமைதியாக இருந்தா.. அவளோட வாலுத்தனம் எல்லாம் வீட்டிற்குள் தான்..” என்ற சுமிம்மா மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்..

“சுமிம்மா உங்களோட இடத்தில் வேற யார் இருந்தாலும் இப்படி இருக்க மாட்டாங்க..” என்றவன் சொல்ல, “யார் எப்படியோ எனக்கு தெரியாது நான் இப்படித்தான்.” என்றவர் புன்னகையுடன்..

“உங்களுக்கு குழந்தை இல்லை என்றுதானே அந்த பாட்டு பாடி இருக்கீங்க..” என்று மகேஷ் கேட்க, “எனக்கு குழந்தை இல்லை என்று யார் சொன்னாது.. எனக்கு மொத்தம் பத்து பிள்ளைகள்..” என்றவர் குறும்புடன் விழிகளை சுழற்றினார்..

அதிலேயே அவர்களுக்கு அர்த்தம் புரிந்துவிட, “நாங்களும் உங்க பிள்ளைகளா சுமிம்மா..” என்று எல்லோரும் சேர்ந்து கேட்க, “ஆமா.. என்னோட பிள்ளைகள்தான்..” என்றவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்..

“நீங்க விவரம் தெரியாத வயசில் எங்களோட விரல் பிடிச்சு நடக்க கற்றுக்கொடுக்கிறோம்.. அதே மாதிரி வயதான காலத்தில் நீங்க எங்களோட ஆசையை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி நடக்கக்கூடாதா..?” என்றவர் கேட்ட மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்..

“ஆனால் என்னோட பிள்ளைகள் ஒரு இடத்தில் கூட என்னை கேலியோ கிண்டலோ செய்யாம என்னோட கைகோர்த்து சிரித்து பேசி விளையாடி என்னால இந்த நாளை மறக்கவே முடியாது..” என்றவர் மகிழ்ச்சியுடன் கூறினார்..

“அதெல்லாம் சரிம்மா மாப்பிள்ளை யாரு என்று நீங்க சொல்லவே இல்ல..” என்று சசிதரன் கேட்க, “நானே இன்னும் என்னோட மருமகனைப் பார்க்கல..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..

“உங்களோட மகள் பார்த்துடாங்களா..?” என்று கார்த்திகா நித்தியைக் கிண்டல் செய்ய, “அம்மா எனக்கு போட்டோ காட்டவே இல்ல..” என்றவள் புன்னகைக்க, ‘போட்டோ வேணுமா..?’ என்றவன் சைகை செய்தான்..

அவள் தலையைக் குனிந்து கொள்ள, “இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு..” என்று சங்கரி சொல்ல, “ஆமா நானே மறந்துட்டேன் பாரு..” என்ற அனிதா தன்னுடைய பையில் இருந்து எதையோ எடுக்க குனிந்தாள்..

“இருவரும் என்னவோ சொல்றீங்க.. ஆனால் என்ன சொல்றீங்க என்று புரியல..” என்று மகேஷ் புலம்பிட, “ஒரு நிமிஷம் பொறுங்க பாஸ் எல்லாம் புரியும்..” என்றாள் கார்த்திகா..

அனிதா கவரில் இருந்து கேக்கை எடுத்து சீட்டில் வைக்க சங்கரி மெழுகுவர்த்தி வைக்க கார்த்திகாவும், வித்யாவும் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றினார்..

ஆண்கள் நால்வரும் கேள்வியுடன் அவர்களைப் பார்க்க சுமிம்மாவோ, “என்ன நடக்குது இங்கே..?” என்று கேட்க, “ஹப்பாடா பழைய சுமிம்மா திரும்ப வந்துட்டாங்க..” என்றாள் கார்த்திகா..

“அதை நான் சொல்றேன்..” என்ற சங்கரி நிரஞ்சனின் காதில் ஏதோ சொல்ல அவன் அதை மற்றவர்களிடம் கூறினான்.. சுமிம்மாவை தவிர மற்ற எல்லோருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது..

