Annaaaaa... Appo kadavul nu solrathu ivangalai paarthathai thaana.. enaku puriyutha ila kulambiten naa.. ??
சரியாதான் சொல்லிருக்க... அவங்க எதைச் சோதிச்சுப் பார்க்க விரும்பினாங்களோ, அவங்களே அதுவா ஆயிட்டாங்க...Annaaaaa... Appo kadavul nu solrathu ivangalai paarthathai thaana.. enaku puriyutha ila kulambiten naa.. ??
Paவணக்கம் மக்களே...
கதை வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான்.
இக்கதையை நான் எழுதியவற்றிலேயே சிறந்தது (வடிவமைப்பு, நடை, கரு, கதை என!) என்று நானே கருதுகிறேன் (நீங்கள் இதற்கு உடன்படாமல் இருக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு! அதில் எனக்கு எந்த வருத்தமும் இருக்காது!)
என் ஆதர்ச எழுத்தாளர், மானசிக குரு திரு. சுஜாதா அவர்களின் நடையில் எழுத முயன்ற கதை (இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி!)
இக்கதை அவருக்கே சமர்ப்பணம்!
உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்...
நன்றி
நானும் வந்துட்டேன்,
விசய் தம்பி
நன்றி பானு அக்கா...
மிகவும் அருமையான சிறுகதை,
விசயநரசிம்மன் தம்பி
ஏன் சகோ, இப்படி ?? புரியுது ஆனா புரியல. Time travel கொஞ்சம் confusedஆ தான் இருக்கு எனக்கு . புரிந்து கொள்ள try பண்றேன். ஆனா different கதையாக இருக்கு. இப்படி இருக்குமா ? இந்த time travel ஆராய்ச்சி interestingஆ தான் இருக்கு.”பாஸ், உண்மையாத்தான் சொல்றீங்களா?”
வசந்த் எதற்கும் அவ்வளவு எளிதாக ஆச்சரியப்படும் ஆள் கிடையாது.
“விளையாட்டில்லை வசந்த்! அறிவியலைவிட இந்த உலகத்துல சக்திவாய்ந்த ஒன்னு இருக்குனா அது மதம்தான். எத்தனையோ மதம், எத்தனையோ கடவுள். எல்லாமே ஒருவித திரைக்குப் பின்னால இருக்கு, ஆனா, ஒரு மதம் மட்டும் எல்லாத்தையும்விட அதிகமா நம்பகத்தன்மை பெற்றிருக்கு…”
“கண்டதேவர் வழி”
வசந்த் மெதுவாய், அழுத்தமாய் உச்சரித்தான்.
நி.நா. நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
“அவர் உண்மையாவே கடவுளைப் பார்த்தார்னு நீங்களும் நம்புறீங்களா?” இருவரையுமே கேட்டாள்,
“நம்புறேன் நம்பல, அதைத்தான் முடிவு பண்ணிக்க விரும்புறேன் நான்”
ர.ரா தன் உள்ளங்கைகளை மெல்ல தேய்த்துக்கொண்டபடியே பேசினான்
“மத்தவங்களுக்கும் இவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கு நீனா- (’நி.நா!’) சாரி! கடவுளைப் பார்த்ததா சொல்ற யாருக்குமே அதுக்கான ஆதாரம் இல்ல, நம்பிக்கை அடிப்படைலதான் ஏத்துக்கப்பட்டாங்க, ஆனா கண்டதேவர் கதை அப்படியில்ல…”
“ஆமா நினூ, அவர் கடவுளைப் பார்த்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்காங்க… ரெண்டு மூனு வெளிநாட்டு பயணிகள் கூட பார்த்திருக்காங்க… ஒரு பெரிய கூட்டத்துக்கு மத்தில இருந்தவர் அப்படியே ஒளிப்பிழம்பா மாறி காணாம போயிட்டாரு, ஒரு மணி நேரம் கழிச்சு அதே போல ஒளிப்பிழம்புல தோன்றித் திரும்பி வந்திருக்காரு… கடவுள் தன்கிட்ட பேசி, ஐந்து கட்டளைகள் கொடுத்ததா சொல்லிருக்காரு… அவர் திரும்பி வரப்ப ஒளிப்பிழம்புக்கு அந்தப் பக்கம் இருந்த கடவுளை அங்கிருந்த சிலரும் பார்த்திருக்காங்க… வெள்ளவெளேர்னு…”
வசந்த் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்,
நி.நா. மெதுவாக ‘ம்ம்…’ என்றாள், வசந்த் இலேசாய் சீற்றமடைந்தான்,
“நீ நம்பலேன்னா என்ன! ஆயிரக்கணக்கா டாக்குமெண்டட் எவிடன்ஸ் இருக்கு… ஒரு நாட்டுல இல்ல நாலு நாட்டுல, கண்டதேவர் ஒளியா மறைஞ்சு போயி திரும்பி வந்தது, ஒளிக்குள்ள மக்கள் பார்த்த கடவுளின் உருவம் எல்லாம் எல்லா ரெக்கார்டுலையும் ஒத்துப் போகுது… கல்வெட்டு, குகை ஓவியம், செப்பேடு எல்லாம் ஒத்துப் போகுது… ஐ.நா-வே வரலாற்றின் மிக நம்பகமான கடவுள் சந்திப்பு-னு சர்டிபிகேட் கொடுத்திருக்கு, சும்மா ஒன்னும் யாரும் மூவாயிரம் வருஷமா ஒரு விஷயத்தை நம்ப மாட்டாங்க நினு…”
”கூல் டவுன் வசந்த்… ஐ தாட் யு ஆர் அன் ஏதிஸ்ட்!”
