• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கண்ணீரில் கரைகிறேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"கவலைகள்
கோடி கண்டேன்
கொஞ்சமாய் தான்
நொந்தேன்"


"ஆறுதலாய்
அருகே வந்த
உறவுகளின்
அறிவுரையில்
அழிந்திடத்தான் துடித்தேன்"


"சிறு சிறு ஏக்கங்கள்
சிந்திட்டப்போது
சிறைக்கதியாய்
சிக்கித்தவித்தேன்"


"நஞ்சாய் கசந்தது
நயவஞ்சக உறவுகள்
நாராய் ஆனது
நெஞ்சம்
கூரான சொல்தான்
குறி பார்த்து
நெஞ்சில் குத்தியதில்"


"ஆதரவு இன்றி
அழுகையில் கரைந்தேன்
சோகங்கள் அனைத்தையும்
சொத்தாய் சேர்த்தேன்"


"சுருண்டு விழுந்தேன்
சுய நினைவு இழந்தேன்"


"காய்ச்சல் கானும்போது
கை வைத்து சோதிக்கும்
சொந்தங்கள் ஏதும் இன்றி
சோர்ந்துவிட்டேன்"


"காயம் அனைத்தும்
வெயில் பட்டது போல்
காய்கிறது
எரியும் மனம் அது
இம்சை மறக்க
கண்ணீர் வடிக்கிறது"


"வற்றாமல் சுரக்கிறது
விழிநீர்
வழிந்தோடும்
விழி நீரில்
என் வலிகளும்
வடுக்களும்
மறைந்திட்டால்
மங்கை இவள்
மரணம் அதையும்
மகிழ்வுடன் ஏற்பாளே"
 




Last edited:

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
?????????????
??????? கனி View attachment 15347
எப்படிபா போட்டா கண்டுபிடிச்சு கரெக்டா போடுறீங்க இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிபா
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
எப்படிபா போட்டா கண்டுபிடிச்சு கரெக்டா போடுறீங்க இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிபா
? ? இந்த கவிதை எனக்கு ரொம்பபப பிடிச்சிருக்கு கனி
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
????????
சோகை சுவை வரிகளில் தான் எத்தனை சுகம்????
நல்லாயிருக்கு கனி?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top