“மணி பன்னிரண்டு..” என்ற சங்கரியின் குரல்கேட்டு ஒருவன் திரும்பிப் பார்த்தான்.. அவனையெல்லாம் அவள் கவனிக்கவே இல்லை..

“சுமிம்மா கேக் கட் பண்ணுங்க..” என்றவள் கத்தியை அவரிடம் கொடுக்க, “எதுக்கு என்று எல்லோரும் முதலில் சொல்லுங்க..” என்றவர் ஆர்வமாக கேட்டார்..

“ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ..” என்று அனிதா குஷியாக சொல்ல, “ஹாப்பி மதர்ஸ் டே சுமிம்மா..” என்று எல்லோரும் கோரஸாக சொல்ல, “இன்னைக்கு மதர்ஸ் டேவா..” என்றவர் கேக் கட் பண்ணி முதலில் சங்கரிக்கு ஊட்டினார்.. இவர்களின் சத்தம்கேட்டு பக்கத்து கம்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் கூட வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றனர்.. அடுத்து வரிசையாக எல்லோருக்கும் கேக்கை ஊட்டினார் சுமிம்மா..

“நானும் எல்லோருக்கும் ஒவ்வொரு பொருள் வாங்கியிருக்கேன்..” என்றவர் தன்னுடைய பேக்கை திறந்து பார்சலை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.. எல்லோரும் ஒரே நேரத்தில் ஆர்வத்துடன் பார்சலைப் பிரித்துப் பார்த்தனர்..

பெண்களுக்கு பட்டுபுடவை ஒரே மாதிரி, ஆண்களுக்கு பட்டுவேட்டி சட்டை.. அதுபோக வித்யாவிற்கு நாவல்கள், அனிதாவிற்கு ஒரு செல், கார்த்திகாவிற்கு அழகான ரோஜா பூச்செடி, அதேபோல சசிதரனுக்கு ஒரு பேனா, மகேஷ்க்கு ஒரு மேமரிகார்ட், கௌசிக் ஒரு பெயிண்டிங் எல்லாம் இருந்தது..

“என்னம்மா இதெல்லாம்..” என்றவர்கள் கேட்க, “உனக்கு நாவல் படிக்க பிடிக்கும் என்று நாவல் வாங்கினேன்.. ஆனால் அதை எழுத ஒரு ஆள் வேணும் என்று சசிக்கு பேனா..” என்றவர் புன்னகைக்க, ‘ஐயோ மாட்டிகிட்டோமே..’ என்று இருவரும் நாக்கைக் கடித்தனர்..

“அனிதா உனக்கு சாங் கேட்க பிடிக்கும் என்று செல்வாங்கிக் கொடுத்தேன்.. மகேஷ் நீ உன்னோட மெமரியை அனிக்கிட்ட கொடுத்துவிட்டதாக ஒரு தகவல்.. அதனால உனக்கு மேமரிகார்ட் வாங்கினேன்..” என்றவர் சொல்ல இருவரும் தலையைக் குனிந்து கொண்டனர்..

“கார்த்திகா நீ வெளிநாடு போய் அந்த ரோஜாவைப் பார்க்கும் வரை இந்த ரோஜா செடியை வளர்க்க பாரு.. அப்போதான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மனசில் இருந்துட்டே இருக்கும்..” என்றவர் கௌசிக் பக்கம் திரும்ப, “அம்மா இது உங்களோட பெயிண்டிங்.. என்னோட அம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு..” என்றவன் சந்தோஷத்தில் கூறினான்..

“சுமிம்மா கண்ணில் மண்ணைத் தூவ யாரால் முடியும்..?” என்றவர் சுடிதாரின் காலரைத் தூக்கிவிட நிரஞ்சனும், நித்திலாவும் சிரிக்க, “சங்கரிக்கு என்னம்மா கிப்ட்..” என்று கேட்க, “அவளுக்கு நாளை தருகிறேன்..” என்றார்..

