“உலாவரும் கனாக்கள் கண்ணிலே”
திருமண மலர்கள் சூடிகொண்ட இரண்டு பெண்களின் திருமணக் கனவுகள் நனவாகி உலா வந்ததா? இல்லையா? என்பதே கதையின் கரு.
அடங்காமல் அலப்பறை காட்டும் அர்ச்சனா மற்றும் அமைதியாய் அன்பை காட்டும் ஜனதா – இவர்கள் இருவரின் திருமணத்தில் ஆரம்பமாகிறது கதை. சந்திரன் மற்றும் அமரின் அன்பிலும், காதலிலும் பெண்கள் இருவரும் தங்கள் கனவை நனவாக்கி கொள்ள சந்திக்கும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என அனைத்தையுமே எளிமையாய் சொல்லி இருக்கிறார் கதையாசிரியர்.
மிக மிக யதார்த்தமான கதை களம், கதை மாந்தர்கள் அனைவரும் நம் பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்கள் உணர்வை கொடுக்கின்றார்கள். கதை நடக்கும் இடங்கள் மற்றும் செய்யும் வேலைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் அழகாக சொல்லி நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகிறார் ஆசிரியர்.
கதை உரையாடல்கள் அனைத்தும் அழகாய் கோர்வையாய் படிக்க சுவாரஸ்யமான அம்சங்கள். குறிப்பாய் அர்த்தனைப் பற்றி சொல்லி இருப்பது மிக அருமை. அர்த்தன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மிக சுவாரஸ்யம்.
மொத்தத்தில் அழகான அருமையான குடும்ப கதை இது... வாசித்துப் பாருங்கள் தோழமைகளே!!
இதைபோன்ற அருமையான பல கதைகளை எழுத வாழ்த்துக்கள் சரோஜினி...