அமைதியாய் , போயி கட்டிலில் ஆராவை சாய்ந்து உட்கார வைத்துவிட்டு, இளா அவள் கையை பிடித்தபடி உட்கார்ந்து கொண்டான்… ஆராவுக்கு தான் எதையும் உணர முடியாத மனநிலை….இளா இங்கேயும் ஆராவைத் தவிர எங்கேயும் கவனம் செலுத்தவில்லை, யாரையும் பார்க்கவும் இல்லை… இறுக்கமான முகத்தோடு இருந்தான்.
எல்லாருக்கும் உட்கார வசதி செய்த ரோஜாவும் போய், ஆராவின் இன்னொரு பக்கத்தில் அவளை தோள் சாய்த்து உட்க்கார்ந்து கொண்டாள்… கிருஷ் ஒரு மோடாவை போட்டு கொண்டு , இளாவின் அருகில் சீட் பிடித்து கொண்டான்...
அவங்க படைவீரர்களேல்லாம் ,பக்கா சீட்டிங்கில் இருப்பதை பார்த்து விட்டு ராஜமாதா வேதாவல்லி அம்மையார் கட்டில் முனையில் அமர்ந்து கொண்டார்…
மகிழ்மதி குரூப் பொட திரிசூல வியூகத்தை , சமாளிக்கனும்ன்னு, காளகெயர்கள் தலைவி கற்பகம் அவர் சேரை இழுத்து ப்ரண்டில் நிறுத்தி அதில் சிட்டிவிட்டார்….
நிம்ம்மடா…கோஜ்ராஸ் தெல்மி…(Gkkla..…)
ஆர்த்த போஷ….(Gkkla..…)
க்கிரகிவிக்ந. பூஹும்லே (Gkkla..…)
( கிலிக்லி மொழிப்பா… பாகுபலி சீனை வச்சிட்டு (Gkkla..…)
சொல்லாம போனால் ,கட்டப்பா கண்ணை குத்திடுவார், அதான்)
போர்க்களம் ரெடி…. யாரு ஃபர்ஸ்ட் அம்பை உடுறதுன்னு தான் வெயிட்டிங்…. விக்ரம் ,' இதுங்க எப்ப ஆரம்பிக்குங்கன்னு தெரியலையே…?…. ப்ரேக் பாஸ்ட் போடாமலேயே , களத்துல இறக்கி விட்டுட்டாங்களே'ன்னு, எல்லார் வாயையும் கொட்டாவி விட்டபடி பராக்கு பார்த்திட்டு இருந்தான்…
வம்படியா ,வார் ஃபீல்டு க்குள் வரவைக்கபட்ட வைத்தியே சமாதான கொடியை ஏந்தி, பேச்சு வார்த்தையை துவக்கினார்….
“இங்க பாரும்மா வேதா…. உன் உறவும் வேணும், என் குடும்பத்தையும் என்னால விட்டு கொடுக்க முடியாது..(ஏன் கொடுத்துதான் பாருங்களேன்..).. என்ன நடந்ததுன்னு இன்னும் எனக்கு தெரியாது… நீர் அடிச்சு நீர் விலகாது…. ( ஆமா பீர் அடிச்சாத்தான் நீர் விலகும்….##?) அதான் எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தேன்.. அவங்க நீ வீட்டுல இல்லாதப்போ ,அப்படி பேசினது தப்புதான்… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்மா….”
மிஸ் மிஸ் இவங்க தான் மிஸ் நீங்க கிளாஸ் ல இல்லாதப்போ பேசினாங்க…. கடைசியாக மாட்டியே விட்டுட்டார் வைத்தி..
கற்பகம் ,கொலை காண்டில் முறைச்சி ஃபயிங் ,அவ ரோட புருஷனை…என்னான்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு ,இங்க என்னமா மாத்தி பேசுறான் ,இந்த மனுஷன்னு…. பார்வை..
இளா, கிருஷ் மூலமா கிடைக்கிற சோறு முக்கியமா….? இல்லை கற்பகம் வாயில அகபடாம மிஞ்சுற சொரணை முக்கியமான்னு….? யோசிச்சு, சொரணை வேணாம் சோறுதான் முக்கியமுன்னு சோத்து கட்சிக்கு தாவிட்டார். பொண்டாட்டியை ஏறிட்டவர்,
என்னம்மா இப்படி முறைக்கிரீங்களேம்மா……? என்று திரும்பி கொண்டார்.
“அதான் தீர்த்து வச்சி பேசிட்டாங்களே ,இவங்க…. இன்னும் என்ன பேசறதுக்கு இருக்கு….”
வேதா கற்பகத்தை கை காட்டியபடி சொல்லி முடிக்க….