“நிரஞ்சனுக்கும் – நித்திக்கும் நீங்க எந்த கிப்ட்யும் கொடுக்கல..” என்றவர்கள் எல்லோரும் கேட்க, “ரஞ்சன் தம்பி உங்களுக்கு கிபிட் கிடையாதுங்க..” என்றவர் தொடர்ந்து, “உனக்கும் கிப்ட் கிடையாது..” என்று மகளிடம் கூறியவர் மெளனமாக புன்னகைத்தார்..

“அதெல்லாம் முடியாது.. இவங்களோட கிபிட் காட்டுங்க..” என்று அனிதா அவரிடம் அடம்பிடிக்க, “நாளைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ குட்டிமா..” என்றார் சுமிம்மா..

அவர்களும் சரியென தலையசைக்க எல்லோரும் உறங்க செல்ல சங்கரி மட்டும் உறங்காமல் விடியும் வரை விழித்திருந்தாள்.. அவளின் பயமரிந்த சுமிம்மா அவளின் அருகில் இருக்க மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

அவன் எழுந்ததும் முதலில் பார்த்தது சங்கரியின் முகத்தை மட்டுமே.. அன்று ரயில் ரொம்பவே தாமதமாகவே செல்ல மணி பத்து ஆனதும் எல்லோரும் சங்கரியிடம் இருந்து நம்பரை வாங்கி ரிசல்ட் பார்த்தனர்.. சங்கரியின் பயம் அதிகரிக்க அவளோ பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்..

யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் டவர் கிடைக்காமல் போக, “என்ன டவர் கிடைக்கவே இல்ல..ரிசல்ட் வேற பார்க்கணும்..” என்று எல்லோரும் புலம்ப, “அவங்க தான் இந்தமுறை ஸ்டேட் பர்ஸ்ட்..!” என்றான் அவன்..

“நிஜமாவா..?” என்று சங்கரி துள்ளிக்குதிக்க, “மார்க் என்னப்பா..” என்று சுமிம்மா கேட்க, “1197” என்றான் அவன்..[நான் இப்பொழுது சிஸ்டம் படி சொல்லல.. யாரும் என்னிடம் சண்டைக்கு வரப்பிடாது..]

அவளின் மார்க்கேட்டு எல்லோரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல, “இந்த உனக்கான பரிசு..” என்று சுமிம்மா அவளின் கையில் பாஸ்புக்கை கொடுக்க, “இது எதுக்கும்மா..” என்று கேட்டாள் சங்கரி..

“உன்னோட படிப்பிற்கு என்று 5௦,௦௦௦ ரூபாய் பேங்கில் டெபாசிட் பண்ணிருக்கேன்..” என்றவர் சொல்லி மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திட, “அம்மா நான் இதை எதிர்பார்க்கல..” என்று திகைப்புடன் கோரசாக கூறினார்..

அவரிடம் இருந்து யாருமே இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.. நீ என்ன மற்றவருக்கு தருகிறாயோ அது உனக்கே திரும்ப கிடக்கும் அதைவிட இரட்டிப்பாக..! அதற்கு சிறந்த உதாரணம் சுமிம்மா..!

அவர்கள் பாசத்தை வாரி வழங்கிட, தன்னுடைய பிள்ளைக்கு என்ன செய்வாரோ அதை அவர்களுக்கும் சேர்த்து செய்தார்.. அதிலிருந்தே அவரின் பாசம் எத்தகையது என்று மற்றவர்கள் உணர்ந்தனர்..

அதற்குள் ரயில் கன்னியாகுமரி வந்துவிட எல்லோரும் வண்டியைவிட்டு கீழிறங்க செல்ல, “ஒரு நிமிஷம்..”என்றவன் அவளை வழிமறிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.. இப்பொழுதுதான் காலேஜ் முடித்துவிட்டு வந்தவன் போல இருந்தது அவனின் தோற்றம்..!

