???Undertaker um irukangala?????
Ella WWE players lam onnum kooditangaya onnu kooditanga?????
???Undertaker um irukangala?????
Ella WWE players lam onnum kooditangaya onnu kooditanga?????
கொடுத்திட்டென்Next ud eppo tharuveenga sara ?
சாரா செல்லம் சா ச்சா....“யாருக்கு வேணும் உன் பிச்சைக்கார பங்கு… விட்டெரிங்க அவ மூஞ்சில, இதோட இந்த பிரச்சினை முடிவுக்கு வரணும்.”கற்பு வைத்திக்கு ஆர்டர் போட…
'அய்யோ…உன்னோட திருவாயை மூடினாலே எல்லா பிரச்சனையும் தானா முடிஞ்சிடும்... பேசி பேசி என் சம்பாத்தியத்தில் மண்ணை அள்ளி போடாம ஓயமாட்டா போலயே …' கற்பகத்தை பார்த்து..
மைண்ட் வாய்ஸ் தான்… சொல்லிட்டா தான் மந்திரிச்சு விட்டுபுடுமே அந்தம்மா…
“தாராளமா தாங்க… புள்ளை குட்டி இல்லாத வீடா இது, சொத்தையெல்லாம் தானம் வழங்க…அப்புறம் இன்னொன்னு கேட்டீங்களே…. புது பணத்துக்கு வந்து ஒட்டிக்கிட்ட சொந்தம்னு, இத்தன வருஷம் , ஒன்னுமே இல்லாதப்போ வராத, நீங்களும் உங்க பொண்ணும் ,இப்ப புதுசா உரிமை கொண்டாடுறீங்களே… அதைத்தான் சொன்னீங்களோ….?”
“ஏன்னா…, இந்த புள்ளைங்க இத்தனை வருசமா எங்க நல்லது கெட்டது எல்லாத்துலயும் எங்க கூடத்தான் இருந்ததுங்க… அப்பயும் பாசத்தை தான் எங்களுக்கு உணர்த்தினதுங்க, பணத்தை உணர வைக்கல… அப்பா ,அம்மா வை பறிகொடுத்திட்டு அன்புக்காக நின்னுச்சுங்க, எங்க கிட்ட, சொத்தையெல்லாம் பறிகொடுத்துவட்டு சோத்துக்காக வரல …. வசதி வந்ததும் எங்களுக்கு இறங்கி வந்து மரியாதை தரல… அவங்களுக்கு சமமா எங்களை வளர்த்துவிட்டுட்டு எங்களோட வந்து கூட இருக்குதுங்க துணையா…”
“இன்னும் ஒரு வார்த்தை என் புள்ளைகள பத்தி கூட்டியோ இல்லை குறைச்சியோ பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை…அப்படி பேசிறவங்க கூட எனக்கு உறவும் இல்லை.”
“அதான் உரிமை இல்லை உறவும் இல்லைன்னு அத்துவிட்டாளே உங்க தங்கச்சி, அப்புறம் ஏன் மரம் மாதிரி இங்கேயே உட்கார்ந்து இருக்கீங்க. இனிமே தங்கச்சி தொங்கச்சின்னு கொஞ்சிகிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சிங்க தெரியும் சேதி….”
“கார்டியனா இருந்து இத்தனை வருஷமா இந்த அனாதை கழுதைகளை காப்பாத்தி விட்டதுக்கு என் பொண்ணு வாழ்க்கைக்கே உலை வைக்க பாக்குறீங்க. அங்க போடு இங்கே போடுன்னு எத்தனை கையெழுத்து உங்களுக்காக ஒவ்வொரு ஸ்கூலுக்கும் ஒவ்வொரு காலேஜுக்கும் வந்து போட்டுருப்பாரு,உங்களுக்காக ராப்பகலா அலையோ அலைன்னு அலைஞ்சாரே…… அதுக்கு காற்று காட்டுகிற நன்றியா இது. என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து இப்படி மோசம் பண்ணதுக்கு நீங்க நல்லா அனுபவிப்பீங்க. நன்றி கெட்டவங்களா, ரெண்டு பேரும் நல்லா இருங்க.”
“அடியேய் , ஊமைக் கோட்டான் ஆரா… நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடறேன்னு நானும் பாக்…………....”
“நிறுத்துங்க..”
பேசிக்கொண்டே போன கற்பகத்தின் குரலில், அந்த கர்ஜனை கேட்டு, பிசுறு தட்டியது.
பார்த்தால் நம்ம இளா தான்… வெட்ட படவேண்டியது உறவுகளை அல்ல…, லட்டுவை பற்றி லகுடத் தனமாக பேசுபவர்களின் நாக்கை….,என்ற ரீதியில் நம்ம ஹீரோப்பா… அடேங்கப்பா….