எங்கயோ போன மாரியாத்தா , எம்மேல வந்து ஏறாத்தான்னு, வலுக்கட்டாயமாக, வராத சாமியை வரவைத்து கொண்டு , எழுந்து விட்டார்… கற்பகம் வேதாவுக்கு வேப்பிலை அடிக்கும் நோக்கில்……. நாத்தனார், மாமியார் கிட்ட எல்லாம் டெய்லியும் சண்டை போட முடியாது…. சான்ஸ் கிடைக்கிறப்போ எகிறி அடிச்சிடனும்…மோடில் கற்பகம்.
நிம் (Gkkla..…) கடீட் வூ (Gkkla..…) கொரோட்டா - ஜ்ற- ரெய்் ஃபகூ (Gkkla..…)
( அகைன் கிலிக்ளி தான், உங்க ஆயுதத்தை போட்டுட்டு, திரும்பி பார்க்காம விடுங்க ஜூட்டு… இல்லைன்னா மொத்த பேருக்கும் வச்சிருவேன் வேட்டு… என்று அர்த்தம்… கற்புவின் கண்ணசைவுக்கு எனது விளக்கம்.)
“என்ன வேதா, பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு… அண்ணிங்ற மட்டு மரியாதை இல்லாம, கைய காட்டி, மறைமுகமா குத்துற… அது சரி, உன் மருமக என்னை அவமான படுத்துனப்பவே நினைச்சேன்… இது யாரு தந்த தைரியமுன்னு… இப்பதான தெரியுது… அது உன்கிட்ட இருந்து தான் வந்ததுன்னு…”
“என் மருமகள் என்னை போல தான்… யார் எதை கொடுத்தாலும், வச்சிக்காம திருப்பி கொடுத்திடுவா… அப்படி மட்டும் எங்கயாவது மிச்சம் மீதி விட்டுட்டு வந்தான்னா, நானே ரெண்டு கொடுப்பேன் அவளுக்கு , புரியுற மாதிரி…”
“நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்,என்னையும் என் பொண்ணையும் விட அந்த ஆரா உனக்கு உசத்தியோ….?”
“ஆமாம் அண்ணி…கண்டிப்பா…என் பொண்ணும் இளாவும் எனக்கு மத்தவங்களை விட ரொம்ப முக்கியம்.. இதை என் வாயால சொல்லனுமா….?
“புது பணக்காரி ஆனதும் உறவும் வந்து புதுசா ஒட்டிக்கிச்சு போல… என் பொண்ணாமே….? எப்போ பொறந்தா… வேதா என் கிட்டயே மறைச்சிட்ட பார்த்தியா…???” தேள் கொட்டியது…
“அவ எனக்கு பொண்ணா பொறக்கல அண்ணி…….ஒவ்வொரு ராத்திரியும் அவளை தனியா தூங்க வச்சிட்டு, மனசே இல்லாம இளாகிட்ட விட்டுட்டு கிளம்புவேனே, அப்ப கழுத்த கட்டிகிட்டு போகாதீங்க மாதாஜின்னு அழுவாளே, அந்த நிமிஷமே இந்த வேதா , ஆராவோட அம்மாவா பொறந்துட்டா… என்னை பெத்தவ அவ…. என் கோந்தை பறிகொடுத்துட்டு தனிமரமா நின்னப்ப அவ என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை… என்னை பெத்தவளா மடி தாங்கி மீட்டு கொண்டு வந்தா….”
“இன்னைக்கு சொந்தம்னு சொல்லிட்டு நிக்கிற யாரும், அன்னைக்கு எங்க போயிருந்தாங்கன்னு தான் தெரியலை…”
“ஏன் வேதா ,நீயும் கிரிஷும் எங்க வீட்டுல தங்கி சாப்பிட்டது எல்லாம் மறந்து போச்சா…? அன்னைக்கு உழைச்சு கொட்டி, உங்க ரெண்டு பேருக்கும் சோறு போட நாங்க தேவைப்பட்டோம்….இன்னைக்கு தேவைபடலையோ….???”
“ஓஹோ நீங்க உழைச்சு, சோறு போட்டிங்களா அண்ணி… நான் கூட நினைச்சேன், எங்கப்பாவோட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் எனக்கு பங்கு பிரிச்சி தரவேண்டாம், அண்ணனே வச்சுகிட்டும்னு சொன்னேனே…. அந்த நன்றியில போடுறீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன் அண்ணி….
பாருங்க அண்ணா நீங்க கூட மறைச்சுட்டீங்க, உழைச்சு எங்களுக்காக ஓடா தேய்ஞ்சதை….”
நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் அவங்க அண்ணாச்சி தலை தொங்கி கிடந்தது…
கடல்ல தத்தளிக்கிறவன் தப்பிக்க குகைன்னு நினைச்சு, தெரியாத்தனமாக திமிங்கலத்தோட வாய்க்குள்ள வம்படியா நுழைஞ்ச கணக்கா, திக்கும் தெரியல திசையும் தெரியல தப்பிக்க….