அவனின் தோற்றம் வைத்தே வயதை அவள் கணக்கிட்ட அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “என்னோட பெயர் பிரவீன்.. எனக்கு உன்னோட துருதுருப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.. சீக்கிரமே உன்னைத் தேடி வருவேன்..” என்றவன் இமைக்கும் நொடியில் அவனின் மனதை சொல்லிவிட்டான்..

அவள் திகைத்து நிற்க, “உன்னை எல்லோரும் வெளியே எதிர்பார்த்துட்டு இருக்கிறாங்க..” என்றவன் சொல்ல அவளும் மெல்ல ரயிலைவிட்டு கீழிறங்கிச் செல்ல, ‘அவன் அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்பு இருக்குமா..?’ அவளுக்கு தெரியவில்லை.. ஆனாலும் மனதில் ஒரு படப்படப்பு..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அதன்பிறகு தன்னுடைய குடும்பத்தினரைப் பார்த்தவள் அவனை மறந்துவிட, சுமிம்மா எல்லோரின் வீட்டிலும் பேசி அவர்களை எல்லாம் சமாதானம் செய்து வைத்திருந்ததால் அவர்களின் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை..!

அவர்கள் எல்லோருமே அவரவர் குடும்பத்தை அறிமுகப்படுத்த நிரஞ்சன் அங்கிருந்து காரில் கிளம்பினான்.. கார்த்திகா, கௌசிக் நித்தி மூவரை அழைத்துக்கொண்டு சுமிம்மா வீட்டிற்கு சென்றார்..

அவர் வீட்டிற்கு செல்லும் கலையரசன் வெளியே சென்றிருக்க வீடே அமைதியாக இருக்க, “என்ன வீட்டில் யாரையும் காணோம்..” என்ற சுமிம்மா வீட்டின் உள்ளே செல்ல மாலதி சமையறையின் உள்ளிருந்து பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சுமிம்மா..

“அம்மா போதும் நிறுத்து.. பொண்ணுங்க புகுந்த வீட்டில் கணவனோட சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கும் தாயைப் பார்த்திருக்கிறேன்.. நீயெல்லாம் என்ன ஜென்மம்.. உன்னோட மகன் மட்டும் சந்தோஷமாக இருக்கணும்..” என்றவள் தாயுடன் பேசிகொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த சுமிம்மாவை அவள் கவனிக்க மறந்தாள்..

“எனக்கு என்னோட குடும்பம் முக்கியம்.. எனக்கு எங்க அத்தையும், என்னோட புருஷன் மட்டும் போதும்.. காதலிச்சு கல்யாணம் பண்ணிய உன்னோட பொண்ணு இறந்துட்டான்னு நினைச்சுக்கோ.. இனிமேல் எனக்கு போன் பண்ணாதே.. முதலில் போனை வை.. அவருக்கு நான் சாப்பாடு பண்ணனும்..” என்றவள் போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்..

அவளின் எதிரே சுமிம்மா நின்றிருக்க அவளின் பின்னோடு கார்த்திகா, நித்திலா, கௌசிக் மூவரும் நின்றிருக்க, “அத்தை வாங்க..” என்றவள் புன்னகையுடன் வரவேற்க, “யாரும்மா உன்னோட அம்மாவா..?” என்று கேட்டார் சுமிம்மா..

“அமாங்க அத்த.. அவங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. அவங்க மகன் நல்ல வாழ என்னை வாழாவெட்டியாக்க பார்த்தாங்க.. அதன் அவங்களே வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டேன்..” என்றாள் மருமகள் எரிச்சலுடன் சொல்ல, “எனக்கு புரியல மாலதி..” என்றவர் அவளை புரியாத பார்வை பார்த்தார்..