ர.ரா வசந்தின் தோள்களில் கைவைத்து அமர்த்தினான்,
“ஐ ஆல்வேஸ் ஆம் பாஸ்! பட் திஸ் இஸ்… இதுவும் அறிவியல்தான் பாஸ்!”
“ரிலாக்ஸ், நம்ம ஸ்டாடிஸ் தயார், நாளைக்கு நாம உண்மைய சந்திக்கப் போறோம்…”
”நிச்சயமா பாஸ்?”
வசந்திடம் இருந்தது ஆர்வமா ஆச்சரியமா என்று சொல்ல இயலவில்லை.
”சிமுலேஷன் ரன்லாம் கச்சிதமா போயிருக்கு வசந்த், நாம நூறு சதவீதம் தயார்!”
நி.நா-வும் உற்சாகமாகவே காணப்பட்டாள்,
“ஸோ, நாளைக்கு நாம கடவுளைச் சந்திச்சவனைச் சந்திக்கப் போறோம்…”
ர.ரா மந்திரவாதி போல கையை ஆட்டிக் காட்டினான்.
* * * * * * * * * * * * * * * * *
”ஓ.கே! தொடங்கலாமா?”
ர.ரா துல்லியமான வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தான், ஆய்வக அங்கியோடு சேர்த்து, அவனைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வாழ்நாள் நிகழ்வுதான்.
“யெஸ் பாஸ்…” “ரெடி பாஸ்!”
வசந்த் ஆரஞ்சு வண்ணமும், நி.நா. வெளிர்நீலமும் அணிந்திருந்தனர். வசந்த் ஆய்வக அங்கி இல்லாமல்தான் இருந்தான்.
“ஃபீல்ட் ஸ்டெபிளைசர்ஸ்…”
“செக்!”
“ஆசிலேட்டர்ஸ்…”
“செக்!”
“ஸ்கோப்ஸ்…”
“செக்!”
– ர.ரா சொல்லச் சொல்ல வசந்தும் நி.நா-வும் ஒவ்வொரு கருவியாக இயக்கிக் கொண்டே வந்தனர், மெல்ல அந்த ஆய்வுக்கூடம் உயிர்பெற்றது, மூவரின் இதயத்துடிப்போடு சேர்த்துக் கருவிகளும் விரைவாகத் துடித்தன… ர.ரா தனது இறுதி கட்டளையைக் கொடுத்தான் “எங்கேஜ்!”
’சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்…’ என்று ஒரு மெல்லிய அழுத்தமான கீறல் ஒலி காதை அடைக்க, ஸ்டாடிஸ் கூண்டைச் சுற்றி ஒளிக்கோலம் தொடங்கியது… பலவண்ணங்களில் தொடங்கி முடிவாக இளஞ்சிவப்பு, வெளிர்நீல இழைகளில் ஊசலாடியது…
உள்ளே ஒருவன்!
மூவரும் சில நொடிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ர.ரா-தான் முதலில் பேசினான் (மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழிவழக்கில். இதற்காகவே அதை கற்றிருந்தனர். இன்னும் உச்சரிப்பு அத்தனை சுத்தமாக வரவில்லைதான்!)
“வந்தனம்… கடவுளைக் கண்டீரா?”
பரபரப்பில் நேரடியாக இந்தக் கேள்வியையே முதலில் கேட்டான், உள்ளே இருந்தவன் திருதிருவென்று விழித்தான், ஏதோ சொல்ல முனைந்து ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ’இல்லை’ என்று அசைத்தான்,
“ஐயா, கண்டதேவர்தானே தாங்கள்?”
ர.ரா உறுதி செய்துகொள்ள விரும்பினான், வசந்த் அவன் தோளை நிமிண்டினான்
“என்னடா?”
