கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்….
– சாரல் சரவணன்.
அத்தியாயம் : 26
சொன்னது போலவே சுக்கா ரொட்டியும், சுரைக்காய் கூட்டுமாய் செய்து வைத்து கொண்டு காத்திருந்தார் வேதா…
“ஆல்ரெடி ஃபுல் கட்டு கட்டிட்டு வந்தது தெரிஞ்சா, தாய்க் கிழவி தாறுமாறாக கிழிச்சு தொங்க விட்டுரும்…. அதனால் நீ ஏதாவது சொல்லி சமாளி…. என்னைய அஞ்சு நயா பைசா க்கு கூட மதிக்காதுடா மாப்பிள…” கிருஷ்,
“என்கிட்ட சொல்லிட்டல, எப்படி அசத்துறேன் பாரு…” இளா காலரை தூக்கிவிட்டு கொண்டான்…
இளா வை கண்டதும் தட்டை சாப்பிட எடுத்து வைத்தவரிடம்,
“எனக்கு உணவு வேண்டாம்…. வகுறு சரியில்லை டாலி…”
“என்னது வகுறு சரியில்லையா….? அப்போ பருத்திப் பால் சாப்பிடுகிறாயா…?”வேதாஜியும் இம்சை அரசியா மாறி,
“வேண்டவே வேண்டாம் டாலி…”
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, பாதாம் பாலாவது சாப்பிடுகிறாயா…?”
“இல்லை டாலி…”, இளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏவ் ஏப்பத்துடன் கிருஷ் எண்ட்ரீயை போட்டு விட,
“உண்மையை சொல்லுங்கள் எங்கே போய் மேய்ந்து விட்டு வந்தீர்கள் இருவரும்….”
“டாலி அது நாங்க……..”
“என்னடா நீ…? இத்தனை நாளா என் கூட இருந்தும் தொண்ணூறு வயசான ஒரு குடு குடு பாட்டியை கூட சமாளிக்க முடியாம திணருற…?”
“இங்க பாருங்க பாட்டிமா ….., நாங்க வாத்துக்கறியை வாயில உட்டுட்டோம். நீங்க தயாரிச்சு வச்ச விஷத்தை நாளைக்கு சூடு பண்ணி சுட சுட கொடுத்து மரண தண்டனையை நிறைவேத்திக்கோங்க… கேட்குதா…?” காது கேட்காதவரிடம் சொல்வது போல கத்தி சொல்லி, கிருஷ் வேதாஜியை வம்பிழுக்க…,
“அடிங்க….”, கரண்டியை தூக்கி கொண்டு மொத்துவதற்கு துரத்தியவருக்கு, பின்னாலிருந்து இருந்து அலேக்காக கிருஷை அரெஸ்ட் பண்ணி உதவி செய்தான் இளா….
“உன் உசுரையும் காப்பாத்த , உனக்கும் சேர்த்து இங்க நான் உசுரை கொடுத்து போராடிட்டு இருக்கேன்… நீ என்னன்னா , நண்பன்னு கூட பார்க்காம இந்த பூச்சாண்டி கிட்ட என்னை புடிச்சு கொடுக்குற…, துரோகி…”
“விடாத இளா… புடி அவனை….”
“இந்த வாயி இருக்கே வாய் , இனிமே இது பேசுமா…பேசுமா…? சொல்லியபடியே வாயிலேயே ரெண்டு போட்டார்…” வேதா,
“வெறும் கையில அடிக்காத பேபி , கரண்டியை வாய்க்குள்ள உட்டு குத்து…”
“என்னடா நண்பன் அடி வாங்குறப்போ சியர் பண்ற …?” கிருஷ் கொந்தளிக்க,
“போடா … எனக்கு என் டார்லிங் தான் முக்கியம்… என் குட்டிமாவை பாட்டிமான்னு சொல்லிட்ட, இதுக்கு அப்புறம் என்ன நட்பு நமக்குள்ள…?”
“என்னால தாங்க முடியல சாமி…என் பொண்டாட்டி புள்ளையெல்லாம் எங்க….? நான் தனிக் குடித்தனம் போறேன்…”
“அவ தூங்க போயிட்டா… வளைகாப்பு அது இதுன்னு இன்னைக்கு ஒரே அலைகழிப்பா ஆயிடுச்சு ரோ க்கு…அவளுக்கும் ஆராக்கும் திருஷ்டி சுத்தி தூங்க சொல்லியிருக்கேன்… போயி அவளை தொந்தரவு பண்ணாம நீ அப்படி கதவு ஓரமா வராண்டாவில படுத்துக்க….”
“அய்யயோ வராண்டா எதுக்கு..? வாசபடியிலே படுத்துக்கிறேனே…”
“இது நல்ல ஐடியா… வாச்மேன் வைக்கிற வேலை மிச்சம்….”
கிருஷை வறுத்து கொண்டிருந்தவரை, கையை பிடித்து இழுத்து வந்தான் இளா.
“நீ வா டார்லிங்…, உன் கையால அரளி விதையை அரைச்சு கொடுத்தாலும் எனக்கு அது அல்வா துண்டு போலத்தான் இனிக்கும்…”
“ஒரு வேளை சோத்துக்கு ,நீ ஏண்டா இவ்வளவு கேவலமா நடிக்கிற…?” கிருஷ்.
“எனக்கு முதல்ல சாப்பாடு வைங்க… முன்ன பின்ன தெரியாதவங்கிட்டலாம் என்ன வெட்டிபேச்சு…? இந்த பக்கம் வா டாலி, கழுத்து செயின அறுத்துட்டு போயிட போறான்…”
“அடப்பாவி வயசான கிழவின்னு கூட பார்க்காம இதை கொஞ்சுற… அதுவும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எல்லாத்தையும் ஈன்னு இளிச்சு கிட்டே ரசிக்குது …. இந்த ஆயா கிட்ட போடுற கடலைல பாதியை ஆராகிட்ட போட்டிருந்தால் இந்நேரம் நீ அப்பாவாவே ஆகியிருக்கலாம்….”
அதற்குள் ரோஜாவும் வந்துவிட,
“அடாடடா … ஊரே தூங்கினாலும் , உங்க வாய் மட்டும் ஓயாதே…. இப்ப ஏன் நடு ராத்திரியில இப்படி கத்துற கிருஷ்…?”
“ம்…வெண்டுதல்டி….”
“உன் வீட்டுகாரனுக்கு சோறு வேணாமா…? வெளியிலேயே எங்கேயோ மொக்கிட்டு வந்திருக்கு…. கேளு…” வேதா சின்னதா கொளுத்தி போட்டார்.
“நான் மட்டுமா தின்னென்… கிழவிய எல்லாம் கிளியோபாட்ரான்னு நம்ப வச்சிட்டு இருக்கானே அந்த பச்ச துரோகியும் தான் சாப்பிட்டான்.”
“இளா எப்பவோ சாப்பிட ஆரம்பிச்சுட்டான்… நீ எப்ப வர போற…?”
“நான் இனிமே இந்த வீட்டுல சாப்பிட போறதா இல்ல…”
“ஏன்…?”
“இவளுக்கு வளையல் காப்பு பண்ணுணீங்களே…., என்னை யாராவது கண்டுகிட்டிங்களா…?”
“என்ன…உனக்கும் வளைகாப்பு போடணுமா…?”