“என்னோட அண்ணியோட அண்ணாவுக்கு என்னை கட்டிவைக்க எங்கம்மா போட்ட பிளான் அத்தை இது.. நான் உங்களைவிட்டு பிரிஞ்சி போயிட்டா.. அப்புறம் நான் அவங்களோட பேச்சை கேட்டுதானே ஆகணும்.. அதனால அவங்க சொல்றது எல்லாம் கேட்டு நான் அவரை டைவர்ஸ் பண்ணிட்டு அவங்க கைகாட்டு மாப்பிள்ளையை கட்டிக்கொள்வேன் என்று எதிர்பார்த்திருக்காங்க..” என்று உண்மையை எல்லாம் சொல்விட்டாள் மாலதி..

“நான்தான் அத்தை உங்களை புரிஞ்சிக்கவே இல்ல.. நீங்க இல்லாட்டி ஒண்ணுமே பண்ண முடியாது என்று இந்த பத்து நாளில் நான் நல்ல உணர்ந்துவிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க அத்தை..” என்றவள் அவரிடம் மன்னிப்பு கேட்டாள்..

ஒரு புன்னகையுடன் அவளின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சுமிம்மா, “மாமியார் எல்லாம் மருமகள் என்ற நிலையைத் தாண்டிதான் வருகிறோம்.. ஆனால் சிலர் அதை மறந்துவிட்டு இருக்கிறாங்க.. நான் அப்படி இல்ல.. என்னோட அத்தை என்னை ரொம்ப நல்ல பார்த்துகிட்டாங்க.. அதனால் நான் உன்னை நல்ல பார்த்துக்கொள்வேன்..” என்றவர் அவளை மன்னித்தார்..

அதன்பிறகு அந்த வீடே கல்யாண பரபரப்புடன் செயல்பட நித்தியோ நிரஞ்சன் வாங்கித்தந்த தலையாட்டி பொம்மையுடன் அமர்ந்திருக்க அவளின் அறைக்குள் நுழைந்த சுமிம்மா, “என்னடி நித்தி உனக்கு ஏற்பாடு எல்லாம் பிடிச்சிருக்கா..” என்று அவளின் விருப்பத்தைக் கேட்டார்..

“அம்மா எப்பொழுது இதெல்லாம் பிளான் பண்ணீங்க..” என்றவள் புன்னகையுடன் கேட்க, “நான் உன்னோட அம்மா.. அது ஞாபகம் இருக்கா உனக்கு..” என்றவர் குறும்புடன் கேட்டார்..

“நீ அம்மா இல்ல.. சரியான கேடி பயப்புள்ள.. என்னவோ பிளான் பண்ணிருக்கிற.. அது என்னவென்று தான் தெரியல..” என்றவளும் விளையாட்டாக சொல்ல, “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..” என்றவர் பாடிக்கொண்டே அவளின் அறையைவிட்டு வெளியே சென்றார்..

அடுத்த நாளே பட்டாளம எல்லாம் ஒன்று கூடிவிட நிரஞ்சன் நித்திலாவைப் பெண்கேட்டு வந்ததைப் பார்த்து, “நீங்களா மாப்பிள்ளை..” என்று அதிர்ச்சியுடன் கேட்ட அனிதா, “சுமிம்மா..” என்று கத்தினாள்..

அவரோ அமைதியின் மறுஉருவமாக வந்து நிற்க, “சத்தியமா நீங்க கொடுக்கும் ஒவ்வொரு ஷாக்கையும் என்னால தாங்க முடியல சுமிம்மா..” என்றவள் சொல்ல, “மாப்பிள்ளை முன்னாடி டேன்ஸ் வேற..” என்று சுமிம்மாவைக் கலாய்த்தாள் வித்யா..

“ஐயோ சொல்லாதடி எனக்கு வெக்க வெக்கமாக வருது..” என்றவர் புன்னகையுடன் சொல்ல, “செய்யறது எல்லாம் கிரிமினல் வேலை.. இதில் உங்களுக்கு வெக்கம் வேற வருதோ..” என்று கேட்டான் சசிதரன்.. “நான் டேன்ஸ் ஆடும் பொழுது நிரஞ்சன் அங்கே இல்ல..” என்றவர் சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..