“பாஸ், கண்டதேவர்-ங்குற பேர் பிற்காலத்துலதான் வந்துச்சு, அவர் இயற்பெயர் சின்னாளன்!”
“ஆமாமா, அவசரத்துல மறந்துட்டேன்… ஐயா சின்னாளர்தானே தாங்கள்?”
ஆமாம் என்று தலையசைத்தான், இன்னும் அவனுக்குப் பேசும் துணிவு வரவில்லை போல, மருண்ட கண்களால் கூண்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான், ர.ரா தொடர்ந்தான்,
“கடவுளைத் தாங்கள் நேரில் கண்டீர்களா?”
மௌனம்,
“இறைவன்? பகவான்? ஆண்டவன்? என்னையா இந்தாளு?”
“பாஸ், அவர் கொஞ்சம் பயந்திருக்காருனு நினைக்கிறேன்…”
“ஐந்து கட்டளைகள்…”
நி.நா ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லும் மாணவியைப் போல உற்சாகமாய் கையை உயர்த்திச் சொன்னாள்
“அதப் பத்தி கேளுங்க…”
வசந்த் கேட்டான், மெல்ல ஒவ்வொரு கட்டளையாக சொல்லிக் காட்டினான், உள்ளே இருந்தவன் ’திருதிரு’தான்…
“ஹோப்லெஸ் பாஸ்!”
”எங்கயோ தப்பு நடந்திருக்கு வசந்த்!”
ர.ரா நி.நா-வை சற்றே வெறுப்புடன் பார்த்தான்,
“வாய்ப்பே இல்ல! எல்லாமே சரியா இருக்கு…”
நி.நா விரைப்பாக பதிலிறுத்தாள்.
“பாஸ், ஒரு வேள, அங்க கூட்டம் அதிகமா இருந்ததால ஆள் மாறிடுச்சோ? பாஆஆஸ்ஸ்ஸ்…”
வசந்த் கூண்டைக் காட்டி அலற, ர.ரா-வும் நி.நா-வும் அவசரமாய் திரும்பி பார்த்தனர், உள்ளிருந்தவன் மண்டியிட்டுத் தலையால் தரையைத் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தான், அவன் உடல் இலேசாய் நடுங்கியது,
“ரொம்ப பயந்துட்டான் பாஸ், திரும்ப அனுப்பிடலாம்…”
“ஆமா, ஸ்டாடிஸ்-குள்ள ரொம்ப நேரம் வெச்சிருக்குறதும் நல்லதில்ல, கமென்ஸ் ரிவர்சல்…”
மூவருமே பரபரப்பாக வேலை செய்தனர், மீண்டும் ‘சொய்ய்ய்ங்ங்ங்ங்’ ஒலி அதிகரிக்க கூண்டின் வண்ணக்கோலம் நிகழ்ந்தது, எல்லாம் அடங்கிய போது கூண்டு காலியாய் இருந்தது.
* * * * * * * * * * * * * *
”நம்பவே முடியல பாஸ், எங்க தப்பாச்சுனே தெரியல…”
வசந்தும் நி.நா-வும் மீண்டும் மீண்டும் அந்த மனிதன் கூண்டுக்குள் இருந்த காட்சியையே திரையில் அலசிக்கொண்டிருந்தனர்.
”அவ்ளோவும் வேஸ்ட்! வெரி சாரி ராஜ்!”
நி.நா இலேசாய்க் கொஞ்சினாள், வசந்த் அவளைக் குரோதமாய் பார்த்தான் ‘ராஜ்’?!
”இல்ல நாம எதோ மிஸ் பண்ணிருக்கோம்… வசந்த் நாம எந்த டைம் டா குறி வெச்சோம்?”
“அவர் கடவுளைப் பார்த்துட்டு வந்த ஒரு வாரத்துக்குள்ள பாஸ்! அப்பத்தான் அவர் மெமரி புதுசா இருக்கும், நமக்கு வசதினு சொன்னீங்க… லிட்டரேச்சர் படிதான் டைம கால்குலேட் பண்ணோம் நானும் நி.நா-வும்…”
வசந்த் தேவைக்கு அதிகமாகவே பதிலளித்தான், தன்னிடம் தவறில்லை என்று காட்ட,
“ஒரு வேள அந்த ஆளு டுபாக்கூரா இருப்பானோ?”