“வயசாகிட்டு தான அறிவுன்னு ஒன்னு இருக்குதா உங்களுக்கு, உங்க மக வயசு உள்ள பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது… சும்மா உங்க பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிட்டோம்ன்னு பேசுறீங்க…
நான் எப்பயாவது சொன்னேனா சீமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு… அவகிட்ட கிருஷ் கூட பழகுற மாதிரி நல்ல பிரெண்டா தான் இருந்தேன்…இடையில் அவளுக்கு கிறுக்கு புடிச்சி போச்சு… இதெல்லாம் வேணாம்னு நல்ல முறையில் சொல்லி பார்த்தேன் கேட்கல… இதோ நிக்குறாரே உங்க புருஷன் அவர்கிட்ட , உங்க பொண்ணை கண்டிச்சு வச்சுக்கோங்கன்னு கூட சொன்னேன்.”
“அவளோட அம்மா தான நீங்க, அவ பண்ற தப்பையெல்லாம் சரி பண்ணாம ,என்னங்க இது எங்களை குத்தம் சொல்றது… வயசு ஆக ஆக அன்பு பெருகனும், இப்படி வஞ்சத்தை பெருக்கிகிட்டீங்கன்னா , நீங்க அழியுற நாள் நெருங்கிட்டுன்னு அர்த்தம்”.
“வைத்தியநாதன் சார்… இதோட என்னோட ஆடிட்டர் போஸ்ட்லயிருந்து உங்களை விலக்குறேன்…உங்க செட்டில்மென்ட் பணம் ,மிச்சம் சொச்சம் எல்லாம் உங்க அக்கவுண்ட்டில வந்துடும்.. என் கம்பனி கணக்கை பார்த்தவரைக்கும், ஃபயில க்ளோஸ் பண்ணி மெயில் பண்ணி விடுங்க…”
“இளா ,இவங்களுக்காக நம்ம பிசினஸ் உறவை…,” வைத்தி இழுக்க…
“என்ன சார் இவங்க…? யார் சார் இவங்க..? காசு இல்லாம ஓ சீயா பார்த்தீங்களா எங்க ஆடிட்டிங்கை.. இல்லை தர்மத்துக்கு கார்டியன் போஸ்ட் பண்ணினீங்களா…? ஆரா ஆசிர்வாத் த்தோட முதலாளி… முதலாளியை உங்க வை ஃப் மரியாதை குறைவா பேசுவாங்க, நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கனுமா…? தட்ஸ் இட்.”
வாயைத் திறக்க முடியவில்லை வைத்திக்கு…
“என்னா…? பெரிய கம்பனி அதுக்கு ஒரு அர லூசு ஓனர்… நீங்க வாங்க, இவன் இல்லைன்னா ஆயிரம் கம்பனி… நம்ம பொண்ணு தங்கம், போனால் போகுது, அந்த பைத்தியத்தை பார்த்துக்கிட்டு , கம்பெனியும் பார்த்துகட்டும் என் பொண்ணுன்னு நினைச்சா, இவன் இந்த பேச்சு பேசுறான்.. இவனே கெஞ்சினாலும் என் சீமா இவனுக்கு கிடையாது.. அனாதைங்க…” கற்பு கதகளி ஆடினார்..
“இளா…. நில்லுங்க…”
இப்ப யாருடா…. கற்பு பேசுறப்ப மட்டும் கண்ணி வச்சி வெடிக்கிறது…
நம்ம கிருஷ் தான்.
“இளா என் மச்சான், ஆரா என் தங்கச்சி… அனாதைன்னு சொல்லிகிட்டு என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்காதீங்க… இதோட என் ஆடிட்சையும் க்ளோஸ் பண்ணிடுங்க மாமா.”
“வாங்க போகலாம்…” கற்பகம் கையை பிடிச்சு இழுக்க…,
“இன்னும் ஒரு கணக்கு பாக்கி இருக்கு.நீங்க பெத்த தங்கத்தோட தரத்தை தெரிஞ்சுகிட்டே போங்க..”
மொபைல் ரெக்கார்டிங்கை கிருஷ் ஒலிபரப்பினான்…
வைத்தி வாயடைத்து போக..,
கற்பகம் கனலை கக்க,
சீமா சிவந்து நிற்க…
விக்குக்கு பக்குன்னு ஆச்சு…
ஒலிபரப்பு முடிஞ்சதும், மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு கிளம்ப பார்க்க,
“ஒரு நிமிஷம்,”
மறுபடியும் யாருடா….?
இளா,
“ச்சை….! இவ்வளவு கீழ்த்தரமான வேலை பார்த்துருக்கா பாருங்க உங்க பொண்ணு… டேய்.., விக்ரம், உனக்கு என் ஆரா கேட்க்குதா…? உன்னை இனிமே எங்கயாவது பார்த்தேன்.., அங்கேயே மண்ணைத் தோண்டி புதைச்சிடுவேன் ராஸ்கல்..”
சட்டையை பிடித்து கேட்டுவிட்டு விக்கியை உதறி தள்ளினான்.
“இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கொண்க.
ஆமாம், ஆராவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… அவ என் முறைப்பொண்ணு… அவளை கட்டிக்க நான் யாரைக் கேட்கணும்… அவ படிப்பு முடிஞ்சு மூணு மாசத்துல எங்களுக்கு கல்யாணம், எங்க பழைய கார்டியங்கிர முறையில் கூட தயவு செஞ்சு வந்துராதீங்க, உங்க மூஞ்சில முழிச்சிட்டு ,நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பல…”
சாரல் ஆக சாரா....