நிச்சயதார்த்தம் முடிந்த பதினைந்து நாளில் கன்னியாகுமரியில் இருக்கும் பெரிய மண்டபத்தில் நிரஞ்சன் – நித்திலாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.. குறிப்பிட்ட நல்லநாளில் ஊரறிய நித்திலாவின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான் நிரஞ்சன்..!

அவர்களின் திருமணத்தை மனநிறைவுடன் பார்த்தார் சுமிம்மா.. மகன் – மருமகளின் மனம் மாற்றம், நித்தியின் திருமணம் எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தந்துவிட ஆனந்தத்தில் அவரின் கண்கள் இரண்டும் கலங்கியது..

திருமணம் முடிந்து அவர்களின் பட்டாளம் எல்லாம் பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பிச் செல்ல மண்டபத்தின் வாசலுக்கு செல்ல மணமக்களும் வாசல்வரை சென்றனர்..

அப்பொழுது கார் வந்து நிற்க, “இந்த கார் எதற்கு..?” என்று மகேஷ் புரியாமல் கேட்க, “எல்லோரும நகருங்க நகருங்க..” என்று வேகமாக தன்னுடைய பேக்குடன் வெளியே வந்தார் சுமிம்மா..

அவர் சுடிதாரில் தலையில் ஒரு தொப்பியுடன் வந்து நிற்பதைப் பார்த்து, “அத்தை எங்க கிளம்பீட்டிங்க..” என்று நிரஞ்சன் அவரைக் கேள்வி கேட்டான்..

“நிரஞ்சன் உனக்கு ஒரு பரிசாக என்னோட மகளை கொடுத்துவிட்டேன்..” என்றவர் மகளின் பக்கம் திரும்பி, உன்னோட காதலுக்கு இவர்தான் பரிசு.. இவரோட நீ நிறைய நாள் வாழனும்..” என்று மகளிடம் அவர் சொல்ல, “அம்மா நீங்க எங்களோட இருங்க..” என்றான் கலையரசன்..

“உனக்கு அந்த தகுதி இல்ல..” என்று ஒரு வரியில் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க, “அத்தை நீங்க எங்கேயும் போக வேண்டாம்..” என்று நிரஞ்சன் அவரைத்தடுக்க, “மாப்பிள்ளை நீங்க நல்லவர்.. முதலில் உங்களோட வாழ்க்கையை வாழ பாருங்க.. என்னோட கடமை எல்லாம் முடிந்தது.. நான் கிளம்பறேன்...” என்றார் சுமிம்மா..

“நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.. இந்த அம்மாவை யாராவது பார்க்கணும் என்றால் தேடி வாங்க..” என்றவர் தன்னுடைய பேக்கை எல்லாம் எடுத்து காரில் வைத்தார்..

அவரிடம் இருந்து இப்படியொரு அதிர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. அனைவரும் திகைத்து நிற்க, “அம்மா நீங்க போக வேண்டாம்..” என்று நித்தி அவரைத்தடுக்க நினைத்தாள்..

“கங்கைகேது கட்டுப்பாடு.. மங்கை நானும் கங்கை என்று பாட்டுப்பாடு..

காற்றுக்கேது கடிவாளம்.. கன்னிப்பொண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு..” என்றவர் நிரஞ்சன் – நித்திலா, சசிதரன் – வித்யா, மகேஷ் – அனிதா, கௌசிக் – கார்த்திகா, கடைக்குட்டி சங்கரி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏறியமர கார் மெல்ல கிளம்பியது..

‘அவர் எங்கே செல்கிறார்..’ என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்துடன் நின்றிருக்க, “நான் மீண்டும் வருவேன்..” என்றவர் அவர்களுக்கு நிம்மதியை பரிசாக கொடுத்துவிட்டு, “பாய் பிள்ளைகளா..” என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top