ர.ரா ஆழ்ந்த சிந்தனைக்குப் போனான்… கடவுளைக் கண்டவன்… அத்தனை ஆதாரமும் பொய்யா? இப்படியா கூட்டமாக பொய் சொல்லியிருப்பார்கள்? நிச்சயம் இல்லை, பழைய ஆவணங்களில் அத்தனை பொய்யிருப்பதில்லை, வேண்டுமானால் ஆர்வத்தினால் கூட்டிக்குறைப்பார்கள், கவிதை என்று கொஞ்சம் நீட்டிமுழக்குவார்கள், ஆனால் ஆதாரமாய் பொய் சொன்னதில்லை…
“பாஸ்…” வசந்த் மெல்ல அழைத்துப் பார்த்தான், ர.ரா எதையும் பொருட்படுத்தாமல் கூண்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான், சட்டென ஏதோ பொறி தட்டியவனாய்ப் பரபரப்புடன் எழுந்து நின்றான்,
“வசந்த்…”
“பாஸ்?” இருவருமே எழுந்து நின்றனர்,
“அவர் கடவுளைப் பார்த்த தேதியை எப்படி கணிச்ச?”
”அஸ்ட்ரானமி பாஸ்! எந்த நட்சத்திர மண்டலம் எங்க இருந்துச்சு, எந்த கிரகம் எங்க இருந்துச்சுனு பாட்டுல பாடி வெச்சிருக்காங்க, இரண்டு ‘காமெட்’ சைட்டிங் கூட ரெக்கார்ட் ஆயிருக்கு பாஸ், இதெல்லாம் வெச்சுதான்…”
“மூவாயிரம் வருஷம் டா! எவ்வளவு தப்பாக வாய்ப்பிருக்கு?”
“கொஞ்சம்தான் பாஸ்…”
வசந்த் சாதாரணமாக சொன்னான், ர.ரா அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தான்,
“ஓ.கே., ஓ.கே. ஒரு நிமிஷம்…”
தன் கைக்கணினியை இயக்கினான்,
”கோடில ஒரு சதவிகிதம் பாஸ்… அதாவது… பாஸ்!”
வசந்த் அலறினான்,
இதையே எதிர்ப்பார்த்தவனைப் போல ர.ரா அவனைப் பார்த்தான்…
”ம்ம்… சொல்லு வசந்த்?”
“மூனு நாள்வரைக்கும் முன்னப் பின்ன போகலாம்!”
“அப்படினா…” நி.நா மெல்ல இழுத்தாள்,
ர.ரா பதில் சொன்னான்,
“கண்டதேவர் கடவுளைப் பார்க்குறதுக்கு முன்னாடியே நாம அவரை இங்க இழுத்துட்டு வந்துட்டோம்…”
”இல்ல பாஸ்… கொஞ்சம் வேற மாதிரி…”
“முன்னாலயும் இல்ல, பின்னாலயும் இல்லனா?”
“மை காட்! நிஜமாவா வசந்த்?”
வசந்த் தன் கைக்கணியை ர.ரா-விடம் நீட்டினான், அதில் கண்டதேவர் பற்றிய தகவல் பக்கம் இருந்தது, அவர் கடவுளுடன் பேசிய உரையாடல் இருந்தது, ர.ரா படித்தான், அவனால் அதை நம்பவே முடியவில்லை,
கண்டதேவரிடம் கடவுள் சொன்ன முதல் சொற்கள்…
“வந்தனம்… கடவுளைக் கண்டீரா?”
(முற்றும்)
வணக்கம் மக்களே...
கதை வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான்.
இக்கதையை நான் எழுதியவற்றிலேயே சிறந்தது (வடிவமைப்பு, நடை, கரு, கதை என!) என்று நானே கருதுகிறேன்
என் ஆதர்ச எழுத்தாளர், மானசிக குரு திரு. சுஜாதா அவர்களின் நடையில் எழுத முயன்ற கதை (இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி!)
இக்கதை அவருக்கே சமர்ப்பணம்!
???.
நன்றி : முதல்லயே யோசிச்சேன்.... சொல்லலாமான்னு.. ஒரு சின்ன தயக்கம்... சி. சி கதை, அவரோட 2அணா
காசு கதையை ஞாபகப்படுத்தியது. கலாவிக், ஆத்மா வை.....
ஆஆஆஆ???வணக்கம் மக்களே...
கதை வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான்.
இக்கதையை நான் எழுதியவற்றிலேயே சிறந்தது (வடிவமைப்பு, நடை, கரு, கதை என!) என்று நானே கருதுகிறேன் (நீங்கள் இதற்கு உடன்படாமல் இருக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு! அதில் எனக்கு எந்த வருத்தமும் இருக்காது!)
என் ஆதர்ச எழுத்தாளர், மானசிக குரு திரு. சுஜாதா அவர்களின் நடையில் எழுத முயன்ற கதை (இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருந்தால் சரி!)
இக்கதை அவருக்கே சமர்ப்பணம்!
உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்...
நன்றி